Jump to content

வளைகுடா நாடுகள்: "பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்" - செத்துப் பிழைத்த தமிழர்களின் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ்
 
வளைகுடா நாடுகள்: 4 ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த நான்காண்டுகளில் மட்டும் சௌதி அரேபியா உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

டிசம்பர் 12, 2018 அன்று மக்களவையில், குளிர்கால கூட்டத்தொதொடரின் கேள்வி நேரத்தின்போது, வளைகுடா நாடுகளில் அதிகளவில் உயிரிழந்து வரும் இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், "2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

குறிப்பாக, கடந்த நான்காண்டுகளில் மிக அதிகபட்சமாக சௌதி அரேபியாவில் மட்டும் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் வெளியிட்ட தகவல் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அதற்கடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், குறைந்தபட்சமாக பஹ்ரைனில் 1,021 பேரும் உயிரிழந்துள்ளதாக வி.கே.சிங் வெளியிட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் என்ன?

"வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தற்கொலை, சாலை விபத்துக்கள் போன்றவற்றால் உயிரிழப்பதை தவிர்க்கும் வகையில் அங்குள்ள இந்திய தூதரகங்கள் வழியாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, மேற்கண்ட நாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பொதுவாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளான அதிக நேரம் பணிபுரிவது, மருத்துவ வசதி பற்றாற்குறை, அதிகமான வெயிலால் ஏற்படும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்காக இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்" என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் அதிகளவிலான இந்தியர்கள் பணிபுரிவதால் அவர்களது பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்காக சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்திய அரசின் இணையதள குறைத்தீர்ப்பு சேவையான "MADAD"யில் தங்களது பிரச்சனைகளை எழுப்பி, தீர்வு பெறலாம் என்று மத்திய அரசின் தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது

"பெரியளவில் படிப்பறிவு தேவையில்லை, ஆங்கில அறிவு அவசியமில்லை, கை நிறைய சம்பளம், வருடத்திற்கு ஒரு மாதம் விடுமுறை, தங்குமிடம்-உணவு இலவசம்" போன்ற கவர்ச்சிகரமான வார்த்தைகளை நம்பி தங்களது சொந்த ஊரில் வேலையில்லாதவர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

உண்மையிலேயே வளைகுடா நாடுகளில் என்ன நடக்கிறது? கிட்டத்தட்ட 30,000 இந்தியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் உயிரிழப்பதற்கு என்ன காரணம்? வேலைத் தேடி செல்பவர்கள் சம்பாதிக்கிறார்களா அல்லது முதலீடு செய்த பணத்தையும், வாழ்வாதாரத்தையும் இழக்கிறார்களா?

"பாஸ்போர்ட்டை பிடுங்கி, பாலைவனத்தில் விட்டனர்"

வளைகுடா நாடுகள்: 4 ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

அரபு நாடுகளில் பெரும் பணத்தை சம்பாதிக்கும் நோக்கத்தில் பல லட்சங்களை செலவழித்து அங்கு செல்லும் பலர், மீண்டும் திரும்பி வரமுடியாமல், சிக்கி தவித்து ஒரு கட்டத்தில் உயிரிழப்பவர்கள் மத்தியில், மேற்குத் தமிழகத்தில் உள்ள ஒரு சிறுநகரமான தாராபுரத்திலுள்ள ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டே மாதத்தில் சௌதி அரேபியாவிலிருந்து திரும்பிவிட்டதாக கூறுகிறார்.

"எனது நண்பர்கள் மூலம் மதுரையிலுள்ள, மும்பையை தலையிடமாக கொண்டு செயல்படும் ஏஜெண்டின் தொடர்பு கிடைத்தது. டைல்ஸ் பதிக்கும் தொழிலை மேற்கொண்டு வரும் நான் அதே வேலை சௌதி அரேபியாவில் வேண்டுமென்று கேட்டேன். வேலை வாங்கித்தருவதாக உறுதிமொழி அளித்துவிட்டு, முன்பணமாக ஒரு லட்சமும், பிறகு விசா, விமான பயணச்சீட்டுகளுக்காக ஐம்பது ஆயிரம் மேலாக வாங்கிக்கொண்டனர். மாதத்திற்கு சுமார் 70-75 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்ற கூறிய நம்பிக்கையில் கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து பெருங்கனவுடன் சௌதி அரேபியாவில் காலடி வைத்தேன். ஆனால், மறுநிமிடமே பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. விமான நிலையத்திலிருந்து என்னை அழைத்துசெல்வதற்கு வந்திருந்த ஒருவர் எனது பாஸ்போர்ட்டை அங்கேயே பிடுங்கிக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காரில் பாலைவனத்தை ஒட்டிய பகுதிக்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு மிகப் பெரிய மனித நடமாட்டமற்ற பங்களாவை காட்டி, இதை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்" என்று தழுதழுத்த குரலில் தனது வேதனையான அனுபவத்தை விளக்குகிறார் கார்த்திகேயன்.

வளைகுடா நாடுகள்: 4 ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

பாஸ்போர்ட்டை பிடுங்குவது, உறுதியளித்த வேலையை, வசதியை செய்ய மறுப்பது போன்றவை குறித்து சௌதி அரேபியாவிலிலுள்ள இந்திய தூதரகத்தில் புகார் அளித்தீர்களா என்று அவரிடம் கேட்டபோது, "நான் வலுக்கட்டாயமாக அடைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு சாலையை அடைவதற்கே ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டும். பேருந்து வசதியற்ற அந்த பகுதியிலிருந்து நகரத்தை அடைவதற்கு கார் மட்டுமே ஒரே வழியாக இருப்பதால், அங்கேயே முடங்கிவிட்டேன். அந்த சூழ்நிலையில், இந்திய தூதரகம் உள்ளிட்ட யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை, அப்படி முயற்சி செய்தாலும் பயனில்லை என்பதால் வீட்டிற்கு போன் செய்து நான் உடனடியாக திரும்ப உள்ளதாக கூறினேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஆடு, மாடு மேய்த்த பி.இ பட்டதாரிகள்

சௌதி அரேபியாவுக்கு சென்ற ஒரே வாரத்தில் அங்கிருந்து புறப்பட நினைத்தும் ஏன் தமிழகம் வருவதற்கு இரண்டு மாதங்களானது என்று அவரிடம் கேட்டபோது, "முதல் மாதம் சம்பளம் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடலாம் என்று காத்திருந்தேன். மாதம் 75 ஆயிரம் சம்பளம் என்று ஏஜெண்டுகள் கூறிய நிலையில், உணவு போன்றவற்றை கழித்துக்கொண்டு எனக்கு கையில் கிடைத்தது வெறும் 15 ஆயிரம் ரூபாய்தான். மேலும், அங்கிருந்து தமிழகம் திரும்புவதற்கு விசா, விமான பயணச்சீட்டு ஆகியவற்றை பெறுவதற்கு ஒன்றரை லட்சம் செலவழித்து அங்கிருந்து புறப்படுவதற்கு இரண்டு மாதமாகிவிட்டது" என்று கார்த்திகேயன் கூறுகிறார்.

வளைகுடா நாடுகள்: 4 ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்படத்தின் காப்புரிமை MARWAN NAAMANI

"ஒருநாள் நான் வேலை பார்த்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, ஆச்சர்யமளிக்கும் வகையில் தமிழில் பேசும் இளைஞர்களை சந்திக்க நேர்ந்தது. தமிழகத்தில் பெரிய கல்லூரிகளில் பி.இ படித்த அந்த இளைஞர்கள் அங்கு வாழ்க்கையே நொந்துபோய் மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்கள். தங்களுக்கு சொந்த ஊருக்கே சென்று அங்கேயே நிரந்தரமாக தங்க விரும்புவதாகவும், ஆனால் இங்கிருந்து தப்ப முடியவில்லை என்றும் அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்" என்று வேதனையுடன் கூறிய கார்த்திகேயன் இதுபோன்று மிகுந்த வேலைப்பளு, மன அழுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரை சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல இயலவில்லை என்பதால் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சியளிக்கிறார்.

"மொழி, கலாசாரம், காலநிலை என ஒண்ணுமே தெரியாத நாட்டில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் சம்பாதிக்க செத்து பிழைப்பதற்கு, சொந்த ஊரில் குடும்பத்தோட சேர்ந்து இருந்து 250 ரூபாய் சம்பாதிப்பது எவ்ளோ மேல்," என்று தனது வேதனையை நம்முடன் பகிர்ந்து கொண்டார் கார்த்திகேயன்.

"அரேபியர்களின் வீடுகளில் பணிபுரிபவர்களின் நிலையை விவரிக்க முடியாது"

"துபாயில் எனக்கு வேலை கிடைத்தவுடனேயே அதற்கு காரணமாக இருந்த நண்பருக்கு வேலை பறிபோனதுடன் அவர் ஒரே மாதத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அந்நாட்டின் பணிப்பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், மன அழுத்தத்தையும் எனக்கு உண்டாக்கியது. அதுமட்டுமின்றி, நமது சிறிய வயதிலிருந்து எதிரிகளாக சொல்லி வளர்க்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த 12 பேருடன் 13வதாக என்னையும் ஒரே வீட்டில் தங்க வைத்தபோது எனக்கு பயமும், பதற்றமும் ஏற்பட்டது. ஆனால், அவர்கள் உடனடியாக காட்ட தொடங்கிய அன்பு, அவர்களை பற்றிய மனநிலையை மாற்றியதுடன், நான் துபாயில் தொடர்ந்து இருப்பதற்கும் உதவியது" என்று கூறுகிறார் தற்போது துபாயில் வசிக்கும் திருச்சியை சேர்ந்த மது ரஞ்சனி.

தற்போது துபாய் அரசின் உதவிபெறும் நிறுவனமொன்றில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வரும் இவர், அந்நாட்டில் அரேபியர்களின் வீடுகளில் ஓட்டுநர்களாக, சமையல் செய்பவர்களாக, உதவியாட்களாக வேலை செய்பவர்கள் மிகவும் மோசமாக, தரக்குறைவாக நடத்தப்படுவது வாடிக்கையான ஒன்று என்றும் தாங்கள் இங்கு வருவதற்கு முதலீடு செய்த பணத்தையாவது சம்பாதித்துக்கொண்டு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் பலர் பணிபுரிந்து வருவதாகவும் கூறுகிறார்.

மது ரஞ்சனிபடத்தின் காப்புரிமை Facebook Image caption மது ரஞ்சனி

"துபாயை பொறுத்தவரை அரசாங்க நிறுவனத்திலோ அல்லது அரசு உதவிபெறும் நிறுவனத்திலோ அலுவலக வேலை செய்பவர்களுக்கு நல்ல ஊதியமும், விடுமுறையும், பணிப்பாதுகாப்பும் கிடைக்கிறது. ஆனால், வளைகுடா நாடுகளுக்கு போதிய படிப்பறிவு இல்லாதவர்கள் அதிகளவில் வருவதால், அவர்கள் மேற்கண்ட எதையும் எதிர்பார்க்க முடியாது. நிறுவனங்களில் கடைநிலை ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கு அதிக பணிநேரம், மன அழுத்தம், பணிப்பாதுகாப்பின்மை போன்றவை பிரச்சனைக்குரியவைகளாக இருந்தால், அரேபியர்களின் வீடுகளில் பணியாற்றுபவர்கள் கார் ஓட்டுவது முதல் உரிமையாளர்களின் வீட்டு கழிவறையை சுத்தம் செய்வது வரை அனைத்து வேலைகளையும் வலுக்கட்டாயத்தின் பேரில் செய்யும் நிலை உள்ளது" என்று அவர் விவரிக்கிறார்.

இந்தியர்கள் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த பணியாளர்களுக்கு இருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, "ஒரு பணியாளருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றாலோ, தரக்குறைவாக நடத்தப்பட்டாலோ அல்லது வேறெதாவது பிரச்சனை இருந்தாலோ அவருக்கு உதவி புரியும் வகையில் துபாயில் சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், அவற்றை அணுகி நீதியை நிலைநாட்டுவதற்கு செலவிட வேண்டிய பணம், நேரம் ஆகியவற்றை கருதி தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை பொறுத்துக்கொண்டு இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

வளைகுடா நாடுகள்: 4 ஆண்டுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்படத்தின் காப்புரிமை Getty Images

பணியிடத்தில் நடத்தப்படும் விதமும், காலநிலையும் இங்கு பணிபுரியும் பலரை சொந்த ஊரை நோக்கி இழுத்தாலும், தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி தொடர்ந்து பணிபுரிபவர்கள் ஒரு கட்டத்தில் நோய்வாய்ப்பட்டோ அல்லது தற்கொலை செய்துகொண்டோ இறக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாக மது ரஞ்சனி கூறுகிறார்.

பெண்கள் பாதுகாப்பு

"கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக துபாயில் பணிபுரிந்து வரும் எனக்கு, இதுவரை எவ்விதமான பிரச்சனையும் ஏற்பட்டதில்லை. துபாயில் ஆண்களைவிட, பெண்கள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உதாரணத்துக்கு, பெண்ணொருவரை தெரியாமல் இடித்துவிட்டால் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில், அதை பிரச்சனையாய் எழுப்பும்பட்சத்தில் அந்த ஆண் அதிகபட்சமாக நாடு கடத்தப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது" என்று மது கூறுகிறார்.

ஆனால், பொதுவாக இரவு நேரத்தில் வெளியில் அதிகம் செல்லாத தான், ஒருமுறை நண்பர்களுடன் சென்றபோது அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறுகிறார். "பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சாலைகளிலேயே பளீச்சென ஆடைகளை உடுத்திக்கொண்டு நிற்பதும், அவர்களை கார்களில் வரும் முன்பின் தெரியாதவர்கள் சர்வசாதாரணமாக அழைத்துச்செல்வதையும் பார்த்தபோதுதான் துபாயில் தடைசெய்யப்பட்ட பாலியல் தொழில் கொடிகட்டி பறப்பது அதிர்ச்சியடைய வைத்தது. எனவே, குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு வெளியில் சென்றால் எந்த பெண் வேண்டுமானாலும், பிரச்சனையில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக நான் எண்ணுகிறேன்" என்று அவர் கூறுகிறார்.

"சுமார் இருபத்தைந்து வருடங்களாக சௌதி அரேபியாவில் பணிபுரிந்த எனது தந்தை இரண்டாண்டுகளுக்கு முன்பு அங்கேயே மாரடைப்பால் இறந்துவிட்டார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாங்கள் எங்களது தந்தையின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கு பல்வேறு மத்திய, மாநில அரசுத்துறைகளை அணுகியும் எவ்வித பலனும் அளிக்காததால் சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் கையூட்டு கொடுத்து தந்தையின் உடலை அவர் இறந்து 43 நாட்களுக்கு பின்பு கொண்டுவந்தோம்" என்று தனது மோசமான அனுபவத்தையும் விளக்குகிறார்.

https://www.bbc.com/tamil/global-46563631

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு முக்கிய விடயத்தையும் சொல்லியாக வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகள் சென்றால் பணம் சம்பாதிக்கலாமென்பது உண்மைதான்.

ஆனால் அதீத ஆசையில், நல்ல வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்துவரும் முகவர்களிடம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவதற்கு முன் வேலையை பற்றி விசாரித்து தங்களின் சாமர்த்தியத்தை, விழிப்புடன் இருப்பதை காட்ட எவரும் எத்தனிப்பதில்லை.

ஏதாவது ஒரு விசா கிடைத்தால் போதும், அங்கே இறங்கி பின்னர் பார்த்துக்கொள்ளலாமென முண்டியடித்து வரவேண்டியது, இவர்களின் கண்மூடித்தனமான ஆசையை துஷ்பிரயோகம் செய்யும் முகவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்காமல், டூரிஸ்ட் விசாவில் இங்கே வந்துவிட்டு பின்னர் 'லபோ.. லபோ..' என கூச்சல் போடவேண்டியது..

இதுவும் நடக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இங்கே ஒரு முக்கிய விடயத்தையும் சொல்லியாக வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகள் சென்றால் பணம் சம்பாதிக்கலாமென்பது உண்மைதான்.

ஆனால் அதீத ஆசையில், நல்ல வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றி அழைத்துவரும் முகவர்களிடம், மத்திய கிழக்கு நாடுகளுக்கு வருவதற்கு முன் வேலையை பற்றி விசாரித்து தங்களின் சாமர்த்தியத்தை, விழிப்புடன் இருப்பதை காட்ட எவரும் எத்தனிப்பதில்லை.

ஏதாவது ஒரு விசா கிடைத்தால் போதும், அங்கே இறங்கி பின்னர் பார்த்துக்கொள்ளலாமென முண்டியடித்து வரவேண்டியது, இவர்களின் கண்மூடித்தனமான ஆசையை துஷ்பிரயோகம் செய்யும் முகவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்காமல், டூரிஸ்ட் விசாவில் இங்கே வந்துவிட்டு பின்னர் 'லபோ.. லபோ..' என கூச்சல் போடவேண்டியது..

இதுவும் நடக்கிறது.

உண்மை வன்னியர், தங்கள் கடவுச்சீட்டில் என்ன வீசா உள்ளது என்று தெரியாமலே பலர் புறப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.