Jump to content

அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.-சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
m.a.jpg?zoom=1.1024999499320984&resize=8
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலை புலிகளுடனான டீலில் உருவானது என கருத்து தெரிவித்தமை தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.
 
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
 
 தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு  தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.
 

அது என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

 
அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.
 
விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நேர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் ,  புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலையே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது. என தெரிவித்தார்.
Link to comment
Share on other sites

  • Replies 108
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எல்லாம் கிடச்சிட்டுதே...ஏன் மற்றவையப்பற்றிக் கவலை...

Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

19 minutes ago, nunavilan said:

விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் காரணம் ஜனநாயகத்தை அவ்வளவு தூரம் அவர்கள் மதித்தார்கள் என்பதையே காட்டுகிறது.

நுணா,


தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.


அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, நிழலி said:

நுணா,


தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

நிச்சயமாக  நுணா நீங்கள்  சொல்வது தான்  உண்மை

புலிகளால்  மட்டுமே அது சாத்தியமானது

அதற்கு  சாட்சியாக  இதுவரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும்  எடுத்ததுமில்லை

எடுத்து வென்றதுமில்லை

அப்படியானவர்கள் கூட்டமைப்பில்  தொடர்ந்து தொங்குவதற்கும்  நிழலி  குறிப்பிட்டது போல சுயநலமே  காரணம்

Link to comment
Share on other sites

இப்போ வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவில்லை. நாலாம் நாள் வந்து ஆலோசனை கூட்டமாம். மட்டக்களப்பில் நடந்த   வெள்ள அனர்த்தங்களில் (சில காலத்துக்கு முன்) ஜே வியினர் கூட வீதிகளில் இறங்கி மக்களுக்கு உதவினார்கள்.

49178053_2210970435619714_73443574400889

 

Link to comment
Share on other sites

11 minutes ago, விசுகு said:

நிச்சயமாக  நுணா நீங்கள்  சொல்வது தான்  உண்மை

புலிகளால்  மட்டுமே அது சாத்தியமானது

அதற்கு  சாட்சியாக  இதுவரை தமிழ்க்கட்சிகள் வேறு எந்த முனைப்புக்களையும்  எடுத்ததுமில்லை

எடுத்து வென்றதுமில்லை

சில மேலைநாடுகளின் ஆலோசனைகளின் படி தமிழீழ விடுதலைப்புலிகளால் வித்திடப்பட்டு/வழிடத்தப்பட்டு  அன்டன் பாலசிங்கம், சிவராம், நடேசன் உட்பட 30 க்கு மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தல் இல்லையென்றால் இவர்கள் ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள். இதற்காக நடந்த முன்னேற்பாடுகளை சம்மந்தன் போன்ற பலர் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.

Link to comment
Share on other sites

Quote

 

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.


அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

 

இதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, போல் said:

சில மேலைநாடுகளின் ஆலோசனைகளின் படி தமிழீழ விடுதலைப்புலிகளால் வித்திடப்பட்டு/வழிடத்தப்பட்டு  அன்டன் பாலசிங்கம், சிவராம், நடேசன் உட்பட 30 க்கு மேற்பட்டவர்களின் பங்களிப்புடன் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வழிநடத்தல் இல்லையென்றால் இவர்கள் ஒன்றிணைந்திருக்க மாட்டார்கள். இதற்காக நடந்த முன்னேற்பாடுகளை சம்மந்தன் போன்ற பலர் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.

அதே...

சம்பந்தர்  இறுதி  நேரத்தில்  தான்  தலைவராக்கப்பட்டார் (அதுவும்  கிழக்கு மாகாணத்தவர்  என்பதால்)

Link to comment
Share on other sites

3 hours ago, பிழம்பு said:

தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர்.  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் - சமத்துவம் என்ற போர்வையில் திருடர்களின், கயவர்களின், கடத்தல்காரர்களின், கப்பக்காரர்களின், காமுகர்களின், ஒட்டுண்ணிகளின், கொள்ளைக்காரர்களின்,  ........  அரசியல் பித்தலாட்டங்களுக்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என்பதே உண்மையானதும், வரலாறும் ஆகும்.

Link to comment
Share on other sites

49 minutes ago, nunavilan said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

சம்பந்தர் மறுப்பு தெரிவிக்காதமையாலோ அல்லது சிறிதரன் புலிகளால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவானதாக சொல்வதாலோ உண்மையும் இறந்த காலத்தில் நிகழ்ந்ததும் மாறிவிடப் போவதில்லை. சம்பந்தருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் புலிகளின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் தேவை இன்றும் இருப்பதால் கள்ள மவுனம் சாதிக்கின்றனர். இதனாலும் வரலாறு மாறிவிடப் போவதும் இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளின் பங்கு இருக்கவில்லை. ஆனால் அதன் பின் ஒரு சனனாயக ரீதியில் தெற்கிலும் சர்வதேச ரீதியிலும்  இயங்க கூடிய ஒரு proxy தேவைப்பட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆசிர்வதித்து உள்வாங்கினர். எவ்வளவு தான் அவர்கள் அப்படி ஆசிர்வதித்து உள்வாங்கி இருந்தாலும், தம் இறுக்கமான பிடியை அவர்கள் மீது வைத்து இருந்தாலும், அவர்களால் குறிப்பிடப்பட்டவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களாக நியமித்து இருந்தாலும், தமிழ் மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் படி அவர்கள் ஒரு போதும் வெளிப்ப்டையாக அறிவிப்பதில் இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தனர்.

26 minutes ago, nunavilan said:

இதற்கு ஒரு தலைப்பு திறந்து வாதிடுங்கள். உங்களின் தராசுக்கு இணையாக அல்லது மேலாக படிகளை போட தயாராக உள்ளோம்.

இந்த செய்தியில் புலிகளின் தமிழ் அரசியல்வாதிகள் மீதான படுகொலை பற்றியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் இருக்கு. இதற்கு ஏன் இன்னொரு திரி? இதுவே போதும்.. நீங்கள் தராசுக்கான படிகளை போடுவதாலோ அல்லது போட மறுப்பதாலோ கண்ணுக்கு முன் நிகழ்ந்த எதுவும் மாறிவிடப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தின்மூலம் விடுதலைப்புலிகள் சொல்லவந்த செய்தி - இன்னும் சுமே, சம்போ, மாவோ உட்படபல பூவாகி, காயாகி, பழுத்த, வெம்பிப்பழுத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கும்கூட மண்டையில் ஏறாதது - ஏற்றிக்கொள்ள விரும்பாத அரசியல் தாரக மந்திரம் - தமிழரின் ஒற்றுமை, ஒற்றுமை, மீண்டும் ஒற்றுமையே. அரசியலில் ஒற்றுமை தான் தமிழனின் வாக்குப் பலம். அதுதான் அரசியலில் தீர்மானிக்கும் சக்தி.  அந்த சக்திதான் நம் கொள்கையின் வெற்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

நுணா,


தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை என்பதையும், கிழக்கிலங்கை பத்திரிகையாளர் அமைப்பும், கிழக்கை சேர்ந்த மேலும் சில புத்திசீவிகளும் இணைந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினர்கள் என்பதையும் எத்தனையோ பேர் தெளிவாக பலமுறை சொல்லியிருப்பதை அறியவில்லையா?. த.தே.கூ உருவாக்கத்தில் டி.சிவராமுக்கு பெரும் பங்கு உண்டு என்பதையும் மறந்து விட்டீர்களா?
த.தே.கூ உருவாக்கப்பட்ட பின் சந்தித்த முதல் தேர்தல் 2001 இன் போது முழுக்க முழுக்க த.தே.கூ. வினால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தான் தேர்தலில் நின்றனர். அதன் பின்னர் தான் புலிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்வாங்கப்பட்டு அடுத்த தேர்தலில் கணிசமான வேட்பாளர்கள் புலிகளின் பரிந்துரைப்பினால் தேர்தலில் நிறுத்தப்பட்டனர்

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.


அத்துடன், புலிகள் தமிழ் கட்சிகளின் சார்பாக தேர்தலில் நின்ற / நின்று வென்ற பலரை கொல்லும் போது, மனமகிழ்ந்தவர்களும் அதை ஆதரித்தவர்களும், பட்டாசு கொளுத்தியவர்களும் தான் இன்று சயந்தனும் சுமந்திரனும் புலிகள் தமிழ் அரசியல்வாதிகளை சொன்றனர் என்று சொல்வதை பார்த்து பொங்கி எழுகின்றனர். மாற்று இயக்கம் சார்பாக, ஐதேக, சுதந்திரக் கட்சிகள் சார்பாக மட்டுமல்ல நவசமசமாஜக் கட்சியில் நின்று போட்டியிட்ட அண்ணாமலை போன்ற ஆயுதம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் புலிகள் கொன்று உள்ளனர்.

இப்பவாவது ஆயுதம் ஏந்தாத தமிழ் வேட்பாளர்களை / வென்றவர்களை கொன்றது சரியான செயல் இல்லை என்று புரிந்து கொள்கின்றார்கள் என்பதை காணும் போது சந்தோசம் வந்தாலும், இந்த புரிதல் ஒரு சந்தர்ப்பவாதம் என்பதையும் மறுக்க மனம் ஒப்புதில்லை.

 

ஒரு பொய்யை திருப்பி திருப்பி சொல்வதால் மட்டும் அது உண்மையாகி விடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அப்ப இந்த எட்டு வருட காலத்தில் புலி இல்லையே நீங்கள் பாரளுமன்றத்தில் கேட்டு பெற எவ்வளவோ சந்தர்ப்பங்கள் வந்தனவே அப்பவும் புலிகளா முட்டுகட்டை போட்டனர் ?

அவையள் சாகும் வரைக்கும் சாட்டு...குறை குற்றங்கள் சொல்ல புலிகள் வேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்.... சும்   வரத் தடையாக புலிகள் இருந்தனர் என்பதே சரியான அவரின் கருத்து....அப்ப இவரு வேலிக்கரையில் பிப்பீ அடிதுத் திரிந்த காலம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசியலுக்கு வர முதல் இவர் அப்பா களவெடுத்து விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்பட்டவர்.. என்ற காரணத்தால் தான் புலிகளை பார்த்து இந்தக் குரை குரைக்கிறார். 

இவர்கள் சட்டம் படித்தது நீதியை காப்பற்ற அல்ல.. அநீதிக்கு நீதியின் முன் விலை பேசி காசுழைக்க. அந்த வகையில் இவரிடம்.. இதை விட வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

சொறீலங்காவில் உண்மையான சனநாயகம் என்பதே கிடையாது. குறிப்பாக தமிழர்களிடம் அது காலணித்துவத்தின் இருப்போடு இல்லாமலே போய்விட்டது.

மக்களின் ஆணையைப் பெற்ற பின்.. அந்த மக்களை ஏமாற்றி.. மக்கள் விரோத அரசியலை முன்னெடுப்பது என்பது எந்த வகையிலும் சனநாயகம் ஆகாது. அந்த வகையில்.. விடுதலைப்புலிகள்... தமிழ் மக்கள்.. ஏமாற்று மக்கள் விரோத பாசிச அரசியல்வாதிகளின் போலித் தனங்களை தகர்த்தெறிய முற்பட்டது எந்த விதத்திலும்.. தவறும் இல்லை. 

மேற்குலகின் தேவைகளுக்கு.. ஹிந்தியாவின் தேவைகளுக்கு.. சிங்களவனின் தேவைகளுக்கு.. துரோகக் கும்பல்களின் தேவைகளுக்கு.. பச்சோந்திகளின் தேவைகளுக்கு.. புலிகள் செயற்பாடு கசப்பான சனநாயக விரோதமாகத் தோன்றி இருக்கலாம்..

ஆனால்.. மக்கள் விரோதிகளாக செயற்பட்ட போலிச் சனநாயக சாயம் பூசிய.. அரசியல் வியாதிகளை.... மக்கள் மத்தியில் இருந்து அகற்றப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் உண்மையில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட தருணங்களே அதிகம். 

இன்று கடந்த காலத்தை முற்றாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு எல்லாமே புலிகளால் தான் என்போருக்கு... தமிழரசுக் கட்சி.. தமிழர் காங்கிரஸ்.. தமிழர் விடுதலைக் கூட்டணி.. ரெலோ.. புளொட்.. ஈபி.. ஈ என் டி எல் எவ்.. ஈரோஸ்.. ரெலா.. கருணா குழு.. ஈபிடிபி..  தமிழ் தேசிய கூட்டமைப்பு.. தமிழ் தேசிய முன்னணி.. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.. இப்படி ஆயிரெத்தெட்டு.. காட்டிக்கொடுப்பு கட்சிகள் அமைத்து.. நீங்கள் சாதித்த சனநாயகம் தான் என்ன.. தமிழ் மக்களுக்கு..??!

நிழலி இன்னும்.. சரிநிகர் காலத்து போலி சனநாயகம் பேசி காலம் கழிக்கலாம் என்று நினைக்கிறார் போலும். உண்மையில்.. சரிநிகர் பேசியது சனநாயகம் அல்ல.. மாற்றுக் கருத்து நடுநிலை என்ற போர்வையில்..  அநீதிகளுக்கு.. மக்கள் விரோத சக்திகளுக்கு.. சனநாயகம் முலாம் பூசியதே அதிகம். 

புலிகள் இல்லாத இந்தக் காலத்திலும் அதையே செய்து மக்களை ஏமாற்ற விளைகின்றனரே தவிர.. புலிகள் தடையாக இருந்திருந்தால்.. புலிகளின் தடை நீங்கிய கடந்த 10 ஆண்டுகளில்.. ஒரு தசாப்த்த காலத்தில்... அரசியல் கட்சிகள் என்று சொல்லி  வருமானத்துக்கு கட்சி வைத்திருக்கும்.. இவ்வளவு பேரும்.. மக்களுக்கு சனநாயகத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தது என்ன..?! 

இதற்கு நிழலி... சயந்தன்.. சுமந்திரன் போன்ற அதி உத்தம.. சனநாயக வாதிகள் என்னத்தை சொல்லப் போகினம்...???????! 🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

சம்பந்தரே மறுப்பு தெரிவிக்கவில்லை. இதுக்குள்ளே நீங்கள் வேறை நிழலி. புலிகள் இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு அங்குலம் கூட அசைந்து இருக்க முடியாது. சிவராம் போன்றவர்கள் உறுதுணையாக இருந்திருக்கலாம். அக்கால கட்டத்தில் அரசியல் கட்சியின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்த புலிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற  ஒரு அரசியல் கட்சியும் தேவைப்பட்டது.

நுணா சொல்வது போல புலிகளின் ஆசீர்வாதம் இல்லாமல் த.தே.கூ ஒரு அங்குலம் கூட நகர்ந்திருக்க இயலாது தான்! படுகொலைகள் நிறுத்தப் படும் என்பதற்கு இந்த ஆசீர் முன்னறிவித்தலாக வந்தது, த.தே.கூ தேர்தலில் நின்றது. இதையே சும் சொன்னால் கிழித்துக் காயப் போட்டு விடுவர், நுணா வேறு வார்த்தைகளில் சொன்னால் அதைப் பெருமிதத்துடன் ஏற்றுக் கொள்வர். 

நுணா உங்களிடம் ஒரு கேள்வி: அந்தக் காலப்பகுதியில் அவதானிகளாக இருந்த பலர் நிழலியின் பதிவில் உள்ள தரவை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள்! சம்பந்தர் வாய் திறந்து சொல்லாதது தான் உங்கள் வலுவான ஆதாரமா? சம்பந்தர் பல விடயங்களைப் பற்றி வாய் திறப்பதில்லையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அவர்களே,

சரி புலிகள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது காலத்தில் ஜனநாயகம்(?)  காணாமல் போயிட்டுது.

எழுபத்துநாலாம் ஆண்டளவில் புலிகளது சிறு தாக்குதல்கள் இடம்பெற்று அவை மெல்ல மெல்ல அதிகரித்து தென்னிலங்கையுடன் சேர்ந்து அரசியல் செய்வோரை அச்சுறுத்தியதன் காரணமாகவும் படுகொலைசெய்ததன் காரணமாகவும் கூட்டணிக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல அறுவடையின் காரணமாக முதல் முதலில் ஒரு தமிழர் எதிர்கட்சியாக வந்தபோது இந்த ஜனநாயக ஓலங்கள் எல்லாம் எங்கே போனது எம்பி பதவியைத் தூக்கி வீசியிருக்கலாமே இந்தக்கண்ணியமானவர்கள் அக்காலத்தில் அமிர்தலிங்கத்தாருக்கு இருந்த சிறப்பு என்ன தெரியுமா இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தப் பகட்டுகளை எல்லாம் கூட்டமைப்பு புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே (?) பெற்றுக்கொண்டது. 

புலிகள் அதி உச்ச போராளிகளாக வலம்வந்தகாலம் என்பது யாழ் குடாநாட்டை தமது காலப்பகுதியில் வைத்திருக்க முயன்ற எண்பத்து ஆறாம் ஆண்டளவில். இன்றோடு இரண்டாயிரத்து ஒன்பதின் ஆரம்பத்துக்கும் அதற்கும் உள்ள கால இடைவெளி அங்கும் இங்கும் விட்டுக்கொடுத்துப்பார்தால் இருபத்து  ஐந்து வருடங்கள். அவர்கள் இல்லாதுபோய் ஜனநாயகவாதிகள் என தங்களை முன்னிறுத்துவோர் அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசியல் செய்வது பத்துவருடத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கு அக்கால கட்டத்தில் இவர்கள் சாதித்ததென்ன கிட்டத்தட்ட புலிகளது காலத்திலிருந்து பாதிதூரத்தைக கடந்து வந்துவிட்டார்கள் இப்போதும் அவர் சாதித்த ஜனநாயகத்தின்மூலம் வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் டக்ளசுக்கு வடக்குக் கிழக்குத் தொடர்பான அமைச்சுப்பதவியோ அன்றேல் தமிழர்கள் எவருக்கும் அமைச்சுப்பதவியோ கொடுக்கக்கூடாது சிங்களவர் ஒருவருக்கே கொடுக்கவேண்டும் எனுக்கூறும் ஜனநாயகத்தைவிட எதைச்சாதித்தார்கள்.

டக்லசுக்கு வாக்களித்தால் உள்ளூரில் படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பாகுதல் கிடைக்கும் இணக்க அரசியல் நடாத்தும் கூத்தமைப்பு இதுவரை வடக்குக் கிழக்கின் படித்த இளையோரில் எத்தனை விகிதமானவர்க்கு அரசில் வேலைவாய்ப்பையாகுதல் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. அனந்தி சசிதரனது செயலாளரிலிருந்து வடக்குக் கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பளர்கள் வரைக்கு சிங்களவர்களும் முஸ்லீம்களுமே உள்ளனர் அவர்கள் அப்படித்தான் கேதிறார்கள் தமிழர்கள்மீது தமிழ் அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை என தற்போதைய ஆளுனர் சிறிசேனகுரே கூறியத மறந்துவிட்டீர்களா?

சுமந்திரன் ஒண்டுக்கும் பெறுமதி இல்லாத சமாதான நீதவான் பட்டத்தை வடமராட்சியில் தனக்குத் தேர்தலில் கள்ள்வோட்டுப்போட்டவர்க்கு வேண்டிக்கொடுத்ததை விட டக்ளஸ் வடக்கின் இளையோருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கிக்கொடுத்தது அதிகம்

சரி ஒரு செய்தியாகவே கூறுகிறேன் யாழில் உள்ள தமிழர்களில் அனேகமானவர்கள் உடலில் ஓடுவது சிங்களவர் இரத்தமே என இதே ஆளுனர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் கூறியதை என்ன நினைக்கிறியள். பல்லாயிரக்கணக்கான குண்டுமழைக்குள் காயப்பட்டுக்கிடந்த தமிழர்களுக்கு அந்தவேளையில் தேவையான இரத்தத்தை சிங்களவர்களா தந்தார்கள் இல்லையே.

அதைவிடுங்க புலிகள் இல்லை, புலிகளே அச்சுறுத்தலாளர்கள் கொலையாளிகள், இல்லாத புலிகளை இந்தியாவும் சிங்களமும் தமது தேவைக்காய் இருப்பதாகச் சொல்வதும், மகிந்த பிரதமராக வந்தால்தான் புலிகளது அச்சுறுதலிலிருந்து நாட்டைக்காப்பாற்ற முடியுமெனக் கூற வவுணதீவில் இரண்டு போலீசாரை கருணாவைவைத்துப் போட்டுத்தள்ளியது இது வேற விடையம். ஜனநாயகம் தழைத்தோங்குகிறது அதன்பின்பு சுமந்திரன் உமக்கெதுக்கு அதிரடிப்படைப்பாதுகாப்பு?

மடைதிறந்த ஜனநாயகவாதி சுமந்திரன் தேர்தல்செலவுக்குப் புலம்பெயர்தேசங்களில் சேர்த்த பணத்துக்குக் கணக்குச்சொல்ல முடியுமா ?

இதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றுதானே

சரி அதைவிடுங்கோ

ஒரு சம்பவம் வலிகாமம் பகுதியில் ஒரு அபிவிருத்திச்சபையின் தவிசாளர், அவரது மகனுக்கு அரச வங்கியில் வேலை தேவை டக்ளசும் சித்தார்தனும் ஒரு  கனவான் ஒப்பந்த செய்தார்கள் வவுனியாவில் இருக்கும் டக்ளஸ் ஆதரவாளருக்கு சித்தார்த்தன் செல்வாக்கில் வவுனியா வங்கிக்கிளையில் வேலை அபிவிருத்திச்சபை தவிசாளருக்கு டக்ளசது செல்வாக்கில் யாழில் உள்ள அரச வங்கியில் வேலை இதுதான் இவர்கள் கண்ட ஜனநாயகம். 

வேலைவாய்ப்பு, மதுபானக்கடை, பேர்மிற் மண்பேர்மிற் , இதைப்போல வேற செல்வாக்குகளுக்காக டக்ளசுக்கும் வியஜகலாவுக்கும் அங்கஜனுக்கும் வடக்கில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

விட்டுக்கொடாதன்மை, இந்திய எதிர்ப்பு, இ ணக்க அரசியல் இல்லை, சாத்தியமோ சாத்தியமில்லையோ புலிகள் காலத்திலிருந்த வர்களது கொள்கைகளுக்குப் பொருந்திப்போவதான கொள்கைப்பிடிப்பு இவற்குக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். 

 

இவர்களுக்கு நாம் வாக்களித்தது ஜனநாயகத்தைப் புத்துயிர் ஊட்டத்தானே இவர்கள் கடந்த ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜனநாயகத்தைத் தேடி இன்னமும் புத்துயிர் ஊட்டாமல் என்ன செய்கிறார்கள், இணக்க அரசியல் கொள்கைமூலம் தீர்வு எனக்கூற நாம் இவர்களுக்கு வாக்களித்தோம் அடுத்த தேர்தலும் வரப்போகுது எங்கே தீர்வு 

இரண்டாயிரத்துப்பதினாறில் தைப்பொங்கள் பானை பொங்குபோது எல்லோர் வீட்டுப் பொங்கல்பானையிலும் தீர்வு பொங்கும் என சுமந்திரனது துரோணாச்சாரியார் சிங்கக்கொடி புகழ் சம்பந்கன் ஐயா கூறினாரே எங்கே போனது தீர்வுப்பொங்கல்.

இவர்களது இணக்க அரசியல் ஜனநாயகம்மூலம் இவர்கள் தமிழ்மக்களுக்கு புலிகளல்லாத பத்து வருடங்களில் எதக்கொண்டுவது சேர்த்தார்கள் எமக்காக.

பத்துவருடம் ஆகிறது இதுவரை அவர்களது ஜனநாயகம் சாத்தித்ததென்ன? தவிர இப்போது ஜனநாயகம் என்ன புலிகள்காலத்து, முள்முடி தவிர்த்து தங்கத்தால் செய்து வைரம் பதித்த முடிசூடியா வடக்குக் கிழக்கிம் நடனமாடுகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

நிழலி அவர்களே,

சரி புலிகள்தான் இவற்றிற்கெல்லாம் காரணம் அவர்களது காலத்தில் ஜனநாயகம்(?)  காணாமல் போயிட்டுது.

எழுபத்துநாலாம் ஆண்டளவில் புலிகளது சிறு தாக்குதல்கள் இடம்பெற்று அவை மெல்ல மெல்ல அதிகரித்து தென்னிலங்கையுடன் சேர்ந்து அரசியல் செய்வோரை அச்சுறுத்தியதன் காரணமாகவும் படுகொலைசெய்ததன் காரணமாகவும் கூட்டணிக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டு தேர்தலில் அவர்களுக்கு நல்ல அறுவடையின் காரணமாக முதல் முதலில் ஒரு தமிழர் எதிர்கட்சியாக வந்தபோது இந்த ஜனநாயக ஓலங்கள் எல்லாம் எங்கே போனது எம்பி பதவியைத் தூக்கி வீசியிருக்கலாமே இந்தக்கண்ணியமானவர்கள் அக்காலத்தில் அமிர்தலிங்கத்தாருக்கு இருந்த சிறப்பு என்ன தெரியுமா இந்தியப்பிரதமர் இந்திராகாந்தியுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தது. இந்தப் பகட்டுகளை எல்லாம் கூட்டமைப்பு புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடுகளினாலேயே (?) பெற்றுக்கொண்டது. 

புலிகள் அதி உச்ச போராளிகளாக வலம்வந்தகாலம் என்பது யாழ் குடாநாட்டை தமது காலப்பகுதியில் வைத்திருக்க முயன்ற எண்பத்து ஆறாம் ஆண்டளவில். இன்றோடு இரண்டாயிரத்து ஒன்பதின் ஆரம்பத்துக்கும் அதற்கும் உள்ள கால இடைவெளி அங்கும் இங்கும் விட்டுக்கொடுத்துப்பார்தால் இருபத்து  ஐந்து வருடங்கள். அவர்கள் இல்லாதுபோய் ஜனநாயகவாதிகள் என தங்களை முன்னிறுத்துவோர் அச்சுறுத்தல் எதுவுமின்றி அரசியல் செய்வது பத்துவருடத்துக்கு இன்னும் ஐந்து மாதங்களே இருக்கு அக்கால கட்டத்தில் இவர்கள் சாதித்ததென்ன கிட்டத்தட்ட புலிகளது காலத்திலிருந்து பாதிதூரத்தைக கடந்து வந்துவிட்டார்கள் இப்போதும் அவர் சாதித்த ஜனநாயகத்தின்மூலம் வாக்குகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் டக்ளசுக்கு வடக்குக் கிழக்குத் தொடர்பான அமைச்சுப்பதவியோ அன்றேல் தமிழர்கள் எவருக்கும் அமைச்சுப்பதவியோ கொடுக்கக்கூடாது சிங்களவர் ஒருவருக்கே கொடுக்கவேண்டும் எனுக்கூறும் ஜனநாயகத்தைவிட எதைச்சாதித்தார்கள்.

டக்லசுக்கு வாக்களித்தால் உள்ளூரில் படித்த இளையோருக்கு வேலைவாய்ப்பாகுதல் கிடைக்கும் இணக்க அரசியல் நடாத்தும் கூத்தமைப்பு இதுவரை வடக்குக் கிழக்கின் படித்த இளையோரில் எத்தனை விகிதமானவர்க்கு அரசில் வேலைவாய்ப்பையாகுதல் ஏற்படுத்திக்கொடுத்திருக்கு. அனந்தி சசிதரனது செயலாளரிலிருந்து வடக்குக் கிழக்கின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப்பளர்கள் வரைக்கு சிங்களவர்களும் முஸ்லீம்களுமே உள்ளனர் அவர்கள் அப்படித்தான் கேதிறார்கள் தமிழர்கள்மீது தமிழ் அரசியல்வாதிகளுக்கே நம்பிக்கை இல்லை என தற்போதைய ஆளுனர் சிறிசேனகுரே கூறியத மறந்துவிட்டீர்களா?

சுமந்திரன் ஒண்டுக்கும் பெறுமதி இல்லாத சமாதான நீதவான் பட்டத்தை வடமராட்சியில் தனக்குத் தேர்தலில் கள்ள்வோட்டுப்போட்டவர்க்கு வேண்டிக்கொடுத்ததை விட டக்ளஸ் வடக்கின் இளையோருக்கு அரசாங்கத்தில் வேலை வாங்கிக்கொடுத்தது அதிகம்

சரி ஒரு செய்தியாகவே கூறுகிறேன் யாழில் உள்ள தமிழர்களில் அனேகமானவர்கள் உடலில் ஓடுவது சிங்களவர் இரத்தமே என இதே ஆளுனர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் இரட்டை அர்த்தத்தில் கூறியதை என்ன நினைக்கிறியள். பல்லாயிரக்கணக்கான குண்டுமழைக்குள் காயப்பட்டுக்கிடந்த தமிழர்களுக்கு அந்தவேளையில் தேவையான இரத்தத்தை சிங்களவர்களா தந்தார்கள் இல்லையே.

அதைவிடுங்க புலிகள் இல்லை, புலிகளே அச்சுறுத்தலாளர்கள் கொலையாளிகள், இல்லாத புலிகளை இந்தியாவும் சிங்களமும் தமது தேவைக்காய் இருப்பதாகச் சொல்வதும், மகிந்த பிரதமராக வந்தால்தான் புலிகளது அச்சுறுதலிலிருந்து நாட்டைக்காப்பாற்ற முடியுமெனக் கூற வவுணதீவில் இரண்டு போலீசாரை கருணாவைவைத்துப் போட்டுத்தள்ளியது இது வேற விடையம். ஜனநாயகம் தழைத்தோங்குகிறது அதன்பின்பு சுமந்திரன் உமக்கெதுக்கு அதிரடிப்படைப்பாதுகாப்பு?

மடைதிறந்த ஜனநாயகவாதி சுமந்திரன் தேர்தல்செலவுக்குப் புலம்பெயர்தேசங்களில் சேர்த்த பணத்துக்குக் கணக்குச்சொல்ல முடியுமா ?

இதுவும் ஜனநாயக விழுமியங்களில் ஒன்றுதானே

சரி அதைவிடுங்கோ

ஒரு சம்பவம் வலிகாமம் பகுதியில் ஒரு அபிவிருத்திச்சபையின் தவிசாளர், அவரது மகனுக்கு அரச வங்கியில் வேலை தேவை டக்ளசும் சித்தார்தனும் ஒரு  கனவான் ஒப்பந்த செய்தார்கள் வவுனியாவில் இருக்கும் டக்ளஸ் ஆதரவாளருக்கு சித்தார்த்தன் செல்வாக்கில் வவுனியா வங்கிக்கிளையில் வேலை அபிவிருத்திச்சபை தவிசாளருக்கு டக்ளசது செல்வாக்கில் யாழில் உள்ள அரச வங்கியில் வேலை இதுதான் இவர்கள் கண்ட ஜனநாயகம். 

வேலைவாய்ப்பு, மதுபானக்கடை, பேர்மிற் மண்பேர்மிற் , இதைப்போல வேற செல்வாக்குகளுக்காக டக்ளசுக்கும் வியஜகலாவுக்கும் அங்கஜனுக்கும் வடக்கில் மக்கள் வாக்களிக்கிறார்கள்.

விட்டுக்கொடாதன்மை, இந்திய எதிர்ப்பு, இ ணக்க அரசியல் இல்லை, சாத்தியமோ சாத்தியமில்லையோ புலிகள் காலத்திலிருந்த வர்களது கொள்கைகளுக்குப் பொருந்திப்போவதான கொள்கைப்பிடிப்பு இவற்குக்காக தமிழ் தேசிய மக்கள் முண்ணணிக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். 

 

இவர்களுக்கு நாம் வாக்களித்தது ஜனநாயகத்தைப் புத்துயிர் ஊட்டத்தானே இவர்கள் கடந்த ஒன்பதரை வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ஜனநாயகத்தைத் தேடி இன்னமும் புத்துயிர் ஊட்டாமல் என்ன செய்கிறார்கள், இணக்க அரசியல் கொள்கைமூலம் தீர்வு எனக்கூற நாம் இவர்களுக்கு வாக்களித்தோம் அடுத்த தேர்தலும் வரப்போகுது எங்கே தீர்வு 

இரண்டாயிரத்துப்பதினாறில் தைப்பொங்கள் பானை பொங்குபோது எல்லோர் வீட்டுப் பொங்கல்பானையிலும் தீர்வு பொங்கும் என சுமந்திரனது துரோணாச்சாரியார் சிங்கக்கொடி புகழ் சம்பந்கன் ஐயா கூறினாரே எங்கே போனது தீர்வுப்பொங்கல்.

இவர்களது இணக்க அரசியல் ஜனநாயகம்மூலம் இவர்கள் தமிழ்மக்களுக்கு புலிகளல்லாத பத்து வருடங்களில் எதக்கொண்டுவது சேர்த்தார்கள் எமக்காக.

பத்துவருடம் ஆகிறது இதுவரை அவர்களது ஜனநாயகம் சாத்தித்ததென்ன? தவிர இப்போது ஜனநாயகம் என்ன புலிகள்காலத்து, முள்முடி தவிர்த்து தங்கத்தால் செய்து வைரம் பதித்த முடிசூடியா வடக்குக் கிழக்கிம் நடனமாடுகிறது

சரி! தேவையற்ற சத்தங்களை விடுவோம். இலங்கையில் தமிழர் பிரச்சினை இடியப்பச் சிக்கல் என்பது அனேகமானோர் ஏற்றுக் கொண்ட ஒன்று. இந்தச் சிக்கலில் பங்களிக்கும் காரணிகள் எவையென்று இங்கே ஒரு பட்டியல் மட்டும் தருவீர்களா? அது புலிகள் வர முன்னர்/வந்த பின்னர் ஆகப் பிரித்துச் சொன்னாலும் சரி. தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் ஜனநாயக ரீதியிலான அரசியலை எதிர்த்தார்கள் அல்லது, நடத்தவிடாமல் தடுத்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

புலிகளாலும் மற்றைய இயக்கங்களாலும்  கொல்லப்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகளை கொன்றதற்கான காரணங்கள் எவ்வாறானதாக இருந்தபோதும், அவற்றின் விளைவுகள் எமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இறுதி முடிவினை எந்தவிதத்திலும் மாற்றக்கூடியனவாகவும் இருக்கவில்லை.

சிலவேளை முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெறாது, முற்றான வெற்றியுடனான விடுதலை சாத்தியமாகியிருந்தால் இந்தப் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாமோ என்னவோ, ஆனால் நடைபெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சில தமிழ்த் தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் அவர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்திருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர், துரையப்பா போன்றோர் ஏதோ ஒருவிதத்தில் தமிழர் நலனிற்கு எதிரான வகையில் ஏதோவோரிடத்தில் செயற்பட்டார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டது சரியா என்றால், இல்லையென்பதே பதில். ஏனென்றால், இக்கொலைகள் எல்லாம் புலிகள்மீது பயங்கரவாதிகள் எனும் நாமத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக இறுக்குவதற்குப் பயன்பட்டனவேயன்றி எமக்கு உதவவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ragunathan said:

புலிகள் ஜனநாயக ரீதியிலான அரசியலை எதிர்த்தார்கள் அல்லது, நடத்தவிடாமல் தடுத்தார்கள் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

புலிகளாலும் மற்றைய இயக்கங்களாலும்  கொல்லப்பட்ட பல தமிழ் அரசியல் வாதிகளை கொன்றதற்கான காரணங்கள் எவ்வாறானதாக இருந்தபோதும், அவற்றின் விளைவுகள் எமக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், இறுதி முடிவினை எந்தவிதத்திலும் மாற்றக்கூடியனவாகவும் இருக்கவில்லை.

சிலவேளை முள்ளிவாய்க்கால் அவலம் நடைபெறாது, முற்றான வெற்றியுடனான விடுதலை சாத்தியமாகியிருந்தால் இந்தப் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டிருக்கலாமோ என்னவோ, ஆனால் நடைபெறவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சில தமிழ்த் தலைவர்களின் தன்னிச்சையான முடிவுகள் அவர்களின் கொலைக்குக் காரணமாக அமைந்திருந்தன. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், கதிர்காமர், துரையப்பா போன்றோர் ஏதோ ஒருவிதத்தில் தமிழர் நலனிற்கு எதிரான வகையில் ஏதோவோரிடத்தில் செயற்பட்டார்கள். அதற்காக அவர்கள் கொல்லப்பட்டது சரியா என்றால், இல்லையென்பதே பதில். ஏனென்றால், இக்கொலைகள் எல்லாம் புலிகள்மீது பயங்கரவாதிகள் எனும் நாமத்தை மேலும் மேலும் ஆணித்தரமாக இறுக்குவதற்குப் பயன்பட்டனவேயன்றி எமக்கு உதவவில்லை. 

வேடிக்கையாக இருக்கிறது ரகு உங்கள் சமாளிப்பு! புலிகளின் பூரண கட்டுப் பாட்டில் இருந்த வடக்கு அல்லது கிழக்கில் எத்தனை அரசியல் கட்சிகள் இயங்கின என்று உங்களால் சொல்ல முடியுமா? புலிகளால் எடுக்கப் பட்ட முடிவுகள் (திரைப்படத் தடை, சினிமாப் பாட்டுத் தடை, பாஸ், பிணை. போன்றவை) எத்தனை பொதுஜன அமைப்புகளால் சவாலுக்குட்படுத்தப் பட்டன? 

புலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள்! மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள்? யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா? 

Link to comment
Share on other sites

இலங்கையில் பொளத்த பேரினவாத அரசிடம் இருந்து தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகளை அடையும் முயற்சியில் அரசியல் அணுகுமுறையில் முன்னேற்றம் அற்ற நிலையிலேயே ஆயுதப்போராட்டம் உருவாகியது. இவ் ஆயுதப்போராட்டம் வலுவடையும்போது ஆயுதப்போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் ஆயுதப் போராட்டத்தை எதிர்த்தும் அல்லது சந்தேகத்திற்கு இடமாக  செயற்பட்ட அரசியல் முன்னெடுப்புகள் அது சார்ந்த செயற்பாடுகள் இயல்பாக எதிர்க்கப்பட்டது. கொலைகள் நடைபெற்றது. எதிர்காலத்தில் மீள ஒரு ஆயுதப்போராட்டம் தோன்றினாலும் அதற்கு அந்நியப்பட்ட அரசியல் செயற்பாடுகள் எதிர்க்கப்படும். கொலைகள் நடைபெறும். இவ்வாறான நிகழ்வுகளை அந்தந்த காலச் சமூக அரசியல் சூழலே தீர்மானிக்கும். 

தமிழ்ச்சமூகத்தில் உள்ள சமூக முரண்பாடுகள் சாதீயத் தளங்களின் பண்பாட்டு உளவியல் அமைப்பு, மத பிரிவினைகள், மதப் பிரிவினைகள் எனும்போது இஸ்லாமிய இந்து முரண்பாடுகள், கத்தோலிக்க இந்து இணக்கப்பாடும் அதே நேரம் புரட்டஸ்தாந்து இந்து எதிர்ப்பு நிலைப்பாடும். (நவாலி தேவாலயப் படுகொலையை சிங்களப் பேரினவாதிகளை முந்திக்கொண்டு கதிர்காமர் நியாயப் படுத்தியதற்கும் சிங்களத்திற்கு வக்காலத்து வாங்கியதற்கும் UTHR அமைப்பின் சதிப்பிரச்சாரங்களும் புரட்டஸ்தாந்து முரண்பாடுகளை தவிர்த்துப் பார்க்க முடியாது) இதற்கு அப்பால் பிரதேசவாதப் பேதங்கள், புத்திஜீவிகள் என்றழைக்கப்படுவோர்க்கும் பொளத்த பேரினவாதகளுக்கும் இடையேயான அனுசரிப்பு போக்கு, புறநிலையில் இந்திய மத்திய ஆழும்வர்க்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி விழையாட்டுக்களில் சிக்குண்ட ஆயுதமேந்திய இயக்கங்களும் என ஜனநாயகத்திற்கு சம்மந்தமில்லாத ஒரு தளச் சூழுலில் நடந்த ஆயதப்போராட்டத்தில் தியாகங்கள் அர்பணிப்புகள் படுகொலைகள் ஜனநாயகம் பயங்கரவாதம் அனைத்தும் இருந்தது. இனி ஒரு ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தாலும் இவை அனைத்தும் இருக்கும் ஏனெனில் போராட்டத்திற்கு முன்னரும் போராட்டகாலத்திலும் போராட்டத்தின் பின்னரான தற்போதும் அரசியலும் ஆயுதப்போராட்டமும் நடக்கும் தளம் ஒன்றுதான். அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏற்படவும் முடியாது. 

Link to comment
Share on other sites

41 minutes ago, Justin said:

புலிகள் கொன்றது பிழை, ஆனால் அது அவர்களை கெட்ட விம்பமாகக் காட்டியது என்ற ஒரே காரணத்திற்காக என்கிறீர்கள்! மேலுள்ள பட்டியலில் உள்ளோரில் பலர் கொலை செய்யப் பட வேண்டிய அளவுக்கு என்ன செய்தார்கள் என்று சொல்லுங்கள்? யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், ஏன் அமிர் கூட-இவர்களின் குற்றம் என்னவென்று நீங்களே இங்கு பட்டியலிட முடியுமா? 

இவர்களைக் கொன்றது புலிகள் தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்களை உங்களால் தர முடியுமா?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.