Jump to content

இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தைக் கலக்கும் ஈழ அகதிகளின் இசை!


 

நம் காதுகளின் ஜவ்வுகளைக் கிழிக்காமல், பாடல் வரிகளைக் கடித்துக் குதறாமல், ஆங்காங்கே ஆங்கில வரிகளை இட்டு நிரப்பாமல்ராப் இசையைத் தர முடியுமா? ‘முடியும்’ என்று கண் சிமிட்டுகின்றனர் ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ மியூசிக் குழுவினர். கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழர்களான பரத், கீர்த்தனன், நவீனி ஆகிய மூவர்தான் இக்குழுவின் தூண்கள். தெளிவான தமிழ் வார்த்தைகளைக் கோர்த்து, ராப் இசையைக் கலந்து, நாட்டுப்புற ஸ்டைலில் பாடுவது இக்குழுவின் ஸ்பெஷல். 
26.jpg
இதமான மென்னுணர்வுகளால் ராப் இசையை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது ‘ஆல் மிக்ஸ்ட் அப்’. இதன் இசையும் பாடல்
களும் ஆயிரக்கணக்கான இளசுகளின் ஃபேவரிட் லிஸ்ட்டில் வரிசை கட்டி நிற்கின்றன. யூடியூப்பில் லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கின்றன.முப்பது வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த ஈழப் போர் ஆயிரக்கணக்கான குடும்பங்களை இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேற்றியது. அதில் பல குடும்பங்களை அரவணைத்து அடைக்கலம் கொடுத்தது கனடா. அதில் ஒன்றுதான் பரத்தின் இசைக் குடும்பம். 
26a.jpg

கனடாவில் அகதியாக வாழ்க்கையைத் தொடங்கியபோது பரத்தின் வயது 13. இலங்கையை விட்டாலும் இசையை அவரின் குடும்பத்தினரால் விடமுடியவில்லை. அண்ணன் ராக்கி ஜெயம் இசை தொடர்பான தொழிலில் இறங்க, தம்பி பரத்திற்கு ராப் இசையின் மீது தீராத காதல். 

 

உடைந்துபோன தேசத்திலிருந்து வந்த பரத்துக்கு உடைந்துபோன வார்த்தைகளால் உலகையும் உணர்வுகளையும் படம் பிடித்துக் காண்பிக்கும் ராப் இசையின் மீது காதல் மலர்ந்தது இயல்புதானே!
பரத் இசை உலகில் வளர்ந்துகொண்டிருந்தபோது அவரின் உறவினரான கீர்த்தனனும் ஈழத்து அகதியாக கனடாவில் குடியேறினார். கீர்த்தனனின் தந்தை இலங்கையில்  பாடகராக இருந்தவர். தாய் பரதநாட்டிய ஆசிரியை. ஆனால், கீர்த்தனனின் ஆர்வமோ மிருதங்கத்தில்.அகதி வாழ்க்கையின் கொடுமை இளைஞர்களான பரத்தையும், கீர்த்தனனையும் படாத பாடு படுத்தியது. 

இன்னொரு பக்கம் கையில் காசில்லாமல், வேலையில்லாமல், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த அவர்களை வறுமை துரத்தியது. அத்துடன் அவர்கள் வாழந்த பகுதியில் எந்நேரமும் வன்முறை, அமைதியற்ற சூழல். 

இக்கட்டான இந்நிலையிலிருந்து விடுபட இசையிடம் தங்களை ஒப்படைத்தனர். பின்னாளில் இசையே அவர்களுக்குப் பாதுகாப்பு வளையமாக, வாழ்வாதாரமாக மாறிப்போனது.இந்தச் சமயத்தில்தான் நவீனியை ஒரு விருந்தில் இருவரும் சந்திக்கிறார்கள். நவீனி அடிப்படையில் நன்றாகப் பாடக்கூடியவர்; கித்தார் பிளேயர். அத்துடன் அவர் ஈழத்துப் பெண்ணும் கூட. அவரின் தந்தை ஒரு கித்தார் பிளேயர். தாய் ஈழத்தில் வானொலி அறிவிப்பாளாராக இருந்தவர். 
 

ஆக, இரண்டு ஆண்களுடன் ஒரு  பெண் இணைய ‘ஆல் மிக்ஸ்ட் அப்’ உதயமானது. ‘இதுதானா...’, ‘காதலி...’ போன்ற ஆல்பங்கள் யூடியூப்பில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்தது.குறிப்பாக, ‘மாயங்களும் செய்தாய்… காயங்களும் தந்தாய்… கடலில் மீது கல்லைக் கட்டி என்னைத் தூக்கி எறிந்தாய்… 

 

இமைகளும் இதழ்களும் வேறு வேறு பக்கம்… ஆனால், இமைகளை மூடித் திறக்கும்போது நீ வேண்டும் என் பக்கம்...’ என்று ‘காதல்’ ஆல்பத்தில் ஒலிக்கும் நவீனியின் செக்ஸியான குரல் ‘ஆல் மிக்ஸ்ட் ஆப்’பின் ஆல்பங்களை ஆல் டைம் ஹிட்டாக்கிவிட்டது.

‘‘எங்கள் குழுவில் யாருக்குமே திருமணம் ஆகவில்லை. ‘துணை இல்லை... வேலையும் இல்லை...அப்ப என்னதான் பண்றீங்க...’னு எங்களை கேலியாக கேள்விகேட்பவர்களுக்காகவும், குடும்பத்துக்காகவும், சமூகத்துக்காகவும்தான் பாடுகிறோம். எங்கள் பாடல்களையும் அவர்களுக்குத்தான் அர்ப்பணிக்கிறோம்..!’’ என்று சொல்கிறார் பரத்.‘ஆல் மிக்ஸ்ட் அப்’பின் பாடல்களைக் கேட்ட யாருமே இவர்களை ‘என்ன பண்றீங்க...’னு கேட்பதில்லை என்பதில் இருக்கிறது இந்தக் குழுவின் வெற்றி.                           
 

டி.ரஞ்சித்

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14676&id1=4&issue=20181221

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ ஓர்  பொருள் விளம்பரத்துக்கு நடித்த பாடல் போல் இருக்கிறது ( என்ன பொருள் என்று கேட்காதீர்கள்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதோ ஓர்  பொருள் விளம்பரத்துக்கு நடித்த பாடல் போல் இருக்கிறது ( என்ன பொருள் என்று கேட்காதீர்கள்)

பாட்டை ரசிக்கிறதை விட்டிட்டு பொருளைப் பாக்கிறமாதிரி இருக்கு!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

பாட்டை ரசிக்கிறதை விட்டிட்டு பொருளைப் பாக்கிறமாதிரி இருக்கு!🤪

turkey-eating-smiley.gif பார்தேன் ரசித்தேன் :27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கும்,டான்ஸ்சுக்கும் சம்மந்தமே இல்லை...ஒருத்தருக்கும் ஒழுங்கான முக அமைப்பும்  இல்லை...பாடியவர்களது குரல் ஓரளவுக்கு பரவாயில்லை..
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பாட்டுக்கும்,டான்ஸ்சுக்கும் சம்மந்தமே இல்லை...ஒருத்தருக்கும் ஒழுங்கான முக அமைப்பும்  இல்லை...பாடியவர்களது குரல் ஓரளவுக்கு பரவாயில்லை..
 

இதே பாட்டை ஏர் ஆர்ர் ரகுமான் அடிக்க...... ஒரு கிந்தி களிசறை வந்து வெள்ளைத் தொடையை காட்டி ஆட...... அந்த மாதிரி இருக்கெண்டு சொல்லுற சனம் இருக்கிற வரைக்கும்.......நம்மளுக்கு புட்டும்  சம்பலும்தான் தஞ்சம்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இந்த அருளரின் பெட்டை ஆடேக்கிளையும் என்கடையலவையல் இப்படித்தான் சொன்னவை .

அப்ப வந்த ப்ரீ பேப்பரில் முளாசி தள்ளினவை கலாசாரமே செத்துபோட்டுதெண்டு.

ஒரு பேப்பர் அல்ல இப்ப ஒரு பேப்பரும் செத்து திவசமும் செய்து போட்டுனம் போலிருக்கு ரகசியமா  மா அரிக்க தங்கடை பேப்பரை எடுக்கவேண்டாம் என்றவை கும்பலா காணாமல் போயிட்டினம் கொத்தாவின் வெள்ளை வான் லண்டன் பக்கம் வந்த மாதிரி நான் கேள்வி படலை ?

ஆனால் நாணல் புல் போல் இப்பவும் ராஜகோபாலின் புதினம் வருவது அதிசயமே லண்டனில் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இதே பாட்டை ஏர் ஆர்ர் ரகுமான் அடிக்க...... ஒரு கிந்தி களிசறை வந்து வெள்ளைத் தொடையை காட்டி ஆட...... அந்த மாதிரி இருக்கெண்டு சொல்லுற சனம் இருக்கிற வரைக்கும்.......நம்மளுக்கு புட்டும்  சம்பலும்தான் தஞ்சம்...:grin:

ஆரம்பத்தில் தமிழ் நடிகைகளை விட வேற மாநில பெண்கள் நடித்த படங்களை பார்த்து ரசித்து ரசிகர் ஆனவர்களும் இருக்கிறார்கள் மறந்து விட்டீர்களோ சாமி :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

இதே பாட்டை ஏர் ஆர்ர் ரகுமான் அடிக்க...... ஒரு கிந்தி களிசறை வந்து வெள்ளைத் தொடையை காட்டி ஆட...... அந்த மாதிரி இருக்கெண்டு சொல்லுற சனம் இருக்கிற வரைக்கும்.......நம்மளுக்கு புட்டும்  சம்பலும்தான் தஞ்சம்...:grin:

இந்தப் பாட்டுக்கும்,அவர்களது நடனத்திற்கும் சம்மந்தம் இல்லை...அது தான் நான் சொல்ல வந்தது....அரை குறை உடுப்பு அணிவது அவர்களது விருப்பம்...ஆனால் தங்களுக்கு பொருத்தமாய் இருக்குதா என்று பார்த்து உடுக்க வேண்டும்

Link to comment
Share on other sites

நல்லாத்தான் இருக்கு.. இடையில் வெள்ளை சேட் அணிந்தவர் படும் பகுதி மட்டும் ரசனைக்கு ஒட்டுதில்லை மற்றபடி பட்டும் இசையும் அருமை. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆரம்பத்தில் தமிழ் நடிகைகளை விட வேற மாநில பெண்கள் நடித்த படங்களை பார்த்து ரசித்து ரசிகர் ஆனவர்களும் இருக்கிறார்கள் மறந்து விட்டீர்களோ சாமி :unsure:

தமிழ் நடிகைகள் எதிலையும் ஒரு அளவோடை தான் இருப்பினம்..... அதாலைதான்  கிந்திய வடமானிலங்களை கொண்டுவந்து இறக்கீனம்...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தமிழ் நடிகைகள் எதிலையும் ஒரு அளவோடை தான் இருப்பினம்..... அதாலைதான்  கிந்திய வடமானிலங்களை கொண்டுவந்து இறக்கீனம்...

 சில்க் சுமிதா தானே அந்த நாள்  கவர்ச்சிக்கன்னி ரசிகர் தானே அண்ண :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.