Jump to content

என் வாழ்வும் என் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்
.
(கவிதைக்கு முன்னம் இடம்பெறுகிற இந்த முன்னுரையின் சாரம்சம். ``என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. ``)

.
இது என்னுடைய முக்கியமான கவிதைகளில் ஒன்று. என்றும் பதினாறான என் வாழ்வுதான் என் கவிதைகள். பாதி மானுடமாகப் படைக்கப் பட்டு பாதி மனசு பாதி அறிவு பாதி அனுபவமென வாழ்கிற என் ஒத்தைக் கண் ஆண்பால் வாழ்வில் எதை முழுமையாக கற்றுக்கொள்ள முடியும்?
.
ஆனால் பெண்களுக்கு ஒரு அனுகூலமிருக்கு. ஆண்களோடு வாழ்ந்து, ஆண்களைப் பெற்று. ஆன்களைக் கைவிடாமல் வளர்த்து பேணுவதால் ஆண்களின் பாதி உலகை அவர்களால் தரிசிக்க முடியுது.
.
என் வாழ்வில் என் போராட்டங்களில் என் கலைகளில் என் கவிதைகளில் எங்காவது சற்று முழுமையிருந்தால் அது என் தாயிடமிருந்தும் என் பெண்பால் உறவுகளிடமிருந்தும் பின்னர் இன்றுவரை என் வாழ்வின் பாதையில் கண்டு கேட்டுப் பழகிய தோழியரிடமிருந்தும் கற்றுக்கொண்டவையே. 
.
இந்தக் கவிதை மட்டுமன்றி என்னுடைய எல்லாக் கவிதைகளிலும் எனது பெயர் மட்டுமன்றி அன்பளிப்புச் செய்தவர் பெயர் என நான் கண்ட கேட்ட கருதிய பழகி ஆதர்சமான அல்லது வாசித்த சித்தம் அழகியரின் பெயர்களும் பொறிக்கப் பட்டுள்ளன. எல்லாப் புகழுக்கும் உரியர் என, உலகளாவிய என் தோழியரை வாழ்த்திப் பணிகிறேன். 
.

சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவிருந்த காலத்தில் எழுதிய கவிதை. இதனால் இதற்க்கு இன்னொரு பரிமானமும் இருக்கு. சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் ஈழத் தமிழருக்கும் போராளிகளுக்கும் நன்மை என்கிறது தெளிவாக இருந்தது. பாலசிங்கம் அதனை உணர்ந்திருந்தார். ஆனால் சமாதான பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால் மேற்க்கு நாடுகளில் பல ஆயிரம்பேருக்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கபடும் என்பது கஸ்றோ முகாமின் கவலையாக இருந்தது. நான் பாலசிங்கத்தின் நிலைபாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு வன்னியில் வலியுறுத்தினேன். இதன் பின்னணியில்தான் எனக்கும் கஸ்றோவுக்குமான மோதல் ஆரம்பமானது. கஸ்றோ பலமாக இருந்தார். நான் கஸ்றோவை கிழிநொச்சி மாவித்தியாலயத்தில் கவிஞர் நிலாந்தன் தலைமை தாங்கிய கவிஞர் கருணாகரனின் புத்தகவெளியீட்டில் பகீரங்கமாக விமர்சித்தேன். நிகழ்வில் தோழர் பாலகுமாரனும் நண்பர் மு.திருநாவுகரசுவும் கலந்துகொண்டனர். கிழிநொச்சி மாவிதியாலய நிகழ்வு கஸ்றோவை கோபபடுத்தியது. இதனால் என்பாதுகாப்பு கேழ்விக்குள்ளானது. ஆனால் போராளிகளின் தலைமை ”நீங்கள் சந்தேகத்துக்கு அப்பால்பட்டவர். நீங்கள் வன்னிக்கு வாருங்கள். உங்கள் விமர்சிக்கும் உரிமையையில் தலையிடமாட்டோம்” என எனக்கு 
மாவீரர் யாழ்வேந்தன் ஊடாக அளித்த வாக்கை காப்பாற்றியது. கஸ்றோவின் கரங்கள் என்னை நெருங்காமல் இன்று யாழில் வசிக்கும் தயாமாஸ்ட்டர் மற்றும் புலநாய்வு துறை மூலம் விடுதலைபுலிகள் என் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். என்பாதுகாப்பில் எப்பவும் நிதர்சனம் தோழர் பாலகுமாரன் கவிஞர் புதுவை ரத்தினதுரை தயாமாஸ்ட்டர் வன்னி ஊடக நண்பர்கள் ராதேயன், ஜெயராஜ், கவிஞர் கருணாகரன் மாவீரர் தூயமணி கபிலம்மான் நண்பன் மு.திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்ற பலர் உண்மையான அன்புடன் அக்கறை காட்டினார்கள். நான் இலங்கை சென்றால் எனது முஸ்லிம் நண்பர்களும் தமிழ் சிங்கள மலையக நண்பர்களும் பதட்டத்துடன் இருப்ப்பார்கள். கொழும்பில் என் பாதுகாப்பு தோழர்கள் தலைவர் அஸ்ரப், தோழர் பசீர் சேகுதாவுத் தோழர் தலைவர் றவுப் ஹக்கீம் போன்ற பல முஸ்லிம் நண்பர்களாலும் சிங்கள முற்போக்காளர்களாலும் மலையக நண்பர்களாலும் உறுதி செய்யபட்டது. சிவராமின் மரணத்துக்குப்பின்னர் அஞ்சலி செலுத்த 2005 தென்னிலங்கையில் என்னை பாதுகாத்த முஸ்லிம் நண்பர்கள் இனி வரவேண்டாம் என கேட்டுக் கொண்டனர். வன்னியும் அதை உறுதிப்படுத்தியது. 
.
ஒருமுறை வன்னியின் சேதி ஒன்றை இந்திய தூதர் நிருபம் சென்னுக்கு தெரிவிக்க இந்திய தூதரகம் சென்றிருந்தேன். வன்னிக்கும் தூதரகத்துக்கும் இடையில் நான் தொடர்பாளராக இருப்பது தொடர்பாக எனது நண்பரான தமிழ் அமைச்சர் ஒருவர் அதிருப்தி அடைந்திருந்தார். தூதரக பாதுகாப்பு அதிகாரி தூதருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டார். குறித்த அமைச்சர் என்னை கொல்ல முடிவுசெய்திருப்பதாக தூதர் நிருபம் சென்னிடம் தெரிவித்தார். மேலும் அந்த அமைச்சரின் ஆட்க்களை வெளியில் கண்டதாகவும் தெரிவித்தார். தூதர் நிருமம் சென் அந்த அமைச்சரை தொலைபேசியில் அழைத்து மிக கோபத்தோடு எச்சரித்தார். இதன்பின்னர் வன்னியும் என்னை கொழும்புக்கு வரவேண்டாமென அறிவுறுத்தினர். நான் என்றுமே சந்தித்திருக்காத முஸ்லிம் புலனாய்வு அதிகாரியான அமரர் முஸ்தபா பலதடவை எனக்கு எதிரான தகவல்களை மறைத்து என்னை பாதுகாத்ததாக அறிந்தேன். 2013ல் ஒன்றில் எங்களுடன் சேர் அல்லது சிறையிலேயே செத்துப்போ என கோத்தபாய ராஜபக்ச என்னை கைது செய்தபோது அமைச்சராக இருந்தும் தோழர் பசீர் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் துணையிருந்தார். தடுப்பு முகாமில் நஞ்சூட்டபடலாம் என நான் கருதினேன். அதனால் பசீர் தினசரி தனது வீட்டில் இருந்து அவரது மனைவி ராணியின் கண்கானிப்பில் சமைக்கப்பட்ட உணவை எனக்கு அனுப்பினார். ஆச்சரியபடத்தக்க வகையில் சில பாதுகாப்பு அதிகாரிகளும் தடுப்பு முகாம் அதிகாரிகளும் நான் 1977ல் யாழ் பல்கலைக் கழக மாணவர் தலைவனாக இருந்தபோது சிங்கள மாணவர்களையும் யாழ்பாணத்தில் வாழ்ந்த சிங்கள மக்களையும் பல்கலைக் கழகத்துக்கு அழைத்து வந்து பாதுகாப்பாக தென்னிலங்கைக்கு அனுப்பியதை மரியாதையுடன் நினைவு கூர்ந்தனர். மேற்படி செயற்பாட்டை போராளிகள் தடுக்கவில்லை என்பதையும். மேலும் போராளிகளுக்கு ஆதரவான பல முன்னணி மாணவர்களது பங்குபற்றல் இருந்ததையும் நான் குறிப்பிட்டேன். 
.
பாராளுமன்றத்தில் தோழர் சுரேஸ் பிரேமசந்திரனும் நண்பர் சிறீதரனும் என் கைதை கண்டித்துப் பேசியதாக அறிந்தேன்.
நீதி அமைச்சராக என்கைதை நியாயப்படுத்தவேண்டிய பொறுப்பில் இருந்த தோழர் ரவுப் ஹக்கீம் தன் பதவியை துச்சமாக மதித்து ``ஜெயபாலன் இனங்களை சேர்த்து வைப்பவரேயன்றி பிழவுபடுத்துகிறவர் அல்ல. ஜெயபாலன் இலங்கையில் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை`` என்று துணிச்சலாக அறிக்கை விட்டார். அதனை அடியொற்றி நண்பர் எரிக் சோல்கைம் ஜெயபாலன் குற்றமற்றவர். அவரது மீசைக்கூட தொடமுடியாது. அவர் உடனடியாக விடுதலை செய்யப்படாவிட்டால் நான் மேலும் வாய்திறக்க வேண்டிவரும் என எச்சரித்தார். அதற்க்கு முதல்நாள்வரைக்கும் ”நான் ஜெயபாலனை விடுதலை செய்வதற்காக கைது செய்யவில்லை. அவரது முடிவு சிறையில்தான்’’ என கோத்தபாய ராஜபக்ச கொக்கரித்திருந்தார். ஆனால் நண்பர் எரிக் சோல்கைமின் கடுமையான அறிக்கை வந்த அன்றே கோத்தபாய ராஜபக்சவின் விசேட உத்தரவின் பெயரில் நான் நோர்வேக்கு நாடுகடத்தப்பட்டேன். பசீர் விமான நிலையம் வரைக்கும் வந்திருந்தான். 
.
என் கலைஞானம் பெண்கள் தந்த வரம். நான் இன்று உயிரோடு இருப்பது நான்கு இனங்களையும் சேர்ந்த எனக்கு தெரிந்த தெரியாதா பலர் நான் வாழ வேண்டுமென நினைத்ததால்தான் சாத்தியமாயிற்று. அவர்களுக்கு என் நன்றிகள்.
.

இன்றைய மது
வ.ஐ.ச.ஜெயபாலன்

உலகம்
விதியின் கள்ளு மொந்தை.
நிறைந்து வழிகிறது அது 
மதுக் கிண்ணம் தாங்கியவர்களால்
எப்போதும் நுரைத்தபடி.
நேற்றிருந்தது வேறு. 
இங்கே நுரைபொங்குவது
புதிய மது.
.
அது இன்றைய நாயகனுக்கானது.
நாளை கிண்ணம் நிறைகிறபோது
வேறு ஒருவன் காத்திருப்பான்.
நிச்சயம் இல்லை நமக்கு
நாளைய மது அல்லது நாளை.
.
எனக்காக இன்று சூரியனை 
ஏற்றி வைத்தவனுக்கு நன்றி.
அது என் கண் அசையும் திசைகளில்
சுவர்க்கத்தின் கதவுகளைத் திறக்கிறது.
மயக்கும் இரவுகளில் 
நிலாவுக்காக 
ஓரம்போகிற சூரியனே 
உன்னையும் வணங்கத் தோன்றுகிறதடா.
.
கள்ளு நிலா வெறிக்கின்ற 
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே 
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும் 
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.
.
எப்பவுமே வரப்பிரசாதங்கள்
வசந்தம் முதலாம் பருவங்கள் போலவும்
உறவுகள் போலவும்
நிகழ் தருணங்களின் சத்தியம்.
.
நிலம் காய்ந்த பின்
விதைப் பெட்டி தூக்கியவனுக்கு ஐயோ
பட்டமரம் துளிர்க்கிற மண்ணில்கூட 
அவனது வியர்வை முளைப்பதில்லை.
போன மழையை அவன் எங்கே பிடிப்பான்.
அது ஈரமாய் காத்திருந்திருந்த சத்தியம்.
நனைந்த நிலத்தில் 
உழுகிறவனின் கவிதையை எழுதுகிறது
ஏர்முனை.
.
காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளும், கவிதைகளும் நிறைந்தது தானே...வாழ்க்கை, கவிஞரே?

ஏற்கெனவே திட்டமிட்ட வகையில்...வாழ்ந்து விட்டுப் போவது...வாழ்க்கையல்லவே!

மாறிலிகள் ...வாழ்வின் அம்சமாக அமைந்து விடக்கூடாது! ஒரு சராசரி ஈழத் தமிழனின் வாழ்வு...வெறும் மாறிலிகள் தீர்மானிக்கும் வாழ்வாகவே அமைந்து விடுகின்றது!

எதிர் பாராத திருப்பங்களுடன் அமையும் வாழ்வே....மகிழ்வானது என்பது எனது கருத்து!

காட்டில் வாழும் ஒரு சிங்கத்தைப் போல...ஒரு மான் குட்டியைப் போல....துருவத்தில் ....குளிருடன் போராடும் ஒரு பென்குயின் பறவையைப் போல..போராட்டங்கள் நிறைந்த வாழ்வே...ஒரு பூரணமான வாழ்வு என்பேன்!

1 hour ago, poet said:

கள்ளு நிலா வெறிக்கின்ற 
இரவுகள்தோறும்
ஏவாளும் நானும் கலகம் செய்தோம்.
ஏடன் தோப்பினால் விரட்டி அடித்தோமே 
கடவுளையும் பாம்பையும்.
இதைத் தின்னாதே என்னவும் 
இதைத் தின் என்னவும் இவர்கள் யார்.
காதலே எமது அறமாகவும்
பசிகளே எமது வரங்களாகவும்
குதூகலித்தோம்.

மேலுள்ள உங்கள் வரிகள்... வாழ்க்கை இப்படித்தான் வாழப் பட வேண்டும் என்று சொல்லாமல் சொல்கின்றன!

இயற்கை....மகிழ்ச்சியாக...நாம் வாழவே ....எல்லாவற்றையும் அள்ளி இறைத்திருக்கினறது!

 

நாங்கள் தான்....எமது கரங்களுக்கு ......விலங்குகளைப் பூட்டிக்கொள்கிறோம்! 

நாடுகள்...என்று....கோடு பிரித்திருக்கிறோம்!

வலசைப் பறவைகளுக்கு...வேலி ...கிடையாது...கவிஞரே!

அது தான் இயற்கையின் விதி!

 

தொடர்ந்தும் எழுதுங்கள்...மானிடத்தின் கவியே! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலியான விதைப் பெட்டியில்
காட்டுமலர்களோடு நிறைகிறது
கனவுகள்.

 

வீட்டுத் தோட்டத்து மலர்களைவிட காட்டு மலர்கள் கனதியானது  கவிஞரே.......!  🌼

Link to comment
Share on other sites

நம்பிக்கை எளுச்சி தருகிறது உங்கள் வார்த்தைகள். புங்கையூரானனுக்கு நன்றிகள். சுவே தொடரும்  உங்கள் அன்புக்கும் என் நன்றிகள்.   

Link to comment
Share on other sites

நன்றி நுணாவிலான். உங்கள் கருத்தையும் பதிவுசெய்யலாமே

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.