Jump to content

முதல் பார்வை: ஜானி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பார்வை: ஜானி

உதிரன்சென்னை
johnnyjpg

ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. 

பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக்  ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள்.  சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். 

பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்படுகிறது. ஆனால், பணத்தை எடுத்துச் செல்லும் ஆத்மா பாட்ரிக் கொல்லப்படுகிறார். அதற்கடுத்து பிரபு, சாயாஜி ஷிண்டே, ஆனந்த் ராஜ், அஷுதோஷ் ராணா என நால்வரும் அடுத்தடுத்துக் கொல்லப்படுகிறார்கள்.  இந்தக் கொலைகளைச் செய்பவர் யார், ஏன் அந்தக் கொலைக்கான பின்னணி என்ன, பிரசாந்த் எப்படி இதில் சிக்கி மீள்கிறார், துரோகி யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை. 

'கத்தி'யின் எதிர் நாயகன் நீல் நிதின் முகேஷ் நடிப்பில் இந்தியில் வெளியாகி ஹிட்டடித்த 'ஜானி கத்தார்' படத்தை தமிழில் இயக்குநர் வெற்றிச்செல்வன் மறு ஆக்கம்   செய்திருக்கின்றார்.  

'சாஹசம்' படத்துக்குப் பிறகு  இன்னும் கொஞ்சம் அதிக எடையுடன் வந்து திரையை ஆக்கிரமிக்கிறார் பிரசாந்த். பயம், பதற்றம், பீதி, குற்ற உணர்ச்சி, சோகம், வெறி, ஆவேசம், தயக்கம், அப்பாவித்தனம் என எல்லா உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியான முக பாவனைகளால் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறார். கதையின் முக்கியக் காட்சிகளில் பிரசாந்தின் ரியாக்‌ஷன்கள் சொதப்பல். 

பிரபுவும் வழக்கமான நடிப்பைக் கொடுக்கத் தவறியிருக்கிறார்.  அஷுதோஷ் ராணாவும், ஆனந்த்ராஜும் நடிப்பில் ரசிக்க வைக்கிறார்கள்.  ஆத்மா பாட்ரிக், கலைராணி, தேவதர்ஷினி ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

கதாநாயகிக்கான பங்களிப்பு கவர்ச்சிதான் என்று சஞ்சிதா ஷெட்டி எப்படி நம்பினார் என்று தெரியவில்லை. அவரின் தாராளம் முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.  சாயாஜி ஷிண்டேவின் தமிழ் அவ்வளவு உவப்பாக இல்லை. நடிப்பிலும் தளர்வு தெரிகிறது. 

''சாகடிச்சுப் பாத்திருப்ப, இப்போ செத்துப் பாரு'', ''தூரமா போகும்போது தும்மினா போற காரியம் நடக்காதுன்னு என் மனைவி சொல்லுவா... இப்போ அது நடந்துடுச்சு'' போன்ற தியாகராஜன் வசனங்கள் படத்தின் பரபரப்பைக் குறைத்து கிச்சுகிச்சு மூட்டுகின்றன. ''அவங்க செத்ததுல தப்பில்லை. அவங்க யாரும் உத்தமனில்லை'' என்ற வசனத்தில் மட்டும் கொலைக்கான காரணங்களை நியாயப்படுத்த முயற்சி செய்யப்பட்டுள்ளது. அது சரியாக சொல்லப்படாததால் அதுவே படத்தின் பலவீனமான அம்சமாகிவிடுகிறது. 

சும்மா ரெண்டு மிரட்டு மிரட்டி எல்லாம் எனக்குத் தெரியும் என்று எந்த கேரக்டர் சொன்னாலும் அப்படியே ஆமாம் சாமி போட்டு பிரசாந்த் ஒப்பிக்கிறார். இது நம்பும்படியாக இல்லை. பிரசாந்தும் யாரையும் தேடிப் போய் குழப்புவது, பிரச்சினையைச் சொல்வது என்று  தேடலுடன் இல்லை. அவர் பாட்டுக்கு சும்மா இருக்கிறார். வருகிறவர்கள் எல்லாம் வான்டட் ஆக வந்து வண்டியில் ஏறுகிறார்கள். இதனால் நாயகனுக்கான சவாலே இல்லாமல் போகிறது. இந்த இடத்தில் மட்டும் திரைக்கதை சறுக்குகிறது. 

எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. ரஞ்சன் துரைராஜ் பின்னணி இசை படத்துடன் பொருந்திப் போகிறது. பாடல்கள் இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். 

குளோரோபார்ம் மூலம் மயக்கம் வரவழைப்பது, ஜானி பெயர் பயன்படுத்தும் இடம், பாக்யராஜ் படம் பார்த்துவிட்டு அதற்கேற்ப ஒரு திட்டமிடுவது என வெற்றிச்செல்வன் சில அம்சங்களை படத்தில் நுட்பமாகப் பயன்படுத்தி இருக்கிறார். மொத்தத்தில் பிரசாந்தின் முந்தையப் படங்களைக் காட்டிலும்  'ஜானி' அவரின் திரை வாழ்க்கை ஜான் அளவுக்கு முன்னேறப் பயன்பட்டுள்ளது.

 

https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article25743786.ece?utm_source=HP-RT&utm_medium=hprt-most-read

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.