Jump to content

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்

December 16, 2018

கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய பட்சம் திரட்டப்பட்டு ஒரு கொத்தாகச் செயற்படும் போது கொழும்பு அரசியலில் தீர்மானிக்கும் தரப்பாக தமிழ் மக்கள் திகழ முடியும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அவ்வாறு தமிழ் பிரதிநித்துவம் ஒரு பொருத்தமான பலமான திரட்சியைப் பெறுவதென்றால் தமிழ் தலைமைகள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு சிந்திக்குமாறு தமிழ் தலைமைகள் மீது தமிழ்ச்  சிவில் அமைப்புக்கள் நிர்ணயகரமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களை சரியான வழியில் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அக் கருத்தரங்கு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் கொழும்பில் சோபித தேரரின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர்.ஜெயதேவ உயாங்கொட ஆற்றிய உரை பற்றியும் மேற்படி கருத்தரங்கில் பிரஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சிவில் அமைப்புக்கள் ‘தார்மீகத் தலையீடு’ ஒன்றை செய்ய வேண்டும் என்று உயாங்கொட கேட்டிருந்தார். அதைப் போன்ற ஒரு தலையீட்டை தமிழ் சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புக்களும் தமிழ் அரசியலிலும் மேற்கொள்ள வேண்டும் என்று மேற்படி கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.

உயாங்கொட தனது உரையில் 2015 ஆட்சி மாற்றத்தின் போது சோபித தேரர் தலைமையில் சிங்கள வெகுசன அமைப்புக்கள் மேற்கொண்ட தலையீட்டை குறித்தும் சுட்டிக் காட்டி இருந்தார். 2015 இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது மாற்றத்தைக் கோரிய மக்கள் அமைப்புக்கள் ரணில் – மைத்திரி கூட்டிற்கு ஆதரவாக செயற்பட்டன. ராஜபக்சவின் யுத்த வெற்றிவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவு சிங்கள வாக்குகளைத் திரட்டியதில் மேற்படி சிவில் அமைப்புக்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்று கூறப்பட்டது. ஆனால் இது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று என்ற அவதானிப்பும் உண்டு. அக்கால கட்டத்தில் சிவில் சமூகத்தின் தலையீடானது ஆட்சி மாற்றத்தின் தார்மீகக் கவர்ச்சியை கூட்டுவதற்கு உதவியது. அது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் லிபரல் ஜனநாயகவாதிகளை ஆட்சி மாற்றத்தை நோக்கி கவர்ந்திழுத்தது. ஆனாலும் ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகளை எண்ணிப்பார்த்ததால் ஒன்று தெளிவாக தெரியவரும். சிங்கள மக்களின் பெரும் திரள் வாக்குகள் மகிந்தவுக்கே கிடைத்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்களவு சிங்கள வாக்குகள் மைத்திரிக்கு விழுந்தன. ஆனால் எண்கணிதப்படி மகிந்ததான் சிங்கள மக்களின் தெரிவு. அதே சமயம் வடக்கு, கிழக்கு, மலையக த்தமிழ் வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் கொத்தாக மைத்திரிக்கு கிடைத்தன. அதன்படி அவரின் வெற்றியை தீர்மானித்தது அதிகபட்சம் தமிழ் முஸ்லீம் வாக்குகளே. எனவே சிங்கள சிவில் சமூகங்களின் தலையீட்டினால் மட்டும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இலங்கை தீவின் இனரீதியாகப் பிளவுண்டிருக்கும் வாக்காளர்கள் மீது நிர்ணயகரமான செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு பலத்தை தமிழ் சிங்கள முஸ்லீம் சிவில் சமூகங்கள் இனிமேல் தான் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.

இவ்வாறான ஒரு சிவில் சமூகச் சூழலில் தமிழ் தலைமைகள் மீது நிர்ணயகரமான விதத்தில் செல்வாக்கை பிரயோகிக்கவல்ல மக்கள் அமைப்புக்களைக் கட்டியெழுப்புவது யார்? எப்படி?

மேற்படி கருத்தரங்கை ஒழுங்குபடுத்திய தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் சரியான வழியைத் தெரிவு செய்யும் சரியான முடிவுகளை எடுத்திருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சரணடையாமலும் சோரம் போகாமலும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இந்த நிலைப்பாடு செயல் வடிவம் பெற வேண்டும் என்ற பொருள்பட அவர் கருத்துக் கூறினார்.

இப்படிப்பட்டதோர் சிவில் சமூகச்சூழலில் தமிழ் மக்கள் பேரவையில் வகிபாகத்தை எந்த இடத்தில் வைப்பது? அது ஒரு பிரமுகர் மைய அமைப்புதான். அடிமட்ட வலைப்பின்னலை அது கொண்டிருக்கவில்லை. அது விக்னேஸ்வரனை மையமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டது. அவர் பேரவையை ஒரு மக்கள் அமைப்பாக மாற்றப் போவதாக முன்னர் கூறிவந்தார். ஆனால் அதற்கு வேண்டிய வழிவரைபடம் எதுவும் அவரிடமோ அல்லது பேரவையிடமோ காணப்படவில்லை எனினும் மேற்சொன்ன எல்லாப் பலவீனங்களோடும் தமிழ் மக்கள் மத்தியில் நிர்ணயகரமாக இடை ஊடாட்டத்தளமாக மேலெழக் கூடிய வாய்ப்புக்களை பேரவை கொண்டிருக்கிறது. விக்னேஸ்வரனின் தலமைத்துவ பண்புருவாக்க மாற்றத்திற்குரிய ஒரு இடை ஊடாட்டத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. தமிழ் எதிர்ப்பு அரசியலுக்குரிய இடை ஊடாட்டப் பொதுத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று கூடி இடை ஊடாடக்கூடிய ஒரு பொதுத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. இது காரணமாகவே கடந்த ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஒரு கட்சியை அறிவித்தார்.

அப்படி அவர் ஒரு அக்கட்சியை அறிவித்திருக்க கூடாது என்று பேரவைக்குள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை மறைமுகமாக எற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஒரு கட்சிசயை அறிவிக்கப் போவது தொடர்பாக அவர் பேரவைக்கு அறிவித்திருக்கவில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு. ஓர் இணைத்தலைவராக இருந்து கொண்டு அவர் கட்சியை அறிவித்திருக்கக் கூடாது என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. பேரவைக்கும் விக்னேஸ்வரனுக்கும் எதிரானவர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை முகநூலில் எழுதினார்கள். அதன் பின் நடந்த பேரவைக்கூட்டத்தில் விக்னேஸ்வரன் மேற்படி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஓர் இணைத்தலைவராக இருந்து கொண்டு ஒரு புதிய கட்சிக்கு தலைவராகவும் இருக்கலாமா? என்பதனை முடிவெடுக்குமாறு பேரவையிடம் கேட்டுக் கொண்டார். பேரவைக்குள் பெரும்பான்மையானவர்கள் அவர் தொடர்ந்தும் இணைத்தலைவராக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு பேரவைக்குள் இணைத்தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். எனவே இப்பொழுதும் ஒரு புதிய கட்சியின் தலைவராகவும் பேரவையின் இணைத்தலைவராகவும் இருக்கலாம்தானே என்று கேட்பவர்களும் உண்டு.

இந்நிலையில் இப்பொழுதுள்ள கேள்வியெல்லாம் விக்னேஸ்வரனின் கட்சிக்குப் பின் பேரவையின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதுதான். இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் உட்பட எல்லாத் தமிழத் தலைமைகள் மீதும் செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒரு மக்கள் அமைப்பாகப் பேரவை கட்டியெழுப்பப்படுமா என்பது தான். அல்லது பேரவையின் அடுத்தகட்டக் கூர்ப்பு வேறொரு அமைப்பா? என்பது தான்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே பேரவையாகும். தமிழ் சிவில் சமூக அமையம் எனப்படுவது 2009க்கு பிந்திய ஒரு வளர்ச்சியாகும். யுத்த வெற்றிகளின் பின் ராஜபக்ஷ யுத்த வெற்றி வாதத்தை முன்னெடுத்த போது குரலற்ற தமிழ் மக்களின் குரல்களில் ஒன்றாக தமிழ் சிவில் சமூக அமையம் எழுச்சி பெற்றது. ஆயுத போராட்டத்தோடு நேரடியாக தொடர்புபட்டிராத நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சமூக பிரமுகர்கள், மதகுருக்கள், செயற்பாட்டாளர்களால் அது உருவாக்கப்பட்டது. அதனாலேயே அது ஒரு பிரமுகர் மைய அமைப்பாக காணப்பட்டது. அக்;கால கட்டத்தில் என்னோடு உரையாடும் போது மனோகணேசன் என்னிடம் கேட்டார். இப்படியொரு சிவில் சமூகத்தை நாங்களும் மேல் மாகாண சபையில் உருவாக்கினால் என்ன? என்று அவரிடம் சொன்னேன். இப்போதுள்ள நிலைமைகளின் கீழ் இது போன்ற பிரமுகர் மைய அமைப்புக்கள் தான் தமிழ்ப் பகுதிகளில் தோன்றலாம் என்று. போரில் தோற்கடிக்கப்பட்டு ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் தோல்வியை உடனடுத்து வரும் காலத்தில் பிரமுகர் மைய அமைப்புக்களே தலையெடுக்க முடியும். அது தான் யதார்த்தம்.
ஆனால் 2015 ஆட்சி மாற்றத்தோடு உருவாக்கப்பட்ட அதிகரித்த சிவில் ஜனநாயக வெளிக்குள் தமிழ் சிவில் சமூக அமையத்தை விடக் கூடுதலான அரசியல் பரிமாணத்தை கொண்ட ஓர் அமைப்புக்கான தேவை ஏற்பட்டது. அது தான் தமிழ் மக்கள் பேரவை. பேரவையின் மேலெழுகையும், விக்னேஸ்வரனின் மேலெழுகையும் ஒன்றுதான். கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு தளத்தை உருவாக்குவதற்கு விக்னேஸ்வரனுக்குப் பேரவை உதவியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் அவரருடைய அரசியல் ஆளுமைக் கூர்ப்பின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவிய ஓர் இடையூடாட்டத் தளமாக பேரவை செயற்பட்டிருக்கிறது. ஈழத்தமிழ் அரசியலில் இது ஒரு நூதனமான தோற்றப்பாடு. பேரவையின் பக்க வளர்;ச்சியே தமிழ் மக்கள் கூட்டணியாகும். தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு குழந்தையைப் பெறுவதற்குரிய ஒரு வாடகைத்தாயாக பேரவை செயற்பட்டிருக்கிறது எனலாமா? இது ஒரு புதிய கட்டம். இனிப் பேரவைக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் உள்ள உறவு எப்படி அமையும்?
பேரவை முழுக்க முழுக்க ஒரு மக்கள் அமைப்பாக மாறி தமிழ்த் தலைவர்கள் மீது செல்வாக்கை பிரயோகிக்கும் ஒரு வளர்ச்சிக்கு போகுமா? அல்லது தன் பக்க வளர்ச்சியாகிய தமிழ் மக்கள் கூட்டணியை தொடர்ந்து வளர்த்தெடுக்குமா?
முதலில் இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்க வேண்டும். பேரவையின் இறுதி இலக்கு என்ன? அது ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்திருக்கிறது. அந்த இறுதி இலக்கை நோக்கி அது செயற்பட வேண்டும். சரி அப்படி என்றால் அதற்கான செயல்வழி என்ன? ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். அல்லது தேர்தல் மைய அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மக்கள் மைய அரசியலை பொறுத்தவரை அதை எடுத்த எடுப்பில் கட்டியெழுப்ப முடியாது. அதைப் படிப்படியாகத்தான் செய்யலாம். இடைக்கிடை ஒழுங்கு செய்யப்படும் ஒருநாள் எழுகதமிழ் நிகழ்வுகளை வைத்து பேரவையை ஒரு பெருந்திரள் மக்களை மைய அமைப்பாகக் கூறிவிட முடியாது. அது பல்வேறு தரப்புக்களையும் உள்ளடக்கிய ஓர் இடையூடாட்டத் தளம் என்பதே சரி.
மக்கள் பங்கேற்பு அரசியலுக்குரிய அரசியல் தரிசனம் எதுவும் பேரவையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குரிய கட்டமைப்புக்களும் அதனிடம் இல்லை. பொருத்தமான யாப்பும் இல்லை. இப்படி ஒரு யாப்பு இல்லாத வெற்றிடத்தில்தான் கஜன் – சுரேஸ் – சித்தார்த்தன் போன்றோருக்கிடையிலான முரண்பாடுகள் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் ஒரு யாப்பை வரைவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை ஒரு மக்கள் மைய அமைப்பாக அடுத்த கட்டக்கூர்ப்பை அடைவதற்கு காலமெடுக்கும். அனால் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் தேர்தல் அரசியலைக் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். தேர்தல் மைய அரசியலை பொறுத்தவரை இப்பொழுது பேரவையின்; பக்க வளர்;ச்சியான தமிழ் மக்கள் கூட்டணி உண்டு. வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமைய கூடும். ஆனால் பேரவையின் பக்க வளர்ச்சியான தமிழ் மக்கள் கூட்டணியோ இன்னமும் தவழத் தொடங்கவே இல்லை. தவிர விக்கினேஸ்வரனின் தலைமையின் கீழ் ஒரு பலமான ஜக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் முழுமையாகக் கனியவில்லை.
இந்நிலையில் பேரவை முன்வைத்திருக்கும் தீர்வு திட்டத்தை நோக்கி தமிழ் அரசியலை உந்தித்தள்ள வேண்டுமென்றால் உடனடிக்கு தமிழ் மக்கள் கூட்டணியை கட்டியெழுப்புவதை தவிர வேறு நடைமுறைச் சாத்தியமான தெரிவு பேரவைக்கு உண்டா? பேரவை ஒரு மக்கள் இயக்கம் அது ஒரு பொதுத்;தளம். அது கட்சி அரசியலில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் கற்புக் கதைக்கலாமா? ஒரு அரசியல் இலக்கை அடைவதற்;கான நிறுவனக் கட்டமைப்பே ஒரு கட்சி அல்லது மக்கள் இயக்கமாகும.; பேரவையின் இலக்கு அது முன்வைத்த தீர்வுத்திட்டம்தான். அதை அடைவதற்கான ஒரு பலமான ஜக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பினால்தான் தமிழ் வாக்காளர்களையும் உலக சமுதாயத்தையும் அத்தீர்வுத் திட்டத்தை நோக்கி ஈர்க்கலாம். திரட்டலாம். விக்னேஸ்வரனின் கட்சிக்குள் பேரவை உறுப்பினரான பேராசிரியர்.சிவநாதன் மட்டுமே இணைந்திருக்கிறார். முன்பு இணைந்த மட்டக்;களப்பைச் சேர்ந்த பேரவையின் இணைத் தலைவரான வசந்தராஜா கட்சிக்குள் தொடர்ந்து செயற்பட மாட்டார் என்றே தெரிகிறது. விக்னேஸ்வரன் பேரவகை;குள் காணப்படும் கட்சிகளையும் இணைத்து ஒரு பெரும் கூட்டை உருவாக்குமிடத்து பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர். அக்கூட்டிற்காக உழைக்கக்கூடும். மாறாக தனிக்கட்சியாக அவர் தமிழ் மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்பும் போது பேரவைக்குள்ளிருந்து எத்தனைபேர் அக்கட்சியோடு இணைவார்கள்?; விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வில் அவருடைய பண்புருமாற்றத் தளமாகக் காணப்பட்ட பேரவையானது அவர் கட்சியைத் தொடங்கியதும் சற்றே விலகி நிற்பதாகத் தெரிகிறது. அவருடைய பண்புருமாற்றத் தளத்தைச் சேர்ந்தவர்களே அவருடைய புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்த்; தலைமைகள் மீது நிர்ணயகரமான நீதியான தலையீட்டை செய்யும் ஒரு மக்கள் அமைப்பெனப்படுவது ஓர் உன்னதமான கனவு. அதே சமயம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்வைக்கப்பட்ட ஒரு தீர்வு திட்டத்தை நோக்கி தேர்தல் மைய வியூகம் ஒன்றை வகுக்க வேண்டியது உடனடி தேவை.

 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையெல்லாம் மீண்டும் மீண்டும் அரைக்க வேண்டிய நிலையில் வாசிப்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது..நேரம் விரயமாக்காமலே இருந்து விடத் தோன்றுகிறது😇.
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - மூன்று ---------------------------------------------------------------------- இந்தப் பயணத்தின் பிரதான நோக்கமே கோவிலுக்கு போவது தான் என்று பல நாட்களாகவே மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. அம்மன் கோவிலின் 15 நாட்கள் திருவிழாவில் சரி நடுவில் போய் அங்கே இறங்கியிருந்தோம்.   எல்லா ஊர்களிலும் அவர்களின் ஊரையும், ஊர்க் கோவில்களைப் பற்றியும் பெருமையான கதைகள் இருக்கும். இங்கும் அதுவே. உலகிலேயே ஒரு சிவன் கோவிலும், ஒரு அம்மன் கோவிலும் அருகருகே இருந்து, ஒரே பொது வீதியை கொண்டிருப்பது இரண்டே இரண்டு இடங்களில் தான் இருக்கின்றது என்று சொல்வார்கள். அதில் ஒன்று இங்கு. அம்மன் கோவிலின் தெற்கு வீதியும், சிவன் கோவிலின் வடக்கு வீதியும் ஒன்றே. சிவன் கோவில் பிரமாண்டமானது. அது தலைவர் அவர்களின் குடும்பக் கோயில் என்ற வரலாறு கிட்டத்தட்ட எல்லோருக்குமே தெரியும். இன்றும் அவர்களின் குடும்பமே சிவன் கோவிலின் சொந்தக்காரர்களும், நிர்வாகிகளும்.   சிவன் கோவிலின் பிரமாண்டம் அதைக் கட்டியவர்கள் ஒரு காலத்தில் இருந்த செல்வாக்கான, மிக வசதியான நிலையைக் காட்டுகின்றது. இன்று அந்தக் கோவிலின் உள்ளே நிற்கும் போது, கோவிலுக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய செய்யாமல் விடப்பட்டிருக்கின்றன என்றே தோன்றியது. இன்றைய நிலையில் அவர்களால் எல்லாப் பணிகளையும் செய்வது இயலாத காரியம். ஆட்பலமும் இல்லை, பலரும் இடம் பெயர்ந்து போய்விட்டனர். ஒரு தனியார் கோவிலாகவே சதாகாலமும் இருந்த படியால், பெரிய வரும்படியும் என்றும் இருந்ததில்லை என்று நினைக்கின்றேன். அவர்களும் அதை எதிர்பார்த்ததும் இல்லை. ஆனாலும் எக் காரணம் கொண்டும் அவர்கள் அந்தக் கோவிலை வேறு எவரிடமும் கொடுக்கமாட்டார்கள். புரிந்து கொள்ளக் கூடிய பெருமையே.   அம்மன் கோவில் பொதுக் கோவில். சிவன் கோவில் அளவிற்கு கட்டுமானத்தில் பிரமாண்டமானது இல்லை. ஆனால் இதுவும் ஒரு பெரிய கோவில். ஊரே பயந்து பணியும் தெய்வம் அங்கு குடியிருக்கின்றது என்பது பெரும்பாலான ஊரவர்களின் நம்பிக்கை. இங்கு வளரும் காலத்தில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை, ஆனாலும் அடி மனதில் ஒரு பயம் என்றும் தங்கியிருந்தது. இருட்டில் பேய்க்கு பயப்படுவது போல. அம்மை, பொக்குளிப்பான் போன்ற நோய்கள் அதிகமாக வரும் சித்திரை, வைகாசி மாதங்களில் கோவில் திருவிழா நாட்கள் வருவதும் 'சாமி, கண்ணைக் குத்தும்' என்ற பயத்தை உண்டாக்கி வைத்திருந்தது.   இந்த ஊரவர்கள் படம் பார்க்க கடல் கடந்து தமிழ்நாடு போய் வருவார்கள், அம்மன் திருவிழாவிற்கு சேலைகள் எடுக்க போய் வருவார்கள், வேட்டைத் திருவிழா அன்று நடக்கும் வாண வேடிக்கைக்கு வெடிகளும், வாணங்களும் எடுத்து வர போய் வருவார்கள் என்பன பல வருடங்களின் முன்னர் நிகழ்ந்த உண்மையான நிகழ்வுகளே.   திருவிழா நாட்களில் பூசைகள் நீண்டவை. சில மணித்தியாலங்கள் எடுக்கும் ஒவ்வொரு பகல் பூசையும், இரவுப் பூசையும். மக்களில் எவருக்கும் நேரம் பற்றிய உணர்வு ஒரு துளி கூட இருக்கவில்லை என்றே எனக்குப் பட்டது. அத்துடன் பூசைகள் பல காரணங்களால் மிகவும் பிந்தி விடுகின்றது அல்லது அதிக நேரம் எடுத்து விடுகின்றது. ஆனாலும் 'இன்று கொஞ்சம் பிந்தி விட்டது...' என்ற ஒரு வரியுடன் எல்லோரும் கடந்து போகின்றனர். கோவிலை சுற்றி மூன்று மடங்களில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றது. நாங்கள் சிறு வயதில் இருந்த காலங்களில், பல திருவிழாக்களின் போது ஒரு மடத்தில் கூட அன்னதானம் கொடுக்கப்பட்டதில்லை. இன்று புலம் பெயர்ந்தவர்களே அன்னதான உபயம். அன்றைய உபயகாரர்களின் பெயர்கள் மடங்களிற்கு வெளியே அறிவிப்புக்களாக எழுதப்பட்டிருக்கின்றது.   மிகவும் ஆச்சாரம் பார்ப்பார்கள். கோவில் வீதியில் கூட மேல் சட்டை அணிய முடியாது. அப்படி மீறி அணிந்திருந்தால், யாராவது வந்து ஏதாவது சொல்லுவார்கள். தாங்க முடியாத வெக்கையும், வேர்வையும் என்று வெளியே முன் வீதியில் இருந்த வேப்ப மரத்தின் கீழ் வந்து நின்றேன். வேறு சிலரும், வயதானவர்கள், அங்கே இருந்த ஒரு திண்ணையில் ஏற்கனவே முடியாமல் அமர்ந்திருந்தனர். அதற்குப் பின்னே ஒரு மடம் இருந்தது. ஒருவர் வந்து அருகே நின்றார். சிறிது நேரம் பேசாமல் நின்றவர் மெதுவாக ஆரம்பித்தார்.   'தம்பி, இந்த மேல் சட்டை போடக் கூடாது என்று சொல்வது எல்லாம் அந்த நாட்களில் அவர்கள் செய்த சதி' என்றார். இவர் சொல்லும் அந்த 'அவர்கள்' யாராக இருக்கும் என்று அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதலில் இவர் யார் என்று எனக்குத் தெரியாது, நான் யாரென்றும் அவருக்கும் தெரிந்திருக்காது. ஆனாலும், எங்கள் இருவருக்குமிடையில் நிச்சயம் ஒரு தொடர்பு, உறவுமுறை இருக்கும். 'யார் பூணூல் போட்டிருக்கின்றார்கள், யார் போடவில்லை என்று பார்ப்பதற்கே இந்த மேல் சட்டையை கழட்டும் வழக்கம் வந்தது' என்றார். பெரியாரின் சீடர் ஒருவர்! சும்மா வெறுமனே இருவரும் பேசி விட்டு போக வேண்டியது தான், வெக்கை தெரியாமல் நேரம் போக இந்தப் பேச்சு உதவுமே தவிர ஒரு மாற்றமும் ஏற்படாத, ஏற்படுத்த முடியாத விடயங்களில் இதுவும் ஒன்று.   காலை பத்து மணிக்கு ஆரம்பித்த பூசை முடியும் போது கிட்டத்தட்ட இரண்டு மணி ஆகிவிட்டது. அதற்குப் பிறகு மடத்தில் அன்னதானம். மடத்தில் வயது போனவர்கள் இருப்பதற்கு சில கதிரைகளும், ஒன்றிரன்டு வாங்கில்களும் போட்டிருந்தனர். மற்றவர்கள் நிலத்தில் சம்மணம் போட்டே இருக்கவேண்டும். நிலத்தில் இருந்து சாப்பிட்டு விட்டு எழும்பும் போது சிரமமாகவே இருந்தது. போதாக்குறைக்கு அந்த வாரம் கரப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் அடிபட்டு இடது முழங்கால் சில்லில் ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் பயணம் நல்லதல்ல என்ற மருத்துவர்களின் ஆலோசனையை மீறியே பயணம் போய்க் கொண்டிருந்தது.   தினமும் மதியமும், இரவும் இதுவா நிலைமை என்ற நினைப்பு கண்ணைக் கட்டியது.   (தொடரும்..........)    
    • இல்லாத விடுதலை புலிகளை பார்த்து இன்னும் ஹிந்தியா வுக்கு பயம்...,  தமிழர்கள் Now: அந்த பயம் இருக்கனும்🔥🔥  
    • ஏதோ ஒரு நாட்டின் சரணாகதியாகத் தானே அரசு போகிறது. சீனாவாக இருந்துட்டு போனால் என்ன?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.