Jump to content

சிரியா போர்: முக்கிய நகருக்குள் நுழைந்தன அரசு ஆதரவு படைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
மன்பிஜ்படத்தின் காப்புரிமை Getty Images Image caption மன்பிஜ்

சிரியா அரசின் ஆதரவுப் படைகள், நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மன்பிஜ் நகரில் நுழைந்துவிட்டன. ஆறு ஆண்டுகளுக்கு முன் சிரியா அரசு தரப்பு முதன்முறையாக இந்த நகருக்குள் நுழைந்திருப்பதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் குர்து இனப் படைகள், அங்கு துருக்கிப் படைகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்திருப்பதால், அரசிடம் உதவி கோரியிருந்தது.

குர்துக்களின் YPG படைகள் தீவிரவாதக் குழுக்களில் ஒன்று என துருக்கி கருதுகிறது.

சிரியாவில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா வெளியிட்ட அறிவுப்பு, அமெரிக்க படைகளின் ஆதரவை பெற்றிருந்த குர்துக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிரியபடத்தின் காப்புரிமை AFP Image caption அமெரிக்கப் படைகள் எப்போது திரும்பப் பெறப்படும் என்பது குறித்து தெளிவில்லை.

சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழிக்க சுமார் 2,000 அமெரிக்கப்படையினர் உதவி செய்தனர். இன்னும் சில பகுதிகளில் சண்டை நடந்துகொண்டுதான் இருக்கிறது.

வடக்கு சிரியாவில் உள்ள குர்துப் பகுதியில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் நிலைகொண்டுள்ளன.

சிரியாவில் பெரும் பரப்பளவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஐ.எஸ். குழுவினர் கைப்பற்றினர். அத்துடன், சிரியா மற்றும் இராக்கின் சுமார் எட்டு மில்லியன் மக்கள் மீது கடுமையான ஆட்சியை கட்டவிழ்த்துவிட்டது இந்த ஐ.எஸ். குழு.

இந்நிலையில் சிரியாவின் குர்துப் போராளிகள் மற்றும் அரபி போராளிகள் (சிரிய ஜனநாயகப் படையினர்) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து அமெரிக்கப் படையினர் கிட்டத்தட்ட ஐ.எஸ். குழுவினரை ஒழித்து அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை மீட்டனர்.

ஆனால், ஐ.எஸ். தீவிரவாதக் குழு முற்றிலும் அழிந்துவிடவில்லை. சிரியாவில் இன்னமும் 14,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாகவும், இதைவிட அதிக எண்ணிக்கையில் அருகில் உள்ள இராக்கில் அவர்கள் இருப்பதாகவும் சமீபத்திய அமெரிக்க அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இந்தத் தீவிரவாதக் குழுவினர் கொரில்லா போர்முறைக்கு மாறி தங்கள் அமைப்பை மீண்டும் கட்டமைக்க முயல்வார்கள் என்ற அச்சம் நிலவுகிறது.

சிரியா

அமெரிக்காவுக்கும் குர்துப் போராளிகளுக்கும் இடையில் உள்ள கூட்டணி அண்டை நாடான துருக்கிக்கு எரிச்சலாகவே இருந்துவந்தது. சிரியா ஜனநாயகப் படையின் முக்கிய போராடும் பிரிவான குர்திஷ் ஒய்.ஜி.பி. படைப்பிரிவு, துருக்கியில் குர்து தன்னாட்சி கோரி போராடி வரும் (தடை செய்யப்பட்ட) குர்து குழுவினரோடு தொடர்புடையது என்று துருக்கி நினைக்கிறது.

சிரியாவில் உள்ள ஒய்.ஜி.பி. படையினர் மீது தங்கள் நாடு விரைவில் போர் தொடுக்கும் என துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் கூறியிருந்தார். தமது திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்புடன் தொலைபேசியில் விவாதித்தபோது அதற்கு ஆக்கப்பூர்வமான பதில் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சிரியாவின் வடபகுதியில் மட்டுமில்லாமல், ஐ.எஸ். படையினரின் கட்டுப்பாட்டில் இறுதியில் எஞ்சியிருக்கும் தென் கிழக்குப் பகுதியிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடைபெறும் சண்டையில் அமெரிக்கப் படை உதவி புரிந்துவருகிறது.

சிரியாபடத்தின் காப்புரிமை Getty Images

யூப்ரடஸ் நதியின் மேற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மன்பிஜ் நகரம் பிப்ரவரி மாதத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று அமெரிக்காவுடன் குர்து போராளிகளுக்கு ஒரு ஒப்பந்தம் இருந்தது.

அண்மை வாரங்களில் பதற்றங்கள் அதிகமாக இருந்த மன்பிஜ் நகரை சுற்றியிருந்த பிராந்தியத்தில், குர்து போராளிகள் மீது புதிய தாக்குதல்களை தொடுக்கவிருப்பதாக துருக்கி அதிபர் ரெசிப் தாயிப் எர்துவான் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மன்பிஜ் நகரில் சிரியா அரசு ஆதரவுப் படைகள் நுழைந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

https://www.bbc.com/tamil/global-46702747

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.