Jump to content

ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி. அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்: இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தடுமாற்றம்

இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதற்கமைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இந்தியா அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி இந்தியா அணி 346 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

ஆட்டநேர முடிவில் ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடனும், மயங்க் அகர்வால் 28 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 443 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக புஜாரா 106 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களையும், ரோஹித் சர்மா ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் பெட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் மற்றும் நதன் லியோன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, 151 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக டிம் பெய்ன் மற்றும் மார்க்கஸ் ஹரிஸ் ஆகியோர் தலா 22 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து, போட்டியின் மூன்றாவது நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, ஆட்ட நேர முடிவுவரை 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 54 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்ஸின் போது ஹனுமா விஹாரி 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோஹ்லி ஆகியோர் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் களத்தை விட்டு வெளியேறினர்.

அதன்பிறகு களமிறங்கிய ரஹானே 1 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹசில்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 5 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், இந்தியா அணி இரண்டாவது இன்னிங்ஸிற்காக போட்டியின் நான்காவது நாளை, நாளைய தினம் தொடங்கவுள்ளது.

http://athavannews.com/ஆஸி-அணிக்கெதிரான-மூன்றாவ/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.