Jump to content

கல்முனையின் சுபீட்சம் நோக்கி - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

கல்முனையின் சுபீட்சம் நோக்கி
ETHNIC AND VILLAGE BASED TERRITORIAL PROBLEMS OF KLMUNAI
V.I.S.JAYAPALAN
.
கல்முனை மக்கள் கல்முனைக்குடி சாய்ந்த மருது சக மாளிகைக்காடு மற்றும் கல்முனை தமிழ் என பிழவுபட்டே சிந்திக்கிறார்கள்.அவர்கள் கல்முனைக் கூட்டுக் குடும்பத்தில் இருந்து நல்லுறவோடு சுமூகமாகத் தனிக்குடித்தனம் போகும் தங்கள் விருப்பத்தை சந்தேகத்துக்கு இடமின்றி தொடர்ந்தும் தெளிவுபடுத்தி வருகிறார்கள். இப்பிழவுகள் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மட்டுமன்றி கல்முனைக்குடி சாய்ந்தமருதுஎன முஸ்லிம்களிடையேயும் அரசியல் மோதல்களுக்கும் பிளவுகளுக்கும் காரணமாகி வருகிறது. அடிக்கடி அரசியல் மோதல்களாகவும் உச்சபட்டுகிற இப்பிரச்சினை தொடர்வது கல்முனைக்கு மட்டுமன்றிக் கிழக்கின் எதிர்காலத்துக்கும் நல்ல சகுனமல்ல என்பதை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன். 
*
காலாவதியான கூட்டுக்குடும்பமாக உழலும் கல்முனை எதிர்காலத்தில் நிச்சயம் இரண்டுக்கு மேற்பட்ட அலகுகளாகப் பிரிந்து செல்லும். உறவுகளைச் சீரழித்துவிட்டு கண்ணீரும் இரத்தமுமாக பிரிந்து செல்கிற கூட்டுக் குடும்பம் போல் கல்முனை பிரிந்து சென்றால் அது வரலாற்று அவலமாகும். கல்முனை கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இணக்கமாக தனிக்குடித்தனங்களாகி உறவை பாதுகாத்துக் கொள்வது கல்முனைப் பிரதேச மக்களின் ஒற்றுமைக்கு மட்டுமல்ல கிழக்கு மாகாண ஒற்றுமைக்கும் சுபீட்சத்துக்கும் முக்கியமானதாகும்.
.
இத்தகைய ஒரு அரசியல் மோதல் சூழலில் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் மான்புமிகு H.M.M. ஹாரிஸ் அவர்கள் சம்பந்தப்பட்ட உள்ளூராட்ச்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சரக நியமிக்கபட்டிருப்பது திருப்புமுனை நிகழ்ச்சியாகும். எனினும் அவரது நியமனம் அறிவிக்கபட்ட உடனேயே சாய்ந்த மருது மாளிகைக்காடு சுயேட்ச்சை அணியினர் தங்கள் தனி நகர சபைக் கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். மான்புமிகு ஹாரிஸ் அவர்களது முடிவுகளில் கல்முனையின் எதிர்காலம் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தின் எதிர்காலமும் முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் கூட்டமைப்பு ஐக்கியத்தின் எதிர்காலமும் தங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மேலும் மாண்பு மிகு ஹாரிஸ் அவர்களுக்கு ஊர்வாதத்தால் சிக்கலாகிவரும் கிழக்கு முஸ்லிம்களின் உள் நெருக்கடிகளுக்கு கூட்டுக் குடும்ப மோதலா ஐக்கியமான தனிக்குடித்தனமா தீர்வு என்கிற வரலாற்றுக் கேழ்விக்கும் விடைகானவேண்டிய தார்மீக பொறுபுள்ளது என்பதையும் நினைவு படுத்த விரும்புகிறேன். . 
.
கடந்த காலங்களில் மாண்புமிகு ஹாரிஸ் அவர்கள் சாய்ந்தமருது மாளிகக்காடு மக்களின் தனிக்குடித்தன முன்னெடுப்புகளை முறியடிப்பதில் பாரிய பங்களிப்பைச் செய்துள்ளார் என சுயேட்சைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. இத்தகைய மனநிலையே கல்முனைவாழ் தமிழர் மத்தியிலும் உள்ளது. இத்தகைய சிக்கலான சூழலில் உள்ளூராட்ச்சி மாகாணசபை இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுள்ள மாண்புமிகு ஹாரிஸ் அவர்களின் அரசியல் அணுகுமுறைகள் வென்றாலும் தோற்றாலும் கிழக்கில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையும். அதனால் என்னுடைய பணிவான வேண்டுகோள் மாண்புமிகு ஹாரிஸ் அவர்கள் சுயவிமர்சனத்தோடு புதிய ஜனநாயக வழிமுறைகளை கையாளவேண்டும் என்பதாகும். அவர் மக்கள் மட்ட குறும்பாக கருத்துக் கணிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படவேண்டும். கல்முனைக் குடி மக்கள் தலைவர்களையும் கல்முனை தமிழ்பிரிவு மக்கள் தலைவர்களையும் சாய்ந்தமருது மாளிகக்காடு முஸ்லிம் மக்கள் தலைவர்களையும் அழைத்து திறந்த மனதுடன் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.. கல்முனையில் இனரீதியாக தமிழர்களும் ஊர் ரீதியாக முஸ்லிம்களும் எதிர்நோக்கும் கூட்டுக்குடும்ப நெருக்கடிகளை ஆராய்ந்து கருத்துக் கணிப்புகளை நடத்தி யதார்த்த நிலமைகளை கண்டுகொள்வது அடிப்படையானதாகும். 
.
இது இட ஆழுமை (Territoriality) தொடர்பான இன பிரதேச பிரச்சினையாகும். இடம் தொடர்பான முஸ்லிம்களின் ஊர் அடிப்படை கோரிக்கைகளும் இனம் அடிப்படையிலான தமிழர்களின் இடம்சார் கோரிக்கைகளும் கிழக்கு மாகானம் முழுமைக்கும் பொதுவானதாகும். இது முஸ்லிம்களும் தமிழர்களும் முதன்முதல் சந்திக்கிற பிரச்சினையல்ல என்பதை உணர வேண்டும். அதிஸ்ட்ட வசமாக இனம் சார் இட ஆழுமைப் பிரச்சினையை அக்கரைபற்று ஆலையடி வேம்பு மக்கள் ஆரம்ப நிலையிலேயே தனிக்குடித்தன அடிப்படையில் சுமூகமான தீர்வு கண்டுள்ளனர். அதே போலவே முஸ்லிம் மக்கள் மத்தியில் நிலவும் ஊர் சார் இட ஆழுமை பிரச்சினைக்கும் அக்கரைபற்று சம்மாந்துறை அட்டாளைச் சேனை முஸ்லிம் மக்கள் கடந்த காலங்களில் சுமூகமான தனிக்குடித்தன அடிப்படையிலேயே தீர்வுகண்டுள்ளனர். இந்த நல்லுதாரனத்தை நாம் கருத்தில் கொள்ள தவறக்கூடாது. இனம் ஊர்சார் இட ஆழுமை தொடர்பான கோரிக்கைகள் கோரிக்கைகள் இன்று கல்முனையில் முனைப்புப் பெற்றுள்ளது. இதன் தீர்வு எதிர்காலத்தில் கிழக்கு மாகாண பிரச்சினைகளை தீர்பதற்கான முன் உதாரணமாகவும் அமையும். கல்முனை கூட்டுக்குடும்பம் கண்ணீரும் இரத்தமும் சிந்தாமல் சுமூகமான நட்புறவுள்ள தனிக்குடும்பங்களாக மாறுவதை அங்கீகரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.