Jump to content

திரும்பிப் பார்க்கிறோம் 2018: உலக சினிமாவில் உயரம் தாண்டிய சில படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  •  
 
humanjpg

கிம் கி டுக் இயக்கிய ஹியூமன், ஸ்பேஸ், டைம் அன்ட் ஹியூமன் திரைப்படத்தில் ஒரு காட்சி

Published : 24 Dec 2018 19:25 IST
Updated : 24 Dec 2018 19:36 IST

இந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து வெவ்வேறு மொழிகளில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தாலும் உலக சினிமா ரசிகர்களை கவர்ந்த படங்கள் என்று சிலவற்றைத்தான் சொல்லமுடியும்.

உலகின் பல்வேறு திரைவிழாக்களில் பங்கேற்று ஏராளமான விருதுகளை பெற்றால்தான் சிறந்த படமா? ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டால்தான் முக்கிய சினிமாவா என்றெல்லாம் ஆதங்கம் எழுகிறது என்றாலும் உலக சினிமா என்ற வரலாற்றுத் தடத்தில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த புதிய படங்களைப் பற்றி இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

தவறவிடாதீர்

முதலில் புகழ்பற்ற இயக்குநர்களின் சில படங்களைப் பார்ப்போம். கொரிய இயக்குநர் கிம் கி டுக், துருக்கிய இயக்குநர் நுூரே பில்கே செலான், ஈரானிய இயக்குநர் ஜாபர் பனாஹி ஆகியோரின் படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தின.

3-directorsjpg

கிம் கி டுக், நூரே பில்கே செலான், ஜாபர் பனாஹி

 

கிம் கி டுக்

சமீப வருடங்களாக பலகோடி ரசிகர்களை தன்படங்களைப் பற்றி பேசவைத்த தென்கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய புதிய படம் Human, space, time, time and human. அவரது முந்தைய படங்களுக்கே உண்டான புதுமையும் அதிர்ச்சியும்மிக்க ஒரு வினோதமான கதை இதிலும் உண்டு.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்க் கப்பலில் பலதரப்பட்ட மக்கள் உல்லாச சுற்றுலா செல்பவர்களின் பயணம் எவ்வளவு  வித்தியாசமாக எதிர்பாராத அனுபவங்கள் உணர்வுகளுக்கு தள்ளப்படுகிறார்கள் என்பதை ஒரு நவீன ஓவியம்போல கிம் கி டுக் இப்படத்தில் தீட்டிக்காட்டியுள்ளார்.

தனது முந்தைய படங்களுக்கு பெருமளவில் விருதுகளை பெற்றதைப்போல் இப் புதிய படம் விருதுகள் எதையும் பெறவில்லையெனறாலும் கிம் கி டுக் படங்களின் மீதான காதல், அனைத்துலக சினிமா ரசிகர்களுக்கும் இன்னும் ஒரு போதையாகவே இருப்பதைக் காணமுடிகிறது. தொடர்ந்து புதுமைகளை செய்துகொண்டே இருக்கும் கிம்கிடுக் விரைவில் ஹாலிவுட் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நூரி பில்கே செலானின்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பாம் டி ஓர் விருது பெற்ற மிகச் சிறந்த இயக்குநர் நூரி பில்கே செலானின் புதிய படம் The wild pear tree. இவருடைய பழைய படங்களான த்ரி மங்கிஸ், ஒன்ஸ் டைம் ஆப் அனடோலியா, விண்டர் ஸ்லிப்ஸ் போன்றவற்றின் மூலம் மிகவும் தனது வித்தியாசமான ரசிகர்களைத் தக்கவைத்துக் கொண்டவர் இவர்.

the-wild-pear-treejpg

The wild pear tree

 

'தி வொயில்ட் பியர் ட்ரீ' திரைப்படம் பெரிய அளவில் ஏமாற்றம் தரவில்லை என்றே தோன்றுகிறது. இப்படம், எழுத்தாளராக உருவாக வேண்டும் என்று கனவில்  இருக்கும் இளைஞனைப் பற்றியது. தனது படைப்பை பதிப்பிக்கத் தேவையான பணத்தைத் திரட்ட கடுமையாக உழைக்கிறான். ஆனால் அவனது தந்தை வைத்துவிட்டுப் போன கடன் பிரச்சினைகள் தொடர்கின்றன.

கடன்களை அடைக்க சினான் முயற்சிக்கும் அதே நேரத்தில் தனது விதியும் தனது அப்பாவின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதை சினான் உணர்கிறான்.

மிகச் சிறந்த ஒளிப்பதிவுக் கோணங்களை அபரிதமான நிலப்பரப்பு காட்சிகளைத் தருவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. இப்படத்திலும் காமிரா அழகுக் காட்சிகள் நம் கண்ணைக் கவர்ந்து இதயத்தைத் தொடுகின்றன.

கிராண்ட் ப்ரீ,  பாம் டி ஓர் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படம் இது.

ஜாபர் பனாஹி

உலகத் திரைப்பட பாதையில் ஈரான் தனக்கென்று உருவாக்கிக்கொண்ட இடம் மிகமிக முக்கியமானது.

உலகின் சிறந்த இயக்குநர்களாகவே திகழும் ஈரானிய திரைப்பட இயக்குநர்களான அப்பாஸ் கியராஸ்டமி, மக்மல்பஃப், தாருஹ் மெஹ்ருஜ், மஜீத் மஜீதி போன்றவர்களின் பாதையில் ஒரு புதிய தடத்தைப் பதித்து வருபவர் இயக்குநர் ஜாபர் பனாஹி.

அவர் திரைப்படம் எடுக்க தடை இருப்பதால் ஒரு முழுமையான திரைப்படமாக இல்லாதப் படங்களை ஆவணப் படம்போன்ற படங்களை அவர் இயக்கி வருகிறார்.

faces-threejpg

3 faces

 

பெரும்பாலும் ஒவ்வொரு படத்திலும் அவர் அவராகவே தோன்றுவார். அதில் புனைவுக்கான திரைக்கதை எதுவுமின்றி உண்மைத்தன்மையுடன் காட்சிகள் படமாக்கப்படும். இத்தகைய அவரது பல படங்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதில் துரதிஷ்டம் என்னவெனில் அவருக்கு விருதுகள் கிடைத்தால் அதை எந்த நாட்டுக்கும் சென்று அதை பெற முடியாது. அவருக்கு வெளிநாட்டுக்கு செல்ல தடை உள்ளது.

படங்களைத் திரையிடவும் விருதுகள் பெறவும் அவரது பிரதிநிதிகளே செல்கிறார்கள். அத்தகைய ஒரு  பாணியில் வெளிவந்திருப்பதுதான் ''த்ரீ ஃபேசஸ்'' திரைப்படம்.

3 faces

நடிப்பின்மீது ஆர்வம்கொண்டு டெஹ்ரான் நாடகப் பள்ளியில் பயிலும் ஒரு இளம்பெண்ணை, அவருடைய குடும்பத்தினர் அழைத்துக் கொண்டுபோய்  விடுகின்றனர். அந்தப் பெண் உதவி கேட்டு அழும் வீடியோவைப் பார்க்கிறார் பெஹ்னஸ் ஜஃபரி. அந்தப் பெண்ணுக்கு உதவி செய்வதற்காக, படப்பிடிப்பை நிறுத்திவிட்டு இயக்குநர் ஜாஃபர் பனாஹியுடன் கிளம்புகிறார் பெஹ்னஸ்.

வடமேற்கிலுள்ள கிராமத்துக்கு காரில் பயணம் செய்து, அந்த இளம்பெண்ணின் மலைக்கிராம மக்களைச் சந்தித்துப் பேசுகின்றனர். பழங்கால மரபுகள் இன்னும் கடினமாகிவிட்டன என்பதை அந்தப் பயணத்தின் மூலம் இருவரும் உணர்ந்து கொள்கின்றனர்.

அண்டால்யா கோல்டன் ஆரஞ்சு திரைவிழாவில் இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதை இயக்குநர் ஜாபர் பனாஹி பெற்றுள்ளார். 4 விருதுகள் 5 பரிந்துரைகளைப் பெற்ற படம் இது.

விருதுகளை அள்ளிக்குவித்த 'தி ஹெய்ரெஸஸ்' (The Heiresses)

பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் தென்அமெரிக்க கண்டத்தின் கீழ்ப்பகுதியில் உள்ளது பராகுவே.

வரைபடத்தில் பொலிவியாவுக்கும் சிலிக்கும் பொதுவான இடத்தில், அவற்றின் அருகிலேயே தொற்றிக்கொண்டு நிற்கட்டுமா போகட்டுமா என்றிருக்கும் அந்த நாட்டிலிருந்து வந்த ஒரு படம்தான் 'தி ஹெய்ரெஸஸ்'

உலகின் பல நாட்டு திரைவிழாக்களுக்கும் சென்று 31 விருதுகளையும் 25 பரிந்துரைகளையும் பெற்று திரும்பியிருக்கிறது.

the-hairesessjpg

The Heiresses

 

இப்படத்தின் இயக்குர் மெர்செல்லோ மார்டினிஸி லண்டன் பிலிம் ஸ்கூலில் படித்தவர். இவரது படங்கள் நினைவுகள், அடையாளம் மனித உரிமை ஆகியவற்றை கலவையாகக் கொண்டிருக்கும்.

இப்படமும் குடும்பத்திலிருந்து தனியே பிரிந்திருக்கும் 60 வயதைக் கடந்த இரு பெண்களின் அடையாளச் சிக்கலை அவர்களது நினைவுகளைப் பேசுகிறது.  தங்களுடைய பணக்கார குடும்பங்களிலிருந்து பிரிந்து 30 ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்படவே, தங்களுடைய உடைமைகளை இழக்க ஆரம்பிக்கின்றனர். கடன் காரணமாக, இருவரில் ஒரு பெண் மோசடி புகாரில் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. அதன்பிறகு, மற்றொரு பெண் அங்குள்ள பணக்கார வயதான பெண்களுக்கு டாக்ஸி ஓட்டி வருமானம் ஈட்டுகிறார்.

பல ஆண்டுகளாக தன் தோழியின் அரவணைப்பிலும் ஆதரவிலும் இருந்த அவர், புதிய மனிதர்களுடன் பழகுவதன் மூலம் தன்னையே கண்டுணர்கிறார். சிறந்த திரைப்படத்திற்கான விருதை உலகெங்கிலும் பல்வேறு திரைவிழாக்களில் அள்ளிக் குவித்த படம்.

விருதுகள் பெற்றால்தான் முக்கியமான படமா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விருதுகள் பெறாமலேயே நல்ல படங்கள் நிறைய வந்துள்ளன. ஆனால் விருதுகள் பெறும்போதுதான் ஒரு படம் உலகின் கவனத்தை தன்வசம் திருப்புகிறது. அத்தகைய சீரிய உத்திகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடும் சுவாரஸ்யத்தோடும் ஒரு திரைப்படம் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். ''தி ஹெரஸஸ்ஸஸ்'' அந்த இலக்கணத்திற்கு தகுதிவாய்ந்த ஒரு படைப்பே.

ஆஸ்கர் போட்டிக்குச் செல்லும் Yomeddine

சினிமா உலகின் பெருமைக்குரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும்போதும் ஒரு படம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறது.

“யோமிடைன்” என்பது அரபி மொழியில் தீர்ப்பு வழங்கப்படும் நாள் என்று பொருள். கதையின் நாயகன் பெயர் பேஸ்ஹே. எகிப்து நாட்டில் நடக்கும் கதையாகும்.

பேஸ்ஹே தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். சிறுவயதில் இருந்தே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் பகுதியில் பேஸ்ஹே இருந்தவர்.

yammadinejpg

Yomeddine

 

தனது மனைவி மறைவுக்குப்பின் அந்த இடத்தில் வாழ பேஸ்ஹேவுக்கு பிடிக்கவில்லை, இழந்த தனது குடும்பத்தினரை சந்திக்கப் புறப்படுகிறார். ஒரு கழுதை  பூட்டப்பட்ட வண்டியில் தன்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு வேறு இடம் நோக்கி முதல்முறையாக புறப்படுகிறார். அப்போது ஒபாமா என்ற ஆதரவற்றச்  சிறுவன் பேஸ்ஹேவுடன் சேர்கிறான். இருவருக்கும் இடையே உருவாகும் நட்பும், அதன்பின் பேஸ்ஹே தனது குடும்பத்தினரை தேடிக் கண்டுபிடித்தாரா என்பதுதான் மீதமுள்ள கதையாகும்.

எகிப்து நாட்டின் பாலைவன, வெயில், பிரமீடுகள், மக்களின் வாழ்க்கை முறை தெளிவாகத் தரப்பட்டுள்ளது. குறிப்பாக  தொழுநோயால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவரை உண்மையாக நடிக்க வைத்திருப்பது Yomeddine படத்தின் சிறப்பாகும்.

வாழ்வின் சிடுக்குளையும் வலிகளையும் உள்வாங்கிய மனிதனின் வாழ்க்கையை, காலம் வழங்கிய அருவருப்பான தோற்றத்தை ஏற்று வாழ்க்கையை உலகை ரசித்தபடியே அலாதியாக நடைபோடும் ஒரு மனிதனின் கதையை உள்ளார்ந்த மனித உணர்வுகளோடும் சூழல்அழகோடும் துணிச்சலோடும் சொன்ன படம் என்பதால், திரையிட்ட சர்வதேச திரைவிழாக்கள் எங்கும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் இப்படம் பெற்று வருகிறது.

இப்படம் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் போட்டியில் பங்கேற்றுள்ளது. கேன்ஸ் திரைவிழாவிலும் சிறந்த படத்திற்கான 'பாம் டி ஓர்' விருதுதேர்வு பட்டியலில் இடம்பிடித்தது.

https://tamil.thehindu.com/cinema/world-cinema/article25819974.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.