Jump to content

போல்டின் பந்தில் சரணடைந்தது இலங்கை ; 305 ஓட்ட முன்னிலையுடன் நியூஸிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போல்டின் பந்தில் சரணடைந்தது இலங்கை ; 305 ஓட்ட முன்னிலையுடன் நியூஸிலாந்து

 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது.

nz2.jpg

நேற்று கிறிஸ்ட்சர்சில் ஆரம்பமான இப் போட்டியில் நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. இதையடுத்து நேற்றைய தினமே தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 4 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டத்துடன் இருந்தது.

ஆடுகளத்தில் மெத்தியூஸ் 27 ஓட்டத்துடனும், ரோஷான் சில்வா 15 ஒட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க, போல்டின் பந்தில் சரணடைந்த இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்படி ரோஷான் சில்வா 21 ஓட்டத்துடனும், நிரோஷன் திக்வெல்ல நான்கு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறிய அதேவேளை அடுத்தடுத்து களமிறங்கிய தில்றூவான் பெரோ, சுரங்க லக்மால், துஷ்மந்த சாமர மற்றும் லஹுரு குமார ஆகியோர் எதுவித ஓட்டங்களின்றி டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

boult.jpg

இதனால் இலங்கை அணி 41 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 104 ஓட்டத்துக்குள் சுருண்டது. 

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ட்ரென்ட் போல்ட் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுக்களையும், டிம் சவுதி 3 விக்கெட்டுக்களையும், கொலின் டி கிராண்ட்ஹாம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 74 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை குவித்துள்ளது.

இதன் மூலம் நியூஸிலாந்து அணி 305 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து அணி சார்பாக ஜீட் ரவல் 74 ஓட்டத்தையும், அணித் தலைவர் வில்லியம்சன் 48 ஓட்டத்தையும் பெற்ற அதேவேளை டோம் லேதன் 74 ஓட்டத்துடனும், ரோஸ் ரெய்லர் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

nz1.jpg

நாளை போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும். 

 

http://www.virakesari.lk/article/47043

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.