Jump to content

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செக்ஸ்: நல்லது, கெட்டதை எவ்வாறு வரையறுப்பது?

ஷானன் ஆஷ்லி

செக்ஸ் என்றால் என்னவென்று தெரிவதற்கு முன்னரே, மனஎழுச்சியூட்டும் செக்ஸ் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்போம். சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பெண்களுக்கான பத்திரிகைகளில் சிறந்த செக்ஸ் அனுபவப் பகிர்வுகளே தலைப்புச் செய்திகளாக இருக்கும். ஏற்கனவே புதிராக இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது, அதைப் பற்றிய சித்திரம் மேலும் மங்கலாகும். அது போலத்தான் இந்தப் பத்திரிகைகள் எல்லாமே படுக்கையில் இணையை வீழ்த்துவது எப்படி என்று டிப்ஸ்களை வாரியிறைத்து வருகின்றன. அப்படி யாரோ ஒருவர் இவை அனைத்தையும் முயற்சி செய்தாகவே வைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக செக்ஸ் டிப்ஸ்களைத் தருவது ஏன் என்ற கேள்வி எழுவது இயல்பு.

எது எப்படியிருந்தாலும், நிறைய சம்பாதிப்பது எப்படி என்பதைப் போலவே சிறப்பாக எவ்வாறு செக்ஸ் கொள்வது என்ற கட்டுரைகளும் அதிகம் கவனிப்பைப் பெறுகின்றன. ஏற்கனவே செக்ஸ் அனுபவம் பெற்றவர்களும் அதை வாசிக்கின்றனர். செக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக இருக்கவே இருக்கின்றன நெட்ஃப்ளிக்ஸும் ஆபாச இணையதளங்களும். ஆனால், நான் இதை ஏற்றுக்கொள்வதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, நமது கலாச்சாரம் ஒருபோதும் செக்ஸ் குறித்து நேர்மையாக விவாதிப்பதில்லை. ஆவலை வெளிப்படுத்தும் கூச்சலாகவோ, மறைமுகமான அவமதிப்பாகவோ மட்டுமே செக்ஸ் குறித்துப் பேசுகிறோம்; சிரித்து வெட்கப்படுகிறோம். செக்ஸ் குறித்து நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் சிரமப்படுகிறோம். சிக்கல் என்னவென்றால், செக்ஸில் நல்லது எது, கெட்டது எது என்பதை வரையறுப்பது மிக மோசமான வேலையாகும்.

நமது நண்பர்கள் குழுவில் எது நல்ல செக்ஸ், எது கெட்ட செக்ஸ் என்று விவாதித்திருக்கலாம். அதில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியவர்கள் பின்னாளில் படுக்கையில் மோசமான அனுபவங்களைப் பெற்றிருக்கலாம். இப்போதும் நிறைய பேர் அந்த மாதிரியான திரைப்படங்களில் பார்த்தவற்றையே நல்ல செக்ஸ் என்று கருதிக்கொண்டிருக்கின்றனர் அல்லது போர்னோ வீடியோக்களில் இடம்பெறுவதே சிறந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒன்றுக்கொன்று தொடர்புடையவை!

கூகுளில் தேடுவதோ, காஸ்மோபாலிடன் வகை பத்திரிகைகளில் செக்ஸ் டிப்ஸ்களைப் படித்து நுட்பங்களைத் தெரிந்துகொள்வதோ, ஓர் ஆண் அல்லது பெண் தனது அனுபவங்களைப் பகிர்வதை அறிவதோ தவறல்ல. ஆனால், உங்களை நீங்களே குழந்தையாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். சிறந்த நுட்பம்கூட நொடியில் மாயமாகும் அபாயம் செக்ஸில் உண்டு. ஏனென்றால், எது நல்ல செக்ஸ் என்ற அபிப்ராயம் ஒவ்வொரு மனிதரையும் பொறுத்து மாறும்.

நீங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாகக் கருதினாலும், எல்லாமே சரியாக இருந்ததாக நினைத்தாலும், மோசமான செக்ஸ் குறித்து எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது. நீங்கள் காதல் மன்னனாக இருந்தாலும், இருவரும் சேர்ந்துதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஒருவர் திருப்தியடையாவிட்டாலும், இன்னொருவரின் திருப்தி கேள்விக்குறியாகும்.

ஒருவர் திருப்தியின் உச்சத்தைப் பெற, இன்னொருவர் அதிருப்தியுடன் தொடர்வதும் அருவருப்பானது. சில ஆண்கள் தங்கள் தேவைகளை முடித்துக்கொண்டு, தூங்குவதற்கு முன்பாக ‘உனக்கும் பிடிச்சிருந்ததுதானே’ என்று கேட்பார்கள்.

மோசமான செக்ஸ் குறித்து இருபாலரின் அபிப்ராயங்களும் வெவ்வேறாகவே உள்ளன. பொதுவாக, ஆண்களைப் பொறுத்தவரை மோசமான செக்ஸ் என்பது அருவருப்பாகவும் தடுமாற வைத்த அனுபவமாகவும் இருக்கும். வெறுமையான, விசித்திரமான அனுபவங்களும் அந்தக் கணக்கில் சேரக்கூடும்.

பெண்களைப் பொறுத்தவரை மோசமான செக்ஸ் என்பது கட்டாயப்படுத்தி உறவுகொள்வதே. இல்லாவிட்டால், வலியோடும் கண்ணீரோடும் முடிந்த உறவனுபவமாக இருக்கும்.

சிறப்பான, மோசமான செக்ஸ் குறித்து ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக வரையறை செய்கின்றனர். நம்மில் சிலர் இது பற்றிய கட்டுரைகளைப் படித்துவிட்டு உடனடியாக அந்த ரகசியத் தீர்வுகளை எல்லாம் வீரியத்துடன் தமது இணையிடம் வெளிப்படுத்துவர். அதனை இணை ரசிக்கிறாரா, விரும்புகிறாரா என்பதைப் பொறுத்தே எதிர்வினை அமையும்.

இப்போது நல்ல செக்ஸ், கெட்ட செக்ஸ் குறித்த வரையறைக்குச் செல்வோம்.

19a.jpg

எது நல்ல செக்ஸ்?

ஒப்புதல்

பரஸ்பர ஒப்புதல் இல்லாமல் நல்ல செக்ஸைத் தேடுவது பிரச்சினைகளைத்தான் ஏற்படுத்தும். இணையை வதைக்கும், சுயவதைக்கு உட்படும் பிடிஎஸ்எம் (BDSM) செயல்பாடுகளிலும் கூட இணையின் ஒப்புதலும் ஒருவருக்கொருவர் எல்லை வகுத்துக்கொள்வதும் அவசியம். எந்த ஓர் உடலுறவுச் செயல்பாட்டிலும், இருவருக்குமான முழுச் சம்மதம்தான் அடிப்படையாக அமையும்.

உற்சாகம்

ஒருவருக்கொருவர் சம்மதம் இல்லாதபோது, கண்டிப்பாக அந்த இடத்தில் உற்சாகம் நிரம்பாது. நம்மை ஒருவர் விரும்பும்போதுதான் நல்ல செக்ஸ் என்பது அமையும். செக்ஸில் ஈடுபாடு கொண்ட இணை, அதைப் பற்றிப் பேசுவதில் உற்சாகம் காட்டாமல் இருந்தால், தொடர்புகொள்ளாமல் விலகினால், அந்த உறவில் கவனத்தைச் செலுத்தாமல் இருப்பது சரியாகாது. உற்சாகமான இணைதான் கவர்ச்சியைத் தூண்டும். இருவரும் உற்சாகமாக இருந்தால், இருவருக்கும் இடையேயான வேறுபாடுகள் கூட தீர்க்கப்படும்; முழுவதுமாகத் திருப்தி பெறுவதை உறுதிப்படுத்தும்.

ஒன்றிணைதல்

நல்ல செக்ஸ் அமைய, ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்திருப்பது முக்கியம் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்வர். உறவில் ஈடுபடும்போது இணையின் மனம் வேறு எங்காவது இருந்தால், மற்றவருக்கு செக்ஸின்போது உண்மையாகவே கோபம் உண்டாகும். ஆண், பெண் இருபாலரிலும் செக்ஸின்போது ஒன்றிணையும் தன்மை மிக முக்கியப் பங்கு வகிக்கும்.

இணக்கம்

இதனை எப்போதும் குறைவாக மதிப்பிடுவது துயரம் தருகிறது. புனிதக் கலாச்சாரத்தைக் கையிலெடுத்துள்ள நமது மதவாதப் பழக்க வழக்கங்கள், செக்ஸில் இணக்கம் என்பதே இல்லையென்று கூறுகின்றன. இது கேலிக்குரியது; ஏனென்றால், ஒவ்வொருவரையும் செக்ஸ் உணர்வுக்கு ஆளாகும் விஷயம், பொருட்கள், சூழல், இழுக்கும் அம்சம் வெவ்வேறாக இருக்கும். செக்ஸின்போது குறிப்பிட்டவிதமான மனநிலையும், உடற்தகுதியும் மற்றவர்களை விடச் சிறப்பாக இருக்க வேண்டும். நல்ல செக்ஸ் அமைய, இருவருக்குமான இணக்கம் சிறப்பாக இருக்க வேண்டும்.

தொடர்பு

ஒவ்வொருவரும் நல்ல செக்ஸை விரும்பினால், நாம் செக்ஸ் குறித்து மனம்விட்டுப் பேச வேண்டும். படுக்கையில் ஓர் ஆள் நிர்வாணமாக இருக்கும்போது என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பேசாதவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? இந்த நபர்கள் அதிகமாகும்போது தடுமாற்றம் உண்டாகும். நாம் யாரும் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்பவரில்லை. அதனால், படுக்கையறையில் நமக்கும் இணைக்கும் இடையேயான விருப்பங்களைப் பேசித் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது. அதேபோல, “உனக்கு என்ன வேண்டும்” என்று நமது இணையிடம் கேட்க வேண்டும்.

எது நல்ல செக்ஸ் அல்ல?

ஜிம்னாஸ்டிக்ஸ்

நம்மில் பலருக்குத் தாங்கள் சிறந்த செக்ஸ் இணை இல்லை என்ற நம்பிக்கை ஆழமாக இருக்கும். நம்மால் வளைய முடியாது; உடலைக் குறுக்க முடியாது என்ற எண்ணம் இருக்கும். நல்ல செக்ஸ் என்பதற்கு அக்ரோபேடிக், ஜிம்னாஸ்டிக் வித்தைகளைக் காட்ட வேண்டுமென்பது அர்த்தமல்ல. உங்கள் இருவருக்கும் வசதியான, திருப்தியான உறவுகொள்ளும் முறையைக் கண்டுபிடிப்பதே போதுமானது. இதற்குத் தவறுகளும் முயற்சிகளும் பொறுமையும் மட்டுமே தேவை. நல்ல செக்ஸைப் பொறுத்தவரை, பெர்ஃபார்மன்ஸ் எனப்படும் செயல்பாடுகூட உகந்த வார்த்தையல்ல. அதைவிட உணர்வுகளே மிக முக்கியம்.

சிறந்த உடலமைப்பு

நான் பள்ளியில் படித்த காலத்தில், ஹாலிவுட்டைச் சேர்ந்த பமீலா ஆண்டர்சன் பற்றிப் பல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். இது போதுமான அழக்கல்ல என்று கண்டறிந்தபோது எவ்வளவு அதிர்ச்சியடைந்தேன் என்றெல்லாம், அவர் சொல்லியிருக்கிறார். எனது அனுபவத்தில், நல்ல செக்ஸ் என்பது ஒல்லியாகவோ, வளைவுகளுடனோ இருப்பதைப் பொறுத்ததல்ல. நீங்கள் மெழுகைப் பூசியிருக்கிறீர்களா, ஷேவ் செய்திருக்கிறீர்களா அல்லது இருப்பதைப் பாதுகாக்கிறீர்களா என்பதும் விஷயமல்ல. நம் எல்லோருக்கும் நமது உடல் மீதான வெறுப்புகள் இருக்கும்; நல்ல செக்ஸை விரும்பினால், இது போன்ற பயங்களை எல்லாம் மனதில் ஏற்றக் கூடாது. ஆண் குறியோ, பெண் குறியோ, அதன் அளவோ, நிறமோ, வடிவமோ நல்ல செக்ஸைத் தீர்மானிக்காது. நம் உடலிலுள்ள மற்ற பாகங்களின் முக்கியத்துவமும் இப்படிப்பட்டது தான்.

19b.jpg

உச்சத்தில் இணைதல்

இருவரும் ஒரே நேரத்தில் உச்சமடைய வேண்டுமென்பதே, பல ஜோடிகளுக்கு இடையே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. போலியான உச்ச நிலையை இதில் குறிப்பிடவில்லை. உச்சமடைதல் என்பது அற்புதமானது; ஆனால், அது இயல்பாக நடைபெற வேண்டும். உறவின்போது வேகத்தை அதிகப்படுத்துவதோ, குறைப்பதோ, உச்சத்தைக் கொண்டுவருவதோ யாராலும் முடியாது. புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு அது.

மனதறிதல்

எப்படிப்பட்ட காதல் அல்லது செக்ஸ் உறவாக இருந்தாலும், ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்தாலும், இதுவரை அற்புதமாக செக்ஸ் கொள்ளாமல் இருந்தாலும், அது பற்றிய உணர்வுகள் உந்திக்கொண்டே இருக்குமென்பது விதி. ஆனால், இதை உங்களது எதிர்பார்ப்பாகவோ, குறிக்கோளாகவோ அமைத்துக்கொள்ள வேண்டாம். உங்களாலோ, உங்களது இணையாலோ மனதைப் படிக்க முடியாது. ஒருவர் தான் என்ன விரும்புகிறோம் என்பதைப் பேச முற்படாதபோது, இன்னொருவர் அது பற்றி அறிய முயற்சி செய்வது தேவையற்ற அழுத்தம்தான்.

அடக்குதல்

சிலர் நினைப்பதுபோல, இணையை அடக்குவதால் நல்ல செக்ஸ் வாய்த்துவிடாது. சில மனிதர்களைப் பொறுத்தவரை கன்னித்தன்மை என்பது காட்சிப்பொருளாக இருக்கிறது. சிலருக்கு செக்ஸ் குறித்த அப்பாவித்தனம் விருப்பமானதாக இருக்கிறது. நம்மை அடக்கும் நபரோடு உறவுகொள்ளும்போது, இதுவரை வெளிப்படாத நமது திறன் அனைத்தும் வெளிப்படும் என்று சிலர் நினைக்கின்றனர். செக்ஸின்போது அடக்குதலை எதிர்கொள்ளும்போது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பது உண்மை. எதிர்காலத்தில் பலவற்றைத் தவிர்க்க முடியும். முக்கியமாக, நல்ல செக்ஸ் எதுவென்று அறிய முடியும்.

மாறுபடும் பார்வை!

இதுதான் சிறந்தது, இது மோசமானது என்ற ஒற்றை அபிப்ராயத்தை ஒருபோதும் செக்ஸ் விஷயத்தில் வெளிப்படுத்தவே முடியாது. ஒவ்வொரு முறையும் இதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசுவது மிகச் சிறந்தது. இந்தக் கோட்பாடுகளால் சமூகப் பரப்பில் வெறுமனே கீறல்களை மட்டுமே உண்டாக்க முடியும். இது தொடங்கும் இடம் மட்டுமே.

சம்மதம் என்ற வார்த்தைக்கு நான் மரியாதை அளிக்கிறேன். ஒப்புதல், உற்சாகம், ஒன்றிணைதல், இணக்கம், தொடர்பு போன்றவை தீர்ப்பிலிருந்து கிடைக்கும் சுதந்திரம், ஓய்வுத் திறன் ஆகியவற்றின் பக்க விளைவுகள்தான். இப்போதுவரை, இதைப்பற்றித் தான் நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையான செக்ஸ், செக்ஸில் இணக்கம், எது நல்லது, எது கெட்டது, ஒப்புதலை எவ்வாறு கைக்கொள்வது என்பதெல்லாம் இந்த விவாதத்தின் அங்கங்கள்தாம்.

நம்மால் சிறப்பான செக்ஸை உருவாக்க முடியாது. விசித்திரமானதாகவோ, விலக்கப்பட்டதாகவோ அல்லது அடக்குதலுக்காகவோ செக்ஸைப் பயன்படுத்த முடியாது. ஏனென்றால், அது இயல்பானது!

நன்றி: மீடியம்.காம்

 

 

https://minnambalam.com/k/2018/12/23/19

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

தம்பி, இப்படியானவற்றை வாசிக்க வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் பார்க்க, கை செய்யும் என பெரியவர்கள் சொல்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதொன்றும் பெரிய காரியமில்லை.கூட்டு முயற்சிதானே,யாராவது ஒருத்தருக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரிந்தால் போதும்.அப்படியே கை பிடித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போய்க்கொண்டே இருக்கலாம்......! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

 வாசித்தால் புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு எது என்று அறியமுடியும்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

 வாசித்தால் புதரில் இருந்து வெளிப்படும் முயலைப் போல இயற்கையான நிகழ்வு எது என்று அறியமுடியும்🤪

அதற்காகத்தான்.... நம், முன்னோர்கள்....
"கச்சை... கட்டுவது  அழகு"  என்று சொன்னார்கள்.
அவிழ்த்துப்  போட்டு... நிற்பது,  எந்த விதத்தில்... அழகு  ஐயா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, MEERA said:

தம்பி, இப்படியானவற்றை வாசிக்க வேண்டாம். 

ஹாஹா அண்ண ஒரு பகிடிக்கு சும்மா கிடக்குது திரி அதான் கொஞ்சம் முசுப்பாத்திக்கு ஏதாவ ஊற்றி எரிக்க வேண்டாமா

 

20 hours ago, தமிழ் சிறி said:

ராஜா.... இதெல்லாம்... வாசிச்சு  செய்யுற விஷயம் இல்லை. :grin:

ம்கும் அண்ண சொன்னா சரி

10 hours ago, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

எப்பவும் குதர்க்கமாவே பேசுறது இவரு :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எப்பவும் குதர்க்கமாவே பேசுறது இவரு :27_sunglasses:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:


palani.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பிள்ளை பெற்று விட்டால் செக்ஸ் உச்சமாக அனுபவித்திருக்கிறார்கள் என்ற றேஞ்சில் இருக்கிறது எங்கள் செக்ஸ் அறிவு! இவர்களுக்குப் போய் செக்ஸ் பாடம் எடுப்பவரை எதனால் அடிக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:


palani.jpg

 

என்ற கோவணத்தானை ஏன் இதுக்குள்ள கொண்டு அடிபட விடுவான்

 

தெரிந்தவனுக்கு பக்தி தெரியாதவனுக்கு ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரவற்கு இயற்கை அளந்து விட்டது தான் வாழ்க்கை. அதே போலத்தான் பாலியல் வாழ்க்கையும். 

Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/27/2018 at 4:13 AM, குமாரசாமி said:

அவரவற்கு இயற்கை அளந்து விட்டது தான் வாழ்க்கை. அதே போலத்தான் பாலியல் வாழ்க்கையும். 

'மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படுவார்'

என்று குறள் குறிப்பதும் இதைத்தான். காமத்தின் சிறப்பு உணர்ந்து துய்க்க வல்லார் சிலரே ஆவர் என்பதே அனைத்தும் உணர்ந்த/ உணர்த்தும் வள்ளுவம்.

 

Link to comment
Share on other sites

On 12/23/2018 at 6:04 PM, தனிக்காட்டு ராஜா said:

ஒரு தரம் வாசித்து விட்டன் பெரிய மேட்டர்தான் போல இருக்கு :grin::27_sunglasses::27_sunglasses:

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!! 😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/26/2018 at 3:40 PM, Justin said:

பத்துப் பிள்ளை பெற்று விட்டால் செக்ஸ் உச்சமாக அனுபவித்திருக்கிறார்கள் என்ற றேஞ்சில் இருக்கிறது எங்கள் செக்ஸ் அறிவு! இவர்களுக்குப் போய் செக்ஸ் பாடம் எடுப்பவரை எதனால் அடிக்கலாம்?

இதில் பல விடயங்களை யோசிக்க வேண்டி இருக்கு. பிள்ளை பெறுவதே பாலுறவின் உச்சம் இல்லை என்பது உண்மைதான். பத்து பிள்ளை பெற்றவர்கள் மொத்தமாக 10 x 10=100 நிமிடம் மட்டுமே இதில் செலவழித்தும் இருக்க கூடும்.

ஆனால் குமாரச்சாமி அண்ணை சொல்வதிலும் ஒரு விசயம் இருக்கு.

பாலியல் திருப்தி என்பது மனம் சம்ப்ந்தமான விடயம்.

அந்த நாளில் அப்புக்கும் ஆச்சிக்கும் இது சம்பந்தமாக வேறு எந்த அறிவும் இல்லை என்பதால், அப்பு கொடுத்ததே உலகமகா இன்பம் என ஆச்சியும், ஆச்சியிடம் அடைந்ததே உலக மகா இன்பம் என அப்புவும் திருப்தி அடைந்து, ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்திருப்பார்கள். 

ஆனால் இப்போது அப்படியில்லையே. இது சம்பந்தமான தகவல்கள் தேடாமலே கிடைக்கும். வேறு பட்ட மனிதர்களின் உடற்கூற்றியல் எப்படி இருக்கும் என்பதை படிக்க, காணொளி வழியே பார்க்க முடிகிறது.

உடற்கூற்றியலுக்கும் பாலின்பத்துக்கும் பெரிய தொடர்பொன்றும் இல்லை என பலர் வாதிட்டாலும். பெரும் பாலானோர் இரெண்டையும் இணைத்தே பார்கிறனர்.

இது மட்டும் அல்லாமல் காணொளிகளில் காட்டப்படும் புது புது உத்திகளையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை பிந்தொடரும் ஆவலும் எழுகிறது 😂

எனவே திருப்தியை மேலும் தேட விழையும் போது மனமுறிவு ஏற்பட்டு மான-முறிவு, ஈற்றில் மணமுறிவில் முடிகிறது.

இது இருபாலருக்கும் பொருந்தும். 

Ignorance is bliss என்பார்கள். அதாவது அறியாமை ஒரு கொடுப்பினை.

2 தலைமுறைக்கு முந்தியவர்கள் அறியாமையில் ஆனால் bliss இல் இருந்தார்கள்.

இப்போது அறிவுடன் ஆனால் அங்கலாய்ப்புடன் இருக்கிறார்கள்.

உலகம் பூராவும்.

On 12/24/2018 at 6:29 PM, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

 

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

செக்ஸ் சை இப்படி எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

'மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படுவார்'

என்று குறள் குறிப்பதும் இதைத்தான். காமத்தின் சிறப்பு உணர்ந்து துய்க்க வல்லார் சிலரே ஆவர் என்பதே அனைத்தும் உணர்ந்த/ உணர்த்தும் வள்ளுவம்.

 

6 hours ago, Paanch said:

எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!! 😌

5 hours ago, goshan_che said:

இதில் பல விடயங்களை யோசிக்க வேண்டி இருக்கு. பிள்ளை பெறுவதே பாலுறவின் உச்சம் இல்லை என்பது உண்மைதான். பத்து பிள்ளை பெற்றவர்கள் மொத்தமாக 10 x 10=100 நிமிடம் மட்டுமே இதில் செலவழித்தும் இருக்க கூடும்.

ஆனால் குமாரச்சாமி அண்ணை சொல்வதிலும் ஒரு விசயம் இருக்கு.

பாலியல் திருப்தி என்பது மனம் சம்ப்ந்தமான விடயம்.

அந்த நாளில் அப்புக்கும் ஆச்சிக்கும் இது சம்பந்தமாக வேறு எந்த அறிவும் இல்லை என்பதால், அப்பு கொடுத்ததே உலகமகா இன்பம் என ஆச்சியும், ஆச்சியிடம் அடைந்ததே உலக மகா இன்பம் என அப்புவும் திருப்தி அடைந்து, ஒரு நிறைவான வாழ்வை வாழ்ந்திருப்பார்கள். 

ஆனால் இப்போது அப்படியில்லையே. இது சம்பந்தமான தகவல்கள் தேடாமலே கிடைக்கும். வேறு பட்ட மனிதர்களின் உடற்கூற்றியல் எப்படி இருக்கும் என்பதை படிக்க, காணொளி வழியே பார்க்க முடிகிறது.

உடற்கூற்றியலுக்கும் பாலின்பத்துக்கும் பெரிய தொடர்பொன்றும் இல்லை என பலர் வாதிட்டாலும். பெரும் பாலானோர் இரெண்டையும் இணைத்தே பார்கிறனர்.

இது மட்டும் அல்லாமல் காணொளிகளில் காட்டப்படும் புது புது உத்திகளையும் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. அவற்றை பிந்தொடரும் ஆவலும் எழுகிறது 😂

எனவே திருப்தியை மேலும் தேட விழையும் போது மனமுறிவு ஏற்பட்டு மான-முறிவு, ஈற்றில் மணமுறிவில் முடிகிறது.

இது இருபாலருக்கும் பொருந்தும். 

Ignorance is bliss என்பார்கள். அதாவது அறியாமை ஒரு கொடுப்பினை.

2 தலைமுறைக்கு முந்தியவர்கள் அறியாமையில் ஆனால் bliss இல் இருந்தார்கள்.

இப்போது அறிவுடன் ஆனால் அங்கலாய்ப்புடன் இருக்கிறார்கள்.

உலகம் பூராவும்.

 

5 hours ago, நிழலி said:

செக்ஸ் சை இப்படி எழுதுவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை...:(

சோமர்! என்னத்துக்கு இந்த ரொபிக்கை தூசு தட்டி  வெளியிலை எடுத்தவர்? நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எண்டு தெரியாதோ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோமர்! என்னத்துக்கு இந்த ரொபிக்கை தூசு தட்டி  வெளியிலை எடுத்தவர்? நம்ம புள்ளைங்க எல்லாம் பயங்கரம் எண்டு தெரியாதோ? 🤣

அண்ணன் போட்ட வழியில் அடிபிசகாமல் நடக்கும் தம்பிகள் நாம் 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 12:29 PM, குமாரசாமி said:

எங்கடை முன்னோர்கள் உந்த  கோதாரிவிழுந்த செய்முறையள்,ஆலோசனையள் இல்லாமலே அந்த விசயத்திலையும்.....பிள்ளைச் செல்வத்திலையும் ஒரு குறையும் இல்லாமலும் வாழ்ந்தவையள்....இதுக்கை அங்கை இஞ்சை சின்னவீடுகள் வேறை விசயம்..:cool:

இப்ப இருக்கிற சந்ததியள் என்னடாவெண்டால்....ரீவி,கொம்பியூட்டர்,ரெலிபோன், அது இது எண்டு எல்லாத்திலையும் கண்ணைப்புடுங்கி வைச்சு பலாலான விசயங்களை வாசிச்சுப்போட்டு.......கட்டின கலியாணமும் நிலைச்சு நிக்குதில்லை......அதோடை ஒருபிள்ளை இரண்டு பிள்ளையை பெத்தெடுக்கிறத்துக்கே முக்கிக்கொண்டு திரியுதுகள்...tw_lol:

இது தவறான உண்மை இல்லாத பார்வை 
கலவியை... காமத்தை..... அக்கு வேறு ஆணிவேறாக அதில் மோட்ஷமே 
கண்டவர்கள் எம் முன்னோர்கள்.
நாகரீக வளர்ச்சி என்று நாம் மூட மூட தொடங்கியதால் வந்துதான் 
இன்றைய பாலியல் குறைபாடுகளும் ...... பாலியல் வன்முறைகளும் 
இச்சைகளும் அதனால் தொடரும் இடர்களும்.

ஒரு தமிழ் சித்தர் ஒருவர் 16 மணித்தியாலம் தொடர்ந்து உடலுறவு 
செய்து காட்டிய ஆதாரங்கள் இருக்கின்றது ...... இந்த 16 மணி என்பது அவரோடு 
சார்ந்தது மட்டுமில்லை அவரோடு உறவாடிய பெண்ணோடும் சார்ந்தது. அவ்வாறு ஆன் பெண் 
இரு பாலரும் ஆற்றல் கொண்டு அறிவு கொண்டு வாழ்ந்து இருக்கிறார்கள் 

இதற்கு என்றே கால காலமாக ஒரு மூச்சு கலையை பயின்று வந்து இருக்கிறார்கள்
பாரத நாட்டியம் என்பது பூராகவும் பாலியல் சம்மந்தமானது இன்று தணித்து  .. திணித்து 
ஏன் ஆடுகிறோம் என்பது ஆடுபவருக்கே தெரியாமல் ஆக்கிவிடார்கள்  

 

காமசூத்திரம்  
கஜுராகோ கோவில் 
தந்த்ரா கலைகள் 

இவற்றுக்கு ஈடாக இன்றைய உலகில் எதுவுமே இல்லை.
இப்போது வெறும் அங்கலாய்ப்பும் .... மாற்றாரியாலிஸிட் (materialize)  போக்கும் கலந்து 
வீணாக ஒருவரை ஒருவர் வலி செய்வது  செக்ஸ் என்று புரிந்து கொண்டு 
ஒரு மனநோய் பிடித்த பிசாசுகள்போல திரிகிறார்கள். 

Image result for khajuraho temples

Related image

Link to comment
Share on other sites

On 12/25/2018 at 11:25 PM, குமாரசாமி said:

தம்பி! நோ ரெஞ்சன் ஓகே :127_older_man:

இப்ப நான் உங்களுட்டை கேக்கறது என்னவெண்டால்.....

இந்த படத்திலை இருக்கிறவர் செக்ஸ்சியாய் தெரியிறாரா இல்லாட்டி பக்தியாய் தெரியிறாரா? :cool:


palani.jpg

 

இந்த கோலத்தில போய் தானோ கட்டின பொண்டாட்டி தெய்வானை  இருக்க வள்ளியை ஈவ்டீசிங்ங் செய்து  மயக்கினாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 7:23 PM, ஈழப்பிரியன் said:

உறவுக்கு முன் சொர்க்கம்
உறவு முடிய நரகம்.

ஐயய்யோ ! முன்னும் பின்னும் சொர்க்கம்தான் என்று உணர்வதையே 'செவ்வி தலைப்படுவார்' என்று நம் வாழ்வியல் ஆசான் வள்ளுவன் குறிக்கிறான். நாம் பட்டினத்தார், கண்ணதாசன் (அர்த்தமுள்ள இந்துமதம்) போல் விரக்தி நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை. வள்ளுவம் இருக்க வேறெது வேண்டும் ? உறவுக்குப் பின்னரும் மானே, தேனே என்று தொடருங்கள். இது செயற்கையாய்த் தோன்றினால்,   I love you சொல்லிப் பாருங்கள். இனியெல்லாம் சொர்க்கம்தான் தோழர். (அறிவுரையாக எடுக்க வேண்டாம். வயதில் மூத்தவனின் அனுபவப் பகிர்வு எனக் கொள்ளலாம். வாழ்க்கையில் மிக முக்கியமானதாய் நான் கருதுவதால், சற்று மெனக்கிட்டு எழுதிவிட்டேன்).

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.