Jump to content

சீதக்காதி - சினிமா விமர்சனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
 
சீதக்காதி - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை Twitter
   
திரைப்படம் சீதக்காதி
   
நடிகர்கள் விஜய் சேதுபதி, மௌலி, அர்ச்சனா, மகேந்திரன், கருணாகரன், ரம்யா நம்பீசன், காயத்ரி ஷங்கர், பார்வதி நாயர்
   
இசை கோவிந்த் வசந்தா
   
ஒளிப்பதிவு டி.கே. சரஸ்காந்த்
   
இயக்கம் பாலாஜி தரணிதரன்

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலாஜி தரணிதரனின் அடுத்த படம். விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். இத்தோடு, விஜய் சேதுபதியின் வயதான தோற்றமும் சேர்ந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது 'சீதக்காதி'.

 

படத்தில் வரும் எந்தப் பாத்திரத்திற்கும் சீதக்காதி என பெயர் கிடையாது. 'செத்தும் கொடுத்தான் சீதக்காதி' என்ற பழமொழிதான் படத்தின் அடிப்படையான 'ஒன்லைன்' என்பதால் இந்தப் பெயர்.

தமிழில் நாடகக் கலை உச்சத்தில் இருந்தபோது புகழ்பெற்று விளங்கிய அய்யா ஆதிமூலம் (விஜய் சேதுபதி), தன் கண் முன்பே அந்தக் கலைக்கு மதிப்பில்லாமல் போவதைப் பார்க்கிறார். குடும்பத்தில் பணத் தேவை தொடர்பான நெருக்கடிகளும் அதிகரிக்கின்றன. ஒரு நாள் நடித்துக்கொண்டிருக்கும்போதே இறந்துவிடுகிறார். ஆனால், அவரது கலை இறப்பதில்லை. அது எப்படி நடக்கிறது, அதனால் நடக்கும் விசித்திரங்கள் என்ன என்பதையே எதிர்பாராத விதத்தில் சொல்கிறது படம்.

இம்மாதிரியான ஒரு கதையை யோசிக்கும் துணிச்சலுக்காகவே இயக்குனரை ஒரு முறை பாராட்டிவிடலாம். படம் துவங்கியதும் கிட்டத்தட்ட அரை மணி நேரம்வரை விஜய் சேதுபதியின் நடிப்பில் நீள நீளமான நாடகக் காட்சிகள் வருவதும், மிக மோசமான, எதிர்பார்க்கத்தக்க பின்னணி இசையுடன் சோகமான சம்பவங்கள் நடப்பதும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றன. ஆனால், ஆதிமூலம் பாத்திரம் இறந்தவுடன் முற்றிலும் மாறான திசையில் படம் செல்கிறது.

சீதக்காதி - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை Twitter

அதுவரையிலான திரைக்கதையும் பின்னணி இசையும் முழுவதும் உடைபட்டு, வேறு ஒரு அனுபவத்திற்கு கூட்டிச் செல்கிறது படம். இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம்.

ஆனால், சில பலவீனங்களும் இருக்கின்றன. படம் துவங்கி நீண்ட நேரத்திற்கு படத்தின் திசையே புரியாமல் சோர்வளிக்கிறது. பிறகு வரும் பல காட்சிகளில் நம்பகத்தன்மை ரொம்பவுமே மிஸ்ஸிங். "ஃபேண்டஸி" என்று ஒப்புக்கொண்டால்கூட, அதற்கான லாஜிக்கும்கூட சில இடங்களில் இல்லாமல்போவது ஏமாற்றமளிக்கிறது.

ஆனால், இதனை தனது கலகலப்பான, எதிர்பாராத திருப்பங்களால் சரிசெய்கிறார் இயக்குனா்.

படத்தில் குறைந்த நேரமே வருகிறார் விஜய் சேதுபதி. எந்த ஒரு முன்னணி நடிகருமே மிகச் சாதாரணமாக நடித்துவிட்டுப்போகக்கூடிய பாத்திரம். விஜய் சேதுபதியும் அதைச் செய்திருக்கிறார்.

சீதக்காதி - சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமை Twitter

ஆனால், படத்தில் வரும் பல சிறிய பாத்திரங்கள் பின்னியெடுக்கிறார்கள். அர்ச்சனா, மௌலி, புதிய ஹீரோக்களாக நடிப்பவர்கள், இயக்குனர் மகேந்திரன், ரம்யா நம்பீசன் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு காட்சியில் முத்திரை பதிக்கிறார்கள்.

'96' படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்திலும் தனித்துத் தெரிகிறார். முன் பாதியில் ஒரு பாணியிலும் பிற்பாதியில் வேறு பாணியிலும் ஆச்சரியப்படுத்துகிறார்.

பல காட்சிகள் சிறியதாக இருந்திருக்கலாம். படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடுகிறது. ஆனால், நிச்சயம் பொறுமையாக, நினைத்து நினைத்து ரசிக்கக்கூடிய திரைப்படம்தான் 'சீதக்காதி'.

https://www.bbc.com/tamil/arts-and-culture-46601349

Link to comment
Share on other sites

சீதக்காதி / விமர்சனம் 

‘சுண்டைக்காயை நசுக்குற மாதிரி சுலபம்னு நினைச்சியா நடிப்பை? அது ஒரு தவம்யா...’ என்று சொல்வதற்காகவே ஒரு படம். ‘நடிகன்டா...’ என்று தலைமேல் வைத்துக் கொண்டாடப்படும் இந்தகால சிவாஜியை இழுத்து வந்து படத்தில் கோர்த்து விட்டிருக்கிறார்கள். வேறு யார்? நம்ம விஜய் சேதுபதிதான். விளம்பரத்திற்கு பயன்பட்ட அளவுக்கு திரைக்கு பயன்பட்டிருக்கிறாரா? கெட்ட சொப்பனமாக முடிந்து போகிறது முதல் அரை மணி நேரம்! சீதக்காதியின் மிச்ச நிமிஷங்கள்...? வயிறு வலிக்க சிரிக்க நினைக்கும் அத்தனை பேருக்குமான ராஜ விருந்து! 

ஐயா ஆதிமூலம் ‘சத்யவான் சாவித்ரி’ காலத்திலிருந்தே நாடகங்களில் நடித்து வருகிறார். காலம் தேயத் தேய நாடகம் பார்க்க வருகிற கூட்டமும் தேய்கிறது. நடித்துக் கொண்டிருக்கும்போதே மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றுவிடும் ஐயா, அதற்கப்புறமும் வாழ்கிறார். எப்படி? என்பதுதான் இந்தப்படத்தின் சுவாரஸ்யமும், கொஞ்சூண்டு அசுவாரஸ்யமும்! ஏற்கனவே அரைச்ச மாவுக்கெல்லாம் பூரி உப்பாது என்பதை புரிந்து கொண்டு, புதுசாக ‘ட்ரை’ பண்ணியிருக்கும் பாலாஜி தரணிதரனுக்கு மனம் திறந்த பாராட்டுகள். 

விஜய் சேதுபதியின் 25 வது படம். அடுத்தடுத்து நாடகக் காட்சிகள் மாறிக் கொண்டேயிருக்கின்றன. விதவிதமான கெட்டப்புகளில் வந்து பேசியே கொல்கிறார் சேது. நமக்கென்னவோ நவராத்திரி சிவாஜி நினைவுக்கு வந்து ‘ஐயா, நீங்க இல்லாம போயிட்டீங்களே?’ என்று கவலை சூழ்கிறது. சரக்கென நிமிஷத்தில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை நீட்......டிக்கொண்டே போகிறார் இயக்குனர். பக்கத்து சீட் ‘கொர்....’ பலவீனமாக்குகிறது தியேட்டரை. அதற்கப்புறம் என்னவோ உருமிமேளம் கேட்டு சாமி வந்தமாதிரி சிரிக்கிறது தியேட்டர். கொர் சப்தம் அடங்கி கைதட்டல் எழ எழ, ஐயா ஆதிமூலம் அரூபம் ஆகி நிகழ்கால நடிகர்கள் நிரூபணம் ஆகிறார்கள். தப்பித்தது சீதிக்காதி. (ஒரு படத்தின் ஹீரோவே அந்தப்படத்தின் மைனஸ் என்பது எவ்வளவு பெரிய அநீதி?) 

முதல் பாராட்டு மவுலிக்கு. தான் எவ்வளவு பெரிய கலைஞன் என்பதை அந்த கண்களிலேயே நிரூபிக்கிறார். வந்தது ஐயாதான் என்பதை புரிந்து கொள்கிற அந்த கண்கள், அதை நமக்கும் டயலாக் இல்லாமலே உணர்த்துகின்றன. மவுலி சார். நீங்க நீங்கதான்! 

ராஜ்குமாருக்குள் இப்படி தியேட்டரையே தெறிக்க விடுகிற ஒரு நடிகன் இருப்பான் என்று நினைத்தே பார்த்ததில்லை. ஒரே டயலாக். கிட்டத்தட்ட பத்து நிமிஷம்... விதவிதமான எக்ஸ்பிரஷன்களால் கதற விடுகிறார் தியேட்டரை. முதல் பாதி சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று இவர் சொன்னால், ‘செகன்ட் ஹாஃப் எனக்கு தம்பி’ என்று என்ட்ரி கொடுக்கிறார் சுனில். (நடிகர் வைபவ்வின் அண்ணனாம்ல?) ‘ஐயா ஆன்மா இறங்கிருச்சுன்னா, அதுல யார் நடிச்சா என்ன?’ என்று எகத்தாள கேள்வியோடு ஹீரோவாகும் இந்த புரட்யூசர், நடிப்பை கொலை பண்ணுகிற அந்த நிமிஷங்கள் அதகளம். 

ஒரு அமானுஷ்யமான நிகழ்வு, அதற்கப்புறம் எப்படியெல்லாம் டிராவல் செய்யும்? கற்பனையை அதன் எல்லை வரைக்கும் தட்டிவிட்டிருக்கிறார் பாலாஜி தரணிதரன். டி.வி விவாதம், புரட்யூசர் கவுன்சிலில் பஞ்சாயத்து, மக்களின் எதிர்பார்ப்பு என்று தாண்டி தாண்டி வந்து கோர்ட் வரை வந்து நிற்கிறது கதையும் அதன் சுவாரஸ்யமும். 

மாண்பமை நீதிபதியாக வருகிறார் இயக்குனர் மகேந்திரன். ஏதோ இந்தப்படத்தில் நடித்தால் அது முன்னோர்களுக்கு வைத்த ‘காக்கா பிரசாதம்’ என்று நினைத்து இவரைப் போன்ற பெரிய பெரிய ஆளுமைகள் நடித்திருக்கிறார்கள். இன்னொருவர் பாரதிராஜா. சில நிமிஷங்கள் வந்தாலும் ஆளுமை ஆளுமைதான். அருமை! 

இயக்குனர் டீகே ஒரு சில காட்சிகள் வருகிறார். நல்ல முகவெட்டு. தொடர்ந்து நடிக்கலாம். பக்ஸ் என்கிற பகவதி பெருமாள், ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா போன்ற சிறப்பான நடிகர்களும் வந்து போகிறார்கள். 

சரஸ்காந்தின் ஒளிப்பதிவு பழைய காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து ஒரு வித்யாசமான முடிச்சை போட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் இசை பலமும் இல்லை. பலவீனமும் இல்லை. 

விஜய்சேதுபதி என்ற பொன்னால் குழைக்கப்பட்ட மண் பானை. இந்த வெறும் பானையில் வெள்ளமாய் நிரம்பியிருக்கிறது பாலாஜி தரணிதரனின் நகைச்சுவை உணர்வு. 

சீதக்காதி... சிரிப்பு ஜாலி! 

-ஆர்.எஸ்.அந்தணன் 
newtamilcinema.in

#seethakathiReview #VijaySethupathi #Archana #DirectorMahendran #Rajkumar #SangaradhossSwamigal #TamilDrama #VijaySethupathi25 #BalajiDharanidharan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.