Jump to content

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
woman_thinking.jpg?zoom=1.21000002622604
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
 
 இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் பொதுமக்கள் வேண்டுமென்றே இரண்டு அல்லது மூன்று வைத்திய நிபுணர்களால் பார்வையிடப்பட்டு (ஒவ்வொரு பார்வையிடலுக்கும் தனிக் கட்டணம், பரிசோதனைகளுக்கு புறம்பான கட்டணம்) இறுதியில் பெருந்தொகைக்கு அத்தனியார் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வேதனையான விடயம் என்னவெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தத் தனியார் வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சிலரும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து அனுப்பப்படும் நோயாளர்களைக் கட்டணம் அறவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வியாபாரத்தில் இணைந்து செயல்படும் அனைத்து வைத்தியர்களும் மக்களது வரிப்பணத்தில் கல்வி கற்று மக்களுக்காகச் சேவையாற்றுவதாகக் கடமைச் சபதம் எடுத்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் பொது மக்கள் இவ்வாறான மருத்துவ நியதிக்கும் நீதிக்கும் மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதற்கு உடந்தையாகச் செயற்படும் பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகளுக்கும் எதிராக ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கையில் இறங்குவது குறித்துப் பிரதேச பொதுமக்கள்  சில அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது.
Link to comment
Share on other sites

பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் போரின் பின்னர் வாள்வெட்டுக் குழுககளின் அச்சுறுத்தல் கஞ்சா பாவனை நுண்கடன் என்ற கந்துவட்டிக் கொடுமை, இவற்றோடு இன்று மருத்துவ வியாபாரம் சேர்ந்துகொள்கின்றது. மேற்சொன்ன எல்லாம் ஏதோ ஒரு கட்டத்தில் முடிவுக்கு கொண்டுவரலாம் ஆனால் மருத்துவ வியாபாரம் இயல்பான ஒன்றாக மாறிவிட்டால் வறுமைப்பட்ட மக்கள் மறைமுகமாக கொலைக்களத்துக்கு அன்றாடம் தள்ளப்படுவார்கள். இந்தியாவில் நடுத்தர குடும்பம் ஒன்றுக்கு ஏற்படும் மருத்துவச் செலவால் சொத்துக்களை இழந்து கடனாளியாகவும் ஆகின்றார்கள். மீள எழுவது பெரும்பாலானவர்களுக்கு சத்தியமற்றுப் போகின்றது. அதைவிட மோசமான நிலை எம்மவர்களுக்கு ஏற்படும். இன்றய இந்த ஆரம்பம் நாளை உயிரைவைத்து விழையாடும் சூதாட்டமாக வேகமாக மாறிவிடும். அறம் சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறையை கொண்டுவருவது பின்னர் சாத்தியமற்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழின அழிப்பு செய்ய இயலுமோ
அத்தனை வழிமுறைகளையும் பாவித்து கட்சி பேதமின்றி
ஆட்சிக்கு வரும் சிங்கள தலைவர்கள் நன்கு திட்டமிட்டு
தமிழன அழிப்பைச் செய்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் உள்ள  தனியார் வைத்தியசாலைகளின் கிளைகள் பல இப்போது இலங்கையிலும் திறக்கிறார்கள்...கவலை தரக் கூடிய விடயம் 

நான் வெளி நாட்டில் இருந்து முதல் முதல் ஊருக்குப் போகும் போது என் அம்மா கூட கூட தனியார் வைத்தியசாலையில் காசு கொடுத்து மருந்து எடுக்க தொடங்கி இருந்தார்...எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை...கண்ட  பாட்டுக்கு மருந்து எடுத்து கெதியில செத்தும் போனார் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

எந்தெந்த வழிகளில் எல்லாம் தமிழின அழிப்பு செய்ய இயலுமோ
அத்தனை வழிமுறைகளையும் பாவித்து கட்சி பேதமின்றி
ஆட்சிக்கு வரும் சிங்கள தலைவர்கள் நன்கு திட்டமிட்டு
தமிழன அழிப்பைச் செய்கிறார்கள்.

எல்லாப் பழிகளையும் சிங்களத்தின் தலையில் கட்டிப்போட்டு நாம் வசதியாக தப்பி விடலாம்.எம்மினம் விழங்கின மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சண்டமாருதன் said:

அறம் சார்ந்த நிலைக்கு மருத்துவத்துறையை கொண்டுவருவது பின்னர் சாத்தியமற்றது. 

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

On 12/15/2018 at 7:32 PM, பிழம்பு said:

வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மிகக் கேவலமான படித்த பிச்சைக்காரர்கள் என்றால் அதில் வைத்தியர்கள் 90% ஆனவர்கள் அடங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

ஊரிலையெல்லாம் காருக்கு பிழை வந்தால் பாட்சை களட்டி உரஞ்சி கிரஞ்சி கடைஞ்சு திருத்தி புதிசுமாதிரி ஆக்கிவிடுவினம்.பிறகு பழைய ஒயிலை விட்டு எஞ்சினை ஓட வைப்பினம்... இஞ்சை அப்பிடியில்லை....எது பிழையோ அதை களட்டி எறிஞ்சு போட்டு புதிசு போடுறதுதன் வழமை. இல்லையெண்டால் காரையே மாத்துவினம்.tw_glasses:

விளங்கினால் சரி...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம புலம் பெயர் எல்லாரின்  தேகம் உருபெற்றது அங்குள்ள மண்ணின் மூலமே நான் நினைக்கிறன் காரை திருத்த கொம்பணிக்கே அனுப்பிஎடுத்தல் முறை போல் உள்ளது குசா .

 

 

இங்குள்ளவர்களையும் சும்மா சொல்ல ஏலாது புதிய மருந்துகளின் பரிசோதனை களம் புலம்பெயர்கூட்டம் தானே .

Link to comment
Share on other sites

On 12/15/2018 at 4:51 PM, குமாரசாமி said:

இது ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலும் மருத்துவ குளறுபடிகள் நன்றாக நடக்கின்றது. நம் கண்களுக்குத்தான் தெரிவதில்லை. அல்லது அதன் தாக்கம் எமக்கு தெரிவதில்லை.

மறுப்பதற்கில்லை. ஆனால் ஏதோ ஒருவகையில்  சட்டம் ஒரு பாதுகாப்பைக் கொடுக்கின்றது. நேரடியாக மக்களிடம் இருந்து பணம் பறிப்பது வைதியர்களால் சாத்தியமற்று இருக்கின்றது. மேலும் பல்வேறுவிதமான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் மருத்துவ செலவுக்கு உதவியாகவும் இருக்கின்றது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை சட்டம் சிங்களப் பேரினவாதத்தின் கைகளில் உள்ளது. அது வாள்வெட்டுக் குழுக்களுக்கும் வைத்தியர்களுக்கும் சாதகமாகவே இருக்குமேயன்றி வறுமைப்பட்ட மக்களுக்காக ஒருபோதும் இருக்காது இதனால் மக்கள் மிக பாதிப்புக்க உள்ளாவார்கள். 

சாதாரணமாக 3 பிள்ளைகளுககு மேல் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 5000 ருபாய் உதவித்தொகை என்ற திட்டமே எவ்வாறு அணுகப்படுகின்றது என்பதைப் பாருங்கள்

7 hours ago, பெருமாள் said:

கடுமையான வயித்து வலி இவர்கள் குடுத்த மருந்தை நிப்பாட்டிவிட்டு ஊர் சென்றவர்களுக்கு அப்படியொரு வலி இருந்ததே தெரியாமல் சந்தோசமாய் இருக்கினம் வயது போன அம்மா  கால் எடுத்து வைக்க முடியாது இவர்களின் குளுசை மாற்ற முடியவில்லை ஊர் கடலில் ஒரு வாரம்  காலை நனைக்க நோவு போயிட்டுத்தாம் கிழவி இங்குவந்து பரதநாட்டியம் ஆடாத குறை எனக்கு இன்னும் விளங்காத மர்மம் .

ஏராளமான காரணங்கள் இருக்கின்றது என நம்புகின்றேன். நிறைய சூரிய ஒளி கிடைக்கின்றது. எல்லா நிலத்திலும் விளையும் உணவுகளில் ஒரே மாதிரியான சத்து இருப்பதில்லை. அதிக ரசாயனங்கள் பாவிப்பதும். மரபணு  மாற்றப்படுதலும் என ஏராளமான காரணங்கள் இருக்கின்றது. இயற்கையாக சத்துள்ள மண்ணில் தான் சத்துள்ள காய்கறிகள் விளையும். அந்தவகையில் தாய்மண் வளமானது. ஆனால் பணத்தின் மீதான பாய்ச்சலும் பொருளாதார நெருக்கடியும் தாய்மண்ணிலும் அதிகப்படியான ரசாயன உரப்பாவனையால் மண்வளம் பாதிக்கப்படுகின்றது. ஊரில் சிறு பிராயத்தில் நாட்டுமாட்டுப் பாலை பாவித்தேன்  எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை ஆனால் இங்கு பால் ஒத்துக்கொள்வதில்லை.  வீடுகளுக்குள் அடைபட்ட வாழ்வும் மன அழுத்தமும் என ஏராளமான காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.  புலம் பெயர் வாழ்வு சிஙகளப் பேரினவாத அடக்குமுறையில் இருந்து ஒரு பாதுகாப்பை தந்துள்ளது ஆனால் ஆரோக்கியம் மன நிம்மதி மகிழ்சி என்பன கேள்விக்குறியாகவே உள்ளது. ஒன்றை இழந்துதான் ஒன்றை அடைய முடியும் என்ற விதியில் பலதை இழந்துதான் இந்த புலம்பெயர் வாழ்வின் அமைப்பும் உள்ளது என நம்புகின்றேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.