Jump to content

எப்படி ஈழத் தமிழினம் இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.

நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.

இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


உந்த கேடுகெட்ட  அரசியல்வாதிகள் இல்லாட்டில் தமிழ்ச்சனத்தின்ரை ஒற்றுமையை ஆராலையும் பிரிக்கேலாது.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருடைய வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டுள்ளன வெள்ளம் வடிந்த பின் தான் முழுமையான இழப்பீடு தெரியும் .

Link to comment
Share on other sites


இந்த இயற்கை அனர்த்தத்தின் போதும் தாயகத்து தமிழ் இளைய சமூகம் தன்னார்வமாக ஒன்றிணைந்து பல சிரமங்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக முன்னின்று பாடுபடுகின்றதை அவதானிக்க முடிகின்றது. கைத் தொலைபேசியினூடாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுகின்றனர். தேவை என்று ஒன்று வரும் போது அதற்காக தம்மை ஈடுபடுத்த முன்னிற்கும் சமூகமாக இருக்கின்றனர்.

தாயக தமிழர்கள், குறிப்பாக தாயகத்து இளம் சமூகம் வெளி நாடுகளில் இருந்து அனுப்பும் காசில் குடித்து வீணடிக்கும் கூட்டம் என்று முத்திரை குத்துகின்றவர்கள், இவற்றை ஒரு போதும் காண்பதில்லை, காண விரும்புவதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

தாயக தமிழர்கள், குறிப்பாக தாயகத்து இளம் சமூகம் வெளி நாடுகளில் இருந்து அனுப்பும் காசில் குடித்து வீணடிக்கும் கூட்டம் என்று முத்திரை குத்துகின்றவர்கள், இவற்றை ஒரு போதும் காண்பதில்லை, காண விரும்புவதும் இல்லை.

அங்கே அதுவும் இருக்கு  இதுவும் இருக்கு.

ஒரு குடும்பத்தில் எதிர்க்கருத்துத்தான் ஆரோக்கியம் தரும். சரி பிழைகளை தெரிய வைக்கும். 
எதெற்கெடுத்தாலும் ஆமா போட்டால் எவருக்குமே சரி பிழை தெரியாது.

தெரியவும்  சந்தர்ப்பம் இல்லை.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

•எப்படி ஈழத் தமிழினம்
இப்படி ஒரு அதியசயத்தை நிகழ்த்துகிறது?

சிங்கள அரசு உதவவில்லை ஏனெனில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழ் இனம்.

நம்பிய தலைவர்கள் வந்து ஆறுதல் கூறவில்லை. ஏனெனில் அவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றுவதிலே அக்கறையாக இருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழ் மக்கள் துவண்டுவிட வில்லை. வெள்ள பாதிப்பு என்றவுடன் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திரணடு வந்து உதவி செய்கின்றனர்.

கிளிநொச்சியில் எங்கு பார்த்தாலும் இளைஞர் கூட்டம். ஏதோ நல்லூர் திருவிழா போல் கூட்டம் கூட்டமாக வந்து உதவி செய்கிறார்கள்.

புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும் நிதி சேகரித்து தம்மால் இயன்ற உதவிகளை அனுப்பிக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவித தலைவரோ அல்லது அமைப்போ அல்லது வழிகாட்டலோ இல்லாமல் தமிழ் இனம் எப்படி ஒருவருக்குகொருவர் இப்படி உதவுகின்றனர் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

அதைவிட அதிசயம் போரினால் பாதிகப்பட்ட ஒரு இனம் எப்படி தைரியமாக இப்படி பாதிப்பை எதிர் கொள்கிறது என்பதே. இத்தகைய மனோதிடம் எப்படி வந்தது?

ஆம். இது போர்த்துக்கேயருக்கு எதிராக நூறு வருடம் போராடிய இனம். இது ஒல்லாந்தருக்கு எதிராக 100 வருடம் போராடிய இனம். ஆங்கிலேயருக்கு எதிராக 150 வருடம் போராடிய இனம். ஒரு லட்சம் இந்திய ராணுவத்திற்கு எதிராக 2 வருடம் போராடிய இனம். 1948ல் இருந்து சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் இனம்.

இத்தகைய வீரம்செறிந்த போராட்ட வரலாறு கொண்ட ஈழத் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்பது அதிசயம் இல்லை. அது எழுந்து நிற்காவிட்டால்தான் அதிசயம்.

 

 

 

போராட்டம் மட்டுமே வாழ்க்கையாய் போன இனம்…
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடற்கூறியல் மரபணு சார்ந்ததைப் போல் உளவியலும் அமையலாம். எனவே போராட்டக் குணமும் பரம்பரையாய் வர வாய்ப்பு உள்ளது என நினைக்கிறேன். முயற்சியால் அதனை மாற்றிக் கொள்வதும், தாங்கொணாத அடக்குமுறையால் புதிதாய் ஏற்படுத்திக் கொள்வதும் விதிவிலக்காக ஏற்படுவது உண்டு. போராட்டக் குணம் இயற்கையாய் அமைந்தமைக்கு எடுத்துக்காட்டாக யூத இனத்தைச் சொல்லலாம் (அவர்களது கோட்பாடுகளிலும் பார்ப்பனியத்தைப் போன்ற ஒருவகை உயர்வு  மனப்பான்மையிலும் நமக்கு மாறுபாடு இருப்பினும்). 1960களில் நடந்த 'துவி'ப் போராட்டத்தில் தாம் சார்ந்த மத நிறுவனத்தையும் அரசின் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடிய இடிந்தகரை மீனவர்கள் அணு உலைக்கெதிரான போராட்டத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது வியப்பன்று. அவ்வாறே தமிழினமும். பார்ப்பனியத்தின் சமஸ்கிருதத் தாக்குதலிலிருந்தும் தன் மொழியை  மீட்டெடுத்து மீள் உருவாக்கம் செய்வது தமிழினம். ஆகவே தொல்மொழிகளில் இன்றும் என்றும் வாழ்வது தமிழ். போராடாத சமூகம் மழுங்கிப் போகும். தம் போராட்டக் குணத்தினால் தமிழர் எங்கும் வென்று நிற்பர். மானிடம் அனைத்தும் வெல்ல வைப்பர். "வெள்ளம் போல் தமிழர் கூட்டம். வீரங்கொள் கூட்டம்" எனும் பாரதிதாசன் கூற்று மிகையுரையன்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.