Jump to content

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன்

 
exodus-benedict-adedipe.jpg?zoom=3&resiz

கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் பண மரங்கள் குவிந்து கிடப்பதாக கற்பனையில் வீடுவாசல் எல்லாம் விற்று கடன்பட்டு வெளிநாடு வந்து சேர்ந்தனர். இது எல்லாரும் அறிந்ததுதான் எனினும் பலரின் வாழ்வு தடம்மாறியதும் இங்குதான். 

இதற்கு முன்னர்  உயர் கல்வி கற்பதற்கு என்று  வெளிநாடு வந்த ஒரு கூட்டம் தமிழை மறந்து தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணியபடி ஆங்கிலம் கதைத்துவிட்டால் தங்கள் ஆங்கிலேயர்கள் என எண்ணியபடி இங்கிலாந்தில் தம் பிள்ளைகளும் தமிழை அறியா வண்ணம் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டுமல்ல புலம்பெயந்த அனைத்து நாடுகளில் வாழும் சில தமிழர்களின் நிலை இன்றுவரை இதுதான். அவர்கள் தம்மைப் பற்றிய சிந்தனை மட்டும் கொண்டவர்களாக சுயநலவாதிகளாக இருந்ததனால், அவர்கள் எமது நாடு பற்றியோ அல்லது தாம் இழந்தவை பற்றியோ எள்ளளவும் கவலை கொள்ளாது இன்றுவரை மகிழ்வாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.  

ஆனால் 84 ம் ஆண்டுக்குப் பின்னர் வந்தவர்களில் சிலரிலும் இவர்களின் குணங்கள் இருந்தாலும் பலரும் எமது தேசம், விடுதலைப்போராட்டம், பண்பாடு, தமது வாழ்வு, ஈழத்து உறவுகளின் எதிர்கால வாழ்வு என்று பன்முக அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து மனஅழுத்தத்தோடும் அபிலாசைகளோடும் ஏமாற்றங்களோடும் மனவலி சுமந்தவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

போர் காரணமாக எம் தாய்மண்ணுக்கும் போக முடியாது உறவினர்களை பார்க்கமுடியாது, பெற்றோர் உற்றோரின் மரணச்  சடங்குகளைக்கூடக் காலங்கடந்த செய்திகளாக வாங்கித் தம்முள் உழன்று, பருவவயது கடந்தும் தன் உறவுகள் சொந்தங்கள் என்று உழைத்துக் களைத்து, எமக்கென்று ஒரு நாடு வரும், அங்கே நின்மதியாக வாழலாம் என்னும் நினைப்பிலும் மண்விழ, எல்லாம் இருந்தும் அகதிகளாக இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். 

பலர் உழைத்ததில் ஒருபங்கு நாட்டுக்கும் மறுபங்கு வீட்டுக்கும் கொடுத்து தான் ஒட்டாண்டியாய் நிற்பது ஒருபுறம், பலர் ஒழுங்காகத் தின்னாமல் குடிக்காமல் சொத்துச் சேர்த்து அதை அனுபவிக்காது நோயில் விழுவது ஒருபுறம், ஒருவரைப் பார்த்து மற்றவர் ஏட்டிக்குப் போட்டியாய் பணம் கார், வீடு என்று கடன்பட்டுக் காலம்கழிப்பது ஒருபுறம், மற்றவருக்கு கொடுக்காது அல்லது அதிட்டவசமாகப் பணம் சேர்க்கும் சிலர் செய்யும் கூத்துகளும் ஆடம்பர விழாக்களும் கோமாளித்தனங்களும் “அற்பருக்குப் பவுசுவந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பர்” என்னும் பழமொழியை அப்பட்டமாக நிறுவிக்கொண்டிருக்கின்றது.   

புலம்பெயர் நாடுகளில் மற்றைய கலாச்சாரங்களுடன் ஈடுகொடுக்க முடியாது பலர், அக்கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்ட பலர், ஓட்டவும்  விலகவும் முடியாமல் இரண்டுக்கும் நடுவே ஏக்கத்துடன் கிடந்து அல்லாடும் சிலருமாக வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது. நாகரிக ஆடைகள், போதிய பணம் என்பன இருந்தும்கூட ஏக்கத்துடன் இன்னும் எமது நாட்டையும், உறவுகளையும், வாழ்ந்த வாழ்வையும் என்று இழந்தவர்களை எண்ணி எமது மனம் திருப்தியுறா நிலையிலேயே ஓடிக்கொண்டிருப்பது ஒருபுறம். உயிர்ப் பயம் காரணமாக போதிய பணம் இருந்தும் எம் நாட்டில் போய் வாழும் துணிவு இன்றிய பலர் ஆண்டுதோறுமோ அன்றி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையோ எம் நாட்டுக்குச் சென்று தம் ஆசைகளைத் தீர்த்துத் திருப்தி கொள்கின்றனர். 

ஆனால் சில காலமாக புலம்பெயர் தமிழரிடம் எழுந்துள்ள முணுமுணுப்பும் சலிப்பும் சொல்ல முடியாதது. தம்மைப் பெற்றவர் அங்குஉயிருடன் இருக்கும் வரை தான் நாம் அங்கு செல்வோம். அதன் பின் அந்தப்பக்கம் போகவே மாட்டோம் என்னும் வெறுப்புக்குரிய வார்த்தைகள் ஏன் வந்தது என்று பார்த்தால், புலம் பெயர்ந்த மக்கள் மட்டும் மாறவில்லை. தாயகததில் இருக்கும் எமது உறவுகள், நாம் ஆசையாசையாகக் காணவேண்டும் என்று துடித்த அயலவர்களும் சொந்தங்களும் கூட நிறையவே மாறிவிட்டார்கள். 

தாம் துன்பம் கொள்வதுபோல் தமது உறவுகள் துன்பம் கொள்ளாது வசதியாக வாழட்டும் என எண்ணிய புலம்பெயர் உறவுகள் கண்மூடித்தனமாக, சிந்தனையில்லாது அனுப்பும் பணம்தான் எமது ஊர்களில் பலரை வசதியாக ஆடம்பரமாக வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது. சிலர் இன்னும்கூட வாழத்தெரியாமல் ஊரிலும் புலம்பெயர் தேசத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பது வேறு கதை. 

உறவினர்கள் அனுப்பும் பணத்தில் பிள்ளைகள் கேட்கும்  மோட்டார்  வண்டிகள், கைத்தொலை பேசிகள், வெளிநாட்டு உணவகங்களில் உணவு, மதுபானங்கள், நண்பர்களுடன் ஊர் சுற்றுதல் என்பவற்றால் கல்வியை உதறிவிட்டு வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு சீரழியும் சமூகமாக எமது தமிழ் சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாது எமது கலாச்சாரங்களை மதிக்காது பண்புகளை மறந்து வெளிநாட்டினர் போல் அக்கம் பக்க வீடுகளுடன் தம் அயலவர்கள் சொந்தங்களுடனும் கூட ஒருஅன்னியத் தன்மையைப் பேணிக்கொண்டு தொலைக்காட்சிகளில் மூழ்கி தனி வாழ்வு வாழ்ந்துகொண்டும் பலரிருப்பது எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகின்றது என்பதை எமக்கு நன்றாகவே காட்டுகின்றது. சிற்ரூர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் காணப்படும் மக்கள் தொகையும் விழாக்களும் இவற்றுக்குச் சாட்சி.

வெளிநாடுகளிலிருந்து செல்லும் உறவுகளை உண்மை அன்போடும் அக்கறையோடும், ஆசையோடும் எதிர்கொள்ளும் புலத்து உறவுகள் மிகச் சொற்பமே. பெரும்பாலானவர்கள் வரும் உறவுகள் என்ன அங்கிருந்து கொண்டுவருகின்றனர், அவர்களிடமிருந்து எவ்வளவு கறக்க முடியுமோ அத்தனையும் கறந்துவிட்டு விடவேண்டும் என்னும் நோக்கம் மட்டுமே கொண்டவர்களாக இருக்கின்றனர். அப்படி அவர்கள் எண்ணவும் எதிர்பார்க்கவும் அவர்கள் மட்டும் காரணமல்ல.  

வெளிநாடுகளில் இருந்து போகும் பலர். தங்க நகைகளை அடுக்கிக் கொண்டு போவதும், கடன் வாங்கியாவது அங்குள்ளவர்களுக்கு விலையுயர்ந்த பொருட்களை வாங்கிச் செல்வதும், போன இடத்தில்  சாதாரணமாகத் திரியாது எதோ வாகனத்துடனும் ஏசியிலும் பிறந்தவர்கள் போல் வான் வாடகைக்குப் பிடித்துக்கொண்டு ஊர் சுற்றுவது,  அங்கு சென்றும் காசை உறவினர்களுக்கு கொட்டி இறைத்துத் தான் பெரிய காசுக்காரன் என அங்குள்ளவர்களை நம்பவைத்து போன்ற கோமாளித்தனங்களையும் செய்வதால் வெளிநாடு என்றால் பணம் கொழிக்கும் இடம் தான் என்னும் அசைக்கமுடியாத நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. 

விடுமுறையில் சென்று இப்படி செய்பவர்கள் மீண்டும் வெளிநாடு வந்து தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகளில் அந்தக் கடனை அடைத்து முடிப்பது வேறு கதை. 

இவை எல்லாம் தெரியாத புலத்துப் பெற்றோரும் பெண்களும் கூட வெளிநாடு சென்றால் மகிழ்வாக வாழலாம் என எண்ணியபடி வெளிநாட்டு மாப்பிளைக்காகக் காத்திருக்கின்றனர். மாப்பிள்ளைக்கு பத்து பதினைந்து வயது கூடினால் என்ன, படிப்பறிவு இல்லை என்றால் என்ன, முதலில் ஒரு திருமணம் செய்து மண விலக்குப் பெற்றவர் என்றால் என்ன, வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் சரி என்னும் மனநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அங்கு சென்று திருமண வாழ்வு சரிவரவில்லை என்றால் விவாகரத்துப் பெற்று வேறு யாரையும் மணமுடித்து வாழலாம் என்றும் பலர் தீர்மானமாக இருக்கின்றனர். இங்குள்ள சட்டங்களும், அரசஉதவிகள் பற்றிய செய்திகள் மட்டுமல்ல இந்தக் கடையில் இந்தஉடை இன்ன விலையில் வாங்கலாம் என்பதுவரை அங்குள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.  

நாம்  இங்கு விலை உயர்ந்த ஆடைகள் எமது பணத்தில் வாங்குவதற்கு பலமுறை யோசனை செய்வோம். அங்குள்ளவர்கள் எந்த விதக கூச்சமோ யோசனையோ இன்றி “என் பிள்ளை விலை குறைந்த சேர்ட் எல்லாம் போடமாட்டான். ஆனபடியால் நல்லதா, பெயருள்ளதாக வாங்கி வாருங்கள்” என்று கூறுமளவு புலத்து மக்கள் தெளிவாக உள்ளனர். 

இன்றும்கூட அங்கு வாழும் எம் உறவுகளுக்குப் பணத் தேவைகள் முடிந்தபாடில்லை. பெற்ற தாயே பிள்ளை எக்கேடு கேட்டுப் போனால் என்ன. எப்படியாவது பணம் அனுப்பினால் போதும் என்னும் மனநிலையில் உள்ள கேவலத்தை எங்குபோய்க் கூறி அழுவது ???

எத்தனை ஊடகங்களில் இவைபற்றிய செய்திகள் வந்தாலும்  அவைபற்றிக் கவலை கொள்ளாது பதின்நான்கு மணி நேரம் ஒருநாளில வேலைசெய்து  இரவுநேர உணவு மட்டும் உண்டு, உடல் வலியோடு மனவலியும் சேர்ந்தாலும் நான் அனுபவிக்கவில்லை, என் தம்பி அனுபவிக்கட்டும் என்று பணம் அனுப்பும் அண்ணன்கள் பலர் கண்முன்னால் இருக்கின்றனர். அந்த அண்ணன் ஒரு மாதம் தாயகத்தில் போய் நின்றால்  எப்ப திரும்பப் போகிறாய் அண்ணா என்பதுதான் முதற் கேள்வியாக இருக்கும். 

சரி அதை விடுங்கள் வெளிநாடுகளில் இருந்து நாம் சென்றால் எம்மைச் சக மனிதராக நினைத்துப் பார்க்காது எதிரிகளை பார்ப்பதுபோன்று ஒரு எள்ளலுடனும், வன்மத்துடனும்  பலர் பார்ப்பதை அவதானித்துள்ளேன். நாம் எப்போதும் அப்படி ஒரு மனநிலையுடன் எம் உறவுகளை பார்த்தோமா? எதனால் அவர்களிடம் இப்படியான ஒரு மனநிலை வளரவேண்டும்? நாங்கள் நாட்டை விட்டு ஓடிப்போனோம் என்றா? சரி ஓடிப்போனது தவறுதான் இல்லை என்று கூறவில்லை. அது பெரிய குற்றமா என்ன? 

சரி குற்றம்தான் என்று நீங்கள் கூறினால் எதற்காக நாம் அனுப்பும் பணத்தில் வாழ்க்கையை நடத்துகிறீர்கள், வீடுவாசல் கட்டுகிறீர்கள், படிக்கிறீர்கள், குடிக்கிறீர்கள், வாகனம் வாங்கி ஓடுகிறீர்கள்? உங்களிடமிருந்து எமக்கு எதுவும் வேண்டாம் என்று அப்போதே எம்மை ஒதுக்கியிருக்கலாமே? உங்களிடம் நாம் உரிமையையும் அன்பையும் மட்டும்தானே எதிர்பார்த்தோம்!

போர் முடிந்த பின் எத்தனை ஆசை ஆசையாக எம் நாடு என்று ஓடி வந்த எமக்கு கிடைத்தது பெரிய ஏமாற்றமும் தோல்வியும் தான். பலர் இனி அங்கு போய் இருக்கலாம் என எண்ணியவர்கள்  எல்லாம் கூட உறவுகளின், தமிழ் சமூகத்தின் நிலை கண்டு நாம் இங்கேயே இருந்துவிடுவது மேல் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர். இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் அல்லது இருபது ஆண்டுகளின் பின்னர் யார் தாய்நாட்டைத் தேடி ஓடப்போகின்றனர்? அதன் பின்னான உறவுகள் தொடர முடியாத நிலையை உண்டுபண்ணிவிட்டீர்களே! 

எம் காலத்தில் ஈழம் கிடைக்கும் என்றும், எம் நாட்டில் நாம் நின்மதியாக வாழலாம் என்னும் நினைப்பில் இடி வீழ்ந்து அந்தக் காயம் ஆற முன்பே  உறவுகளின் அலட்சியமும், பாராமுகமும் புலத்து, புலம்பெயர்  மக்கள் பலரிடையே ஒரு பெரிய இடைவெளியைத் தோற்றுவித்துவிட்டது. அதை எவராலும் நிவர்த்திசெய்யவே முடியாது. சில நல்ல உறவுகளால் ஒரு நூலிழை ஒன்று ஒட்டியபடி இருக்குமே தவிர மற்றப்படி இருவேறு இனங்களாக நாம் மாறிக்கொண்டிருப்பதை இல்லை என்று யாராலும் கூற முடியாது.

நாம் எத்தனை இடர்கள் சுமந்து இங்கு வாழ்ந்தாலும்  நாம் நின்மதியாக உயிர்ப்பு பயமின்றி வாழ்வதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். எமது பிள்ளைகள் பெரும்பாலானோர் கல்வியில் பலபடிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதும் நாம் புலம் பெயர்ந்ததனால்த்தான். சரியாக வாழ்த்தெரிந்தவர்கள் பலரும் நன்றாக வாழ்ந்துகொண்டிருப்பதும்  புலம்பெயர்ந்ததனால்த்தான். ஆனாலும் எம் குழந்தைகள், எம் கலாசாரம் பண்பாடு மறந்து, வேற்று இனத்தவரை மணந்து, மேற்கத்தேய நாகரிகத்துள் மூழ்கி பெற்றவர்களுடன் கூட அந்நியோன்யத்துடன் வாழமுடியாத ஓர் சந்ததியாக மாறிக்கொண்டிருப்பது கண்கூடு. 

நாம் எமக்கு அடுத்த தலைமுறையை மட்டும் எதோ ஒருவிதத்தில் எம்மோடு பிடிதது வைததிருக்க முடியும். ஆனால் அடுத்த தலைமுறை  தமிழ் தெரிந்த, எம் கலாச்சாரம் தெரிந்த சமூகமாக  இருக்கும் என்று அடித்துக் கூற முடியுமா? எம் பிள்ளைகளின் தலைமுறையுடன் எம் உறவுகளும் முடிந்துபோய் புலத்துத் தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்குமான ஒரு தொடர்பு முற்றிலும் இல்லாதுபோகப் போகிறது. எம்மொழியும் இல்லாது அதனுடனான தொடர்பாடாலுமற்று எம்மினம் இடம்பெயர்ந்து வந்த ஓர் கலப்பினமாகப்  புலம்பெயர் தேசங்களில் வாழப்போகிறது. அடுத்த தலைமுறை தாண்டி புலம்பெயர்ந்து வாழும் உறவுகளே தம் உறவுகளைத் தொலைத்து முகம் தெரியாது வாழப்போவதை நாம் எப்படியேனும் தடுக்க முடியாதா?

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%

நிவேதா உதயராஜன்-பெரிய பிரித்தானியா 

 

http://www.naduweb.net/?p=8791

 

 

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரப்பா...பிள்ளை?

எங்கேயோ பார்த்துப் பழகின முகம் போல கிடக்குது?😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரை ஒரு மறைத்தன்மையான புலம்பல் போல இருப்பதால் இதைச் சொல்கிறேன். ஆரம்ப காலத்திலேயே வந்து குடியேறி தமிழில் அதிகம் பேசாமல் இருப்போர் பற்றிய அபிப்பிராயம் தவறு என்று நினைக்கிறேன். இன்று தாயகத்தில் விளம்பரம் இல்லாமல் செய்யப் படும் பல உதவித் திட்டங்களை இந்த தமிழ் பேசாத தமிழர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் செய்கிறார்கள். இவர்களில் பலர் முகனூலில் விளம்பரம் செய்யாமல் தாங்களே செய்து கொண்டிருப்பதால் வெளித்தோற்றத்தில் செயலைத் தேடும் எங்களுக்கு இவை தெரிவதில்லை!

வாழும் நாடுகளின் கலாச்சாரத்தில் கலப்பதும் பெரிய குறையாகக் காட்டப் படுகிறது. இது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேறான நிலையோ தெரியவில்லை. ஆனால், இங்கேயே வாழப் போகும் பிள்ளைகளை தமிழரின் கலாச்சாரத்தையும் வாழும் நாடுகளின் நடைமுறையையும் கடைப் பிடிக்க வலியுறுத்தினால், அவர்கள் ஒன்று ரெண்டும் கெட்டானாகிப் போவார்கள் அல்லது தமிழ்க் கலாச்சாரத்தைத் துறப்பார்கள்! இந்தக் கலாச்சார அறிவூட்டலை case by case ஆகத் தான் செய்ய வேண்டும். என் பிள்ளையில் பயன் தரும் அணுகு முறை இன்னொரு தமிழ்க் குழந்தையிடம் வேலை செய்யாது. 

ஆனால் தமிழ் மொழியைப் படிப்பிக்க வேண்டும், மாற்றுக் கருத்துக் கிடையாது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் பிறந்து வளர்ந்த எங்களுக்கே ஊரில் சில வாரங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. புலம்பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்பவர்கள் எப்படி தாயகக் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கமுடியும்?

தமிழ் மொழி தெரிந்திருந்தாலும் தாயகத்தில் உள்ளவர்களுடன் ஒன்றி உறவாடுவது குறைந்துகொண்டுதான் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி கட்டுரை எழுதின ஆழும். இன்று வெளிநாட்டில் வசிக்கும் எத்தனை பேர் நாட்டுக்கு வந்து உற்றார் உறவுகளை விடுங்க அவர்கள் வேண்டாம் நாம் பிறந்த மண்ணில் வாழலாம் என்று நினைத்து வர இருக்குறீங்கள்??

அண்மையில் ஊருக்கு  வந்தவர்கள் சரியான மழை நுளம்புகள் அதிகம்   சரியாக வெக்கையென்றும் சொல்லிட்டு போனார்கள்  2 கிழமை மாத்திரம் மற்றது இங்க சட்டம் சரியில்லையாம் என்னத்த சொல்ல பல கட்டுரைகள் கவிதைகள் கதைகள் என்று எழுதினாலும் எழுத்து அழகாக இருக்கும் ஆனால் வசிக்க யாரும் தயாராக இல்லை என்பதை நான் தெளிவாக சொல்வேன்

Link to comment
Share on other sites

சின்ன வயதில் ஸ்ரார் டொபியை சுற்றிவரும் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலுமான உறைகளை (Toffee paper) எடுத்து அவற்றை கண்ணில் வைத்து வெளியே உள்ளவற்றை பார்ப்போம். அப்படி பார்க்கும் போது காட்சிகள் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் தெரியும்.

நிவேதாவும் அப்படி தனக்கு பிடித்த, தான் பார்க்க நினைக்கின்ற நிறத்தினால் தாயகத்தையும் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்களையும் பார்க்கின்றார். சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வருகின்ற மாதிரி, அவரின் மனக்கிடங்கில் இருந்து வருவது முழுக்க முழுக்க அவரது இயல்பை ஒத்ததாக இருக்கின்றது.

எதையும் தீர ஆராயாமல் தனக்கு விரும்பிய விதத்தில் உலகை காணும் ஒரு half boil கட்டுரை (இது ஒரு கட்டுரையா என்பது கூட கே(லி)ள்விக்குரியது) இது என்பதை தவிற வேறு ஒன்றும் இல்லை. நிவேதா உதயனிடம் இருந்து இதை விட வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

சின்ன வயதில் ஸ்ரார் டொபியை சுற்றிவரும் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலுமான உறைகளை (Toffee paper) எடுத்து அவற்றை கண்ணில் வைத்து வெளியே உள்ளவற்றை பார்ப்போம். அப்படி பார்க்கும் போது காட்சிகள் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் தெரியும்.

நிவேதாவும் அப்படி தனக்கு பிடித்த, தான் பார்க்க நினைக்கின்ற நிறத்தினால் தாயகத்தையும் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்களையும் பார்க்கின்றார். சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வருகின்ற மாதிரி, அவரின் மனக்கிடங்கில் இருந்து வருவது முழுக்க முழுக்க அவரது இயல்பை ஒத்ததாக இருக்கின்றது.

எதையும் தீர ஆராயாமல் தனக்கு விரும்பிய விதத்தில் உலகை காணும் ஒரு half boil கட்டுரை (இது ஒரு கட்டுரையா என்பது கூட கே(லி)ள்விக்குரியது) இது என்பதை தவிற வேறு ஒன்றும் இல்லை. நிவேதா உதயனிடம் இருந்து இதை விட வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது.

அக்காவை ஒருக்கா கூப்பிட்டு கேட்பம் என்ன நிழலி :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்து வெளி நாட்டுக்கு வந்தவுடன் ஒரு வித தயக்கம் வந்து விடுகிறது....ஊரில் இருப்பவர்களுடனான இணக்கப்பாடு குறைகிறது. இடை வெளி அதிகரிக்கின்றது .வேலை,குடும்ப பொறுப்புகள் இங்கிருப்பவர்கள் அங்கிருப்பவர்களோடு நேரத்தை செல விட முடியாமல் உள்ளது.
அங்கிருப்பவர்களும்,வெளி நாட்டில் இருப்பவர்களை பணம் காய்சி மரமாய்த் தான் நினைக்கிறது ...அங்கிருப்பவர்களுக்கு எப்படித் தான் எடுத்துச் சொன்னாலும் நிலைமை புரியாது...இத்தனைக்கும் அங்கிருப்பவர்கள் எங்களை விட வசதியாக இருக்கிறார்கள்..
இனம் அழிய போகிறது,கலாச்சாரம் கெடுகிறது என்று கவலைப் படுகின்ற எத்தனை பேர் ஊரில் போய் இருக்க போறார்கள்?...  இங்கே இருந்து போய் கெத்துக்😎 காட்டினால் அங்கிருப்பவர்கள் கணக்கெடுக்க மாட்டார்கள் தான்...அங்கே போய் இருக்க விரும்பினால் அமைதியாய் இருங்கள்
 

இங்கே இருந்து கொண்டு எமது இனம் அழிய போகுது,கலாசாரம் கெடுகிறது என்று கவலைப்படுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

ஆரப்பா...பிள்ளை?

எங்கேயோ பார்த்துப் பழகின முகம் போல கிடக்குது?😊

எனக்கும் எங்கேயோ பார்த்ததுபோல் தான் இருக்கு 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கட்டுரை ஒரு மறைத்தன்மையான புலம்பல் போல இருப்பதால் இதைச் சொல்கிறேன். ஆரம்ப காலத்திலேயே வந்து குடியேறி தமிழில் அதிகம் பேசாமல் இருப்போர் பற்றிய அபிப்பிராயம் தவறு என்று நினைக்கிறேன். இன்று தாயகத்தில் விளம்பரம் இல்லாமல் செய்யப் படும் பல உதவித் திட்டங்களை இந்த தமிழ் பேசாத தமிழர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் செய்கிறார்கள். இவர்களில் பலர் முகனூலில் விளம்பரம் செய்யாமல் தாங்களே செய்து கொண்டிருப்பதால் வெளித்தோற்றத்தில் செயலைத் தேடும் எங்களுக்கு இவை தெரிவதில்லை!

வாழும் நாடுகளின் கலாச்சாரத்தில் கலப்பதும் பெரிய குறையாகக் காட்டப் படுகிறது. இது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வேறான நிலையோ தெரியவில்லை. ஆனால், இங்கேயே வாழப் போகும் பிள்ளைகளை தமிழரின் கலாச்சாரத்தையும் வாழும் நாடுகளின் நடைமுறையையும் கடைப் பிடிக்க வலியுறுத்தினால், அவர்கள் ஒன்று ரெண்டும் கெட்டானாகிப் போவார்கள் அல்லது தமிழ்க் கலாச்சாரத்தைத் துறப்பார்கள்! இந்தக் கலாச்சார அறிவூட்டலை case by case ஆகத் தான் செய்ய வேண்டும். என் பிள்ளையில் பயன் தரும் அணுகு முறை இன்னொரு தமிழ்க் குழந்தையிடம் வேலை செய்யாது. 

ஆனால் தமிழ் மொழியைப் படிப்பிக்க வேண்டும், மாற்றுக் கருத்துக் கிடையாது! 

நீங்கள் மேலே கூறியிருப்பதுபோல் ஆரம்பகாலத் தமிழர்கள் நூறுக்கு ஒருவர் உதவுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

வாழும் நாடுகளில் தமிழர்களோ தெரிந்தவரோ யாருமற்ற இடத்தில்  இடத்தில்  வசிப்பவர்கள் வேறு வழியற்று மற்றைய பண்பாட்டு விழுமியங்களைத் தாமதாக்கிக்கொள்வதை தடுக்கவே முடியாது. ஆனால் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் இப்போது அநேகமான ஐரோப்பிய நாடுகளில் செறிந்து வாழ்கின்றனர். பிள்ளைகள் அப்படிப் போவார்கள் இப்படிப் போவார்கள் என்று நாமே ஒரு தீர்மானம் கொள்வதை விட நாம் முதலில் தமிழர்களாக இறுக்கப் பழகிக்கொள்வோமாக இருந்தால் பிள்ளைகள் முற்றுமுழுதாக எம்முடன் கலக்காவிட்டாலும் எம் பண்புகள் பழக்கவழக்கங்களை ஓரளவேனும் தம்முள் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

நாமே முற்றுமுழுதாக அந்நிய மயப்பட்டால் எதுவுமே எமது சந்ததிக்கு கடத்த முடியாது போய்விடும்.  

3 hours ago, நிழலி said:

சின்ன வயதில் ஸ்ரார் டொபியை சுற்றிவரும் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலுமான உறைகளை (Toffee paper) எடுத்து அவற்றை கண்ணில் வைத்து வெளியே உள்ளவற்றை பார்ப்போம். அப்படி பார்க்கும் போது காட்சிகள் சிவப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் தெரியும்.

நிவேதாவும் அப்படி தனக்கு பிடித்த, தான் பார்க்க நினைக்கின்ற நிறத்தினால் தாயகத்தையும் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்றவர்களையும் பார்க்கின்றார். சட்டியில் உள்ளதுதான் அகப்பையில் வருகின்ற மாதிரி, அவரின் மனக்கிடங்கில் இருந்து வருவது முழுக்க முழுக்க அவரது இயல்பை ஒத்ததாக இருக்கின்றது.

எதையும் தீர ஆராயாமல் தனக்கு விரும்பிய விதத்தில் உலகை காணும் ஒரு half boil கட்டுரை (இது ஒரு கட்டுரையா என்பது கூட கே(லி)ள்விக்குரியது) இது என்பதை தவிற வேறு ஒன்றும் இல்லை. நிவேதா உதயனிடம் இருந்து இதை விட வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது.

கருத்துக்கள பொறுப்பாளர் என்று போட்டுக்கொண்டு ஒரு கள  உறவுக்கு பண்பாக கருத்துக்கூட எழுத முடியாத உங்களிடமிருந்து இதைவிட ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது 😀

1 hour ago, ரதி said:

அங்கிருந்து வெளி நாட்டுக்கு வந்தவுடன் ஒரு வித தயக்கம் வந்து விடுகிறது....ஊரில் இருப்பவர்களுடனான இணக்கப்பாடு குறைகிறது. இடை வெளி அதிகரிக்கின்றது .வேலை,குடும்ப பொறுப்புகள் இங்கிருப்பவர்கள் அங்கிருப்பவர்களோடு நேரத்தை செல விட முடியாமல் உள்ளது.
அங்கிருப்பவர்களும்,வெளி நாட்டில் இருப்பவர்களை பணம் காய்சி மரமாய்த் தான் நினைக்கிறது ...அங்கிருப்பவர்களுக்கு எப்படித் தான் எடுத்துச் சொன்னாலும் நிலைமை புரியாது...இத்தனைக்கும் அங்கிருப்பவர்கள் எங்களை விட வசதியாக இருக்கிறார்கள்..
இனம் அழிய போகிறது,கலாச்சாரம் கெடுகிறது என்று கவலைப் படுகின்ற எத்தனை பேர் ஊரில் போய் இருக்க போறார்கள்?...  இங்கே இருந்து போய் கெத்துக்😎 காட்டினால் அங்கிருப்பவர்கள் கணக்கெடுக்க மாட்டார்கள் தான்...அங்கே போய் இருக்க விரும்பினால் அமைதியாய் இருங்கள்
 

இங்கே இருந்து கொண்டு எமது இனம் அழிய போகுது,கலாசாரம் கெடுகிறது என்று கவலைப்படுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை

கட்டுரையை நீங்கள் வடிவாக உள்வாங்கிக்கொள்ளவில்லை ரதி.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சரி கட்டுரை எழுதின ஆழும். இன்று வெளிநாட்டில் வசிக்கும் எத்தனை பேர் நாட்டுக்கு வந்து உற்றார் உறவுகளை விடுங்க அவர்கள் வேண்டாம் நாம் பிறந்த மண்ணில் வாழலாம் என்று நினைத்து வர இருக்குறீங்கள்??

அண்மையில் ஊருக்கு  வந்தவர்கள் சரியான மழை நுளம்புகள் அதிகம்   சரியாக வெக்கையென்றும் சொல்லிட்டு போனார்கள்  2 கிழமை மாத்திரம் மற்றது இங்க சட்டம் சரியில்லையாம் என்னத்த சொல்ல பல கட்டுரைகள் கவிதைகள் கதைகள் என்று எழுதினாலும் எழுத்து அழகாக இருக்கும் ஆனால் வசிக்க யாரும் தயாராக இல்லை என்பதை நான் தெளிவாக சொல்வேன்

ஊரில் வந்து இருக்க நினைப்பவர்கள் பலரின் நிலையையும் ஏக்கத்தையும் தானே இதில் எழுதியுள்ளேன்.

Link to comment
Share on other sites

20 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

கருத்துக்கள பொறுப்பாளர் என்று போட்டுக்கொண்டு ஒரு கள  உறவுக்கு பண்பாக கருத்துக்கூட எழுத முடியாத உங்களிடமிருந்து இதைவிட ஒன்றையும் எதிர்பார்க்க முடியாது 😀

 

இவ் ஆக்கம் யாழ் கள உறவால் யாழில் எழுதிய ஆக்கமும் அல்ல, அவ் உறவால் யாழில் இணைக்கப்பட்ட பதிவும் அல்ல. இன்னொரு இணையத்தில் எழுதப்பட்ட கிருபனால் இணைக்கப்பட்ட பதிவு இது. அத்துடன் இப் பதிவையும் யாழ் களத்தில் எழுத பயன்படுத்தும் உறுப்பினர் பெயரில் அத் தளத்தில் எழுதப்படவும் இல்லை. 

புலப்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் தாயக மக்களையும் வரட்டுத்தனமான பார்வையினூடாக அணுகப்பட்ட ஒரு half boiled பதிவொன்றுக்கான என் கருத்தே அது. அதை எதிர்கொள்ள முடியாமல் ஒரு பொறுப்பாளர் எப்படி இப்படி எழுத முடியும் என நமுத்துப் போன கேள்வியை மட்டுமே உங்களால் கேட்க முடிகின்றது. அத்துடன் என் பதிலில் பண்பற்ற வார்த்தை பிரயோகம் எங்கிருக்கின்றது எனக் குறிப்பிட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஊரில் வந்து இருக்க நினைப்பவர்கள் பலரின் நிலையையும் ஏக்கத்தையும் தானே இதில் எழுதியுள்ளேன்.

  நானும் அதைத்தான் கூற வருவது  இங்கே வாழ விரும்பமாட்டார்கள் போன தேசத்தில் தஞ்சம் அடைந்து அதற்கு இசைவாக்கம் அடைந்த ஆட்களை ஆட்களுக்கு எந்த கட்டுரை எழுதினாலும் ஒன்றும் மாறப்போவதில்லையே அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பு சப்பில்லாத ஒரு கட்டுரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதாசிரியர்! புலம்பெயர் மக்களின் அனைத்து விடயங்களையும் ஒரு கட்டுரையில் அடக்க முயற்சித்திருக்கின்றார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

உப்பு சப்பில்லாத ஒரு கட்டுரை

எதுவித காரணங்களும் இல்லாத இந்தக் கருத்து கட்டுரையை எழுதியவரையும், அதை மெனக்கெட்டு வாசித்து யாழில் ஒட்டிய என்னையும் அவமதிக்கும் கருத்து.☹️ ஏன் உப்புச்சப்பில்லை என்று கூறமுடியுமா கொழும்பான்?😯

Link to comment
Share on other sites

On 12/22/2018 at 3:49 PM, கிருபன் said:

நாம் எமக்கு அடுத்த தலைமுறையை மட்டும் எதோ ஒருவிதத்தில் எம்மோடு பிடிதது வைததிருக்க முடியும். ஆனால் அடுத்த தலைமுறை  தமிழ் தெரிந்த, எம் கலாச்சாரம் தெரிந்த சமூகமாக  இருக்கும் என்று அடித்துக் கூற முடியுமா? எம் பிள்ளைகளின் தலைமுறையுடன் எம் உறவுகளும் முடிந்துபோய் புலத்துத் தமிழருக்கும் புலம்பெயர் தமிழருக்குமான ஒரு தொடர்பு முற்றிலும் இல்லாதுபோகப் போகிறது. எம்மொழியும் இல்லாது அதனுடனான தொடர்பாடாலுமற்று எம்மினம் இடம்பெயர்ந்து வந்த ஓர் கலப்பினமாகப்  புலம்பெயர் தேசங்களில் வாழப்போகிறது. அடுத்த தலைமுறை தாண்டி புலம்பெயர்ந்து வாழும் உறவுகளே தம் உறவுகளைத் தொலைத்து முகம் தெரியாது வாழப்போவதை நாம் எப்படியேனும் தடுக்க முடியாதா?

 

On 12/22/2018 at 3:49 PM, கிருபன் said:

வேற்று இனத்தவரை மணந்து, மேற்கத்தேய நாகரிகத்துள் மூழ்கி பெற்றவர்களுடன் கூட அந்நியோன்யத்துடன் வாழமுடியாத ஓர் சந்ததியாக மாறிக்கொண்டிருப்பது கண்கூடு. 

 

புலம்பெயர்ந்த மக்கள் பலருக்குள்ள நியாயமான பயஉணர்வை வெளிப்படுத்தியுள்ளது இந்த ஆக்கம். அடுத்தடுத்த தலைமுறைகள் கலப்பினமாக மாறுவது தவிர்க்கமுடியாத நிகழ்வுப்போக்கு. உலகமயமாக்கலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தனித்துவங்களை வேகமாக சிதைக்கின்றது. இவற்றில் பல நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றது. எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டதே என்பதை இயல்பாக ஏற்பதுதான் ஆரோக்கியமானது. 

அந்நியோன்யமான உறவு, தனித்துவமான கலாச்சாரம் பண்பாடு எல்லாம் புலம்பெயர் தேசத்தில் மட்டுமில்லை ஊரில் கூட கேள்விக்குரியதே. இங்கு நிற வேற்றுமை என்றால் அங்கு சாதியம் என்ற கசப்புகள் உட்பட ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றது. இதனால் எங்கும் நாம் தனித்தனித் தீவுகள் தான். அடுத்தடுத்த தலைமுறைகளால் இந்த நிலமை கூட மாற வாய்ப்பிருக்கின்றது. புலம்பெயர் அடுத்தடுத்த தலைமுறைகளால் பல நல்ல மாற்றங்களும் அடிப்படையில் எமது இனத்திற்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

எமது மனமும் தளமும் அடிப்படையில் பரந்துபட்டதாக மாறுவது புதிய தலமுறைகளுக்கு நல்லது. ஈழத்தமிழர் இப்போது கனடா தமிழர் இங்கிலாந்து தமிழர் என்று பல பிரிவுகளாக விரிவடைகின்றார்கள்.. பிரெஞ்சு டொச்சு ஜெர்மன் என்று பல அடயாளப் பின்புலங்களோடு இணைகின்றார்கள். தாய்த்தமிழகம் உட்பட உலகின் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரு பொது தன்மைக்குள் வருவதும் உறவுகள் ஏற்படுவதும் இந்த ஆக்கம் வெளிப்படுத்தும் எதிர்கால தலமுறைகள் குறித்த ஐயத்திற்கு தீர்வாக அமையலாம்.  உலகின் தற்போதைய நகர்வோடு எமது இனம் இவ்வாறுதான் ஒத்திசைந்து போவது ஆரோக்கியமாக அமையும் அதற்கு எதிர்த்திசையில் தலமுறைகளை எமது கைக்குள் வைத்துக்கொள்வதும் தனித்துவங்கள் என்ற பேர்வையில் குறுகிய வட்டத்துக்குள் மேலும் மேலும் செல்வதும் அதையே சிறந்தது என்று எண்ணுவதும் தற்போதைய உலகப்போக்கிற்கு எதிர்த்திசையில் செல்வதாக அமையும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

எதுவித காரணங்களும் இல்லாத இந்தக் கருத்து கட்டுரையை எழுதியவரையும், அதை மெனக்கெட்டு வாசித்து யாழில் ஒட்டிய என்னையும் அவமதிக்கும் கருத்து.☹️ ஏன் உப்புச்சப்பில்லை என்று கூறமுடியுமா கொழும்பான்?😯

ஐயோ கிருபன்! நீங்கள் இணைத்ததை குறை கூறவில்லை. அவமதிக்கவில்லை ஐயா. சாதரணமாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவரின் வழமையான அங்கலாய்ப்புகள்தான் இவை. இது தனிநபர் ஒருவரின் அவதானிப்புகள் அன்றி வேறொன்றுமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 4:33 PM, colomban said:

உப்பு சப்பில்லாத ஒரு கட்டுரை

 

7 hours ago, colomban said:

ஐயோ கிருபன்! நீங்கள் இணைத்ததை குறை கூறவில்லை. அவமதிக்கவில்லை ஐயா. சாதரணமாக வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் ஒருவரின் வழமையான அங்கலாய்ப்புகள்தான் இவை. இது தனிநபர் ஒருவரின் அவதானிப்புகள் அன்றி வேறொன்றுமில்லை. 

:101_point_up: என்னையா உப்பு சப்பில்லாத கட்டுரை என்று சொல்லிப்போட்டு பல்றி அடிக்கிற நீர் ( அப்பாடா):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/24/2018 at 11:03 AM, colomban said:

உப்பு சப்பில்லாத ஒரு கட்டுரை

எல்லோரும் எல்லாவற்றையும் சரியானபடி விளங்கிக்கொள்வதில்லையே.அதனால் உங்கள் கருத்தைத் துணிந்து கூறியமைக்கு நன்றி கொழும்பான்.

On 12/24/2018 at 7:53 PM, குமாரசாமி said:

கதாசிரியர்! புலம்பெயர் மக்களின் அனைத்து விடயங்களையும் ஒரு கட்டுரையில் அடக்க முயற்சித்திருக்கின்றார். 

உண்மைதான் 😀

17 hours ago, சண்டமாருதன் said:

புலம்பெயர்ந்த மக்கள் பலருக்குள்ள நியாயமான பயஉணர்வை வெளிப்படுத்தியுள்ளது இந்த ஆக்கம். அடுத்தடுத்த தலைமுறைகள் கலப்பினமாக மாறுவது தவிர்க்கமுடியாத நிகழ்வுப்போக்கு. உலகமயமாக்கலும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தனித்துவங்களை வேகமாக சிதைக்கின்றது. இவற்றில் பல நன்மைகளும் தீமைகளும் இருக்கின்றது. எல்லாம் மாற்றத்துக்கு உட்பட்டதே என்பதை இயல்பாக ஏற்பதுதான் ஆரோக்கியமானது. 

அந்நியோன்யமான உறவு, தனித்துவமான கலாச்சாரம் பண்பாடு எல்லாம் புலம்பெயர் தேசத்தில் மட்டுமில்லை ஊரில் கூட கேள்விக்குரியதே. இங்கு நிற வேற்றுமை என்றால் அங்கு சாதியம் என்ற கசப்புகள் உட்பட ஏராளமான பிரச்சனைகள் இருக்கின்றது. இதனால் எங்கும் நாம் தனித்தனித் தீவுகள் தான். அடுத்தடுத்த தலைமுறைகளால் இந்த நிலமை கூட மாற வாய்ப்பிருக்கின்றது. புலம்பெயர் அடுத்தடுத்த தலைமுறைகளால் பல நல்ல மாற்றங்களும் அடிப்படையில் எமது இனத்திற்கு ஏற்படும் வாய்ப்புள்ளது. 

எமது மனமும் தளமும் அடிப்படையில் பரந்துபட்டதாக மாறுவது புதிய தலமுறைகளுக்கு நல்லது. ஈழத்தமிழர் இப்போது கனடா தமிழர் இங்கிலாந்து தமிழர் என்று பல பிரிவுகளாக விரிவடைகின்றார்கள்.. பிரெஞ்சு டொச்சு ஜெர்மன் என்று பல அடயாளப் பின்புலங்களோடு இணைகின்றார்கள். தாய்த்தமிழகம் உட்பட உலகின் உள்ள அனைத்து தமிழர்களும் ஒரு பொது தன்மைக்குள் வருவதும் உறவுகள் ஏற்படுவதும் இந்த ஆக்கம் வெளிப்படுத்தும் எதிர்கால தலமுறைகள் குறித்த ஐயத்திற்கு தீர்வாக அமையலாம்.  உலகின் தற்போதைய நகர்வோடு எமது இனம் இவ்வாறுதான் ஒத்திசைந்து போவது ஆரோக்கியமாக அமையும் அதற்கு எதிர்த்திசையில் தலமுறைகளை எமது கைக்குள் வைத்துக்கொள்வதும் தனித்துவங்கள் என்ற பேர்வையில் குறுகிய வட்டத்துக்குள் மேலும் மேலும் செல்வதும் அதையே சிறந்தது என்று எண்ணுவதும் தற்போதைய உலகப்போக்கிற்கு எதிர்த்திசையில் செல்வதாக அமையும். 

என் கட்டுரையை சரியாக விளங்கிக் கொண்டமைக்கு நன்றி சண்டமாருதன்.

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

:101_point_up: என்னையா உப்பு சப்பில்லாத கட்டுரை என்று சொல்லிப்போட்டு பல்றி அடிக்கிற நீர் ( அப்பாடா):)

அவருக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, stalin said:

 

இணைப்பிற்கு நன்றிகள்.. 

எம்மவர்கள் அன்றாட உரையாடல் இயல்பையே மேடைப்பேச்சுத்தமிழாகவும் பாவிப்பதால் விவாதம் போல் இந்நிகழ்வை உணரமுடியவில்லை ஒரு நடுவரைவைத்து இரு தரப்பு உரையாடுவதுபோல் இருக்கின்றது. இருந்தும் நல்ல முயற்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/23/2018 at 2:47 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் மேலே கூறியிருப்பதுபோல் ஆரம்பகாலத் தமிழர்கள் நூறுக்கு ஒருவர் உதவுகிறாரா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

வாழும் நாடுகளில் தமிழர்களோ தெரிந்தவரோ யாருமற்ற இடத்தில்  இடத்தில்  வசிப்பவர்கள் வேறு வழியற்று மற்றைய பண்பாட்டு விழுமியங்களைத் தாமதாக்கிக்கொள்வதை தடுக்கவே முடியாது. ஆனால் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் இப்போது அநேகமான ஐரோப்பிய நாடுகளில் செறிந்து வாழ்கின்றனர். பிள்ளைகள் அப்படிப் போவார்கள் இப்படிப் போவார்கள் என்று நாமே ஒரு தீர்மானம் கொள்வதை விட நாம் முதலில் தமிழர்களாக இறுக்கப் பழகிக்கொள்வோமாக இருந்தால் பிள்ளைகள் முற்றுமுழுதாக எம்முடன் கலக்காவிட்டாலும் எம் பண்புகள் பழக்கவழக்கங்களை ஓரளவேனும் தம்முள் உள்வாங்கிக்கொள்ள முடியும்.

நாமே முற்றுமுழுதாக அந்நிய மயப்பட்டால் எதுவுமே எமது சந்ததிக்கு கடத்த முடியாது போய்விடும்.  

 

முதலில் நீங்கள் தமிழர் எனப்படும் இனத்தினரிடம் எதிர் பார்க்கும் பண்புகள் விழுமியங்கள் எவை என வரையறை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரை, கல்வியில் ஆர்வம் என்பதைத் தவிர தமிழர்களின் பண்புகளாகக் கொள்ளப் படும் பல விடயங்கள் பிற்போக்கானவை. உதாரணமாக, எவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு,  மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது தமிழரின் பண்பு - இது களையப் பட வேண்டிய ஒரு பண்பு. என்னைப் பொறுத்த வரை, சுதந்திரமாக இருக்கவே புலம் பெயர்ந்த இடத்தில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஒரு இனக் கலாச்சாரத்தைக் காக்கும் நோக்கில் வாழ இஷ்டமில்லை! 

Link to comment
Share on other sites

20 hours ago, Justin said:

முதலில் நீங்கள் தமிழர் எனப்படும் இனத்தினரிடம் எதிர் பார்க்கும் பண்புகள் விழுமியங்கள் எவை என வரையறை செய்ய வேண்டும். என்னைப் பொறுத்த வரை, கல்வியில் ஆர்வம் என்பதைத் தவிர தமிழர்களின் பண்புகளாகக் கொள்ளப் படும் பல விடயங்கள் பிற்போக்கானவை. உதாரணமாக, எவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வகுத்துக் கொண்டு,  மற்றவர்களுக்குப் பாடம் எடுப்பது தமிழரின் பண்பு - இது களையப் பட வேண்டிய ஒரு பண்பு. என்னைப் பொறுத்த வரை, சுதந்திரமாக இருக்கவே புலம் பெயர்ந்த இடத்தில் நிரந்தரமாக வாழ ஆரம்பித்தேன். மிச்சமிருக்கும் வாழ்க்கையை ஒரு இனக் கலாச்சாரத்தைக் காக்கும் நோக்கில் வாழ இஷ்டமில்லை! 

மிகச்சரியான பார்வை. எம்மிடையே கடைப்பிடிக்கப் படும் மிக பிற்போக்கான பழக்கங்களை எம்து பிள்ளைகளுக்கும் பழக்குவது எந்த வித்த்தில் நியாயம். அறிவுக்கு சற்றும் பொருந்தாகத விடயங்களை எமது கலாச்சாரம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது ஒருவகை காட்டுமிராண்டித்தனம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதுபவர்கள்,வேறு இடத்து எழுதும் போது விரும்பினால் அதை தாங்களே யாழில் வந்து இணைப்பார்கள் தானே!...கிருபனுக்கு ஏன் வேண்டாத வேலை😟

On ‎12‎/‎24‎/‎2018 at 9:05 PM, கிருபன் said:

எதுவித காரணங்களும் இல்லாத இந்தக் கருத்து கட்டுரையை எழுதியவரையும், அதை மெனக்கெட்டு வாசித்து யாழில் ஒட்டிய என்னையும் அவமதிக்கும் கருத்து.☹️ ஏன் உப்புச்சப்பில்லை என்று கூறமுடியுமா கொழும்பான்?😯

கிட்டதட்ட கொழும்பான் சொன்னதைத் தான் நிழலியும் சொல்லி இருக்கிறார்...அவரிடம் எதுவும் கேட் கவில்லை 😢 

On ‎12‎/‎23‎/‎2018 at 7:47 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

 

கட்டுரையை நீங்கள் வடிவாக உள்வாங்கிக்கொள்ளவில்லை ரதி.

 

இன்னும் வடிவாய் வாசிக்கவில்லை 

Link to comment
Share on other sites

கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகின்றது. ஆனால் இது எல்லா புலம் பெயர் சமூகங்களும் எதிர்கொள்வதே. 

இழப்பதுடன் புதிதாக பெறுபவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பின் நாம் பெரிதாக கவலை கொள்ளவேண்டிய அவசிமில்லை. 

காலத்திற்கொவ்வாத கலாச்சராம் (பண்பாடு) வழக்கொழிந்து போவது நன்மைக்கே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.