Jump to content

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!" - எந்த உயிருக்கும் பயப்படாத தேன் வளைக்கரடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும்.

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!

சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய்,கரடி, ஓநாய், யானை எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றன. பல விலங்குக்கு அடுத்த  வேளை  உணவே இன்னொரு விலங்குதான். இங்கே சிங்கம் சைட் டிஷ்ஷுக்காக ஓடும், மான் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும். ஒன்றிடமிருந்து இன்னொன்று தப்பிக்க எவ்வளவோ முறைகளை இயற்கை எல்லா உயிரினங்களுக்கும் வழங்கியிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஓர் உயிரினம் இருக்கிறது, இது வரை கேள்விப்பட்ட உயிரினங்களைப் போல இல்லை இது. அவ்வளவாக தன்னுடைய வளையை விட்டு வெளியே வராத உயிரினம், வெளி உலகுக்கு அவ்வளவாகத் தெரியாத உயிரினம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் விலங்குகளின் ஸோம்பி உயிரினம். இதற்கு இதுதான் உணவு என்று இல்லை, எதையும் சாப்பிடும், எதை வேண்டுமானாலும் சாப்பிடும். அதன் பெயர் தேன் வளைக்கரடி (HONEY BADGER )

யாரைக் கண்டும் பயப்படாத, உயிரைப்பற்றிக் கவலைப்படாத ஒரே விலங்கு தேன் வளைக்கரடி, எதிரில் இருப்பது மானாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். அதன் இயல்பே எதிர்த்து நிற்பதுதான். பசித்தால் பக்கத்தில் இருப்பது நாகப் பாம்பாக இருந்தாலும் ஒரே கடியில் கடித்துக் கொன்று விட்டுத் தூங்கி விடும். 30 நிமிடங்கள் கழித்து எழுந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் தன்னுடைய குகைக்குள் சென்றுவிடும். உலகின் கொடிய விஷமுள்ள பாம்புகளான நாகப் பாம்பு, கறுப்பு மாம்பா என எந்தப் பாம்பாக இருந்தாலும் இதற்கு முன்பாக இரண்டு நிமிடங்கள்தாம். அந்த இரண்டு நிமிடத்தில் தப்பிக்க முடிந்தால் தப்பித்துக் கொள்ளலாம் இல்லையென்றால் டின்னரோ, பிரேக்ஃபாஸ்ட்டாகவோ மாறிவிடும். எவ்வளவு விஷத்தைக் கக்கினாலும் இரண்டாவது நிமிடத்தின் இறுதியில் சரியாகப் பாம்பின் தலையைப் பிடித்துக் கடித்துவிடும். ஆராய்ச்சியாளர்கள் பலரும் எப்படி இது சாத்தியம் என இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். கரடிக்கும் பாம்புக்குமான சண்டையில் பாம்பு கரடியைக் கொத்திவிடும். நான்கைந்து முறை கூட பாம்பு கரடியைக் கொத்தும், ஆனாலும் பாம்பின் விஷம் கரடியை எதுவும் செய்வதில்லை. அதன் தோல் கடினமாக இருப்பதால் பாம்பின் விஷம் உடலுக்குள் செல்வதில்லை என்று சொல்லப்படுகிறது.

தேன் என்றால் எத்தகைய சாகசத்தையும் இவ்வகை கரடிகள் நிகழ்த்தும். மர உச்சியிலோ, மலை உச்சியிலோ இருக்கிற தேன் கூடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கரடிகள் காலி செய்து விடுகின்றன. தேன்கூடுகளைச் சேதப்படுத்தும் பொழுது கரடி தன்னுடைய காதுகளை மூடிக்கொள்ளும். அதன் தோல் அடர்த்தி காரணமாக தேனீக்களால் கரடியை விரட்ட முடியாமல் போய்விடுகிறது. அதிக மோப்ப சக்தி கொண்ட தேன் வளைக்கரடிகள் எளிதாக எதையும் கண்டுபிடித்துவிடும். அதனாலேயே இவை தேன் வளைக்கரடிகள் என அழைக்கப்படுகின்றன. ``Honey Guide” என்றொரு பறவை இனம் உண்டு. தேன்கூடுகள் எங்கிருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதாலேயே இந்தப் பறவைக்கு இந்தப் பெயர். (விலங்குகள் என்று இல்லை சில நேரங்களில் மனிதர்களுக்கும் தேன் இருக்குமிடத்தை அடையாளம் காட்டும் என்கிறார்கள்) விலங்குகள் வந்து தேன்கூடுகளை உடைத்துச் சாப்பிட்டுச் சென்றபின் மீதமிருக்கும் தேனையும், கூடுகளிலிருக்கும் சிறு புழு,பூச்சிகளையும் உணவாக உட்கொள்வதற்காகவே இந்தப் பணியை அவை செய்வதாக நம்பப்படுகிறது. இந்தப் பறவைகளின் நண்பனாகத் தேன் வளைக்கரடிகள் இருக்கின்றன. அறிவியல் பூர்வமாக இந்தச் செயல் நிரூபிக்கப்படவில்லை ஆனாலும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

 

மலைப்பாம்புடன் சண்டையிடும்  கரடி

PHOTO : SUSAN McCONNEL 

எத்தனை பலம் பொருந்திய விலங்காக இருந்தாலும் எதிர்த்து நிற்கும் பண்பே தேன் வளைக்கரடிகளின் தனிச் சிறப்பு. சிங்கமாகவே இருந்தாலும் தனி ஓர் ஆளாக எதிர்த்து நின்று துரத்திவிடும் அளவுக்கு தில்லானது தேன் வளைக்கரடி. சிங்கங்கள் தேன் வளைக்கரடிகளை அவ்வளவாக வேட்டையாடுவதில்லை, சில நேரங்களில் சிங்கங்கள் தேன் வளைக்கரடிகளைப் பார்த்து விலகிச் சென்று விடுகின்றன. கரடியை வேட்டையாடுவதை விட அவற்றை உணவாக எடுத்துக்கொள்வதில் அதிக சிரமம் சிங்கங்களுக்கு ஏற்படுகிறது. கரடிகள் தோல் மிக அடர்த்தியாகவும், கனமாகவும் இருப்பதால் அதன் உடலைக் கிழிப்பதில் சிங்கங்கள் சிக்கலை எதிர் கொள்கின்றன. ``ஏண்டா இவனைக் கொன்றோம்” என்கிற அளவுக்குக் கரடிகள் சிங்கங்களுக்குச் சோதனையைக் கொடுத்துவிடுகின்றன. மரம் ஏறுவதில் சிறுத்தைக்கு அடுத்த இடத்தில் தேன் வளைக்கரடிகள் இருக்கின்றன. சிறுத்தைகள் பொதுவாக வேட்டையாடிய உணவை மரத்தில் வைத்து உண்ணும் பழக்கம் கொண்டது. வேட்டையாடிய விலங்குகளைச் சிறுத்தை மரத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும். சிறுத்தை இல்லாத நேரத்தில் மரத்தில் இருக்கிற உணவைத் தேன் வளைக்கரடிகள் உணவாக்கிக் கொள்கின்றன. மரத்தில் இருக்கும் சிறுத்தையின் குட்டிகளையும் தூக்கிச் சென்றுவிடுகின்றன.

 

 

சிங்கங்களை எதிர்த்து நிற்கும்

PHOTO : CATERS NEWS AGENCY 

தேன்வளைக்கரடிகள் மண்ணுக்குள் குகை தோண்டி அதற்குள் வாழ்கிற உயிரினம். ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா, இந்திய உபகண்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கீரி வகையைச் சேர்ந்த சிற்றினம். மரநாயின் உடல் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றது. அதிகபட்சமாக 24 ஆண்டுகள் வரை உயிர் வாழக் கூடியது. இதன் இனப்பெருக்க காலம் ஆறு மாதங்கள். ஒரே நேரத்தில் இரண்டு குட்டிகள் ஈனும். தேன் வளைக்கரடிகளின் குட்டிகள் சர்வைவல் பற்றி கற்றுக் கொள்ள தாயுடன் பயணிக்கின்றன. தேன் வளைக்கரடிகள் தங்களின் குட்டிகளை இரண்டு வருடங்கள் வரை உடனிருந்து வளர்க்கும். எப்படி எதிரிகளை எதிர்கொள்வது, அவற்றிடமிருந்து எப்படித் தப்பிப்பது எனச் சகலத்தையும் கற்றுக் கொடுத்தபிறகே குட்டிகளைத் தனியாகச் செல்ல விடும்.

 

 

இந்தியத் துணைக்கண்டத்தில் இவ்விலங்கு மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. கர்நாடக மாநிலம் கனகபுரா தாலுகாவின் தொட்டாலஹல்லி என்ற கிராமத்தில் கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்டு, மைசூர் மிருகக்காட்சி சாலைக்கு மாற்றப்பட்டது, ஆனால் சில நாள்களிலேயே இறந்துவிட்டது. 2014 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் புகைப்பட ஆதாரத்துடன் வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு தேன் வளைக்கரடிகள் இந்தியாவில் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 7 ம் தேதி இரவு ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள ஸ்ரீ லங்கமல்லேஸ்வரா உயிரியல் சரணாலயத்தில் உள்ள கேமராவில் ஒரு தேன் வளைக்கரடி பதிவாகியுள்ளது.

வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டெனில் அதன் பெயர்  HONEY BADGER...

 

https://www.vikatan.com/news/miscellaneous/131686-honey-badger-is-the-worlds-bravest-animal.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன் வளைக்கரடி (honey badgers) மனித வர்க்கத்திற்கே, குறிப்பாக ஈழத்தமிழனத்துக்கு  ஓர் கூர்ப்பு பாடம்.

வாழ்க்கையில், எவ்வளவு அழிவுகள், துன்பங்கள் வந்தாலும், அது  கொல்லாமல் அல்லது தப்பித்தால், தனிப்பட்ட நபரையோ  அல்லது ஓர் இனத்தையோ அந்த அனுபவம் மிகவும் வலியதாக்கும்.

எவ்வளவு பெரிய சக்தியை எதிர்க்கவேண்டுமாயின், துன்பம் மற்றும் அழிவுகள் என்று வரக்கூடியவைகளை எதிர்பார்த்து, எதிர்த்து நிற்காமல் இருக்கமுடியாது.

மனிதன் தேன் வளைக்கரடியாய் விட நுண்ணறிவு கொண்டவன். எனவே, வாழ்க்கையில் caluculated  risk எடுத்தே ஆகவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேன் வளைகரடி, பின் பக்கத்தால் விடும் காஸ் தான் இதனது பலம் என்று எங்கோ வாசித்த நினைவு.

மூக்கினை துளைக்கும் நாத்ததினால் எதிராளி ஓட்டம் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இந்த தேன் வளைகரடி, பின் பக்கத்தால் விடும் காஸ் தான் இதனது பலம் என்று எங்கோ வாசித்த நினைவு.

மூக்கினை துளைக்கும் நாத்ததினால் எதிராளி ஓட்டம் பிடிக்கும்.

நாதம், நீங்கள் சொல்லிற சாமான் இது போல கிடக்கு!

ஆங்கிலத்தில் ஸ்கங் என்று கூறுவார்கள்!

skunk_l1.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.