Jump to content

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம்

Editorial / 2018 டிசெம்பர் 14 வெள்ளிக்கிழமை, மு.ப. 10:57 Comments - 0

மஹிந்தவின் மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனை ஆரம்பம்

image_938cbcc98e.jpg

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/மஹிந்தவின்-மேன்முறையீட்டு-மனு-மீதான-பரிசீலனை-ஆரம்பம்/175-226600

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த, அமைச்சரவைக்கு எதிரான இடைக்காலத் தடையுத்தரவு நீடிப்பு; மஹிந்தவின் மனு தள்ளுபடி

பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை நீடித்து, உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர் தீர்ப்பளித்தது.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிலையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகிய நீதியரசர்கள் குழு, மஹிந்த குழுவினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

டேய் சோனமுத்தா.... போச்சா... பெரியவங்க சொன்னா கேட்டிருக்கணும்.....

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.