Jump to content

சுவரில் மோதிய ட்ரம்ப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவரில் மோதிய ட்ரம்ப்

மெக்சிக்கோ எல்லையோரம் சுவரொன்றைக் கட்டியெழுப்புவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்காவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவைகள் பெருமளவுக்கு (  Government  Shutdown) முடங்கிப்போயிருக்கின்றன. அமெரிக்க வரியிறுப்பாளர்களுக்கு 500 கோடி டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய துடுக்குத்தனமான இந்த சுவர் நிர்மாணத் திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டையும் பட்ஜெட்டில் உள்ளடக்காவிட்டால் அதில் கைச்சாத்திடுவதற்கு மறுத்ததன் மூலம் காங்கிரஸ் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதில் ட்ரம்ப் வெற்றிகண்ட போதிலும், செனட் சபையில் அந்த திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில்லை.செனட் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

donald.jpg

அரசாங்க சேவைகள் முடக்கம் காரணமாக சுமார் 4 இலட்சம் ஊழியர்களை  விடுமுறையில் அல்லது சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பவேண்டியநிலை ஏற்பட்டிருக்கிறது. அதேயளவு எண்ணிக்கையானோர் சம்பளமில்லாமல் வேலை செய்யவேண்டியிருக்கும்.இது நத்தார் பண்டிகைக் காலம் என்பதால் இந்த ஊழியர்கள் பெரும் சஞ்சலமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அடுத்த வருட ஆரம்பத்தில் காங்கிரஸ்  ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கு முன்னதாக சுவர் நிர்மாணத்திட்டத்துக்கான நிதிக்கு அங்கீகாரத்தைப் பெற்றுவிடவேண்டுமென்பதில் ஜனாதிபதி ட்ரம்ப் கடும் அவசரம் காட்டினார். இடைக்கால தேர்தல்களின் முடிவுகளின் பின்னணியில் சுவரின் கதியை நோக்கும்போது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.  குடியரசு கட்சிக்காரர்களை விடவும் கூடுதல் வாக்குகளைப் பெற்றபோதிலும் ஜனநாயக கட்சியினர் செனட் சபையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தவறிவிட்டனர். இந்த நிலைமைக்கு அமெரிக்கத் தேர்தல் முறை மீது சில அவதானிகள் குற்றஞ்சாட்டுகிறார்கள். அது பழமைவாதிகளுக்கு சார்பானதாக இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

skynews-kirstjen-nielsen-migrants_446629

யார் முதலில் விட்டுக்கொடுப்பது என்ற போட்டி ட்ரம்புக்கும் செனட்டுக்கும் இடையே நிலவுகிறது. தகராறு நீடிக்கக்கூடிய சூழ்நிலையே காணப்படுகிறது. ஜனாதிபதி தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருக்கிறார். ஏனென்றால் மெக்சிக்கோ எல்லையோரம் சுவரை நிர்மாணிப்பது என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அவருக்கு பெரும் அவமானமாகப்போய்விடும். தாங்களும் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்ற தோரணையில் செனட் சபையின் ஜனநாயக கட்சித் தலைவர் ஷுக் ஷுமெரும் தங்களது நிலைப்பாட்டில் ஆழக்கால் ஊன்றி நிற்கிறார். சுவர் திட்டம் ஒருபோதும் அங்கீகரிக்கப்படப்போவதில்லை, அதனால் ஜனாதிபதி அதைக் கைவிடவேண்டும் என்று அவர் கூறுகிறார். யார் முதலில் இமை அசைப்பது?

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கணக்கு வாக்கு நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் இலங்கையும் கூட  அரசாங்க சேவைகள் முடங்குகின்ற நெருக்கடியை எதிர்நோக்கவேண்டிவந்திருக்கும். கணக்கு வாக்கிற்கு ஆதரவாக 102 வாக்குகளும் எதிராக 6 வாக்குகளும் கிடைத்தன. ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே.வி.பி.) யே எதிர்த்துவாக்களித்தது. வாக்கெடுப்பு வேளையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி.க்கள் சபையில் இருக்கவில்லை. தங்களால் கணக்குவாக்கை தோற்கடிக்கமுடியுமாக இருந்தபோதிலும் அரசாங்க ஊழியர்களின் நலனைக் கருத்திற்கொண்டு பொறுமையுடன் நடந்துகொண்டதாக அவர்கள் கூறினார்கள். எப்படியோ அமெரிக்காவைப் போலன்றி இலங்கையில் அரசாங்க சேவைகள் முடக்கம் தவிர்க்கப்பட்டுவிட்டது......!

( வீரகேசரி இணையத்தள அரசியல் ஆய்வுக்களம்)

 

http://www.virakesari.lk/article/46958

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.