Jump to content

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நà¯à®°à¯à®¯à¯à®°à®²à¯ தà¯à®±à¯à®±à¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®µà®¤à¯..?

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?

இந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு உயிருக்கே உலையாக வந்து விடும். நுரையீரலில் ஏற்பட கூடிய தொற்றுக்களை தடுத்து விட்டாலே நெஞ்சு வலி, நெஞ்சில் ஏற்பட கூடிய தொற்றுகள் போன்ற அனைத்திலும் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.

நà¯à®à¯à®à¯ தà¯à®±à¯à®±à¯à®à¯à®à®³à¯ விரà®à¯à®...

இந்த தொற்றுக்களை உருவாக்க மூல காரணமே சளி தான். இதனால் பலருக்கு மூச்சு திணறல், தொண்டையில் தொற்றுகள் பரவுதல், நெஞ்சு இறுகுதல் போன்ற பலவித அபாயங்கள் உண்டாகும். இவற்றை ஒரே ராத்திரியில் குணப்படுத்த நம்ம பாட்டி வைத்தியமே போதும்ங்க. வாங்க, ஒவ்வொரு எளிய முறையையும் தெளிவாக தெரிஞ்சிப்போம்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

நெஞ்சு தொற்றுக்களை விரட்ட... உங்களின் நெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க இந்த 3 கலவையே போதும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் சட்டென வெளியேறி விடும்.

1)  தேவையானவை... தேன் 1 ஸ்பூன்.  பூண்டு 2 பல்.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

முதலில் பூண்டை நசுக்கி பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் விலகி, சுகமாக சுவாசிக்கலாம். 

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯...

2)  4 கலவை தெரியுமா..? பலவித பயன்களை இந்த வீட்டு வைத்தியம் தரவல்லது. இதற்கு தேவையானவை... கருப்பு மிளகு பொடி சிறிது.  தேன் 1 ஸ்பூன்.  பால் 1 கிளாஸ்.  மஞ்சள் பொடி அரை ஸ்பூன்.

முதலில் கொதிக்க வாய்த்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். இந்த கலவையை சூடாக தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் நெஞ்சில் ஏற்பட்ட தொற்றுகள் அனைத்துமே பறந்துவிடும்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

3)  மூலிகை டீ பலவித மருத்துவ குணங்கள் இந்த மூலிகை டீயில் நிறைந்துள்ளதாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வெளியேறி விடும். தேவையானவை :- வெந்தயம் 1 ஸ்பூன்.  தேன் 1 ஸ்பூன்.  தண்ணீர் 1 கப்.

வெந்தயத்தை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

à®à®±à¯à®±à®²à¯ மிà®à¯à® வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯...

4) ஆற்றல் மிக்க வைத்தியம்...  இந்த மூன்று பொருளும் ஒவ்வொவரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. இதனை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் ஆற்றல் உடல் முழுக்க செயல்படும். தேவையானவை... வெங்காயம் சின்னது 1.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். தேன் அரை ஸ்பூன்.

வெங்காயத்தை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

Read more at: https://tamil.boldsky.com/health/how-to/2018/home-remedies-for-chest-infection-overnight/articlecontent-pf172301-023937.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டி வைத்தியம் சாதாரண சளியைக் குணமாக்கக் கூடும். ஆனால் வரண்ட இருமல் அல்லது தொடர்ச்சியான இருமல் வாரக்கணக்கில் இருந்தால் அது டி.பி போன்ற சீரியசான தொற்றாக இருக்கலாம். ஆங்கில மருத்துவம் தான் கண்டு பிடிக்கவும் குணப்படுத்தவும் உதவும்! பாட்டி வைத்தியத்தை வாரக்கணக்கில் பலனின்றி எடுத்துக் கொண்டிருந்தால் ஆள் போய்ச் சேரலாம்!அதுவும் குணமாக ஒரு வழி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 6:56 AM, தமிழ் சிறி said:

நà¯à®°à¯à®¯à¯à®°à®²à¯ தà¯à®±à¯à®±à¯à®à®³à¯ பாà®à¯à®à®¿ வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®¤à¯à®¤à¯ à®à¯à®£à¯à®à¯ à®à®ªà¯à®ªà®à®¿ வà¯à®³à®¿à®¯à¯à®±à¯à®±à¯à®µà®¤à¯..?

நுரையீரல் தொற்றுகளை,  வீட்டு வைத்தியத்தை கொண்டு வெளியேற்றுவது எப்படி..?

இந்த பூமியில் மனிதன் சுவாசிக்க காற்று மிக முக்கியமானது. அதே போன்று அந்த காற்றை சரியான முறையில் நமக்கு தர கூடிய நுரையீரலும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. நுரையீரலில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நமக்கு உயிருக்கே உலையாக வந்து விடும். நுரையீரலில் ஏற்பட கூடிய தொற்றுக்களை தடுத்து விட்டாலே நெஞ்சு வலி, நெஞ்சில் ஏற்பட கூடிய தொற்றுகள் போன்ற அனைத்திலும் இருந்தும் நாம் தப்பித்து கொள்ளலாம்.

நà¯à®à¯à®à¯ தà¯à®±à¯à®±à¯à®à¯à®à®³à¯ விரà®à¯à®...

இந்த தொற்றுக்களை உருவாக்க மூல காரணமே சளி தான். இதனால் பலருக்கு மூச்சு திணறல், தொண்டையில் தொற்றுகள் பரவுதல், நெஞ்சு இறுகுதல் போன்ற பலவித அபாயங்கள் உண்டாகும். இவற்றை ஒரே ராத்திரியில் குணப்படுத்த நம்ம பாட்டி வைத்தியமே போதும்ங்க. வாங்க, ஒவ்வொரு எளிய முறையையும் தெளிவாக தெரிஞ்சிப்போம்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

நெஞ்சு தொற்றுக்களை விரட்ட... உங்களின் நெஞ்சில் உருவாகியுள்ள தொற்றுக்களை உடனடியாக விரட்டி அடிக்க இந்த 3 கலவையே போதும். இதனை ஒரு நாளைக்கு 3 அல்லது 4 முறை குடித்து வந்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் சட்டென வெளியேறி விடும்.

1)  தேவையானவை... தேன் 1 ஸ்பூன்.  பூண்டு 2 பல்.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்.

முதலில் பூண்டை நசுக்கி பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிடவும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச கோளாறுகள் அனைத்தும் விலகி, சுகமாக சுவாசிக்கலாம். 

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯...

2)  4 கலவை தெரியுமா..? பலவித பயன்களை இந்த வீட்டு வைத்தியம் தரவல்லது. இதற்கு தேவையானவை... கருப்பு மிளகு பொடி சிறிது.  தேன் 1 ஸ்பூன்.  பால் 1 கிளாஸ்.  மஞ்சள் பொடி அரை ஸ்பூன்.

முதலில் கொதிக்க வாய்த்த பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடியை கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கவும். இந்த கலவையை சூடாக தினமும் 2 அல்லது 3 முறை குடித்து வந்தால் நெஞ்சில் ஏற்பட்ட தொற்றுகள் அனைத்துமே பறந்துவிடும்.

à®à¯à®¯à¯à®®à¯à®±à¯ :-

3)  மூலிகை டீ பலவித மருத்துவ குணங்கள் இந்த மூலிகை டீயில் நிறைந்துள்ளதாம். இந்த டீயை தொடர்ந்து குடித்து வந்தால் எளிதில் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வெளியேறி விடும். தேவையானவை :- வெந்தயம் 1 ஸ்பூன்.  தேன் 1 ஸ்பூன்.  தண்ணீர் 1 கப்.

வெந்தயத்தை ஒருநாள் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன் நீரை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் சேர்த்து குடித்தால் நெஞ்சில் உள்ள தொற்றுகள் வந்த இடம் தெரியாமல் போய்விடும்.

à®à®±à¯à®±à®²à¯ மிà®à¯à® வà¯à®¤à¯à®¤à®¿à®¯à®®à¯...

4) ஆற்றல் மிக்க வைத்தியம்...  இந்த மூன்று பொருளும் ஒவ்வொவரு விதத்தில் தனித்தன்மை வாய்ந்தது. இதனை சேர்த்து சாப்பிட்டால் உடனடியாக இதன் ஆற்றல் உடல் முழுக்க செயல்படும். தேவையானவை... வெங்காயம் சின்னது 1.  எலுமிச்சை சாறு 1 ஸ்பூன். தேன் அரை ஸ்பூன்.

வெங்காயத்தை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும். பின் இதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

Read more at: https://tamil.boldsky.com/health/how-to/2018/home-remedies-for-chest-infection-overnight/articlecontent-pf172301-023937.html

பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பிற்கு நன்றி சிறித்தம்பி! :91_thumbsup:


நமது முன்னோர்கள் எவ்வித ஆங்கில மருத்துவங்கள் இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில்  உணவே மருந்தாக இருந்தது. இன்றைய நவ நாகரீக உலகிலே மருந்தே உணவாக இருக்கின்றது. tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பக்கவிளைவில்லாத மருத்துவ குறிப்பிற்கு நன்றி சிறித்தம்பி! :91_thumbsup:


நமது முன்னோர்கள் எவ்வித ஆங்கில மருத்துவங்கள் இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். அன்றைய காலத்தில்  உணவே மருந்தாக இருந்தது. இன்றைய நவ நாகரீக உலகிலே மருந்தே உணவாக இருக்கின்றது. tw_lol:

அப்பிடியா? 1920 இல் இலங்கையர் ஒருவரின் சராசரி வாழ்வுகாலம் எததனை வருடங்கள் டொக்டர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/30/2018 at 3:17 AM, Justin said:

அப்பிடியா? 1920 இல் இலங்கையர் ஒருவரின் சராசரி வாழ்வுகாலம் எததனை வருடங்கள் டொக்டர்?

உங்களின் சராசரி கணிப்பை விட கிராம புறங்களில் இயற்கையான உணவுகளை உண்டு 100 வயது வரைக்கும்  எதுவித மருந்து மாத்திரைகளின்றி வாழ்ந்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உங்களின் சராசரி கணிப்பை விட கிராம புறங்களில் இயற்கையான உணவுகளை உண்டு 100 வயது வரைக்கும்  எதுவித மருந்து மாத்திரைகளின்றி வாழ்ந்தார்கள். 

சராசரி என்பதன் அர்த்தமே அது அந்த சனக்தொகைக்கு ஒட்டு மொத்தமாக நன்மை தருகிற ஒன்றா என்று பார்க்கத் தான்! மேலும், எழுந்தமானமாக நூறு இருநூறு என்று யாரும் சொல்லி விட்டும் போகலாம், கணக்கில்லாமல். உங்களுக்கு 1920 இல் இலங்கையில் சராசரி வாழ்வு காலம் 34 என்று தெரியாமல் சும்மா அடித்து விட்டதால் தான் அந்தக் கேள்வி! இப்படிப் பல புலுடாக்கள் முன்னோரைப் பற்றி உங்கள் போன்ற ஆட்கள் அடித்து விடுவதுண்டு: முன்னோர்களுக்கு புற்று நோய் இருக்கவில்லை, நீரிழிவு இல்லை, ஏன் இதய நோய் கூட இருக்கவில்லை! எல்லாம் இருந்தது! கண்டு பிடித்து முன்னோருக்குச் சொல்ல மருத்துவ சோதனையும் தொழில் நுட்பமும் இருக்கவில்லை, அதனால் அவை இருப்பது தெரியாமலே அவர்கள் இறந்து போனார்கள்! இதைப் புரிய நீங்கள் புள்ளி விபரங்களைப் பார்க்க வேண்டும்! செவி வழி கேள் கதைகளையும், சுபவீ போன்ற அரைவேக்காட்டுகளின் யூடியூப் வீடியோக்களையும் அல்ல! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் மருத்துவம் சம்பந்தமாக வாதிடும் அளவிற்கு நானில்லை. இருந்தும் பல ஆயுர்வேத அனுபவங்கள் இருக்கின்றது. மேலைத்தேய மருத்துவம் மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.பக்க விளைவுகளுக்கு இன்னொரு வைத்தியரை நாட வேண்டியுள்ளது....எல்லாம் வியாபார நோக்குகள்.
ஆனால் இயற்கை மருத்துவம் அப்படியல்ல. உணவே மருந்து. மருந்தே உணவல்ல.

 இன்றிருப்பது போல் முன்னோர்களுக்கு எல்லா நோயும் இருந்தது என்று அறுதிட்டு கூற முடியாது. இன்று இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று சொல்லும் நோய் நொடிகளுடன் மக்கள் வாழ்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

உங்களுடன் மருத்துவம் சம்பந்தமாக வாதிடும் அளவிற்கு நானில்லை. இருந்தும் பல ஆயுர்வேத அனுபவங்கள் இருக்கின்றது. மேலைத்தேய மருத்துவம் மாத்திரைகளை வாழ்க்கை முழுவதும் எடுக்க நிர்ப்பந்திக்கின்றது.பக்க விளைவுகளுக்கு இன்னொரு வைத்தியரை நாட வேண்டியுள்ளது....எல்லாம் வியாபார நோக்குகள்.
ஆனால் இயற்கை மருத்துவம் அப்படியல்ல. உணவே மருந்து. மருந்தே உணவல்ல.

 இன்றிருப்பது போல் முன்னோர்களுக்கு எல்லா நோயும் இருந்தது என்று அறுதிட்டு கூற முடியாது. இன்று இந்த நோய்க்கு மருந்தே இல்லை என்று சொல்லும் நோய் நொடிகளுடன் மக்கள் வாழ்கின்றார்கள்.

எல்லா மருந்துகளும் இலாப நோக்கம் கொண்டவை என்ற உங்கள் வாதம் உண்மையானதல்ல! ஒரு மருந்தை உருவாக்க பத்து ஆண்டுகளுக்கு மேல் காலமும், பல பில்லியன் டொலர் பணமும் செலவாகிறது! அந்தப் பணத்தை ஒரு நியாயமான இலாபத்துடன் மீள எடுக்க மருந்துக் கொம்பனிகள் ஒரு உயர் விலையில் முதல் 5 முதல் 7 ஆண்டுகளுக்கு மருந்தை விற்பது ஒன்றும் தவறான செயல் அல்ல! அப்படி அவர்கள் ஈட்டும் இலாபத்தில் ஒரு பங்கு அடுத்த மருந்தைக் கண்டு பிடிக்கும் முயற்சிக்குச் செலவாகும். 

பக்க விளைவுகள் ஒரு உடலியல் தொழிற்பாட்டைக் குறிவைக்கும் போது வரும் தவிர்க்க இயலாத விளைவு! புற்று நோயுடன் சாவதா அல்லது புற்று நோயில் இருந்து தப்பி தலைமயிர் இழந்து வாழ்வதா என்ற முடிவை எடுக்க வேண்டியது நோயாளி! இதற்கு மருந்துக் கொம்பனிகளோ வைத்தியரோ பொறுப்பல்ல!

முன்னோரில் இப்போதிருக்கிற பிரதான நோய்கள் இருந்தன என்று அறுதியிட்டுக் கூற முடியும்! எப்படி? பல புற்று நோய்களை உருவாக்கும் வைரசுகள், புகையிலை (வாயில் அதக்கிய புகையிலை, கெட்ட சாமான்!) என்பன பல நூறு ஆண்டுகளாக எம்முடன் இருக்கின்றன! மாப்பொருள், கொழுப்பு எல்லாம் இருந்தது எங்கள் உணவில். சில சமயங்களில் இன்று இருப்பது போன்ற சுத்தமான நீர் அப்போது இல்லை! வயித்தால போனாலும் அன்டிபையோடிக் இல்லாமல் செத்தோரே எங்கள் நாட்டில் ஏராளம் பேர்! 

உங்கள் இயற்கை வைத்தியம் வேலை செய்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் , ஆய்வு முடிவுகள் இன்னும் இல்லை! இருக்கும் சில ஆய்வுகளும் peer review என்ற தரக் கட்டுப் பாட்டில் தோல்வி கண்டவை! நிறைய இருக்கிறது சொல்ல, இதை பற்றி ஒரு பதிவு தனியாக எழுதுவேன்! 

நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.