Jump to content

வடகொரிய தலைவர் கிம் தென்கொரிய அதிபருக்கு கடிதம்: 'உங்களை அடிக்கடி சந்திக்க விரும்புகிறேன்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Kim Jong-unபடத்தின் காப்புரிமை AFP Image caption 2018இல் கிம் ஜாங்-உன் (இடது) மற்றும் மூன் ஜே-இன் (வலது) ஆகியோர் மூன்று முறை சந்தித்தனர்.

கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத பயன்பாட்டை நீக்க, வரும் 2019ஆம் ஆண்டில் தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் அடிக்கடி சந்திப்புகள் மேற்கொள்ள விரும்புவதாக வடகொரியத் தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

தென்கொரிய அதிபருக்கு அவர் எழுதியுள்ள அரிதான கடிதம் ஒன்றில், 'இரு நாடுகளுக்கும் இடையே அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள விரும்புவதாகவும், இரு நாடுகளும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் பயன்பாட்டைத் தவிர்க்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும்' என்று கூறியுள்ளதாகவும், தென்கொரிய அதிபரின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

2018இல் தென்கொரியத் தலைநகர் சோலுக்கு தாம் பயணம் மேற்கொள்ளாதது குறித்து மிகவும் வருந்துவதாகவும் கிம் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 2018இல் மூன் ஜே-இன் வடகொரியத் தலைநகர் பியாங்யாங்குக்கு பயணம் மேற்கொண்டபின், அதைப்போலவே தாமும் தென்கொரிய வரவுள்ளதாக கிம் அப்போது உறுதியளித்திருந்தார்.

அந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் மீண்டும் ஒரே நாடாக வேண்டும் என் மூன் வலியுறுத்தியிருந்தார்.

1953இல் இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போர் இன்னும் அலுவல்பூர்வமாக முடித்து வைக்கப்படாத நிலையில், 2018இல் கிம் வெளிப்படுத்திய சமரச நடவடிக்கைகள் இரு கொரிய நாடுகளின் உறவுகளையும் மேம்படுத்த உதவின.

அந்தக் கடிதம் மூனுக்கு எவ்வாறு அனுப்பப்பட்டது என்பதை வெளிப்படுத்தாத அவரது செய்தித்தொடர்பாளர், 'வருங்கால நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, சோல் வர வேண்டும் என்ற உறுதியான விழைவை' கிம் வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் உச்சி மாநாடுபடத்தின் காப்புரிமை Getty Images

2018இல் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் மேற்கொண்ட சிங்கப்பூர் உச்சி மாநாடுதான் பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர் வடகொரிய ஆட்சியாளரை சந்திக்கும் முதல் நிகழ்வாகும்.

எனினும், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகள் சமீப மாதங்களில் தோய்வைச் சந்தித்துள்ளன.

அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரியா முழுமையாகத் தயாராக இல்லை என்று அமெரிக்காவும், அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தங்கள் பொருளாதாரத்தை மேலும் முடக்கும் வகையில் அமைந்துள்ளதாக வடகொரியாவும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

இருப்பினும், 2019இல் மேலும் ஒரு டிரம்ப்-கிம் சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.bbc.com/tamil/global-46715649

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.