Jump to content

மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மடுவை புனித பிரதேசமாக பிரகடனம் செய்வதை உடன் நிறுத்தவும் : மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயம் தொடர்பில் ஜனாதிபதி  செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும்,ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியான தொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றிய செயலாளர் ஜே.ஜே.கெனடி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள மடு அன்னையின் தேவாலயமானது 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாலயமாக காணப்படுகின்றது.

மடு அன்னையின் தேவாலயத்திற்கு இலங்கை வாழ்  மக்கள் குறிப்பாக இன,மத, மொழிக்கு  அப்பால் அன்னையின் அருளையும் ஆசீயையும் பெறுவதற்காக வந்து செல்லுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாலயத்தின் வருடாந்த உற்சவத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் இன மத பேதமின்றி கலந்து கொள்ளுவது உலகறிந்த உண்மை. மடு தேவாலய பிரதேசமானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  ஒரு பகுதியாக காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்ற காலத்தில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்னையின் ஆலயத்தின் சுற்றுவட்டத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர். 

அவ்வேளையில் எறிகணை வீச்சினால் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டதுடன் அன்னையின் ஆலயம் சேதமாக்கப்பட்டதையும் உலகமறியும். 2020 ஆம் ஆண்டிற்குள் மடுமாதா தேவாலயத்தின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு ஜனாதிபதியினால் மடு தேவாலய பிரதேசத்தினை புனித பூமியாக மாற்றுதல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கடிதத்தின் பிரகாரம் பாவனையில் உள்ள அனைத்து காணிகளையும் அபிவிருத்தி செய்வதற்காக உரிய அமைச்சின் ஊடாக இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டது.

இக் குழுவில் உள்ளடங்கியவர்களின் விபரம் தொடர்பாக  ஜனாதிபதியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தினை மன்னார் மறை மாவட்ட   ஆயரும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் வண பிதா அன்ரனி விக்டர் சோசை அடிகளாரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்னவும்    மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், சிரேஸ்ட சட்டத்தரணியுமான   அன்ரன் புனிதநாயகமும் இணைந்து கலந்துரையாடியதன் பிரகாரம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்தில் முக்கியமாக 2 விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அமைச்சின் ஊடாக  நியமிக்கப்பட்ட குழுவில் மடு தேவாலயத்தின் பரிபாலகர் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும், மன்னார் மறை மாவட்ட  ஆயர் ஆண்டகையும் இக்குழுவில் உள்வாங்கப்படுவதோடு மடு தேவாலய பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படும்  எந்த விதமான அபிவிருத்தி திட்டங்களும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையின் பரிசீலனையுடனும், அனுமதியுடனும் செயற்படுத்தப்பட வேண்டுமெனவும், இந்த இரண்டு விடயங்களும் புதிதாகப் பிரசுரிக்கப்படும் வர்த்தமானியில் உள்ளடக்கப்பட வேண்டும் எப்பதுடன் 1982 ஆம்  ஆண்டு வெளியிடப்பட்ட யாத்திரை ஸ்தலங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் இது தொடர்பான சரத்துகள் உள்ளடங்கியதாக புதிய வர்த்தமானி அறிவித்தல் இருக்க வேண்டும் என்றகோரிக்கைகளும் ஆகும்.

இந் நிலையில்  ஆயர் ஆண்டகையின் கடிதத்திற்கு எந்த விதமான பதிலும்  ஜனாதிபதி செயலகத்தினால்  இற்றவரைக்கும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது 302 ஏக்கர் காணியை மட்டும் புனித பூமியாக பிரகடனப்படுத்தி வெளியிடப்படவிருக்கும் வர்த்தமானி அறிவித்தலின் மாதிரி வரைபு ஒன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த மாதிரி வரைபின் படி தற்போது மடு தேவாலயத்திற்கு உரிய ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணியை புனித பூமி என்ற போர்வையில் 302 ஏக்கருக்குள் மட்டுப்படுத்தப்படும் ஒரு செயலாக கத்தோலிக்க ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

எதிர்வரும் 16.12.2018 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் பொது விளையாட்டரங்கில் நடை பெறவிருக்கின்ற தேசிய நத்தார் தின விழாவில் இது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு ஜனாதிபதி செயலகத்தினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பாக அனைத்து மக்கள் சார்பான அதிருப்தி, ஆட்சேபனையினை தொடர்பில் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ப. அன்ரன் புனிதநாயகம்  09.12.2018 அன்று ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த சட்டத்தரணியுமான றியன்சி அரச குணரட்ன மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை அடுத்து   ஜனாதிபதிக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையின் அடிப்படையில் 16.12.2018 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மடு தேவாலயத்தினை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் விடயத்தினை ஒத்திவைக்குமாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை ஜனாதிபதிக்கு 09.12.2018 அன்று தொலைநகல் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

எனவே  ஐனாதிபதி  செயலகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கும், ஒரு தலைப்பட்சமான முடிவுகளுக்கும் அனைத்து மக்கள் சார்பாகவும் கண்டனத்தை தெரிவிப்பதோடு ஐனாதிபதி இந்த விடயத்தை உடனடியாக நிறுத்தி, இரண்டு பக்கமும் நேரடியான கலந்துரையாடலை மேற்கொண்டு சரியானதொரு முடிவை எமது மக்களுக்கும், எமது மறை மாவட்டத்திற்கும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து நிற்கின்றோம்.

 

http://www.virakesari.lk/article/46346

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.