Jump to content

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது – மருத்துவ கலாநிதி தேவநேசன்…

December 24, 2018

dengu.jpg?resize=670%2C390

யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஏ. தேவநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் அண்மைக்காலமாக டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து உள்ளது, எனவே நோய் தாக்கத்தில் இருந்து தம்மை பாதுகாக்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவ கூடிய இடங்களை அழித்து தமது சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என கோரியுள்ளார்.

அதேவேளை இந்த ஆண்டு ஆயிரத்து 448 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உட்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று உள்ளனர் என யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக காய்ச்சல் காரணமாக அதிகளவானோர் வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு நோயாளர் விடுதியில் 40 படுக்கை வசதிகள் மாத்திரமே காணப்படுகின்றன. ஆனால் தற்போது 50 தொடக்கம் 60 நோயாளிகள் ஒரு விடுதியில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

அதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான நோயாளர்களுக்கு கட்டில் வசதிகள் வழங்கப்பட்டு , ஏனையவர்களை தரையில் அமர்த்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மழை தொடருமானால் நிலைமை மேலும் மோசமடைய கூடிய நிலை ஏற்படும் என்பதனை கருத்தில் கொண்டு அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து உள்ளோம். ஆனாலும் நோய்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார் .

http://globaltamilnews.net/2018/107676/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் அறிமுகம்…

December 25, 2018

vethanayagam.jpg?resize=720%2C480

யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் நோய்த்தாக்கம் அதிகரிக்காமல் இருப்பதற்காக விசேட செயற்றிட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையினால் டெங்கு காச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நோய்த்தாக்கம் மேலும் தீவிரமடையாமல் இருப்பதற்கா ன வழிவகைகள் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று யாழ்.மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. காவற்துறையினர், முப்படையினர், மற்றும் சகல திணைக்கள அதிகாரிகளும் இந்தக் கூட் டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் தொடர்பாக கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மாவட்ட செயலர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , இம்மாதம் யாழ்.மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துள்ளது.  இதனால் மாவட்டத்தில் டெங்கு காச்சலின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளது. எனவே நோய்த் தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது யாழ்.மாநகரசபை எல்லைக்குள் அடங்கும் பகுதிகளில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் பொது இடங்கள் மற்றும் மக்களுடைய வீடுகளுக்கு சென்று நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய விசேட செயற்றிட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதெனவும், அதனடிப்படையில் எதிர்வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் சகலரும் இணைந்து சகல இடங்களுக்கும் சென்று
மக்களுடைய ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதெனவும், அதனை தொடர்ந்து யாழ்.மாநகரசபைக்கு வெளியே உள்ள பிரதேச சபைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து யாழ்.மாநகரசபை ஆணையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

யாழ்.மாநகரச பை எல்லைக்குள் டெங்கு நுளம்புகள் பெருகும் 10 இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது. அந்த இடங்களில் இந்த விசேட செயற்றிட்டம் ஊடாக டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதில் சகலருடைய ஒத்துழைப்பும் ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் வீட்டு சூழல் மற்றும் பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கவில்லை. என்ற குற்றச்சாட்டு பொதுவாக சுமத்தப்படுகின்றது.  ஆனால் அதற்கு பொதுமக்களுடைய ஒத்துழைப்பு இன்றியமையாததாக உள்ளது. எனவே பொது மக்களும், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.

 

http://globaltamilnews.net/2018/107771/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நில வேம்பு கசாயம் குடிக்குக .. அதுவே அருமருந்து ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நில வேம்பு கசாயம் குடிக்குக .. அதுவே அருமருந்து ..

தொண்டரே! வேறு எதற்கெல்லாம் நிலவேம்பு சாராயம் பயன்படும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.