Jump to content

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Mavai-Senathirasa-720x450-720x450.png

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கான ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு இலங்கைத் தமிழசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

சுவிஸ் நிறுவனமொன்றின் அனுசரணையுடன் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை முன்நிறுத்தி நாங்கள் செயற்பட்டு வருகின்றோம். சிலர் எமது செயற்பாட்டை பார்த்து ஒரு கட்சி சார்ந்து செயற்படுவதாகக் கூச்சல் இடுகின்றார்கள். ஆனால் நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்பட்டு ஜனாநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம்.

அதேபோன்று, நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காண்போம். சம நேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் பகுதிகளை சீரமைத்தல், பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டடோர் விவகாரம் தொடர்பாகவும் மீண்டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

இத்தகைய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக சர்வேதச சமூகமும் எங்களுடன் நிற்கின்றது” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/இனப்பிரச்சினைக்கு-தீர்வ/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் கூட்டமைப்பின் போராட்டம் ஓயாது!- மாவை

தோழர் , இதை எழுதிய ஆதவன் நியூஸ்காரர்  எப்படியான மனநிலையில் எழுதினார் என்று தெரியவில்லை  ( ! ).. ஆனால் தாங்கள் இதை இணைக்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு தானே இணைத்தீர்கள் .. ? உண்மையை உரைக்குக .. 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த மாளிகை கட்ட அத்திபாரம் போட்டுவிட்டார் ரணில் வாழ்க...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டி கைமாறும் வரை ஓயாது.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

பெட்டி கைமாறும் வரை ஓயாது.....!

இதில் என்ன ஒரு சுவாரசியம் என்றால் மீரா அண்ண எங்க ஊருக்கு எந்த நடவடிக்கை எடுப்பதென்றாலும் இவரை கேட்கணுமாம் அப்ப எதுக்கு நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று செம்புடன் கேட்டன்  சண்டையா போச்சு அம்பாறைக்கு மட்டக்களப்புக்கும் மாவையருக்கும் என்ன சம்பந்தம் இனி மேல் நாங்கள் யாராவது முஸ்லீம் , அல்லது சிங்கள எம் பியோ அல்லது அமைச்சரயோ கூப்பிட்டு ஆலாத்தி எடுப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் என்ன ஒரு சுவாரசியம் என்றால் மீரா அண்ண எங்க ஊருக்கு எந்த நடவடிக்கை எடுப்பதென்றாலும் இவரை கேட்கணுமாம் அப்ப எதுக்கு நாங்கள் உங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று செம்புடன் கேட்டன்  சண்டையா போச்சு அம்பாறைக்கு மட்டக்களப்புக்கும் மாவையருக்கும் என்ன சம்பந்தம் இனி மேல் நாங்கள் யாராவது முஸ்லீம் , அல்லது சிங்கள எம் பியோ அல்லது அமைச்சரயோ கூப்பிட்டு ஆலாத்தி எடுப்போம்

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

புரியவும் மாட்டாது 

Link to comment
Share on other sites

42 minutes ago, MEERA said:

வடக்கு ஆட்களுக்கு கிழக்கின் பிரச்சனைகள் புரியாது..

 

40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

புரியவும் மாட்டாது 

இந்திய இராணுவத்தை இலங்கையைவிட்டுத் துரத்தியபின்பு, கிழக்கை விட்டு வடக்கைமட்டும் உன் விருப்பம்போல் ஆட்சி செய்துகொள் என்று சனாதிபதி பிரேமதாச தலைவர் பிரபாகரனுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வை ஏற்படுத்த முயன்றதாகவும், கிழக்கு மக்களை நிர்கதியாக விடுவதை பிரபாகரன் ஏற்க மறுத்ததால் தீர்வு எட்டவில்லை என்றும் செய்திகள் வந்தன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Paanch said:

 

இந்திய இராணுவத்தை இலங்கையைவிட்டுத் துரத்தியபின்பு, கிழக்கை விட்டு வடக்கைமட்டும் உன் விருப்பம்போல் ஆட்சி செய்துகொள் என்று சனாதிபதி பிரேமதாச தலைவர் பிரபாகரனுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்து தீர்வை ஏற்படுத்த முயன்றதாகவும், கிழக்கு மக்களை நிர்கதியாக விடுவதை பிரபாகரன் ஏற்க மறுத்ததால் தீர்வு எட்டவில்லை என்றும் செய்திகள் வந்தன.  

 

அது தலைவர் பிரபாகரன் அண்ண  கிழக்கில்லாமல் வடக்கு இல்லையென நினைத்தார் அவர் இவர்களோ?? 

Link to comment
Share on other sites

.. கேள்விப்பட்ட அளவில், இல்லை தீர விசாரித்த அளவில் ..

... அன்றைய தளபதியின்(?) வாகன ஓட்டுனர், அதுதான் தகுதி!  .. மற்றையபடி 77 கால/முற்பட்ட தேர்தல்களில், ஊருக்கூர் கையை பிளேடால் கிளித்து இரத்த பொட்டிடும் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் தலைவன்! மாட்டை அவிழ்த்து விட்டு, கண்டோடு செட்டில்! அரசியல், சட்டம், ஆங்கிலம் மணத்துக்கும் இல்லை! 

.. தலைமையை ஏர் என்றால், "எனக்கு சட்டம், ஆங்கிலம் பிரட்சனை, "சு"வே அதற்கு தகுதி! ... சொன்னதற்கான ஓடியோ ஆதாரமும் ..!

... டமிழர்களின் பிரட்சனை இல்லையென்றால் ... தீர்ந்தால் ... எம் கதிரைகள்??????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

எத்தகைய தடைகள் வந்தாலும் அவற்றை முறியடித்து நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோனதிராஜா உறுதியளித்துள்ளார்.

ஈழத்தமிழன் வரலாற்றிலை....... பிள்ளை பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை எண்டு சந்ததி நீண்டுகொண்டே போய்க்கொண்டிருக்கு.......ஆனால் உங்கடை முழக்கமோ நிண்ட இடத்திலையே சுத்திக்கொண்டு நிக்கிது...உங்களைப்போலை அரசியல்வாதிகள் தமிழினத்துக்கு கிடைச்சது ஒருவித சாபம் எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , இதை எழுதிய ஆதவன் நியூஸ்காரர்  எப்படியான மனநிலையில் எழுதினார் என்று தெரியவில்லை  ( ! ).. ஆனால் தாங்கள் இதை இணைக்கும் போது சிரிப்பை கட்டுபடுத்தி கொண்டு தானே இணைத்தீர்கள் .. ? உண்மையை உரைக்குக .. 🤩

மக்களை, எவ்வளவு... முட்டாள்களாக  மாவை சேனாதிராஜா  எடை போட்டுள்ளார் என்ற ஆத்திரம் தான் வந்தது. தோழர்.

Link to comment
Share on other sites

உண்மையை கதைப்போமாயின் .. கூத்தமைப்பில் அரசியல்/சட்டம் தெரிந்தவர்கள் இன்று சம்பந்தரும், சுமந்திரரும் மட்டும்தான்! 

.... அதில் ஒன்றுக்கு சேடம் இழுக்க தொடங்குகிறது, மற்றதை "மீண்டும் புலி முகமூடி போட்டு சிங்கள தேவைக்காக போடப்படுமாயின் ... 

.... மிகுதி இருப்பது என்னையும், மாவையும் போன்ற மாங்காய்களும் தேங்காய்களும்தான்! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.