Jump to content

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுடன் தமிழ் தலைமைகள் செய்து கொண்ட டீலின் விளைவே TNA….

December 25, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

 

 

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் என்பது தமிழீழ விடுதலை புலிகளுடன் தமிழ் அரசியல் தலைமைகள் செய்து கொண்ட டீலின் ஊடானதே என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற “சொல்விற்பனம்” எனும் விவாத அரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரான நிகழ்வுகளை தொடர்ச்சியாக பார்த்தால் ஜனநாயக ரீதியான தேர்தலில் போட்டியிட்ட ஒவ்வொருவரும் சுட்டுப்படுகொலை செய்யபப்ட்டனர். அந்த வரிசையில் இறுதியாக உயிரிழந்தவர் கலாநிதி நீலன் திருச்செல்வம், அதற்கு முன்னர் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்துரை அதற்கு முன்னர் யாழ்.மாநகர சபை முதல்வர் சிவபாலன், அதற்கு முன்னர் சரோஜினி யோகேஸ்வரன் என தொடர்ச்சியாக கொல்லப்பட்டார்கள்.

அதனால் தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க வேண்டும் எனில் விடுதலைப்புலிகளுடன் டீலுக்கு போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்நிலையில் எல்லா கட்சிகளையும் சேர்த்து ஜனநாயக குரலாக இருப்போம் எனும் உத்தரவாதம் அளிக்க வேண்டி இருந்தது.

அதேபோன்று புலிகளுக்கும் ஒரு தேவை இருந்தது. தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு இருந்தார்கள். அதனை சர்வதேசம் ஏற்க தயாராக இருக்கவில்லை. அதனால் புலிகளுக்கு மக்களிடம் ஒரு ஆணை பெற வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க வேண்டும் என கோரி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

அதன் பின்னரே விடுதலைப்புலிகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. அதுவே அங்கே நடந்தது. கட்சிகளுக்குள் தாங்கள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என எவ்வாறு தான் இயங்க வேண்டும் அதன் இயங்கு தளம் என்ன அதன் செல் நெறி பற்றிய எந்த உடன்பாடும் அங்கு இருக்க வில்லை என தெரிவித்தார்.

 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையும் பாருங்க...நம்ம கம்பவாருதி சாமி சொல்லுது நம்ம பொட்டருக்கு தான் அட்வைச பண்ணி அனுப்பினாரமே...அட இராமா இதை ஐ.பி.சி நியூசு சொல்லுது

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஜனநாயக தலைவர்களை கொன்றார்கள்; அவர்களுடன் டீல் போடவே கூட்டமைப்பு உருவானதாம்: வரலாற்றை உருட்டிப்பிரட்டிய சயந்தன்!

December 25, 2018
RAVIRAJAH-2-696x464.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையின் அடிப்படையில் உருவாகவில்லை, விடுதலைப்புலிகளுடன் டீல் செய்து உருவாக்கப்பட்டது என கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கம் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாதென பகிரங்கமாக போட்டுடைத்துள்ளார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்.

சமய சொற்பொழிவுகளை நடத்திவரும் கொழும்பு கம்பன்கழகம், அண்மையில் அரசியல்கட்சிகளை உள்ளடக்கி, எதிர்காலத்தில் தமிழ் மக்களிற்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் யார் என்ற கருத்தாடற்களம் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், பல கட்சிகள் அதில் கலந்துகொள்ளவில்லை. தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய கட்சிகள் மாத்திரமே அதில் கலந்து கொண்டிருந்தன.

இதையடுத்து, மக்களின் கேள்விகளிற்கு, அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள் பதிலளிக்கும் நிகழ்ச்சியாக அது மாற்றப்பட்டது.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? கொள்கையின் அடிப்படையல் உருவானதா?, ஏதும் நோக்கத்துடன் உருவானதா?, அல்லது வெறும் தேர்தல் கூட்டா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே, இப்படி தப்பும்தவறுமாக பதிலளித்தார் கே.சயந்தன்.

அவர் அதற்கு பதிலளிக்கும்போது- “கூட்டமைப்பு உருவானது, விடுதலைப்புலிகளுடன் செய்யப்பட்ட டீல். ஜனநாயக தேர்தலில் போட்டியிடுபவர்கள் வரிசையாக இலக்கு வைக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். நீலன் திருச்செல்வம், சரோஜினி யோகேஸ்வரன், தங்கத்துரை என வரிசையாக கொல்லப்பட்டனர். தேர்தலில் போட்டியிட்டு கொல்லப்படாமல் இருக்க விடுதலைப்புலிகளுடன் ஒரு டீலுக்கு போக வேண்டியிருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் தாமே ஏகபிரதிநிதிகள் என்று கூறினாலும், அதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டமைப்பின் ஊடாக அதை நிறுவிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களிற்கும் இருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது. தேர்தலில் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்த பின்னர், விடுதலைப்புலிகளே ஏகபிரதிநிதிகள் என்பதை சர்வதேச சமூகம் அங்கீகரித்தது. இதைதவிர, கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னால் எதுவும் கிடையாது“ என குறிப்பிட்டார்.

இதன்பின்னர் உரையாற்றிய நீண்டகால அரசியல் செயற்பட்டாளரான ரெலோவின் எம்.கே.சிவாஜிலிங்கம், சயந்தன் கூறியவை தவறு என்பதை குறிப்பிட்டு, தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் வரலாற்று பின்னணியை புரிய வைத்திருந்தார்.

 

http://www.pagetamil.com/29700/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் சாவகச்சேரியைச்சேர்ந்த நடராஜா ரவிராஜ்ஜையும் இயக்கம் போட்டுத்தள்ளியது என முடித்துவிட்டார். 

தவிர சரோஜினி யோகேஸ்வரனைப்போடும்போது அதிகால ஐந்துமணிக்கு மேல்ல் இருக்கும் அந்தவேளையில் மாவை சேனாதிராஜாவின் குடும்பம் இந்தியாவில் சுடப்படும்போது மாவையர் சரோஜினி யோகேஸ்வரன் அவர்களது வீட்டில்தான் நின்றார் அவருக்குச் சூடுபட்டதும் பின்னாலை மதில் பாய்ந்து தப்பி ஓடியதாக ஒருதகவல்

Link to comment
Share on other sites

On 12/26/2018 at 3:35 AM, கிருபன் said:

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சயந்தன் தெரிவித்துள்ளார்.

சயந்தன் தெரியாததை கதைக்காமல் தான் பேஸ்புக் ஊடாக பெண்களுடன் செய்ய முயற்சித்த அநாகரிக டீல்கள் பற்றி கதைக்கலாமே!

சயந்தன் தெரியாததை கதைக்காமல் கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக் குழுக் காடையர்களை விடுதலை செய்ய முயற்சித்த அநாகரிக டீல் பற்றி கதைக்கலாமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூத்தமைப்பில் இருப்பவர்கள் நாளை இந்த நாடு இப்படி ஆனத்திற்கு ஒட்டு மொத்தமும் விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்வதற்கு  வெகு காலம் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபாதாசன் said:

அடுத்த தேர்தலில் பார்ப்பம் , ராசா இப்ப எதையும் சொல்லும் 

கூட்டணியின் பழைய வாக்குவங்கி இப்போதும் கொஞ்சம் இருக்கிறது.இளசுகளால்த் தான் அவர்களுக்குப் பிரச்சனையே.எருமைமாடு நின்றாலும் அந்த வாக்குகள் மாறாது.அதனால்த் தான் செருப்பாக இருந்தாலும் வெல்லலாம் என்ற எண்ணத்தில் ரெலோ புளட் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
இருந்தாலும் இனிவரும் தேர்தல்கள் மிகவும் சவாலாகவே இருக்கும்.

43 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கூத்தமைப்பில் இருப்பவர்கள் நாளை இந்த நாடு இப்படி ஆனத்திற்கு ஒட்டு மொத்தமும் விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று சொல்வதற்கு  வெகு காலம் இல்லை

உந்த ரெக்கோட் ஏற்கனவே பாடத் தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.