Jump to content

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன்

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கக்கூடிய ஆபத்தான நிலை ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, பழைய கற்பகபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட.மாகாணத்தில் பல்வேறு கட்சிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியோ வேறு சிங்கள கட்சியோ வட.மாகாணசபையில் ஆட்சி அமைக்கக் கூடிய ஆபத்தான நிலை ஏற்படும்.

ரணில் எல்லாம் தருவார் என நாம் வாக்களிக்கவில்லை. எமக்கான அடிப்படை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அதேபோல் அரசியல் தீர்வு, அரசியல் கைதிகளின் விடுதலை முக்கியம்.

ஜனாதிபதியும் மஹிந்தவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறினார்கள். நாங்கள் மாறி வாக்களித்தவுடன் தற்போது அரசியல் கைதியாக விடுதலை செய்வதாக இருந்தால் கைது செய்த இராணுவத்தினரை விடுவிக்க வேண்டும் என கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் கண்முன்னே சாட்சியத்தோடு ஒப்படைக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது என்பதை, ஜனாதிபதி கூறவேண்டும்.

நாங்கள் வெளியே நின்று ஆதரவு தெரிவித்தமையால், வெள்ளைவான் கடத்தல் இல்லை, மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கு ஏற்றக்கூடியவாறு உள்ளது. எமது உரிமைகளை வென்றெடுக்கக்கூடிய போராட்டங்களை முன்னெடுக்கக்கூடியதாக உள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

http://athavannews.com/சிங்கள-கட்சிகள்-வட-மாகாண/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஆட்சி அமைச்ர் என்? அ;ளவு அக்கறை இருந்தால் போனவாரம் ரணிலுக்கு வாக்களிக்கும் போதே இனப் பிரச்சினைககான தீர்வு பற்றியும் அன்றாடப் பிரச்சினைகளுக்hன தீர்வு பற்றியும். எழுத்தில் hங்யருக்ம. சிறிலங்கவ்ஜனநாயகத்தைக் க்hப்பாற்ற நீங்கள் பட்ட பாடு சால்லில் அடங்கதத. நேற்று மாவை போராட்டம் வெடிக்கும் என்கிறார். செல்வம் இன்று இப்படி சலிக்கிறார். எல்hம் ஏமாற்றுப் பேர்வழிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புலவர் said:

ஏன் ஆட்சி அமைச்ர் என்? அ;ளவு அக்கறை இருந்தால் போனவாரம் ரணிலுக்கு வாக்களிக்கும் போதே இனப் பிரச்சினைககான தீர்வு பற்றியும் அன்றாடப் பிரச்சினைகளுக்hன தீர்வு பற்றியும். எழுத்தில் hங்யருக்ம. சிறிலங்கவ்ஜனநாயகத்தைக் க்hப்பாற்ற நீங்கள் பட்ட பாடு சால்லில் அடங்கதத. நேற்று மாவை போராட்டம் வெடிக்கும் என்கிறார். செல்வம் இன்று இப்படி சலிக்கிறார். எல்hம் ஏமாற்றுப் பேர்வழிகள்.

கிழக்கு போனமாதிரி வடக்கும் போகலாம் சொல்ல ஏலாது புலவரே அப்பவும் கொள்கைதான் முக்கியம் என்பார்கள்

Link to comment
Share on other sites

... அண்ணன் அடைக்கலநாதனின் அரசியல் தெளிவு/அறிவு அறிய விரும்பின், அண்ணனின் முன்னாள் ரெலோஸ்டுகளிடம் கேட்டறியலாம்!  ஆலையில்லா ஊருக்கு ..

... மேலாக .. வெள்ளையன் விட்டுட்டு போனதில் இருந்து 70 வருடங்கள் ... உந்த டமிழ் பாட்டிகளினால் தமிழர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறார்களா???? ...  பொன்னம்பலத்தார் மூன்று தொழிற்சாலைகளை கொணர்ந்ததை தவிர! 

... காலா காலமாக எதிர் அரசியல் செய்கிறோம் எனும் பெயரில், கூட்டரசியல் செய்து தம் குடும்பங்களை உயர்த்தியதை தவிர!!! ... இல்லையா????

... ராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன .. .

... உண்மையை சொல்ல போனால் ... யாழில் துரையப்பா செய்ததை, இன்றுவரை எந்த டமிழ் அரசியல் கட்சியினரும் செய்யவில்லை! 

Link to comment
Share on other sites

எம்மை வைத்து எமது கண்ணையே குத்த வைக்க அங்கயன், டக்ளஸ், மகேஸ்வரி என ஆட்கள் இருக்கும் போது சிங்கள கட்சிகள் ஆட்சி என்பது சாத்தியமானது தான். ரனில் மகேஸ்வரி அவர்களை அமைச்சரவையில் ஒரு கண் துடைப்புக்கு நீக்கி விட்டு பின்னர் அமைச்சர் ஆக்கியதில் இருந்து  தெரிய வேண்டாம் அவரின் உசுப்பு பேச்சால் வடக்கு மக்களின் வாக்குகளை சூறையாடலாம் என்பதாக கூட இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

 

 

சிங்கள கட்சிகள் வட.மாகாணசபையில் ஆட்சியமைக்கும் காலம் வரும்: செல்வம் அடைக்கலநாதன்

 

எங்கடை சனம் எங்களை அறம்புறமாய் பேசினாலும் .... வேறை வழியில்லாமல் எங்கடை காலைத்தான் சுத்திக்கொண்டு நிக்குங்கள் எண்டு நல்லவடிவாய் தெரிஞ்சுவைச்சிருக்கிறார் சிங்கம். :cool:


சோரம்,அழுத்தம்,அமுக்கம்,விலை பேசாது,சுயநலத்தை நாடாது,பொது நலம்,குரல் குடுக்கும் எண்ட கொஞ்ச சொல்லுகளைவைச்சு அரசியல் செய்யும்கூட்டம் உது.....:(

 

 அடைக்கலம்! ஒரு இடத்திலை இதுக்கு என்ன தமிழ் எண்டு கேக்கேக்கையே எனக்கு அஞ்சும் கெட்டு ஆறும் கெட்டுப்போச்சுது :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.