Jump to content

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறியதாக அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெறுவதாக டிரம்ப் அறிவித்த ஒரே நாளில் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

அதுமட்டுமின்றி, டிரம்பின் பாதுகாப்பு செயலாளரான ஜிம் மாட்டிஸ் இன்று (வியாழக்கிழமை) தனது ராஜினாமா குறித்து அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் திரும்ப பெறப்படுவது குறித்து இன்று செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?படத்தின் காப்புரிமை Getty Images

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெறுவது 'நாசகர' தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், தாலிபான்கள் கொள்கைரீதியாக வெற்றிபெற்றுவதற்கு வித்திடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடும்போக்கு இஸ்லாமிய இயக்கமான தாலிபான், ஆப்கானிஸ்தானின் அரசாகங்கத்தையும், அதன் ராணுவ இலக்குகளையும் குறிவைத்து அடிக்கடி தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்துகிறது.

தாலிபான்கள் 1996-2001 வரையிலான காலக்கட்டத்தில் ஷரியா சட்டத்தின் கொடூரமான வடிவத்தை அமல்படுத்தி ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தனர். அப்போது, பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றுவது, உறுப்புகளை துண்டித்து ஊனமாக்குவது போன்ற செயல்பாடுகளை சர்வசாதாரணமாக மேற்கொண்டனர். பொது வாழ்க்கையில் பெண்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டனர்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் என்ன செய்கிறது?

அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய உயிரிழப்பை ஏற்படுத்திய, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டை கோபுரத்தில் விமானத்தை மோத வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 2,300க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னரே, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் செயல்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலை நடத்தியதாக ஒப்புக்கொண்ட அல்-கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அப்போது ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபான்களிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. அமெரிக்காவின் கட்டளைக்கு அடிபணியாத தாலிபான்களின் ஆட்சியை ஒழித்து கட்டுவதுடன், ஒசாமா பின்லேடனை பிடிப்பதற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் தனது நாட்டு ராணுவத்தை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பினார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அதனைத்தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் போர் நடவடிக்கைகள் 2014ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது.

ஆனால், அந்த அறிவிப்பை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் பலம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்ததால், அந்நாட்டில் அமைதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில் அமெரிக்கப் படைகள் அங்கேயே தொடர்ந்து இருந்து வருகின்றன.

வீண் செலவுகளை ஏற்படுத்துவதால், ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே டொனால்டு டிரம்ப் பலமுறை கூறியுள்ளார்.

இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பினைக் கருதி காலவரையறையின்றி அமெரிக்க ராணுவம் அந்நாட்டில் இருக்கும் என்றும், அத்துடன் கூடுதலாக 3,000 அமெரிக்க ராணுவ வீரர்களை அங்கு அனுப்புவதாகவும் கடந்த ஆண்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

https://www.bbc.com/tamil/global-46648506

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.