Jump to content

'அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' - காங்கிரஸ் தலைவர் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினத்தந்தி: "அயோத்தியில் ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்"

அயோத்தியில் 'ராமருடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும்' என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரன் சிங் கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 151 மீட்டர் உயரத்தில் சிலை வைக்கப்படும் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், அங்கு ராமர் சிலையுடன் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உத்தரபிரதேச மாநில அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கரன்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

"மிதிலையில் சீதை கல்யாணம் நடைபெற்றது. அதன்பின்னர் அவர் அயோத்திக்கு சென்றார். அங்கு சில காலம் இருந்தார். அதன்பின்னர் அவர் ராமருடனும், லட்சுமணனுடனும் 14 ஆண்டுகள் வனவாசம் போனார். மீண்டும் அயோத்திக்கு வந்தார். எனவே அயோத்தியில் ராமர் சிலைக்கு பக்கத்தில் சீதைக்கும் சிலை வைக்க வேண்டும். இந்த சிலை, ராமர் சிலை உயரத்தில் பாதியளவு இருக்க வேண்டும். இது சீதைக்கு கௌரவத்தை அளிக்கும்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-46562673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமர், வல்லபபாய் படேல், வரிசையில் என்.டி.ராமாராவ்! ஆந்திராவையும் விட்டுவைக்காத சிலை கலாசாரம்?

524_04325.jpg

மறைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு அமராவதியில் 108 அடி உயரச் சிலை அமைக்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர மாநில ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டுள்ளன...

சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சர்தாய் வல்லபபாய் படேலுக்கு குஜராத் மத்திய அரசு 182 மிட்டர் உயர பிரமாண்ட சிலையை நிறுவியது. உலக அளவில் மிகவும் உயரமான சிலை இது என்ற பெயரையும் இந்தச் சிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து ராமருக்கு உலகிலேயே உயரமான 221 மீட்டர் உயர பிரமாண்ட சிலை லக்னோவில் நிறுவப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவைக் குழு கூடி யோகி ஆதித்யநாத் தலைமையில் அறிவித்தது. மகாராஷ்டிராவில் சிவாஜிக்கும் பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை அமைக்கும் கலாசாரத்தில் தற்போது ஆந்திரப் பிரதேசமும் இணைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் தலைநகர் அமராவதியில் உள்ள நீருகொண்டா மலையில் 108 அடி உயரம் கொண்ட என்.டி.ராமா ராவ் சிலையை நிறுவ ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாக ஆந்திர ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியாவது...

சிலை தொடர்பாக ஆறு மாதிரி வரைபடங்களைப் பரிசீலித்த அமராவதி அபிவிருத்திக் கழக அதிகாரிகள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் காட்டி அவற்றில் 108 அடி உயரம் கொண்ட சிலையின் மாதிரிக்கு ஒப்புதலைப் பெற்றிருக்கிறார்கள்.

இந்தச் சிலை 406 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது. இவற்றில் 155 கோடி ரூபாயில் 200 ஏக்கர் பரப்பளவில் உணவு விடுதிகள், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம், ஷாப்பிங் பகுதி, அருங்காட்சியகம், தங்குமிடம் ஆகியவற்றை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிதாக அமைக்கப்படும் இந்த என்.டி.ராமாராவ் சிலைக்கு 'தெலுங்கு மக்களின் சுய கவுரவ முன்மாதிரி' என்று பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியானது அடுத்த 46 மாதங்களில் முடிவடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிலை தொடர்பாக ஆந்திர அரசு இதுவரை எந்த அறிவிப்பும் செய்யாத நிலையில் ஊடகங்களில் மட்டும் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதேநேரம் முன்னாள் தெலுங்கு தலைமைச் செயலாளர் ஐயர் கிருஷ்ண ராவ் இதை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

https://www.vikatan.com/news/india/144587-andra-government-planning-to-build-new-statue-for-ntr.html

டிஸ்கி :

2002102300030201.jpg

இவை எல்லாம் வல்லரசு எண்டு கனவிலும் நினைக்கப்படாது .ஆசை இருந்தால் கேப்டன் விஜயகாந்து நடித்த "வல்லரசு" திரைப்படம் வேண்டுமானால் பார்க்கலாம் .😇

Link to comment
Share on other sites

மக்களுக்கு கோடி பிரச்சனைகள் உள்ளன. இவர்கள் சிலை வைப்பதிலேயே காலத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இலக்குவனையும், அனுமானையும் விட்டு விட்டார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

மக்களுக்கு கோடி பிரச்சனைகள் உள்ளன. இவர்கள் சிலை வைப்பதிலேயே காலத்தையும் பணத்தையும் விரயமாக்குகிறார்கள்.

சிலை வைச்சு பெருமைப்படுற நாடு அது.....
ஆனால்  கிந்திய ஏழைப் பிள்ளையளுக்கெண்டு  கிறிஸ்மஸ் நேரம் மில்லியன் கணக்கிலை காசு  சேர்த்து அனுப்புற நாடுகளும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.