Jump to content

அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நெருக்கடியில் இருந்து பாடம் எதையும் படிக்காத அரசியல் தலைவர்கள்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி' யின் தோல்வியில் இருந்து எமது நாட்டின் அரசியல் வர்க்கம் பெறுமதியான சில படிப்பினைகளைப் பெற்றிருக்கும் என்று எதிர்பார்ப்பை எவராவது கொண்டிருந்தால் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கு அரசியல் தலைவர்களினால் கடந்தவாரம் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிச்சயமாக ஏமாற்றத்தையே கொடுத்திருக்கும். தற்போதைக்கு அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும், ' தேசிய அரசாங்க ' முயற்சியொன்றின் ஊடாக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்வேறு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை.

       mahinda.jpg

2015 ஜனவரியில் தனக்கு மக்கள் அளித்த பிரதான ஆணை ராஜபக்ச ஆட்சியை பதவி கவிழ்ப்பதே என்பதை ஜனாதிபதி சிறிசேன முற்றாகவே மறந்துவிட்டார். ஆனால் நான்கு வருடங்கள் கூட முற்றாகக் கடந்துவிடமுன்னரே தந்திரமான வழிவகைகளின் மூலமாக ராஜபக்சவை மீண்டும் பதவியில் அமர்த்த துணிந்துவிட்டார். பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை அறிவித்த ஜனாதிபதியின் நடவடிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் சட்டவிரோதமானது என்றும் உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் ஏகமனதாக தீர்ப்பளித்தபோது இலங்கையின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.புதிய பிரதமரும் அவரது அமைச்சர்களும் தங்கள் பதவிகளில் செயற்படமுடியாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவு ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் பெரும் அவமானமாக அமைந்தது.

 கடனைத் திருப்பிச்செலுத்துகின்ற சர்வதேச கடப்பாட்டை நிறைவேற்றமுடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு கிரேக்கம் அல்லது ஆர்ஜன்டீனாவின் அந்தஸ்துக்கு சென்றுவிடக்கூடிய ஆபத்துக்கு மத்தியிலேயே பதவியில் இருந்துவிலக ராஜபக்ச நிர்ப்பந்திக்கப்பட்டார். கடந்த வாரம் கணக்கு வாக்கு பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்ட்டிருக்காவிட்டால், அரசாங்கத்தின் முழுச்செயற்பாடுகளுமே ஸ்தம்பிதநிலைக்கு வந்திருக்கும். அரசாங்க ஊழியர்களுக்கு சட்டரீதியான முறையில் சம்பளத்தைக் கொடுக்கமுடியாமல்போயிருக்கும். அத்தியாவசிய சேவைகள் முடங்கிப்போயிருக்கும்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் ஆதரவளித்தால் கூட அவரைப் பிரதமராக நியமிக்கப்போவதில்லை என்றும் அவருடன் தன்னால் பணியாற்ற முடியாது என்றும் ஆக்ரோஷமாகப் பேசிய ஜனாதிபதி சிறிசேன தான் கூறிய வார்த்தைகளைத் திரும்ப விழுங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு அவரையே மீண்டும் பிரதமராக நியமித்தார். அந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் நடைமுறைக்கு பொருந்தாதவை என்பதை முன்கூட்டியே ஜனாதிபதி உணர்ந்து நிதானமாகப் பேசப்பழகியிருக்கவேண்டும். 2015 ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் தானும் தனது குடும்பத்தினரும் நிலத்தில் 6 அடிக்கு கீழேபோயிருப்போம் என்று உச்சத்தொனியில் அன்று கூறியவர் சிறிசேன. அதே சிறிசேனதான் ஜனாதிபதி அரியாசனத்தில் அமருவதற்கு தனக்கு உதவியவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு ராஜபக்சவை நியமித்தார்.

அரசியல் நெருக்கடியின்போது தங்களுக்கு ஆதரவாகத்திரண்ட மக்கள் தங்கள் மீது விரும்புகிறார்கள் என்றோ அல்லது கடந்த மூன்றரை வருடகால ஆட்சியின் செயற்பாடுகளை மெச்சுகிறார்கள் என்றோ விக்கிரமசிங்கவும் அவரது ஐக்கிய தேசிய கட்சி ( அல்லது முன்னணி )யும் எந்தவிதமான மருட்சியையும் கொண்டிருக்கக்கூடாது. இவ்வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்கள் அரசாங்கத்துக்கு தெளிவாகக்கூறியிருந்த செய்தியை ஐ.தே.க. விளங்காமல் இருக்கமுடியாது. அந்த தேரதலில் ராஜபக்சாக்களின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மகத்தான வெற்றியே அடுத்த சுற்றுத் தேர்தல்களில் வெற்றிபெறக்கூடிய ' குதிரையாக ' நோக்கப்படுகின்ற மகிந்த ராஜபக்ச மீது பணத்தைக் கட்டுவதற்கு சிறிசேனவைத் தூண்டியது.

தவறான சட்டஆலோசனையின் கீழ் ஜனாதிபதி 2020 ஆகஸ்டில் நடத்தவேண்டிய பாராளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே 2019 ஜனவரியில் நடத்தமுடியும் என்று நம்பி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அது  தவறானது என்று உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர்.இந்த பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக வெளிக்காட்டப்பட்ட பொது அபிப்பிராயம் ஐ.தே.க.வுக்கு சார்பானதல்ல, ஜனநாயகத்துக்குச் சார்பானது. தங்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி தங்களின் இறைமையை அப்பட்டமாக மீறுவதை மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். ஜனாதிபதியாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டு உடனடியாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில்  மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறிய சிறிசேன இன்னும் ஒரு வருட காலத்திற்குள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக ராஜபக்சவின் உதவியை நாடிநிற்கிறார் என்பது தெளிவானது.

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்னதாக கொழும்பில் ஆற்றிய உரையில் மகிந்த  ராஜபக்ச தனது எதிர்கால அரசியல் தந்திரோபாயம் எவ்வாறானதாக இருக்கும் எனபதற்கான சமிக்ஞையை தெளிவாகக் காட்டியிருந்தார். ஐ.தே.க.வும் அதன் நேச அணிகளும் தங்களது அதிகார இருப்புக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதே தங்கியிருக்கின்றன அவர்கள் தமிழ் கட்சியின் பணயக்கைதிகளாக இருக்கிறார்கள் என்றும் அவர் அந்த உரையில் கூறியிருந்தார். கிராமப்புற பௌத்த சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவு தனக்கு இருக்கிறது என்பதையும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன ஐ.தே.க.வின் வாக்கு வங்கியுடன்  சிறுபான்மைச் சமூகங்களின் அமோக ஆதரவையும் பெற்றதன் காரணத்தினாலேயே தன்னைத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது என்பதையும் நன்கு தெரிந்துகொண்ட ராஜபக்ச இனவாதப் போக்கில் தனது பிரசாரங்களை முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத்தெரிகின்றன. அதிகாரத்துக்காக எதையும் அவர்கள் செய்வார்கள்.

கட்சி மாறுபவர்களின் பாராளுமன்ற ஆசனங்களைப் பறிப்பதன் மூலமாக கட்சித்தாவல்களுக்கு ஒரேயடியாக முடிவுகட்டவேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன. கட்சித்தாவல்களை ஊக்குவிக்கும் கைங்கரியத்தை இரு பிரதான அரசியல் கட்சிகளுமே வெவ்வேறு காலகட்டங்களில் முன்னெடுத்திருந்தன.தொடர்ந்தும் அந்த வேலையைச் செய்துகொண்டேயிருக்கின்றன. கடந்த வாரங்களில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு கூறப்பட்ட ' விலை 'யைக் கேள்விப்பட்ட நாட்டு மக்கள் மலைத்துப்போனார்கள்.

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய எந்த வழிமுறையையும், கொள்கை கோட்பாடு என்ற எதைப்பற்றியும் கிஞ்சித்தும் அக்கறைப்படாமல் கடைப்பிடிப்பதே இன்றைய அரசியலாகிவிட்டது. தனது கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தரப்புக்குச் செல்லும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுக்கப்போவதில்லை என்று ஜனாதிபதி சிறிசேன கூறுகிறார். விக்கிரமசிங்கவுக்கு அல்லது அவரது அரசாங்கத்துக்கு எந்த வழியிலும் உதவுவதில்லை என்று கடுமையான மனநிலையில் சிறிசேன இருப்பதை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஜனாதிபதியின் இந்த கடும் நிலைப்பாட்டின் விளைவாகத் தோன்றக்கூடிய முட்டுக்கட்டை நிலையை வெற்றிகொள்வதற்கு பிரதமரும் அரசாங்கமும் வகுக்கக்கூடிய தந்திரோபாயம் என்னவாக இருக்கும் என்பதே இன்று விடைவேண்டி நிற்கும் முக்கியமான கேள்வி.

 ( வீகேசரி இணையத்தள உள்நாட்டு அரசியல் ஆய்வுக்களம்)

 

http://www.virakesari.lk/article/46872

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.