Jump to content

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருட்தந்தை இறந்த இடத்தை தேடிச் சென்ற மௌலவி! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த மனதை உருக்கும் சம்பவம்

Report us Sujitha Sri 25 minutes ago

தமிழர்களுக்கும், ஏழை குழந்தைகளுக்கும் அளப்பறிய சேவைகளை ஆற்றிய அருட்தந்தை செற்றிக் ஜூட் ஒக்கர்ஸின் பிரிவு ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் பெரும் இழப்பாக மாறியுள்ளது.

இந்த நிலையில் அருட்தந்தையை ஒரு முறை மாத்திரமே சந்தித்த மௌலவி இல்யாஸின் செயல் இலங்கையிலுள்ள அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

மௌலவி கடந்த 21ஆம் திகதி தன் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு புனித மரியாள் பேராலயத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அருட் தந்தையின் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படுவதை கண்டு அதில் தாமும் கலந்து கொண்டு பிரேத பெட்டியை சுமந்திருக்கிறார்.

இதன் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓஸானம் (விசேட தேவையுடைய குழந்தைகளை பராமரிக்கும் இடம்) நிலையத்திற்கு நேரடியாக மௌலவி ஏ.ஜே.எம்.இயாஸ் சென்று அருட் தந்தையின் பிரிவினால் வாடும் அங்குள்ள குழந்தைகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அத்துடன், அருட்தந்தையை பாம்பு தீண்டிய இடத்தினையும் பார்வையிட்டிருந்தார். (மின்சார கம்பத்திற்கு அருகில் அருட் தந்தை நின்று கொண்டிருந்த போது அந்த கம்பத்தில் இருந்த பாம்பொன்றே அருட் தந்தையை தீண்டியிருந்தது.)

இன, மத, மொழி பேதங்கள் கடந்து அருட் தந்தையின் இழப்பானது பலரது மனதிலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அருட்தந்தை பாம்புக்கடிக்கு இலக்காகி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில் பெரும் திரளான மக்களின் ஒன்று கூடலுடனும், ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீரோடும் அருட்தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை இந்த சம்பவமானது இன, மத, பேதங்களை கடந்த மனிதம் இந்த உலகில் காணப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/202491?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அருட் தந்தை அனைத்து மக்களுக்கும் உதவியவர் என்று நினைக்கிறன்...நிறைய மக்கள் அவரது இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு இருந்தனர்...நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...ஆத்மா சாந்தியடையட்டும் 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருட்தந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்.

21 minutes ago, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்.

அதென்றால் உண்மைதான்...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதம் இடைக்கிடை தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதால் தான் .... இந்த உலகம் .,, இன்னும் உயிர்.வாழக்கூடிய இடமாக உள்ளது!

Link to comment
Share on other sites

12 hours ago, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...

 

12 hours ago, குமாரசாமி said:

அதென்றால் உண்மைதான்...:(

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மதங்களைக் கடந்து வாழ்பவர்கள்.....! 

Link to comment
Share on other sites

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவராவதும் தீயவராவதும் நாங்கள் வளர்ப்பதிலே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

 

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

கிண்ட வெளிக்கிடுறீங்கள்? :cool:

Link to comment
Share on other sites

On 12/24/2018 at 12:09 PM, ரதி said:

நல்லவர்கள் எல்லாம் சீக்கீரம் இறந்து போகிறார்கள்...ஆத்மா சாந்தியடையட்டும் 😭

 

On 12/24/2018 at 12:31 PM, குமாரசாமி said:

அதென்றால் உண்மைதான்...:(

 

14 hours ago, Jude said:

 

மற்றவர்களிலும் பார்க்க அதிகமாக தம்மை நேசிப்பவர்கள் நீண்ட காலம் வாழும் சாத்தியம் கூட. அவர்களில் நீங்களும் நாங்களும் ஒரு சிலர்.

 

1 hour ago, குமாரசாமி said:

கிண்ட வெளிக்கிடுறீங்கள்? :cool:

கிண்டாமல் விட்டால் மறைந்து இருப்பது தெரிய வராதே!

நீண்டகால ஆயுளின் இரகசியத்தை சொன்னவுடன் நீங்கள் கொஞ்சம் ஆதங்கப்படுவதில் நியாயம் உண்டு தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Jude said:

கிண்டாமல் விட்டால் மறைந்து இருப்பது தெரிய வராதே!

நீண்டகால ஆயுளின் இரகசியத்தை சொன்னவுடன் நீங்கள் கொஞ்சம் ஆதங்கப்படுவதில் நியாயம் உண்டு தான்.

மாவோ சேதுங் , ஸ்ராலின் , பிடல் காஸ்ரோ போன்றோர்..........

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.