Jump to content

தமிழ் சினிமாவின் 2018: அசரடித்த டீசர்கள், கதையம்சம் மிக்க படங்கள், #MeToo சர்ச்சைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
 
கீர்த்தி சுரேஷ் விஜய் சேதுபதிபடத்தின் காப்புரிமை Facebook

திரைத்துறையில் நடந்த வேலை நிறுத்தம், ரஜினிகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியானது, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களின் வெற்றி என 2018ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு ஒரு மறக்க முடியாத ஆண்டு.

 

2018ஆம் ஆண்டின் துவக்கமே மிக பரபரப்பானதாகத்தான் இருந்தது. தமிழின் முன்னணி நடிகர்களாக நீண்டகாலம் கோலோச்சிய ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் வெளிப்படையாகவே அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தனர்.

தமிழ் சினிமாவின் 2018

பொதுவாக அரசியல் விவகாரங்களைப் பேசுவதைத் தவிர்த்துவந்த ரஜினிகாந்த் இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாக பல கருத்துகளைத் தெரிவிக்க ஆரம்பித்தார். இதனால், அவருக்குக் கிடைத்த வரவேற்பைவிட உருவான சர்ச்சைகளே அதிகமாக இருந்தது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் 'சிஸ்டம்' சரியில்லை என்று அவர் சொல்லிவிட்டுப்போக, அப்படியானால் இந்தியாவில் 'சிஸ்டம்' சரியாக இருக்கிறதா என்ற பதில் கேள்வியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அரசியலுக்கு வரப்போகிறேன் என வெளிப்படையாகவே அவர் சொல்லிவிட்டாலும் தற்போதுவரை அரசியல் கட்சி எப்போது துவங்கப்படும் என்பது குறித்து அவர் ஏதும் பேசவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பு உருவானதோடு, ரஜினியின் அரசியல் பயணம் தொக்கி நிற்கிறது.

இதற்கு நடுவில், "எதற்கெடுத்தாலும் போராடிக்கொண்டிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும்", "கொள்கை என்னானு கேட்டவுடனே தலை சுத்தீருச்சு" என்பதுபோன்ற அவரது கருத்துகள் பலத்த அதிர்வலைகளை உருவாக்கின.

ஆனால், இதற்கு நடுவில் ரஜினிகாந்த் நடித்து இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாயின. ஒன்று, பா. ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்திருந்த காலா. இரண்டாவது ஷங்கரின் இயக்கத்தில் பல வருடங்களாக தயாரிப்பில் இருந்த 2.0.

இதற்கு முன்பாக 2014ஆம் ஆண்டிலும் கோச்சடையான், லிங்கா என இரு படங்கள் ஒரே ஆண்டில் ரஜினிக்கு வெளியாகியிருந்தாலும், கோச்சடையான் ஒரு அனிமேஷன் திரைப்படமாகவே வெளியானது. அப்படிப்பார்த்தால், 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே ஆண்டில் ரஜினி நடித்து ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படம் தமிழில் வெளியானது இந்த ஆண்டில்தான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் பேட்ட படமும் ரிலீஸிற்குத் தயாராக நிற்பதில், ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

தயாராக நிற்பதில், ரஜினி ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

காலா

மற்றொரு முக்கிய நட்சத்திரமான கமல்ஹாசன், கடந்த ஆண்டில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரியில் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியையும் துவக்கிவிட்டார். 2015ல் அவர் நடித்து வெளிவந்த தூங்கா வனம் படத்திற்குப் பிறகு இந்த ஆண்டுதான் அவரது அடுத்த படமான விஸ்வரூபம் - 2 வெளியானது.

இதையெல்லாம்விட தமிழ் சினிமாவை இந்த ஆண்டு கடுமையாக பாதித்த விஷயம், மார்ச் மாதத்தில் நடைபெற்ற போராட்டம்தான். திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை வெளியிட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிறைய கட்டணம் வசூலிப்பதாகக் கூறி திரையுலகினர் போராட்டத்தில் இறங்கினர்.

இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இந்தப் போராட்டம் நடந்துகொண்டிருந்த நிலையிலேயே கேளிக்கை வரியை ரத்து செய்யும் கோரிக்கை உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி திரையரங்கங்களும் போராட்டத்தில் இறங்கின. பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக திரைப்படங்கள் ஏதும் வெளியாகாததால், வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது. இதற்குப் பிறகு, திரைப்படங்களை வெளியிடும் தேதியை தயாரிப்பாளர் சங்கமே அறிவிக்கும் என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. மாதத்தில் ஒரு வாரம் சிறிய படங்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இந்த நடைமுறையிலும் பல சிக்கல்கள் தற்போதும் நீடிக்கின்றன.

தமிழ் திரைத்துறையை கலங்கவைத்த #Me too

உலக அளவில் பிரபலமான மீ டூ 2018ஆம் ஆண்டில் இந்தியாவில் குறிப்பாக தமிழ் திரைத்துறையில் பரவலாக பேசப்பட்டது.

தமிழ் திரைப்படத்துறையை சார்ந்தவர்கள் சிலரின் மீது வெளிப்படையாக மீ டூ மூலம் குற்றம் சாட்டப்பட்டன. அதில் பாடகி சின்மயி பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்து மீது #Me too புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்மயிபடத்தின் காப்புரிமை CHINMAYI SRIPADA/FACEBOOK

பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.

இந்த குற்றச்சாட்டை கவிஞர் வைரமுத்து மறுத்து விளக்கமளித்தார்

மேலும், 'மீ டூ' இயக்கம் மூலம், கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்த நிலையில், ஸ்ருதி தன்னிடம் பணம் பறிக்க முயல்வதாக குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமா பறிகொடுத்த தேவதை

பிப்ரவரி மாதத்தில் தமிழ் திரையுலகத்துக்கு பெரும் அதிர்ச்சியாக, தமிழ் திரையுலகில் கோலோச்சிய பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவிபடத்தின் காப்புரிமை CHANDNI MOVIE/YASHRAJ FILMS Image caption தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஸ்ரீதேவி

துபாயில் தனது குடும்ப உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றிருந்தபோது அவர் இறந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர்.

நடிகை ஸ்ரீதேவி தான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்த குளியல் தொட்டியில் தவறுதலாக மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று கூறப்பட்டது.

அவரது திடீர் மரணம் தொடர்பாக பல சர்ச்சைகள் மற்றும் சந்தேகங்கள் எழுந்த நிலையில், இறுதியில் பிப்ரவரி 28-ஆம் தேதியன்று பல கோடி ரசிகர்களின் கனவு தேவதையான ஸ்ரீதேவியின் உடல் மும்பையில் எரியூட்டப்பட்டது.

இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிப்பட்ட குறிப்பிடத்தக்க போக்காக, நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளிவந்த படங்களுக்குக் கிடைத்த வெற்றியையும் கவனிப்பையும் நிச்சயம் குறிப்பிட வேண்டும். நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரு திரைப்படங்களுமே அந்தப் படங்களில் நயன்தாராவின் பாத்திரங்களுக்காகவும் நடிப்பிற்காகவுமே முக்கியமாகப் பேசப்பட்டன. ஜோதிகா நாயகியாக நடித்த காற்றின் மொழி, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்த கனா ஆகிய திரைப்படங்களும் விமர்சகர்களால் கவனிக்கப்பட்டதோடு, குறிப்பிடத்தக்க வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றன.

தமிழ் சினிமாவின் 2018

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான படங்கள் ஏதும் வர்த்தக ரீதியில் பெரும் வசூலை வாரித்தந்ததாகச் சொல்ல முடியாது. ஆனால், வருட இறுதியில் வெளியான 2.0, சர்கார் ஆகிய படங்கள் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்திருக்கின்றன. அதேபோல, 96, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்றிருப்பது ரசிகர்களுக்கும் புதிதாக வரும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் நிச்சயம் கொடுத்திருக்கும்.

ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில்தான் பெரும் எண்ணிக்கையில் வெளிவந்தன. கலகலப்பு - 2, கோலி சோடா - 2, விஸ்வரூபம் - 2, தமிழ் படம் - 2, சண்டக்கோழி - 2, மாரி - 2, 2.0, சாமி - 2 என எட்டு திரைப்படங்களின் அடுத்த பாகங்கள் இந்த ஆண்டில் வெளியாயின. இவற்றில் 2.0, தமிழ்படம் - 2, கலகலப்பு -2 ஆகியவற்றைத் தவிர பிற படங்களை வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை.

விஸ்வரூபம் - 2

இந்த ஆண்டில் உருவான ஒரு முக்கியமான போக்காக, அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் ஸ்டீரிமிங் சேவைகள் மிக முக்கியமான பொழுதுபோக்கு தளங்களாக உருவாகியிருப்பதைச் சொல்லலாம். தமிழ் சினிமாவுக்குக் கூடுதல் வருவாயை இந்த தளங்கள் தரும் அதே நேரம், ரசிகர்களுக்கும் புதிய ஜன்னல்களைத் திறந்திருக்கின்றன.

உலகின் மிகச் சிறந்த சினிமாக்களை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு தற்போது எளிதில் கிடைத்துவிடுவதால், தமிழ் சினிமாவின் தரத்தை மேம்படுத்துவதிலும் இந்த தளங்கள் உதவக்கூடும். தமிழிலேயே நேரடியாக வெப்சீரிஸ்களை இயக்கும் வாய்ப்பும் இயக்குனர்களுக்குக் கிடைக்கும்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அதிக படங்களில் நடித்த கதாநாயகன், விஜய் சேதுபதிதான். கௌரவத் தோற்றத்தில் அவர் நடித்த டிராஃபிக் ராமசாமி படத்தை விட்டுவிட்டால், 6 படங்களில் அவர் நடித்திருக்கிறார். கதாநாயகிகளைப் பொறுத்தவரை கீர்த்தி சுரேஷ்தான் முதலிடம். 6 படங்களில் நடித்திருக்கிறார். அதற்கு அடுத்த இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் வரலட்சுமியும் தலா ஐந்து படங்களில் நடித்திருக்கின்றனர். சமந்தாவுக்கு நான்கு படங்கள்.

கீர்த்தி சுரேஷ்

2018ஆம் ஆண்டு முடிந்துவிட்டது. சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை,பேட்ட வெளியாகும் தினத்தன்று 2019ஆம் ஆண்டு துவங்கவிருக்கிறது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-46709956

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.