Jump to content

அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்த 7 வயது சிறுமி தடுப்புக் காவலில் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
Migrant caravanபடத்தின் காப்புரிமை Reuters Image caption மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து பால்லாயிரம் பேர் அமெரிக்காவுக்கு தஞ்சம் கோரி வந்துள்ளனர். (கோப்புப்படம்)

அமெரிக்க எல்லை காவல் படையினரின் காவலில் இருந்தபோது, 7 வயது சிறுமி மரணமடைந்தது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

 

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவை நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்த 7,500க்கும் அதிகமான தஞ்சம் கோரிகள், அமெரிக்காவில் நுழைய அனுமதிக்கப்படாததால் அமெரிக்க - மெக்சிக எல்லையில் தங்கியுள்ளனர்.

அவர்களில் சிலர் அமெரிக்க எல்லைக்குள் நுழையவும் முயற்சி செய்து வருகின்றனர்.

 

குவாட்டமாலாவை சேர்ந்த சிறுமி ஜகெலின் கால் மாகுயின், தனது தந்தையோடு சேர்ந்து கடந்த வாரம் அமெரிக்க-மெக்சிக எல்லையை கடந்த பின்னர் தடுத்து வைக்கப்பட்டார்.

நீர்சத்து குறைந்து விட்டதால் அந்த சிறுமி இறந்து விட்டதாக முன்னதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தடுப்புக்காவலில் இருந்தபோது அவர்களுக்கு உணவும், நீரும் கொடுக்கப்பட்டது என்று எல்லையிலுள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இறுதி அறிக்கை வெளியிடுவதற்கு முன்னால் அரசு கண்காணிப்பு அமைப்பு ஒன்று இந்த சம்பவத்தை புலனாய்வு செய்கிறது.

கடுமையான குடியேற்றக் கொள்கை மற்றும் மத்திய அமெரிக்காவில் இருந்து, குடியேறும் நோக்கத்தோடு அமெரிக்க எல்லைக்கு பயணம் மேற்கொண்டு வரும் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காட்டி வரும் கடுமையான நடவடிக்கைகளில் இருந்த அதிக கவனத்தை இந்த சிறுமியின் இறப்பு மீண்டும் புதுப்பித்துள்ளது.

தங்களில் தாயகங்களில் அனுபவிக்கின்ற சித்திரவதை, ஏழ்மை மற்றும் வன்முறைகளில் இருந்து தப்பியோடி வருவதாக குடியேறிகள் கூறுகின்றனர்.

சட்டப்பூர்வமற்ற வகையில் அமெரிக்காவில் நுழைவோர் நாடு கடத்தப்படுவர் என்று அமெரிக்கா வழங்கியுள்ள எச்சரிக்கைக்கு பின்னரும், அமெரிக்காவில் குடியமரும் நோக்கத்தோடு வருவதாக பல குடியேறிகள் கூறுகின்றனர்.

என்ன நடந்தது? அமெரிக்க அதிகாரிகளின் தகவல்

எல்லை பாதுகாப்ப படையினர்படத்தின் காப்புரிமை Getty Images

டிசம்பர் 6 தேதி அமெரிக்க எல்லையை சட்டபூர்வமற்ற முறையில் கடந்த இந்த சிறுமியின் தந்தையும், சிறுமியும் தடுத்து வைக்கப்பட்டதாக அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு சேவை தெரிவிக்கிறது.

அதன் பின் செய்யப்பட்ட பரிசோதனையில், இந்த சிறுமிக்கு உடல்நல பிரச்சனைகள் எதுவும் இருக்கவில்லை.

94 மைல் (151 கி.மீ) தொலைவிலுள்ள எல்லை பாதுகாப்பு நிலையத்திற்கு பேருந்தில் அனுப்பப்படும் வரை உணவு, நீர் மற்றும் கழிவறை வசதிகள் இருந்த ஓர் இடத்தில்தான் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால், பேருந்தில் இருந்தபோதே இந்த சிறுமி வாந்தி எடுக்க தொடங்கினார் என்று கூறுகின்ற அதிகாரிகள் பின்னர் சிறுமி இறந்து விட்டர் என்று தெரிவித்துள்ளனர்.

எல்லை பாதுகாப்பு நிலையத்தை இந்த பேருந்து சென்றடைந்தவுடன் அவசர மருத்துவ பராமரிப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

எல் பாசோவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் இருமுறை அவருக்கு நினைவு திரும்பியது என்று மத்திய எல்லை பாதுகாப்பு படை தெரிவித்தது.

வரைபடம்

இதயத்தின் இயக்கம் நின்றுவிட்டதால் இந்த சிறுமி இறந்துவிட்டதாக கூறியுள்ள மத்திய எல்லை பாதுகாப்பு படை, மூளையில் வீக்கம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

"அவசர மருத்துவ உதவி வழங்குவதற்கு எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் இயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்," என்ற இந்த படையின் ஆணையாளர் கெவின் கே. அலீனான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

"அமெரிக்க உள்துறையின் புலனாய்வை நாங்கள் வரவேற்கிறோம். இதில் நடந்தவற்றை மீளாய்வு செய்து, இந்த சோக நிகழ்வில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்வோம்," என்று அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் பதவி விலக வேண்டுமென சில ஜனநாயக கட்சியினர் கூறியுள்ள நிலையில், அமெரிக்க முன்னாள் வெளிநாட்டு செயலர் ஹிலரி கிளிண்டன் உள்பட பலரும் எல்லையில் நிலவும் மனிதநேய நெருக்கடியின ஒரு பகுதி இதுவென கூறியுள்ளனர்.

https://www.bbc.com/tamil/global-46576920

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.