Jump to content

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: கடம்பூர் ராஜூ

raja-720x450.png

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் தொடர்ச்சியான நிலைப்பாடாமென  அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,

“22 வருடங்களாக நிலவிய ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.முக. செயற்பட்டது.

மேலும் அந்த ஆலையை திறக்க கூடாதென்பதில் அ.தி.மு.க அரசு உறுதியாகவே இன்னும் உள்ளது.

இதனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தொடர்பில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளமையால், அப்பகுதியில் 1800 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தூத்துக்குடி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/ஸ்டெர்லைட்-விவகாரத்தில்/

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.