Jump to content

கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு

பி.டி.ஐபெர்த், பிடிஐ
1kohlijpg
ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் 

ஆஸி. கேப்டன் பெய்ன், கோலி இடையே வாக்குவாதம் நடந்த போது நடுவர் சமாதானம் செய்த காட்சி : படம் உதவி ட்விட்டர் 

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய அணியின் விராட் கோலியும், ஆஸி.கேப்டன் டிம் பெய்னும் ஏற்கெனவே நேற்று வார்த்தையில் மோதிக்கொண்ட நிலையில், இன்றும் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

நண்பகல் உணவு இடையேவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 245 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

பெர்த்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி ஆடத் தொடங்கி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் பெய்ன் 8 ரன்னிலும், கவாஜா 41 ரன்னிலும் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

நங்கூரம், திணறல்

 

kawajpg

அரைசதம் அடித்த ஆஸி. வீரர் கவாஜா : படம் உதவி ட்விட்டர் 

 

இருவரும் இன்றைய ஆட்டம் தொடங்கியதில் இருந்து நிதானமாகவே விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோதித்தனர். காலை தேநீர் இடைவேளை வரை 19 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

களத்தில் நங்கூரமிட்டு ஆடிய உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் தனது 14-வது அரை சதத்தை 156 பந்துகளில் எட்டினார், ஆஸ்திரேலிய அணியும் 200 ரன்கள் முன்னிலை பெற்றது.

அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸி. கேப்டன் டிம் பெய்னும் திடீரென வார்த்தையில் மோதிக்கொண்டனர். அப்போது, நடுவர் கிறிஸ் கபானே தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார். கடந்த 2 நாட்களில் இருவரும் 2-வது முறையாக வார்த்தையில் மோதிக்கொண்டனர்.

பெய்னையும், கவாஜாவையும் பிரிக்க கேப்டன் கோலி பந்துவீச்சாளர்களை விஹாரி, இசாந்த், உமேஷ் யாதவ், ஷமி என மாற்றிப் பயன்படுத்தியும் பலன் இல்லை. ஆஸி. பேட்ஸ்மேன்கள் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வகையில் பேட் செய்தனர்.

உணவு இடைவேளேயின் போது, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்திருந்தது.

திடீர் திருப்பம்

 

shamijpg

திருப்புமுனையாக உணவு இடைவேளைக்குப்பின் ஷமி விக்கெட் வீழ்த்திய காட்சி : படம் உதவி ட்விட்டர் 

 

உணவு இடைவேளைக்குப் பின் ஷமி வீசிய ஓவரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

முகமது ஷமி வீசிய 79-வது ஓவரில் 5-வது பந்தை அடிக்க முற்பட்டு ஸ்லிப் திசையில் நின்றிருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெய்ன் 37 ரன்களில் வெளியேறினார்.பெய்ன், கவாஜா கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.

காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பேட் செய்ய வந்த ஆரோன் பிஞ்ச் கிளவுஸில் பந்துபட்டு, ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தற்போது கம்மின்ஸ் ஒரு ரன்னிலும், கவாஜா 71 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

ஷமி வீசிய 82-வது ஓவரில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது. நங்கூரமாக நிலைத்து ஆடிய கவாஜாவை பவுன்ஸ்ர் மூலம் வெளியேற்றினார் ஷமி. ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார் கவாஜா. அடுத்து கம்மின்ஸ் களமிறங்கினார்.  பும்ரா வீசிய  அடுத்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஸ்டார்க் , லயன் இருவரும் களத்தில் உள்ளனர்.

 

 

https://tamil.thehindu.com/sports/article25761924.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.