Jump to content

மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு: ‘மஞ்சள் மேற்சட்டை’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போராட்டத்தின் புதிய குறியீடு: ‘மஞ்சள் மேற்சட்டை’

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 20 வியாழக்கிழமை, மு.ப. 01:39Comments - 0

மக்கள் வீதிக்கு இறங்குவது இயல்பானதல்ல. ஆனால், வீதிக்கு இறங்கியவர்களை ஏமாற்றுவதும் என்றென்றைக்குமானதல்ல.  

அரசாங்கங்களுக்கெதிரான மக்களின் அதிருப்தியும் வெறுப்பும் கடந்த ஒரு தசாப்த காலமாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளன.   

குறிப்பாக, நவதாராளவாதத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாடுகளில், இதன் தாக்கம் அதிகமாக இருந்து வந்துள்ளது.   

இந்தக் கோபத்தின் வெளிப்பாடுகள், இப்போது, ஐரோப்பாவின் பெரிய தேசங்களில் இருந்து வெளிப்படும் போது, அவை இன்னொரு பரிமாணத்தை எட்டுகின்றன. மக்களின் புதிய போராட்டங்களுக்கு, உந்துகோலாக அமைந்து விடுகின்றன.   

தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களின் விளைவால், பிரான்ஸ் மிகுந்த நெருக்கடியில் உள்ளது. குறிப்பாக, ‘மஞ்சள் மேற்சட்டை’ அணிந்த போராட்டக்காரர்கள், பிரான்ஸையும் தாண்டி, உழைக்கும் மக்களின் போராட்டத்தின் குறியீடாக உள்ளார்கள்.   

ஐரோப்பாவில் உருப்பெற்றுள்ள பொருளாதார நெருக்கடிகளினதும் இலாபமீட்டல் வெறியினதும் குறியீடாகவே இந்தப் போராட்டங்களைக் கருதுதல் வேண்டும். ஐரோப்பாவெங்கும், அரசாங்கங்களுக்கு எதிராகக் கனன்று கொண்டிருக்கும் மக்களின் கோபத்தினதும் எதிர்ப்பினதும் பிரதிநிதிகளாக, இந்த மஞ்சள் மேற்சட்டை போராட்டக்காரர்கள் உள்ளனர்.   

மஞ்சள் மேற்சட்டையின் கதை  

பிரான்ஸில் எரிபொருள் விலை அதிகரிப்புகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமானது, இன்று பிரான்ஸையும் அதன் அண்டை நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது.  

 இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி, பாரிஸைச் சேர்ந்த இரண்டு ட்ரக் ஓட்டுநர்கள், ‘எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக, தேசிய அளவிலான மறியல் செய்வதே, இதை எதிர்ப்பதற்கு நாம் எடுக்க வேண்டிய முதலாவது நடவடிக்கை’ என்ற ஒரு யோசனையை, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த யோசனைக்குச் சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. இதுவே, ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமாக உருவெடுத்தது.   முதற்கட்ட மறியல் போராட்டத்தில், 200,000க்கும் அதிகமானோர் பங்குபற்றினர். இதன் வெற்றி, தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வழிகோலியுள்ளது.   

இந்தப் போராட்டத்தின் இடைவிடாத இயக்கமும் அதற்கான மக்கள் ஆதரவும் பிரான்ஸ் எங்கும் பரவியுள்ள சமூகக் கோபத்தின் வெளிப்பாடாகும். இந்த இயக்கமானது, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் எரிபொருள் வரி அதிகரிப்புகளுக்கு எதிராக, சிறு வணிகர்கள், டிரக் முதலாளிகள்-ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய பரந்துபட்ட கூட்டணியின் வெளிப்பாடாக இருக்கிறது.   

இந்தப் போராட்டங்களின் அடிப்படையில், மூன்று விடயங்களைப் புரிந்து கொள்ளல் அவசியம்.   
முதலாவது, உலகளாவிய ரீதியில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படுவதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள், இன்று நடந்து வருகின்றன. அதன் பகுதியாக, இதை நோக்க வேண்டும்.   

இரண்டாவது, இந்தப் போராட்டங்கள் சமூக வலைத்தளங்களின் ஊடு ஒன்றிணைக்கப்படுவதால், அதற்கெதிரான நடவடிக்கைகளில் பிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.   

மூன்றாவது, அரசாங்கங்களுக்கெதிரான இளந்தலைமுறையின் எதிர்ப்புகள், அரசாங்கங்களை மிகுந்த நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. அதை, ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கத்தின் செயற்பாடுகளில், இளைஞர்களின் பங்களிப்பு கோடிட்டுக் காட்டியுள்ளது.   

இன்று, உலகளாவிய ரீதியில் எரிபொருள் விலையேற்றங்கள் நடைபெறுகின்றன. அவை, பல்வேறு வடிவங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.   குறிப்பாக, எரிபொருளுக்கான வரியை பிரான்ஸ் அதிகரித்திருக்கிறது. இந்த வரி அதிகரிப்பானது, “சூழலியல் மேம்பாட்டுக்கு நிதி அளிப்பதற்கானது” என்று, பிரான்ஸ் சொல்கிறது. 

இதேவேளை, பல்கேரியாவில், எரிபொருள் விலையேற்றங்கள், பழைய, அதிக சூழல்மாசுபடுத்தும் கார்களுக்கு அபராத வரிகள் அதிகரிப்பு, வாகனக் காப்புறுதித் தொகைகளின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் பிரதான சாலைகள், நெடுஞ்சாலைகளை  மறித்து, ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 

‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கத்தின் செயற்பாடுகள், சமூக வலைத்தளங்களின் உதவியுடன் ஒருங்கிணைக்கப்படுவதால், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், சமூக ஊடகத் தணிக்கை குறித்துத் திட்டமிட ‘பேஸ்புக்’ நிர்வாகத்துடன் சந்திப்புகள் நடத்தி, இதைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.   

அத்துடன், தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட இணையப் பயன்பாடு குறித்த நிகழ்வில், ஜனாதிபதி மக்ரோன் பேசுகையில், “இணையம் மூலமான பேச்சுச் சுதந்திர பயன்பாட்டின் காரணமாக, உலகம் பேரழிவின் விளிம்பில் இருக்கிறது” என்றார்.   

“இணையம், ஆரம்பத்தில் ஓர் ‘அருமையான வாய்ப்பாக’ இருந்தது. இருந்தபோதிலும் இப்போது அது, ஜனநாயக சமூகங்களுக்கு ஓர் அச்சுறுத்தலாகவும் மாறி வருகிறது” என்றார். இதன் மூலம், பேச்சுச் சுதந்திரத்தையும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்.   

இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், எவற்றையெல்லாம் ஜனநாயகத்தின் கருவிகள், உயர்ந்த மனித உரிமை நடத்தைகள் என்று, மேற்குலக ஜனநாயகங்கள் கூறிவந்தனவோ, அவற்றையே இன்று, அதே ஜனநாயகத்தின் பெயரால், அவை விமர்சிக்கின்றன. இன்று, அரசாங்கங்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியின் மோசமான நிலைமையையே, இது சுட்டிக்காட்டி நிற்கின்றது.   

பிரான்ஸில், எரிபொருள் விலைகள் இவ்வாண்டு 20 சதவீதம் அதிகரிக்கபட்டன. அதேவேளை, அதற்கு மேலதிகமாக அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள் இந்தப் போராட்டத்தைத் தூண்டின. இப்போராட்டங்களின் விளைவால், முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகளைத் தற்காலிகமாக நிறுத்துவதாகச் சொன்ன மக்ரோன் அரசாங்கம், பின்னர் முடிவுறாத போராட்டங்களின் விளைவால், அவ்வரிகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.  ஆனால், போராட்டங்கள் முடியவில்லை. இப்போராட்டங்கள், பிரான்ஸில் செல்வம் படைத்த ஒரு சதவீதமானோருக்கு எதிரான மக்களின் போராட்டமாகும். எரிபொருட்கள் மீதான வரிவிதிப்பு, இப்போராட்டத்தை உந்தித்தள்ளிய நிகழ்வு மட்டுமே.  

இந்த ‘மஞ்சள் மேற்சட்டை’ போராட்டக்காரர்கள், மக்களிடையே வளங்கள், மீளப்பங்கீடு செய்யப்பட வேண்டும் என்றும், சம்பளங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆண்டாண்டு காலமாக மக்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்ட சமூக நலன்கள் மீள வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியே, தங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்.   

பெரும் செல்வந்தர்களுக்கு வழங்குகின்ற வரிச்சலுகைகள், ஏற்படுத்துகின்ற பொருளாதாரத் தாக்கத்தை, வரிகளின் பேரால், உழைக்கும் மக்களின் தலைகளில், பிரான்ஸ் ஜனாதிபதி கட்ட முனைகிறார். 

அதேவேளை, இராணுவப் பெருக்கத்துக்கு நூறு பில்லியன் கணக்கில் செலவிட பிரான்ஸ் கொண்டிருக்கும் திட்டங்களுக்கான செலவுகளையும் வேறு வடிவங்களில், சாதாரண பிரான்ஸியர்கள் மேல் திணிக்கும் போக்கை, கடந்த ஓராண்டாகப் பிரான்ஸ் மக்கள், பார்த்து வந்திருக்கிறார்கள்.   

 2018 தொடங்கியது முதலாக, பிரான்ஸின் மிகவும் வசதியான 13 பில்லியநர்கள், தமது செல்வத்தில் 23.67 பில்லியன் யூரோக்களைச் சேர்த்துள்ளனர், இதன்மூலம், உலகிலேயே, பில்லியநர்கள் அதிகவேகத்தில் பணத்தைப் பெருக்கிக் கொள்ளும் நாடாக, பிரான்ஸ் ஆகியிருக்கிறது.  

image_0bcc0f4837.jpg

இந்தப் போராட்டங்கள், மரபார்ந்த ரீதியில் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து விலகியதாகவும் சுயாதீனமானதாகவும் நிகழ்ந்து வருகின்றன. இத்தன்மையானது, வழமையாக அறியப்பட்ட ‘வலது’,  ‘இடது’ ஆகிய இரண்டு அணிகளில் இருந்து விலகி, கலந்ததொரு நிலையில் இருப்பது, அதிகார வர்க்கத்துக்குப் பாரிய நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.   

இந்தப் போராட்டங்களில், வலுவான தொழிலாள-உழைக்கும் வர்க்கத்தின் குணவியல்புகள் இருக்கின்ற அதேவேளை, தீவிர வலதுசாரியியலின் சில இயல்புகளும் இதில் உள்ளடங்கியுள்ளதையும் நோக்க வேண்டும். தொடர்ச்சியானதும் வலுவானதுமான மக்கள் நோக்கிலான, இடதுசாரி முற்போக்குச் சக்திகளின் செயற்பாடு இன்மையையே, இது குறிகாட்டுகிறது.   

அடிப்படையில் இந்தப் போராட்டங்கள்,  சமூகக் கோபத்தின் விளைவாகும். இதனை நன்கறிந்தமையாலேயே, பிரான்ஸ் அரசாங்கம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்துகிறது. “எங்கேனும் மறியலால் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கோ, சுதந்திர நடமாட்டத்துக்கோ ஆபத்து இருக்குமானால், நாங்கள் தலையிடுவோம்” என்று சொன்ன பிரான்ஸின் உள்துறை அமைச்சர், “ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்யும் வழக்கம் கொண்ட, எந்தத் தொழிற்சங்கமும் இதை ஒழுங்கமைக்கவில்லை. ஆர்ப்பாட்டம் என்றால், நீங்கள் பொலிஸ் அலுவலகத்தில் அது குறித்துத் தெரிவிக்க வேண்டும். இப்போது, மிகவும் வெகு சிலரே அவற்றை அறிவிக்கின்றனர். இவ்வாறு அறிவிக்கப்படாத ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்படும்” என்றார்.   

பிரான்ஸில் கல்வித்துறைப் போராட்டங்கள்  

பிரான்ஸில் நீண்ட  காலமாக கல்வித்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களும், இப்போதைய போராட்டங்களுடன் தொடர்புபட்ட முக்கிய போராட்டங்களாகும்.   
மக்ரோன் அரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான கல்வி நிதிநிலை அறிக்கைக்கு எதிராக, நவம்பர் 12அன்று பிரான்ஸ் பூராவும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 2011க்குப் பின்னர், முதன்முறையாக தொழிற்சங்கங்கள், தேசிய அளவிலான கல்வித்துறை வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. 

இந்த வேலை நிறுத்தத்தின் பகுதியாக, அனைத்து ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், இரண்டு இடைநிலைப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையிலும் நான்கு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் பங்குபெற்றிருந்தனர்.   

அரசாங்கப் பாடசாலையில் 2,650 ஆசிரியர்களையும் தனியார் துறையில் 550 பேரையும் நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டுள்ள 400 பேரையும் வேலையில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை ஆசிரியர்களும் கல்வித்துறை சார்ந்தோரும் எதிர்க்கிறார்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில், பாடசாலைகளில் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 40,000 மாணவர்களால் அதிகரிக்கவுள்ள நிலையில், இந்த வேலை இழப்புகளை, பிரான்ஸ் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.   

அதேவேளை, முழுநேர நிரந்தர ஆசிரியர்களுக்குப் பதிலாக, ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களைப் பணிக்கமர்த்தும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவையே, ஆசிரியர்களின் எதிர்ப்புக்கான காரணங்களாகும்.   

இதேவேளை, உயர்நிலைப் பாடாலை மாணவர்கள், சில நாள்களுக்கு முன்னர், தலைநகர் பாரிஸில் மத்திய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களையும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் திணிப்பதையும் கண்டனம் செய்த அவர்கள், ‘மஞ்சள் மேற்சட்டை’ ஆர்ப்பாட்டங்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். இவை, ஆட்சிக்கெதிரான இளந்தலை முறையினரின் எதிர்ப்பைத் தெளிவாகக் காட்டுகிறது.   

உண்மை யாதெனில், ஐரோப்பிய ஒன்றியம் கடந்தாண்டு நடத்திய ‘தலைமுறை எது?’ கருத்துக் கணிப்பின் முடிவுகளின்படி, ஐரோப்பிய இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோரும், பிரான்ஸ் மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினரும், தற்போதுள்ள அமைப்பு முறைக்கு எதிராக, வெகுஜன எழுச்சியில் இணைவதற்கு விருப்பம் கொண்டிருக்கிறார்கள்.  

 இதன் பின்னணியிலேயே, பிரான்ஸ் அரசாங்கம், அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை நடைமுறையை மீள அறிமுகப்படுத்துவாக அறிவித்துள்ளது. அதன் மூலம், இளைஞர்களைப் பணிவுள்ள நாட்டுப்பற்றாளர்களாக மாற்றலாம் என, அது நினைக்கிறது.    

கட்டாய இராணுவ சேவையின் கதை கொஞ்சம் சுவையானது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கங்கள், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. 1991இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவும் கெடுபிடிப் போரின் முடிவும் கட்டாய இராணுவ சேவைப் பல நாடுகள் நிறுத்த வழிகோலியது.  அதன்வழி பிரான்ஸ் 1997இலும் ஸ்பெயின் (2001), இத்தாலி (2005), போலந்து (2008) ஜேர்மனி (2010), சுவீடன் (2017) ஆகியவை பின்தொடர்ந்தன. ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகள் இதைத் தொடரும் என எதிர்பார்க்கவியலும்.   

ஆனால், ஐரோப்பியர்களிடையே கட்டாய இராணுவ சேவைக்குக் திரும்புவதற்குப் பலத்த எதிர்ப்பு இருக்கிறது. 2017இல் நடத்தப்பட்ட ‘தலைமுறை எது’ என்ற கருத்துக்கணிப்பின் படி, 60 சதவீதம் பேர், கட்டாய இராணுவ சேவையை மறுப்போம் என்று பதிலளித்துள்ளனர்.   இவையனைத்தும் அரசாங்கங்களுக்கெதிரான கோபத்தின் வெளிப்பாடுகளாகும். மறுபுறம் அரசாங்கங்கள் ஏதோவொரு வகையில் மக்கள் எதிர்ப்பை அடக்க முனைகின்றன என்பதையும் வெளிப்படுத்துகின்றன.  

மஞ்சள் மேற்சட்டை இயக்கத்தின் போராட்டங்கள், வெறுமனே தனியான போராட்டம் அல்ல. அது, ஐரோப்பாவிலும் அதற்கு வெளியிலும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வின் வெளிப்பாடுகள் ஆகும்.   

பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாய், பெல்ஜியத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் எண்ணெய் சுத்திரிகரிப்பு மய்யங்களை முற்றுகையிட்டனர், அதேநேரத்தில் பல்கேரியா, சேர்பியா, கிரீஸ், ரொமேனியா, ஜேர்மனி ஆகிய நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்திருக்கின்றன.   

இவை, ஐரோப்பாவுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டவை அல்ல. எகிப்திய ஜனாதிபதி சீசி, மஞ்சள் மேற்சட்டை விற்பனையைத் தடை செய்துள்ளார். எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக்கை கவிழ்த்த 2011 புரட்சியின் எட்டாவது ஆண்டுதினம் ஜனவரி 25 நினைவு கூரப்படவுள்ள நிலையில், அத்தினம் முடியும் வரை மஞ்சள் மேற்சட்டைகளை விற்கக் கூடாது எனப் பொலிஸ் உத்தரவிட்டிருக்கின்றது. மஞ்சள் மேற்சட்டை, மக்கள் போராட்டத்தின் குறியீடாகியுள்ளது.   

நெதர்லாந்து, பல்கேரியா, ஈராக்கிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மஞ்சள் சீருடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கின், பாஸ்ரா நகரில் அசுத்தமான குடிநீர், மோசமான நகர சேவைகளுக்கு எதிராக ‘மஞ்சள் மேற்சட்டை’ போராட்டம் நடைபெற்றதற்குப் பின்னர், தலைநகர் பாக்தாத்தில் நடைபெற்ற போராட்டத்திலும் ஆர்ப்பாட்டக்காரர்கள், பாஸ்ரா ஆர்ப்பாட்டங்களுடன் ஐக்கியத்தைக் காட்டுகின்ற விதத்தில், மஞ்சள் சீருடைகளை அணிந்திருந்தனர்.  

ஆபிரிக்காவிலும் இதன் தாக்கம் செல்வாக்குச் செலுத்துகிறது. புக்கீனா பாசோவில், இவ்வாறான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் முகநூல் குழு, செயற்படத் தொடங்கியுள்ளது.   

இதேபோலவே, துனீசியாவில் ‘சிவப்பு சீருடைகள்’ என்று, உருவாக்கப்பட்ட முகநூல் குழு, துனிசிய அரசியல் அமைப்புமுறையின் தோல்வியையும் ஊழலையும் மக்களை வறுமைக்குள் தள்ளும் அரசாங்கத்தின் கொள்கையையும் கண்டனம் செய்து, போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அல்ஜீரியாவில் ‘மஞ்சள் மேற்சட்டை’ அணிந்த போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   

பிரான்ஸில் தோற்றம் பெற்ற ‘மஞ்சள் மேற்சட்டை’ இயக்கமானது, அதன் முன்னாள் கொலனிகளிலும் அண்டை நாடுகளிலும் எனக் கண்டம் தாண்டிய செல்வாக்கைப் பெற்றதோர் இயக்கமாகியுள்ளது. மக்களின் கூட்டு வெளிப்பாடாகவும் பாரம்பரிய அரசியல் முறைகளைக் கடந்த வெளிப்பாட்டுக் கருவியாகவும் இதை நோக்க வேண்டியுள்ளது.   

ஒரு சதவீதமானோருக்கு எதிராக, 99 சதவீதமான மக்கள் பேச ஆரம்பித்துள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. உலகை 99 சதவீதமானோருக்கு உரியதாக மாற்றியாக வேண்டும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மக்கள்-போராட்டத்தின்-புதிய-குறியீடு-மஞ்சள்-மேற்சட்டை/91-226863

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "அவளோடு என் நினைவுகள்…"   "உன் நினைவு மழையாய் பொழிய   என் விழியோரம் கண்ணீர் நனைக்க  மென்மை இதயம் அன்பால் துடிக்க  அன்பின் ஞாபகம் கதையாய் ஓடுது "   "மனக் கடல் குழம்பி பொங்க மவுனம் ஆகி நீயும் மறைய  மண்ணை விட்டு நானும் விலக   மங்கள அரிசியும் கை மாறியதே!"   நிகழ்வு நினைவாற்றல் [Episodic Memory] உண்மையில் ஒருவரின் வாழ்வில் முக்கியமான ஒன்று, ஏனென்றால், அவை தனிப்பட்ட அனுபவங்களை நினைவு படுத்துவதுடன், அவரின் வாழ்வை மற்றும் புரிந்துணர்வுகளை [கண்ணோட்டங்களை]  வடிவமைக்கக் கூடியதும் ஆகும். அப்படியான "அவளோடு என் நினைவுகள்…" தான் உங்களோடு பகிரப் போகிறேன்.   நான் அன்று இளம் பட்டதாரி வாலிபன். முதல் உத்தியோகம் கிடைத்து, இலங்கையின்,  காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கிய தென் பகுதியில் பணியினை பொறுப்பேற்றேன். அது சிங்களவரை 94% அல்லது சற்று கூட கொண்ட ஒரு பகுதியாகும். ஆகவே அங்கு எப்படியாவது சிங்களம் கற்க வேண்டிய அவசியம் எனக்கு இருந்தது. எப்படியாவது புது அனுபவம் புது தெம்பு கொடுக்கும் என்ற துணிவில் தான் அந்த பதவியை நான் பொறுப்பேற்றேன்    முதல் நாள், அங்கு உள்ள பணி மேலாளரை சந்தித்து, என் பணி பற்றிய விபரங்களையும் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை போன்றவற்றையும் சுற்றி பார்க்க அன்று நேரம் போய்விட்டது. என்றாலும் இறுதி நேரத்தில் என் கடமையை ஆற்ற எனக்கு என ஒதுக்கிய அலுவலகத்தில் சற்று இளைப்பாற சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அங்கு எனக்கு உதவியாளராக இருப்பவர்களின் அறிமுகமும் கிடைத்தது. அங்கு தான் அவளை முதல் முதல் கண்டேன்! அவள் தான் என் தட்டச்சர் மற்றும் குமாஸ்தா [எழுத்தர்] ஆகும். அவளின் பெயர்  செல்வி டயாணி பெர்னான்டோபுள்ளே, பெயருக்கு ஏற்ற தோழமையான இயல்பு அவள் தன்னை அறிமுகப் படுத்தும் பொழுது தானாக தெரிந்தது. அழகும் அறிவும் பின்னிப்பிணைந்து அவளை ஒரு சிறப்பு நபராக சொல்லாமல் சொல்லிக்கொண்டு இருந்தது. அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழும் தெரிந்திருந்தது எனக்கு அனுகூலமாகவும் இருந்தது.    செம்பொன்னில்செய்து செங்குழம்புச் சித்திரங்கள் எழுதிய இரு செப்புகளை ஒரு பூங்கொம்பு தாங்கி நிற்பது போன்று பொலியும் காட்டு முலைக்கொடி போன்ற அவளின் முழு உருவமும், அதில் வில் போல் வளைந்து இருக்கும் புருவமும் மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாயும், நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல்லும், அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோளும்,  காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களும், பிறரை வருத்தும்,எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்களையும் பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடையும் யாரைத்தான் விட்டு வைக்கும்.    அடுத்தநாள் வேலைக்கு போகும் பொழுது, அவளும் பேருந்தால் இறங்கி நடந்து வருவதை கண்டேன். நான் தொழிற்சாலைக்கு கொஞ்சம் தள்ளி அரச விடுதியில் தங்கி இருந்தேன். ஆகவே மோட்டார் சைக்கிலில் தான் பயணம். ஆகவே ஹலோ சொல்லிவிட்டு நான் நகர்ந்து போய்விட்டேன்.   உள் மனதில் அவளையும் ஏற்றி போவமோ என்று ஒரு ஆசை இருந்தாலும், இன்னும் நாம் ஒன்றாக வேலை செய்யவோ, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவோ இல்லாத நிலையில், அதற்கு இன்னும் நேர காலம் அமையவில்லை என்று அதை தவிர்த்தேன்.    என் அறையில் நானும், அவளும் ஒரு பியூன் [சேவகன்] மட்டுமே. முதல் ஒன்று இரண்டு கிழமை, எனக்கு அங்கு இதுவரை நடந்த வேலைகள், இப்ப நடப்பவை , இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அலசுவதிலேயே காலம் போய் விட்டது. நல்ல காலம் எனக்கு கீழ் நேரடியாக வேலை செய்யும் உதவி பொறியியலாளர்கள், மேற்பார்வையாளர்கள் எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள். வேலையாட்களும் மற்றவர்களுடனும் தான் மொழி பிரச்சனை இருந்தது.    தொழிற்சாலைக்குள் இவர்களின் உதவி வரப்பிரசாதமாக இருந்தது. அதே போல, அலுவலகத்திற்குள் இவளின் உதவிதான் என்னை சமாளிக்க வைத்தது.     மூன்றாவது கிழமை, நான் கொஞ்சம் ஓய்வாக இருந்தேன், அவளின் வேலைகளும் குறைந்துபோய் இருந்தது. பியூன் ஒரு கிழமை விடுதலையில் போய்விட்டார். 'ஆயுபோவான் சார்' என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினேன். அவள் காபி கொண்டுவந்து குடியுங்க என்று வைத்துவிடு தன் இருப்பிடத்துக்கு போனாள். இது தான் நல்ல தருணம் என்று, அவளை, அவளுடைய காபியுடன் என் மேசைக்கு முன்னால் இருக்கும் கதிரையில் அமரும் படி வரவேற்றேன். அவள் கொஞ்சம் தயங்கினாலும், வந்து அமர்ந்தாள்.    நாம் இருவரும் அவரவர் குடும்பங்கள், படித்த இடங்கள் மற்றும்  பொது விடயங்களைப்பற்றி காபி குடித்துக்கொண்டு கதைத்தோம். அது தான் நாம் இருவரும் முதல் முதல் விரிவாக, ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திய நாள். அவள் ஒருவரின் வீட்டில், ஒரு அறையில் வாடகைக்கு இருப்பதாகவும், ஆனால், நேரடியான பேருந்து இல்லாததால், இரண்டு பேருந்து எடுத்து வருவதாகவும், தன் சொந்த இடம் சிலாபம் என்றும் கூறினாள். அப்ப தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரிவதின் காரணம் புரிந்தது.    சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு போன்ற கரையோரப் பகுதிகளில், தங்கள் பாதுகாப்புக்காகப் போர்த்துக்கேயரால் குடியமர்த்தப் பட்ட கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்ட தமிழ் பரதவர்களது பிள்ளைகள் முதலில் கத்தோலிக்க பாடசாலைகளில் தமிழில் கற்றார்கள். பிற்காலத்தில் அந்த பாடசாலைகளில் இருந்த தமிழ் மொழிப் பிரிவு மூடப் பட்டு அனைவரும் சிங்கள மொழி ஊடாக கற்க பணிக்கப் பட்டார்கள். எனவே பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும், வீட்டு மொழியும் இயற்கையாக சிங்களம் ஆகி, முழுமையாக இன மாற்றம்  20 ஆம் நூற்றாண்டில் அடைந்தார்கள் என்று நான் முன்பு படித்த வரலாறு நினைவுக்கு வந்தது. இந்த  ஒருமைப்படுத்தலுக்கு (Assimilation)  காரணமானவர் ஒரு கத்தோலிக்க மதகுருவே ஆகும்!  பேராயர் எட்மன்ட் பீரிஸ் (பிறப்பு 27-12-1897) ஆவர்!!    அன்று தொடங்கிய கொஞ்சம் நெருங்கிய நட்பு, நாளடைவில் வளர, அவளின், அழகும், இனிய மொழியும், நளினமும் கட்டாயம் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். அவளும் வீட்டில் இருந்து தானே சமைத்த சிங்கள பண்பாட்டு சிற்றுண்டிகள், சில வேளை மதிய உணவும் கொண்டு வந்தாள்.  நானும் கைம்மாறாக காலையும் மாலையும் என் மோட்டார் சைக்கிலில் ஏற்றி இறக்குவதும், மாலை நேரத்தில் இருவரும் கடற்கரையில் பொழுது போக்குவதும், சில வேளை உணவு விடுதியில் சாப்பிடுவதுமாக, மகிழ்வாக நட்பு நெருங்க தொடங்கியது.     கொஞ்சம் கொஞ்சமாக, அவள் என்னுடன் பயணிக்கும் பொழுது, பின்னால் இருக்கையை பிடிப்பதை விடுத்து, தெரிந்தும் தெரியாமலும், தான் விழாமல் இருக்க, என்னை இருக்க பிடிக்க தொடங்கினாள்.       "செண்பகப் பூக்களை சித்திரை மாதத்தில்  தென்றலும் தீண்டியதே  தென்றலின் தீண்டலில் செண்பகப் பூக்களில்  சிந்தனை மாறியதே  சிந்தனை மாறிய வேளையில் மன்மதன்  அம்புகள் பாய்ந்தனவே  மன்மதன் அம்புகள் தாங்கிய காதலர்  வாழிய வாழியவே!"                     எளிமையாக, மகிழ்வாக அவள் அழகின் உற்சாக தருணங்கள் மனதை கவர, சந்தோசம் தரும் அவள் உடலின் பட்டும் படாமலும் ஏற்படும் மெல்லிய தொடு உணர்வை [ஸ்பரிசம்] எப்படி வர்ணிப்பேன். பெண்தான் ஆணுக்கு பெரும் கொடை, அவளின் ஒரு ஸ்பரிசம் நமது நாளையே மலர்த்தி விடுகிறது. ஒருவனுக்கு ஒரு வார்த்தை அல்லது உரையாடல் எவ்வளவு நம்பிக்கையை கொடுக்கிறதோ, அதே மாதிரி, நட்பும் பிரியமும் [வாஞ்சையும்] அது நிகழும் தருணங்களின் மேல் மகத்தான உண்மையோடு இருக்கின்றன. அந்த உண்மையிலேயே என் வாழ்க்கை அன்றில் இருந்து மலரத் தொடங்கியது.     அதன் விளைவு, ஒரு வார இறுதியில், 1977 ஆகஸ்ட் 13  சனிக்  கிழமை, டயாணி பெர்னான்டோபுள்ளே  என்ற பவளக்கொடியுடன் நான் பவளப் பாறைகளுக்கு சிறப்பு பெற்ற,  காலியிலிருந்து கிட்டத்தட்ட 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள, இக்கடுவை (ஹிக்கடுவை) என்ற கடற்கரை நகரம் போனோம். அங்கு எம்மை தெரிந்தவர்கள் எவருமே இல்லை. அது எமக்கு ஒரு சுதந்திரம் தந்தது போல இருந்தது.     "வட்டநிலா அவள் முகத்தில் ஒளிர  கருங்கூந்தல் மேகம் போல் ஆட     ஒட்டியிருந்த என் மனமும் உருக  விழிகள் இரண்டும் அம்பு வீச   மெல்லிய இடை கைகள் வருட   கொஞ்சி பேசி இழுத்து அணைக்க   கச்சு அடர்ந்திருக்கும் தனபாரம்  தொட்டு என்னை வருத்தி சென்றது!"       முதல் முதல் இருவரும் எம்மை அறியாமலே முத்தம் பரிமாறினோம். அப்ப எமக்கு தெரியா இதுவே முதலும் கடைசியும் என்று. ஆமாம். 1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில்  தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள், 23 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில்  வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்து, அதன் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் முதல் முதல் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். இது,  இந்த இனிய உறவுக்கும் ஒரு ஆப்பு வைக்கும் என்று கனவிலும் நான் சிந்திக்கவில்லை.  தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக ஆகஸ்ட் 12 , வெள்ளிக்கிழமை, வன்முறைகள் ஆரம்பித்து விட்டதாக வந்த செய்தியே அது.    நாம் உடனடியாக எமது திட்டத்தை இடை நடுவில் கைவிட்டு, எனது விடுதிக்கு திரும்பினோம். அவளிடம் அதற்கு பிறகு பேசுவதற்கும் சந்தர்ப்பம் சரிவரவில்லை. காரணம் தமிழில் கதைத்தால், அது எமக்கு மேலே வன்முறை தொடர எதுவாக போய்விடும். ஆகவே மௌனம் மட்டுமே எமக்கு இடையில் நிலவியது. அவளை அவளின் தற்காலிக வீட்டில் இறக்கி விட்டு, நான் அவசரம் அவசரமாக என் அரச விடுதியில், முக்கிய பொருட்களையும் ஆவணங்களையும் எடுத்துக் கொண்டு, எனக்கு தெரிந்த சிங்கள காவற்படை அதிகாரி வீட்டில் ஒரு சில நாள் தங்கி, பின் யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.    அதன் பின் நான் வெளி நாட்டில் வேலை எடுத்து, இலங்கையை விட்டே போய் விட்டேன். நான் யாழ்ப்பாணத்தில் இருந்தும் அதன் பின் வெளிநாட்டில் இருந்தும் அவளுக்கு போட்ட ஒரு கடிதத்துக்கும் பதில் வராததால், அதன் பின் அவள் நினைவுகள் மனக் கடலில் இருந்து கரை ஒதுங்கி விட்டது.    என்றாலும் அவளுக்கு என்ன நடந்தது ?, ஏன் பதில் இல்லை என இன்றும் சிலவேளை மனதை வாட்டும். அன்று நான் ஒன்றுமே கதைக்காமல் , காலத்தின் கோலத்தால் திடீரென பிரிந்தது அவசரமாக போனதால், கோபம் கொண்டாளோ நான் அறியேன்    `செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின் வல்வரவு வாழ்வார்க் குரை!’   `நீ என்னை விட்டுப் போகவில்லை என்ற நல்ல தகவலைச் சொல்வதானால் என்னிடம் இப்பவே, உடனே சொல், இல்லை போய் விட்டு விரைவில் திரும்பி விடுவேன் என்ற தகவலைச் சொல்வ தென்றால் [கடிதம் மூலமோ அல்லது வேறு வழியாகவோ] நீ வரும் வரை யார் வாழ்வார்களோ அவர்களிடம் போய்ச் சொல்! என்று தான் என் மடல்களுக்கு மறுமொழி போடவில்லையோ?, நான் அறியேன் பராபரமே !!      நன்றி    [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.