Jump to content

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும்

December 14, 2018
 

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும்  சைவமாநாடும் 15.12.2018 சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ து.கு.ஜெதீஸ்வரக்குருக்கள் , சிவஸ்ரீ மு.பாஸ்கரக்குருக்கள் (ரவி) , கலாநிதி விக்கினேஸ்வரி பவநேசன் கௌரவ விருந்தினர்களாக ச.விநாயகமூர்த்தி (கரவெட்டி),  ச.தட்சணாமூர்த்தி (மீசாலை) , திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்து (வவுனியா) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வரவேற்புரையினை சைவப்புலவர் சா.பொன்னுத்துரையும், ஆசியுரையினை சிவஸ்ரீ து.ஜெகதீஸ்வரக்குருக்களும், அருளுரையினை ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளும், சிறப்புரையினை செந்தமிழ்ச்செல்வர் ச.விநாயகமூர்த்தி  ஆகியோர் ஆற்றவுள்ளார்கள்.

கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை சைவப்புலவர் சங்க பொருளாளர் ச.முகுந்தன் நெறிப்படுத்தலில்  நடைபெறவுள்ளது. கௌரவ பட்டங்களில் சைவாகமபூஷணம் பட்டத்தினை சிவஸ்ரீ து.கு.ஜெகதீஸ்வரக்குருக்களும்  , சிவஸ்ரீ மு.பாஸ்கரக்குருக்களும் , சைவப்புரவலர் பட்டத்தினை யாழ்ப்பாணம் சிவகணேசன் ரெக்ரைல்ஸ் உரிமையாளர் கனகசபை அருள்நேசனும்,  பௌராணிகர் கௌரவத்தினை பௌராணிகர்கள் ச.விநாயகமூர்த்தி  , ச.தட்சணாமூர்த்தியும் , மூத்த சைவப்புலவர் கௌரவத்தினை சைவப்புலவர் திருமதி புனிதவதியார் சிவக்கொழுந்தும்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த முதுகலைமாணி பட்டம் பெற்ற சைவப்புலவர்கள் கௌரவத்தினை சாமித்தம்பி பொன்னுத்துரை , திருமதி பத்மாவதி தங்கராசா , திருமதி புஸ்பலட்சுமி விமலகாந்தன் ஆகியோர் பெறவுள்ளவார்கள்

தேர்வுச் செயலாளர் சைவப்புலவர் கந்த சத்தியதாசன் நெறிப்படுத்தலில் நடைபெறும் இளஞ்சைவப்புலவர் சைவப்புலவர் பட்டமளிப்பு நிகழ்வில் இளஞ்சைவப்புலவர் பட்டத்தினை கலாமோகன் பிரகான் (வாழ்வகம் சுன்னாகம்) ,செல்வி கோகிலா சிதம்பரப்பிள்ளை (கோவிற்குளம் வவுனியா) , செல்வி அன்னலட்சுமி இராமர் (கண்டி) , ஆறுமுகம் சசிநாத் (கனகராயன்குளம் வவுனியா) , செல்வி ஷமந்தி சந்திரசேகரம் (கொழும்பு) , திருமதி சுசிலாதேவி கிருஷ்ணராஜன் (வவுனியா) , இந்திரராசா மோகன்  (உடுவில் ) , செல்வி ரேபிகா சண்முகலிங்கம் (முழங்காவில்) , செல்வி சுதேந்தினி கணபதிப்பிள்ளை (வெற்றிலைக்கேணி முள்ளியான்) , திருமதி புவனராணி இரகுநாதன்  (அரியாலை) , செல்வி லோஜிதா மகேந்திரன் (மீசாலை) , பகீரதன் சுகிர்தன் (திருக்கோவில் மட்டக்களப்பு) , சாமித்தம்பி திருநாவுக்கரசு (கோட்டைக்கல்லாறு மட்டக்களப்பு) , திருமதி மகேஸ்வரி விஜயரத்தினம் (சாவகச்சேரி) , செல்லத்துரை பிருந்தாபரன் (திருநெல்வேலி யாழ்ப்பாணம்) ஆகியோரும் சைவப்புலவர் பட்டத்தினை திருமதி காந்திமதி சூரியகுமார் (லண்டன்) , முருகப்பன் சேமகரன் (அவுஸ்ரேலியா),  திருமதி கமலாதேவி சபாரத்தினம் (அரியாலை) , திருமதி லீலாவதி அருளையா (தெல்லிப்பளை) , கணபதிப்பிளைளை வெற்றிவேல் (கிளிவெட்டி திருகோணமலை) , நாகமணி நித்தியானந்தன் (லண்டன் ) , இராமையா ஜீவன்பிரசான் (மாத்தளை)  , திருமதி சற்சொரூபவதி  சுபமுரளிதரன் (கொழும்பு) , திருமதி பத்மாவதி தியாகராசா (லண்டன்) , நாராயணமூர்த்தி சுஜீவன் (தவசிக்குளம் வவுனியா)  , சிவஸ்ரீ கறுவல்தம்பி குமராசாமி (மண்டூர்) , செல்வி மந்தாகினி பாலச்சந்திரன் ( மல்லாகம்) ஆகியோரும் பட்டத்தினைப் பெறவுள்ளார்கள்.

சைவநாதம் 8 மலர் வெளியீட்டில் வெளியீட்டுரையினை சைவப்புலவர் சி.கா.கமலநாதன் நயப்புரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்த முதுகலைமாணி இணைப்பாளர்  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி விக்கினேஸ்வரி பவநேசன் ஆகியோர் வழங்கவுள்ளார்கள்.

முதற்பிரதியினை செ.சற்குணம் அவர்களும் சிறப்பு பிரதியினை அலங்கார வித்தகன் க.வரததாசன் அவர்களும் பெறவுள்ளார்கள் நன்றியுரையினை அகில இலங்கை சைவப்புலவர் சங்கச் செயலாளர் த.குமரன் வழங்கவுள்ளார்.

 

http://globaltamilnews.net/2018/106502/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.