Jump to content

களத்தில் நிலைத்து நிற்கும் இலங்கை: விக்கெட்டுகளை தகர்த்தெறிவதில் நியூசிலாந்து தடுமாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் நிலைத்து நிற்கும் இலங்கை: விக்கெட்டுகளை தகர்த்தெறிவதில் நியூசிலாந்து தடுமாற்றம்

d0227-15459183655679-800-3-720x450.jpg

இலங்கை மற்றும் நியூசிலாந்;து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், நான்காம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி, 660 என்ற வெற்றி இலக்கை நோக்கி, இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இலங்கை அணி, ஆட்டநேர முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் சுரங்க லக்மால் 16 ஓட்டங்களுடனும், தில்ருவான் பெரேரா 22 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
கிறிஸ்ட்சேர்ச்சில் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 50 ஓவர்களிலேயே 178 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்க தவற, அதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களுக்கு நடையை கட்டினர்.

எனினும் விக்கெட் காப்பாளர் வட்லிங்கின் 46 ஓட்டங்களுடனும், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தீயின் 68 ஓட்டங்களுடனும் சற்று வலுப்பெற்ற நியூசிலாந்து அணி, இறுதியில் 178 ஓட்டங்களுக்கு மடிந்தது.

இதன்போது, பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் 5 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 104 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் இறுதிவரை களத்தில் இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் மட்டும், ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்டமாக பெற்றுக்கொண்டார்.

இதன்போது நியூசிலாந்து அணி சார்பில், வெறும் 15 பந்துகளை வீசிய டிரென்ட் போல்ட், 4 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளை சாய்தார்.

74 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி, இன்றைய நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 585 ஓட்டங்களை பெற்ற போது, தனது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் இலங்கை அணிக்கு 660 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

நியூசிலாந்து அணி சார்பில், ஜீட் ராவல் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய கேன் வில்லியம்சன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தார். மேலும், டொம் லதம் 176 ஓட்டங்களையும், ரோஸ் டெய்லர் 40 ஓட்டங்களையும், பெற்று ஆட்டமிழந்தனர்.

ஹென்ரி நிக்கோல்ஸ் 162 ஓட்டங்களுடனும், கிராண்டஹோம் 71 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும், தில்ருவான் பெரேரா மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில், 429 எடுத்தால் வெற்றி என்ற ஓட்டங்களை நோக்கி இலங்கை அணி, நாளை போட்டியின் இறுதிநாளை தொடங்கவுள்ளது.

 

http://athavannews.com/களத்தில்-நிலைத்து-நிற்கு/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.