Jump to content

தமிழர் ராஜதந்திரம்? - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ராஜதந்திரம்? - யதீந்திரா

ராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கூற்று உண்டு. அதாவது, ஆயுதம் இல்லாத ராஜதந்திரம் என்பது, இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. ( Diplomacy without arms is like music without instruments) இது 18ம் நூற்றாண்டில், பிரட்றிக் த கிறேட் என்னும் பிரஸ்யன் அரசனால் கூறப்பட்ட வாசகம். பிற்காலத்தில் நெப்போலியன், இந்த வாசகத்திலுள்ள ஆயுதம் என்னும் சொல்லுக்கு பதிலாக பலம் (Force) என்னும் சொல்லை பயன்படுத்தியிருந்தார். அதாவது, ஒரு பலம் இல்லாத ராஜதந்திரம் என்பது இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. இன்றும் உலக ராஜதந்திர அரசியலில் இந்த வாசகம் கவர்ச்சி குன்றாத ஒன்றாகவே இருக்கிறது. இந்தக் கட்டுரையில் நான் வாதிடவுள்ள விடயங்களுக்கும் மேற்படி கூற்றுக்கும் ஒரு தொடர்புண்டு.

அண்மையில் காலம் சென்ற விடுதலைப் புலிகளின் தத்துவ ஆசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் நினைவு தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் பிறிதொரு பெயரில் நினைவுகூரப்பட்டது. அங்கு, காலம் சென்ற ஒரு தமிழ் ராஜதந்திரியை நினைக்கும் வகையில் தமிழரின் ராஜதந்திர அரசியல் தொடர்பிலும் பேசப்பட்டது. இந்த உரைகளை அவதானித்த போது இப்படியொரு தலைப்பில் எழுத வேண்டுமென்னும் எண்ணம் ஏற்பட்டது. பாலசிங்கத்தை ஒரு தமிழ் ராஜதந்திரி என்று கூறுவதற்கான முழுத் தகுதியுடன் அவர் இருந்தார் என்பது உண்மை. பாலசிங்கத்திற்கு முன்னரும், பின்னரும் பாலசிங்கத்தை போன்று ஒரு தமிழ் ராஜதந்திரியாக எவராலும் செயற்பட முடியவில்லை என்பதும் உண்மையே! இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். அவ்வாறாயின் ஏன் அவருக்கு முன்னால் அப்படியான ஆளுமைகள் உள்ள எவரும் இருந்திருக்கவில்லையா? அல்லது அப்படியானவர்கள் உருவாகுவதற்கான களநிலைமைகள் இருந்திருக்கவில்லையா? நிச்சயமாக இருந்தது. ஈரோஸ் இயக்கத்தை சேர்ந்த ரத்தினசபாபதி, புளொட் இயக்கத்தை சேர்ந்த சந்ததியார் போன்றவர்களிடம் மார்க்சிய பின்புலத்தில் விடுதலை அரசியலை முன்னிறுத்துவதற்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த ஆற்றல் இருந்ததாக அறியமுடிகிறது. இன்னும் பலரும் இருந்திருக்கலாம். சிவராம் இதன் பிற்பகுதியில் வந்த ஒருவர். சிவராமின் எழுத்துக்கள் அதிகம் இராணுவ விஞ்ஞான கண்ணோட்டத்தில் விடுதலைப் போராட்டத்தை ஆய்வுக்குட்படுத்தியதைவே அன்றி, விடுதலை அரசியலை பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தவை அல்ல. ஆனாலும் தமிழ் ராஜதந்திர பின்புலத்தில் சிவராமை முன்னிறுத்தி வாதிடலாம் என்று நினைப்பது பொருத்தமான ஒன்றல்ல. ஆனால் சிவராமிடம் அதற்கான ஆற்றலும் ஆளுமையும் இருந்தது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் ஒருவரிடம் ஆற்றல் இருக்கிறது என்பது வேறு அவரது ஆற்றலை பிரயோகிப்பதற்கான களம் என்பது வேறு. இந்த இடத்தில்தான், பாலசிங்கம் மட்டும் எவ்வாறு ஒரு தமிழ் ராஜதந்திரியாக பரிணமிக்க முடிந்தது என்பதற்கான பதிலும் இருக்கிறது. ஏனெனில் பாலசிங்கத்தின் ‘ராஜதந்திரி’ என்னும் அந்தஸ்த்து ஒரு ஆயுதபலத்தின் ஊடாக அவருக்கு கிடைத்தது. ஆயுதமே சர்வதேச அரங்குகளில் பாலசிங்கத்தை ஒரு தமிழ் ராஜதந்திரியாக்கியது. அதாவது பாலசிங்கம் இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைக்கச் செல்லவில்லை. எனவே பாலசிங்கத்தை முன்னிறுத்தி தமிழ் ராஜதந்திரம் பற்றி பேச முற்படுவோர், அதற்கு பின்னாலிருந்த விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை கருத்தில்கொள்ளாமல் பேசுவது தவறாகும்.

தமிழர் விடுதலை போராட்டம் ஜந்து இயக்கங்களால் பங்குபோடப்பட்டிருந்த சூழலில், அவற்றுக்கான ராஜதந்திர அந்தஸ்த்தை இந்தியா வழங்கியிருந்தது. அதாவது, இயக்கங்களை இராணுவரீதியில் வலுப்படுத்தி, அவற்றுக்கு திம்புப் பேச்சுவார்த்தையில் சிறிலங்காவுடன் சமதையாக பேசுவதற்காக சூழலையும் இந்தியா வலிந்து ஏற்படுத்தியிருந்தது. இராணுவ ரீதியில் பலப்படுத்தப்பட்ட பின்னர்தான், அந்த ராஜதந்திர அந்தஸ்த்து வழங்கப்பட்டது. 90களுக்கு பின்னர், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவை பகைத்துக் கொண்டு, சுயாதீனமாக தங்களை இராணுரீதியில் பலப்படுத்தி, வன்னியை மையப்படுத்தி ஒரு நிழல் அரசாங்கத்தை நிறுவிய பின்புலத்தில்தான் மீண்டுமொரு ராஜதந்திர களம் திறக்கப்படுகிறது. விடுதலைப் புலிகள் சர்வதேசரீதியில் ராஜதந்திர அந்தஸ்த்தை பெறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால், திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழ் ராஜதந்திரத்தை பிரயோகிப்பதற்கான மீண்டுமொரு களம் ஒஸ்லோவில் திறக்கப்பட்டது. மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களையும் உற்றுநோக்கினால், இரண்டுக்கு ராஜதந்திர வாய்ப்புக்களுமே, ஆயுதங்களின் வழியாக கிடைக்கப்பெற்றதுதான். அதாவது, ஆயுதங்கள் அல்லது பலம் என்பது ராஜதந்திர அரசியலுக்கான தற்பாதுகாப்பாக இருந்தது. ராஜதந்திர நகர்வுகள் பிழைத்தால் மீளவும் யுத்தம் மூளும் என்னும் ஒரு எச்சரிக்கையுணர்வை அரசாங்கத்திற்கு கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த போது விடுதலைப் புலிகள் மீளவும் யுத்தத்திற்கு சென்றனர். அது தோல்வியில் முடிந்தது. அவ்வாறானதொரு முடிவு ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் பாலசிங்கம் உயிரோடு இல்லை. ஒரு வேளை அவர் இருந்திருந்தால் தனது முழு ஆற்றலையும் தொடர்புகளையும் பயன்படுத்தி, விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பார் என்றும் ஒரு கருத்துண்டு. இதனை முற்றிலுமாகவும் நிராகரித்துவிடவும் முடியாது. ஏனெனில் பாலசிங்கம் மேற்குலக ராஜதந்திரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தார். ஏனெனில் பாலசிங்கம் தூய்மைவாத சிறைக்குள்ளிருந்து சிந்தித்த ஒருவரல்ல. இதன் காரணமாகத்தான், 2016இல், ரஜீவ்காந்தி படுகொலையை விவகாரத்தில் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரினார். எனெனில் இறுதி யுத்தத்தின் போது, இந்தியாவினால் மட்டும்தான் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கமுடியும் என்பதை பாலசிங்கம் ஒரு ராஜதந்திரி என்னும் வகையில் நன்கு அறிந்திருந்தார். ஆனால் இன்று பாலசிங்கம் தொடர்பில் பேசுபவர்களும், அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை போடுபவர்களும், அவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டிருக்கின்றனரா!

anton balasingam

2009இற்கு பின்னர் ராஜதந்திர போராட்டம், மென்வலு ராஜதந்திரம் என்றெல்லாம் ஏதோ கூறிக் கொண்டாலும் கூட, உண்மையில் ராஜதந்திர அரசியலுக்கான எந்தவொரு வாய்ப்பும் தமிழர்களிடம் இருந்திருக்கவில்லை. எனெனில் 2009இற்கு பின்னர் தேர்தல் மூலம் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற பிரதிநித்துவம்மட்டும்தான் தமிழர்களிடமிருந்த ஒரேயொரு பலம். உண்மையில் தேர்தல் அரசியல் என்பது, ராஜதந்திர அரசியலை கையாளுவதற்கான ஒரு பலம் அல்ல. இதனை சரியாக புரிந்துகொண்டால்தான் இன்றைய சூழலில், தமிழர்களால் ராஜதந்திர அரசியலை கையாள முடியுமா என்பதையும் புரிந்துகொள்ள முடியும். ஆயுத விடுதலை இயக்கங்கள் எழுச்சிபெறுவதற்கு முன்னர் எவ்வாறானதொரு நிலைமை இருந்ததோ, அவ்வாறானதொரு நிலைமைதான் தற்போதும் இருக்கிறது. அரசியல்வாதிகளே ராஜதந்திரிகளாகவும் தொழிற்படுகின்றனர். அரசியல் வாதிகள் ராஜதந்திரிகளாக இருக்க முடியாது என்று நான் வாதிடவில்லை. திம்பு தொடக்கம் தற்போதுள்ள அரசியல் சூழல் வரையில் அனுபவம் கொண்ட அரசியல் வாதிகள் தமிழ் சூழலில் இருக்கின்றனர்தான். ஆனால் தமிழ் அரசியல் ஒரு தரப்பாக தன்னை நிருபிக்க முடியாத சூழலில் ராஜதந்திரம் என்பது வெறும் சொல்லேயன்றி, அதற்கு செயல் ரீதியில் எந்தவொரு பெறுமதியும் இருக்கப் போவதில்லை.

2009இற்கு பின்னரான சூழலில் தமிழ் தேசிய அரசியல் தன்னை ஒரு பலமாக உருத்திரட்டிக் கொள்ளவில்லை. பலமில்லை என்றால் ராஜந்திரமும் இல்லை. அந்த வகையில் நோக்கினால், இன்றைய தமிழ் அரசியல் என்பது முக்கியமாக கூட்டமைப்பின் தலைமையில் இருக்கும் அரசியல் என்பது வெறும் தரகு அரசியல்தான். அதற்காக கூட்டமைப்பிற்கு வெளியில் தங்களை அடையாளப்படுத்த முயல்பவர்களிடம் அவ்வாறானதொரு பல மையம் இருப்பதாகவும் நான் கூறவில்லை. மொத்தத்தில் இன்றைய தமிழர் அரசியல் என்பது போகுமிடம் தெரியாத அரசியல்தான்.

ராஜதந்திர அரசியல், தந்திரோபாயம், மூலோபாயம் இப்படியான சொற்கள் சாதாரண மக்களுக்குரியவை அல்ல. இது அரசியலை இலக்கு நோக்கி கையாள முற்படும் அரசியல் சக்திகளுக்குரியவை. அப்படிப் பார்த்தால் இவ்வாறான சிந்தனைகள் ஆயுத இயக்கங்களின் தோற்றங்களின் பின்னர்தான் தமிழ் சூழலுக்கு அறிமுகமானவை. மிதவாதிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் இது போன்ற சிந்தனைகள் தமிழ் சூழலுக்கு சொற்களாகக் கூட பரிச்சயமாகியிருக்கவில்லை.

TNA-yaalaruvi

தமிழ் சூழலில் ராஜதந்திர ஆற்றலுள்ள அரசியல் தலைவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் ஏன் உருவாகவில்லை என்பதையும் நாம் ஆழமாக பரிசீலிக்க வேண்டும். மிதவாதிகளைப் பொறுத்தவரையில் அவர்களில் அனேகர் பகுதி நேர அரசியல்வாதிகளாகவே இருந்தனர். தமது அப்புக்காத்துத் தொழிலுக்கான நேரம் போக, மிகுதி நேரத்தில்தான் அரசியல் பேசினர். அவர்களிடமும் சட்ட அறிவைத்தாண்டி, அரசியல் கருத்தியல் மற்றும் தத்துவார்த்த அறிவு இருக்கவில்லை. விடுதலை அரசியல் ஒன்றை தாம் பிரதிநித்துவப்படுத்துகின்றோம் என்னும் புரிதல் அனேகரிடம் இருந்திருக்கவில்லை. 2009இற்கு பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்தது. ஆரம்பகால மிதவாதிகளிடம் இருந்த ஆகக் குறைந்த அரசியல் ஒழுங்கு மற்றும் நேர்மை கூட இவர்களிடம் இருக்கவில்லை. 2009இற்கு பின்னர் அரசியல் அரங்கிற்கு வந்திருக்கும் தமிழரசு கட்சியின் அரசியல் வாதிகளில் அனேகர் அரசியல் தொடர்பில் எவ்வித பயிற்சியோ படிப்போ இல்லாதவர்கள். இவர்களிடம் ராஜதந்திர ஆற்றலை எதிர்பார்க்க முடியுமா? இவர்களில் அனேகர் கல்வி திணைக்களங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள், ஏனையோர் கட்டுமான பணிகளிலும் வியாபாரங்களிலும் ஈடுபட்டவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் அரசியல் என்பது கோசங்களும் சுலோகங்களுமே அன்றி, வேறில்லை. ஏனெனில் அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. இயல்பிலேயே தமிழ் சமூகத்தின் அறிவுத்தேடல் என்பது அரச உத்தியோகத்துக்குரியது. இதன் காரணமாக தமிழர்களின் அறிவுசார் தேடல் பெருமளவிற்கு திணைக்களங்கள் சார்ந்ததாகவே இருக்கிறது. நான் இதனை தமிழர்களின் திணைக்கள அறிவு (Departmental knowledge) என்று வரையறுக்கிறேன். இதனை திணைக்களத்தனம் (Depart mentality) என்றும் வரையறுக்கலாம். தமிழர்களின் செயற்பாடுகளில் இந்த திணைக்களத்தனம்தான் எல்லா இடங்களிலும் மேலோங்கிக் காணப்படுகிறது. அதாவது ஏற்கனவே இன்னொருவரால் வகுக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்களுக்குள் பணியாற்றுவதற்கான அறிவுதான் இவர்களுடையது. இவ்வாறானவர்களே பின்னர் அரசியலுக்கும் வருகின்றனர். இதன் காரணமாகவே இவர்களால் புத்ததாக்கமிக்க, தந்திரோபாயம் சார்ந்து, சூழ்நிலைகருதி முடிவெடுக்கும் திறன் சார்ந்து, செயலாற்ற முடியாமல் இருக்கிறது. இவ்வாறானவர்கள் அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தும் வரையில் ராஜதந்திரம் என்பது தமிழர்களை பொறுத்தவரையில் தேர்தல் அரசியல் மட்டும்தான்.

 

http://www.samakalam.com/செய்திகள்/தமிழர்-ராஜதந்திரம்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.