Jump to content

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

RANIL-WICKREMESINGHE.jpg

பிரதமராக ரணில் ஞாயிறு பதவியேற்பார்!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பிரதமராக பதவியேற்பார் என ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகப்பூர்வமான அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம் தான் புதிதாக ஏற்றுக்கொண்ட பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

இந்நிலையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க 5 ஆவது முறையாக பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/பிரதமராக-ரணில்-ஞாயிறு-பத/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா. இதோட கொஞ்ச நாளைக்கு சிறிலங்காவின்  அரசியல் ஆருடம் பார்க்கும் வேலை நிற்கும். ஆனால் பிரித்தானிய பிரெக்ஸிற் பிஸியாக வைத்திருக்கும்😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் மாற்றம் இத்துடன் நின்றுவிடாது வேறு வகையில் ரணிலுக்கு வில்லங்கம் தொடரும் என்றுதான் எனது ஆருடம் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

பிரதமர் மாற்றம் இத்துடன் நின்றுவிடாது வேறு வகையில் ரணிலுக்கு வில்லங்கம் தொடரும் என்றுதான் எனது ஆருடம் சொல்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். 

நானும்,  அப்படித்தான் நினைக்கின்றேன்.... 
சம்பந்தனுக்காக... தனது எதிர்க் கட்சி  தலைவர் பதவியையே... விட்டுக்  கொடுத்தவர் மகிந்த.
அந்த நிலையில்... சம்பந்தர் / சுமந்திரன் கும்பல்... ரணிலுக்கு ஆதரவு கொடுத்ததை... 
மகிந்த...  என்றுமே மன்னிக்க மாட்டார். 
எதுக்கும்.... சம்பந்தனும், சுமந்திரனும்.... வீட்டுக் கதவை... இறுக்கி பூட்டிப் போட்டு.. படுக்கிறது நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

மைத்திரி இருக்கும் வரைக்கும் திடுக்கிடும் அரசியல் மாற்றங்கள் தொடரும்.

Ãhnliches Foto

சீனாக் காரனும் விட மாட்டான்,  இந்தியாக் காரனும்... விட மாட்டாமல் ... 
இரண்டு பேரும்,  மூக்கில்... இரத்தம் வரும் வரை, போராடுவார்கள். போராட வேண்டும்... 
அப்பிடி  இருந்தால்... தான்... ஆர், பெரிசு என்று நாங்கள்.. ஒரு முடிவுக்கு வரலாம்.

பஞ்சாயத்து... தொடரும்...
எலே... சண்முகம்,  அந்த செம்பை.. திரும்ப எடுத்து....  "மினுக்கி வை.... "  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எதுக்கும்.... சம்பந்தனும், சுமந்திரனும்.... வீட்டுக் கதவை... இறுக்கி பூட்டிப் போட்டு.. படுக்கிறது நல்லது. 

இருவருக்கும் 4 அடுக்கு பாதுகாப்பு.பண்ணுற என்றால் பண்ணிப் பாருங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

சீனாக் காரனும் விட மாட்டான்,  இந்தியாக் காரனும்... விட மாட்டாமல் ... 
இரண்டு பேரும்,  மூக்கில்... இரத்தம் வரும் வரை, போராடுவார்கள். போராட வேண்டும்... 
அப்பிடி  இருந்தால்... தான்... ஆர், பெரிசு என்று நாங்கள்.. ஒரு முடிவுக்கு வரலாம்.

பஞ்சாயத்து... தொடரும்...
எலே... சண்முகம்,  அந்த செம்பை.. திரும்ப எடுத்து....  "மினுக்கி வை.... "  :grin:

image_1544668337-0be77adf79.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நிலைப்பாடுகளுக்கு அப்பால், 

RANIL-WICKREMESINGHE.jpg

ரணில் ஒரு விட்டு கொடாத கொள்கை சார்ந்த ஆனால் துர் அதிஷ்ட்டம் மிக்க அரசியல் வாதி. ரவி கருணாநாயக்க போன்ற ஊழல்வாதிகளின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு எடுத்த அரசியல்வாதி.

காமினி திசாநாயக்க மரணத்தின் பின்னர், சந்திரிகாவை எதிர்த்து காமினி மனைவி போட்டியிட விரும்பிய போது முதல் தடவையாக விட்டுக்  கொடுத்தார்.

சந்திரிகா இரண்டாவது தடவை போட்டி இடுகையில், புலிகள் தாக்குதலில், கண் பாதிக்கப் பட்டு, அதனைக் காட்டியே, வென்று இருக்கக் கூடிய ரணிலை தோற்க  வைத்து வென்றார்.

2004ல் சந்திரிகா, இவரை பதவி பதவி நீக்கிய போது, போராட்டம் நடத்துங்கள் என்று சொல்லப்படட போது, அமைதியாக நகர்ந்தார். ஏனெனில், சந்திரிகா அப்படி செய்ய அதிகாரம் சட்டப்  படி உள்ளது என அவருக்கு புரிந்து இருந்தது.

2005ல் மகிந்தா, புலிகளுடன் டீல் பேசிவிட்டார், நீங்களும்  பேசுங்கள் என்ற போது மறுத்தார். தோல்வி அடைந்தார். புலிகள் பகிஷ்கரிப்பால் மகிந்தா வென்றார்.  ரணில் வெல்லுவார்  என இருந்த மேலை நாடுகள், புலிகளை ஒடுக்கவேண்டும்  என முடிவு செய்ய, இந்த பகிஸ்கரிப்பு முக்கிய காரணமாக அமைந்தது.

2010ல் சரத் பொன்சேகாவுக்காக மீண்டும் விட்டுக் கொடுத்தார்.

2015ல் மைத்திரிக்காக மீண்டும் விட்டு கொடுத்தார். மைத்திரி வென்றதும், 2004 சந்திரிக்கா அனுபவத்தினால், உடனடியாகவே, 19A திருத்த சட்டத்தினைக்  கொண்டு வந்து, ஜனாதிபதியின் அதிகாரத்தினை குறைக்க அலுவல்கள் பார்த்தார்.

2004 ல் சந்திரிகா பதவி இறக்கியபோது போனது போல கிளம்பி போவார் என மஹிந்தவும், மைத்திரியும் எதிர்பார்த்து, அவரை பதவி இறக்க, சட்டத்தினை கொண்டு வந்த அவருக்கு, மைத்திரிக்கு அந்த அதிகாரம் இல்லை என, சொல்லி போராடி, இன்று வென்று இருக்கிறார்.

மகிந்தாவுக்கான சகல வழிகளும் மூடப் பட்டு விட்டதால், அவர் வெளியே போவதை தவிர வேறு வழி இல்லை.

பிரதமரை நீக்கும் அதிகாரம் மைத்திரிக்கு 4 1/2 வருடத்தின் பின்னரே கிடைக்கும். ஆனால், பாராளுமன்றின் 4 1/2 வருடம் முடிவத்துக்கு முன்னரே ஜனாதிபதி தேர்தல் வந்து, மைத்திரி வீடு போய்  விடுவார்.

அடுத்த டிசம்பர் - ஜனவரி ஜனாதிபதி தேர்தலில், ரணில் தான் வெல்லக் கூடிய குதிரை. அதனால் தான், தமிழ், முஸ்லீம் கட்சிகள் அவர் பின்னே உறுதியாக உள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, இந்தியா, ஜப்பான், மேற்குலக நாடுகள் கூட அதே நம்பிக்கையில் உள்ளன.

இதன் காரணமாகவே கூட்டமைப்பு தனது நம்பிக்கையையும் வைத்து இருக்கிறது.

அரசியலுக்கு அப்பால், அவரது விடா முயற்ச்சிக்கு வெற்றி கிடைக்குமாயின், அது விடாமுயற்ச்சியாளர்கள் அனைவருக்கும் ஒரு  நம்பிக்கை தருவது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.