Jump to content

முதல் பார்வை: அடங்க மறு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: அடங்க மறு

உதிரன்சென்னை
adanga-maru-7jpgjpgjpg

சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'.

சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி).  உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணையில் தீவிரமாக இறங்க, தன் குடும்பத்தை இழக்கிறார்.

 உண்மையில் நடந்தது என்ன, இளம்பெண் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன, காவல்துறை உயர் அதிகாரிகள் சுபாஷை கடமை ஆற்ற விடாமல் கட்டிப்போட, அவர் அடுத்து என்ன செய்கிறார், குற்றவாளிகளை எப்படித் தண்டிக்கிறார் போன்ற கேள்விகளுக்கு பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை. 

பொறுப்பான கதைக்களத்தை மிகச் சாதுர்யமாகக் கையாண்டு முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் தங்கவேல். அவரின் அக்கறையும், பொதுநலனும் பாராட்டுக்குரியது. 

adanga-maru-4JPGjpg

 

காக்கிச்சட்டைக்கான கம்பீரத்தில் ஜெயம் ரவி கச்சிதம். 'ஒபே தி ஆர்டர்' என்ற கட்டளைக்குக் கட்டுப்படுவதில் இருக்கும் அசவுகரியத்தையும், தப்பைத் தட்டிக்கேட்கும் துணிச்சலையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். எதிரி யார் யார் என்பது தெரிந்ததும் அவர்களுக்கு எதிர்வினையாற்றும் விதத்திலும் ரவி இயல்பாக ஈர்க்கிறார். குற்றவாளிகளுக்கு எதிரான குரலாக ஓங்கி ஒலிக்கும்போது கண்ணியமான காவல்துறை அதிகாரியாக மிளிர்கிறார். 

ராஷிகன்னாவுக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. அந்தக் காதலில் ஆழமும் இல்லை. ஆனால், கதையின் ஓட்டத்தில் சில முக்கியச் செயல்பாடுகள் இவரைச் சுற்றியே நகர்கின்றன. 

அன்பு காட்டி வழிகாட்டும் சக போலீஸ் அதிகாரியாக அழகம் பெருமாள் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கதாபாத்திரம் திடீரென சுருங்கி விடுவது ஏன் என்று தெரியவில்லை.  'முனீஸ்காந்த்' ராம்தாஸ், பஞ்சு சுப்பு, பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், கஜராஜ் போன்றோர் சில காட்சிகள் வந்துபோனாலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். பூர்ணாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. 

மிகப்பெரிய உயர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரியான சம்பத் கடைசி வரை எதுவுமே செய்யாமல் மிரட்டிக்கொண்டே இருக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்.ஐ.யிடம் இருந்து எந்த உண்மையும் வரவழைக்க முடியாமல் திணறுகிறார்.

adanga-maru-5JPGjpg

 

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம். சாம் சி.எஸ். இசையில் சாயாளி பாடல் சூப்பர். பின்னணி இசையில் மிரட்டி படத்துக்கான டெம்போவை சாம் கடத்தி இருக்கும் விதம் கவனிக்க வைக்கிறது. ''நாடே ஓடும்போது நாம நடுவுல ஓடணும், தனியா ஓடணும்னு நினைச்சா காணமப் போய்டுவ'', ''எல்லோ போலீஸும் சின்சியரா இருந்திட்டா ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் கோயில்தான்'' போன்ற ஷார்ப்பான வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் பதிவு செய்திருப்பது படத்தின் ப்ளஸ்.  தொழில்நுட்ப அம்சங்களை பிரதானமாகக் கொண்டு பழிவாங்கும் படலத்தை விதவிதமாக அரங்கேற்றி இருக்கும் விதம் போரடிக்காமல் பார்க்கச் செய்கிறது.  படத்தில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. குடும்பத்தையே இழக்கும்போது ஜெயம் ரவியின் துயரத்தை சரியாகக் காட்சிப்படுத்தவில்லை. உணர்வுபூர்வமான காட்சி வெறுமனே கடந்துபோகிறது. 

ஒவ்வொரு குற்றவாளியும் ஏன் தனித்தனியாகவே வந்து சிக்குகிறார்கள், கலெக்டரின் மகன் எப்படி தனியாகச் சிக்கினான், சந்தேகத்துக்குரிய நபர் என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்காதது ஏன், உயிர் முக்கியம் என நினைப்பவர்கள் ஏன் எச்சரிக்கையே இல்லாமல் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், பரபரப்பான விறுவிறுப்பான திரைக்கதையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்ப அம்சங்களும் இந்தக் கேள்விகளைத் தாண்டி படம் பார்க்கச் செய்கின்றன. அந்தவிதத்தில் 'அடங்க மறு' திரைப்படத்தை அவசியம் பார்க்கலாம்.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25807069.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நல்ல  திரைப்படம் பார்த்த திருப்தி அடங்கமறு   சூப்பர்

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதாநாயக மொள்ளைமாரித்தனம் இல்லாமல் நீண்டகாலத்துக்கு பின் பார்த்த படம் இதுதான் சில காட்சிகள் ஆங்கில படங்களில் முன்பே பார்த்தது போல் இருக்கு படப்பெயர் நினைவுக்கு வருதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இந்த கதாநாயக மொள்ளைமாரித்தனம் இல்லாமல் நீண்டகாலத்துக்கு பின் பார்த்த படம் இதுதான் சில காட்சிகள் ஆங்கில படங்களில் முன்பே பார்த்தது போல் இருக்கு படப்பெயர் நினைவுக்கு வருதில்லை . 

"ஒரு கைதியின் டைரி"க்கு  முன் வந்த ஆங்கிலப்படங்களை நினைவுக்கு கொண்டுவந்து பாருங்கள். சில சமயம் தட்டுப்படும்.....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.