Jump to content

பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட் அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல் !

rajini-milkbath.jpg

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்திருக்கிறது. மிகப்பெரிய பட்ஜெட் படம் என்று விளம்பரங்களில் கூவிக் கொண்டிருந்தாலும் இப்படத்தின் வழியாக சில சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.

அது என்ன சர்ச்சை? அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு தமிழகத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கும் கஜா புயல் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். அதன் பின்பு சர்ச்சைக்குள்ளான ரஜினி ரசிகர்கள் குறித்துப் பேசுவோம்.

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கஜா புயலினால் ஏழு மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் புயலால் பலர் மரணமடைந்திருக்கின்றனர். ஏராளமான ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், தென்னை மற்றும் வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓடு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஏராளமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இன்னும் பல கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்று சொல்வதைவிட, குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீர் கூட கிடைக்கவில்லை என்பது கவலைக்குரிய செய்தி.

இதில் கொடுமை என்னவென்றால் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிலுள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இயற்கை விவசாயியான இவருக்கு கவியாழினி என ஐந்து மாத கைக்குழந்தை உள்ளது. கஜா புயலால் இவரின் வீட்டின் மீது மரம் விழ, கைக்குழந்தையோடு மொத்தக் குடும்பமும் நிவாரண முகாமில் தஞ்சமடைந்திருக்கிறது.

வீட்டை இழந்து வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் தமிழ்ச்செல்வனின் மிகப்பெரிய சோகம், அவருடைய கைக்குழந்தைக்குப் பால் கிடைக்கவில்லை என்பதுதான். தாய்ப்பால் கொடுப்பவர்கள் சத்தான உணவு சாப்பிட வேண்டும். அப்போதுதான் நன்றாகப் பால் சுரக்கும். ஆனால் எல்லாவற்றையும் இழந்து நிவாரண முகாமில் நாட்களைக் கழித்துவரும் அவர்களுக்கு மூன்று வேளையும் போதிய உணவு கிடைக்கிறதா என்பதே மிகப்பெரிய கேள்வி. இந்த நிலையில் சத்தான உணவுக்கு எங்கு போவது? அதனால் போதிய தாய்ப்பால் இல்லாமல் தன் குழந்தை கஷ்டப்படுகிறது என்று மனம் நோகிறார்.

சரி பால் பாக்கெட்டாவது கிடைத்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்தால் அதுவும் சாத்தியமில்லாததாக இருக்கிறது என்கிறார். பால் பாக்கெட்டுகளை அதிகம் பயன்படுத்தாத கிராமாக அது இருக்கிறது. தினமும் புதிதாக கறந்த பாலை, மாடு வளர்ப்பவர்களிடம் இருந்து நேரடியாகப் பயன்படுத்துபவர்கள் தான் இங்கு அதிகம். கஜா புயலால் ஏராளமான மாடுகள் இறந்துவிட, இருக்கும் மாடுகளும் மேய்ச்சலுக்கு நிலமின்றி தவித்து வருகின்றன. மாட்டுக் கொட்டகைகளைப் புயல் புரட்டிப் போட்டதோடு நின்றுவிடாமல், மாடுகளின் தீவனமான வைக்கோல் போர்களையும் சீரழித்துவிட்டது. எனவே டெல்டா மாவட்டங்களில் பாலுக்குத் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

வெளியூர்களிலிருந்து பாக்கெட் பால் இங்கு கொண்டு வந்தாலும் மின்சாரம் இல்லாததால் சேமித்து வைக்கும் வசதி இல்லை. எனவே குறைவான அளவு பால் பாக்கெட்டுகளே டெல்டா பகுதிகளில் கிடைக்கின்றன. அவற்றையும் நகரங்களில் இருப்பவர்கள் வாங்கி விடுவதால் கிராமங்களில் இருப்பவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற வேதனையான செய்தியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது கஜா புயலால் பாதிக்கப்பட்ட பல இடங்களுக்குப் பொருந்தும்.

தமிழ்ச்செல்வன், “என் குழந்தைக்குத் தேவையான பால் கிடைச்சாலே போதும் சார்” என்று சொல்லும் போதே அவரின் குரல் உடைந்து அழுகையாக மாறுகிறது. ஊருக்கெல்லாம் சோறு போட்ட இயற்கை விவசாயிக்கு இந்த அவலமா? என்ற கேள்விதான் நம்முள் உடனே எழுகிறது.

இப்படியொரு வேதனையான செய்தியை கேள்விப்படும் அதே நேரத்தில், நாமெல்லாம் 'பூரித்துப் போகும்' அளவுக்கு ரஜினி ரசிகர்கள் ஒரு செயலைச் செய்திருக்கிறார்கள். அதைத் தெரிந்து கொண்டு அப்படிப்பட்ட அரிய செயலை செய்த ரஜினி ரசிகர்களை என்ன நினைக்கத் தோன்றுகிறது என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.

அதுமட்டுமல்ல ரஜினி ரசிகர்கள் செய்த அந்த அரிய செயலை பால் முகவர்கள் சங்கம் 'பாராட்டி' அவர்களுக்கு வாழ்த்துகளையும் குவித்து வருகிறது. அவற்றை கொஞ்சம் இங்கே பார்ப்போம்.

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரஜினி ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க, ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை இரத்த தான முகாம்கள், உடல் உறுப்பு தானம், கண்தானம், மது மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்களை நடத்தி ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட தனது ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு கபாலி திரைப்படம் வெளியான போதும், 2018 ஆம் ஆண்டு காலா திரைப்படம் வெளியான போதும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகளின் கவனத்திற்கும் கோரிக்கையாகக் கொண்டு சென்றோம். ஆனால் எங்களது கோரிக்கைகள் குறித்து குறைந்தபட்ச அளவில்கூட பரிசீலிக்க அவர்கள் முன்வரவில்லை.

இந்தச் சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் வெளியாவதற்கு முன்பே எங்களது சங்கத்தின் கோரிக்கையாக மூன்றாவது முறையாக மீண்டும் கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் பதிவுத் தபால் வாயிலாக ஒப்புகைச் சீட்டுடன் அனுப்பியிருந்தோம். அந்தப் பதிவு தபாலினை இருவர் தரப்பிலும் பெறப்பட்டதற்கான ஆதாரமாக ஒப்புகைச் சீட்டு எங்களுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக மீண்டும் அனுப்பிய கோரிக்கையைப் பெற்ற பின்பும் ரஜினி வாய் திறக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.

தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி துவங்கிப் புரட்சி செய்யப் போவதாக கூறும் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு விசயங்களில் வாய் மூடி மௌனம் காப்பது போல உயிரற்ற கட்அவுட்களுக்குப் பாலாபிஷேகம் செய்யும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்திட கண்டிப்பான உத்திரவை இடவேண்டும் என்கிற எங்களது கோரிக்கையை வழக்கம் போல் மௌனமாகக் கடந்து புறக்கணித்துச் செல்கிறார்.

இதைப் பார்க்கையில் கொஞ்சம்கூட சமூக அக்கறை இல்லாத தனது ரசிகர்களை நல்வழிப்படுத்த எண்ணாத நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகர்களை இனிமேல் அந்த ஆண்டவனாலும்கூட காப்பாற்ற முடியாது என்பது தெள்ள‌த் தெளிவாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் தனது ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வைக்க முன் வராத இவர், தமிழக அரசியலில் நுழைந்து மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்பது அவரது ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றி தனது திரைப்படங்களை ஓட வைத்து, அதன் மூலம் கோடிகளைக் குவிக்கும் யுக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" என்று அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தன்னைப் பற்றியே தெளிவான ஒரு சிந்தனை இல்லாதபோது நடிகர் ரஜினிகாந்த் எப்படி தனது ரசிகர்களை நல்வழிப்படுத்துவார்? காலா திரைப்படம் வெளியான நேரத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரிய போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று சாடியவர்தானே. திரையில் அவர் போராடினால் அது போராட்டம். நிஜத்தில் அது சமூகவிரோதம். என்ன ஒரு முரண். இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. அவர் கைநீட்டி சம்பளமாக கோடிகளில் வாங்குவதற்கு இயக்குநர் சொல்கிறபடி வாய்மூடிக் கொண்டு, இயக்குநர் சொல்லிக் கொடுக்கப்படும் சைகைகளையும் வசனத்தையும் உச்சரித்து நடிக்கிறார். அதற்காகத்தான் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

ரஜினி உண்மையிலேயே பிழைக்கத் தெரிந்தவர்தான். அவர் நல்லதொரு அரசியல் செய்கிறார் என்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். சினிமாவை வைத்து பிழைப்புவாத அரசியல் செய்கிறார். அதையும் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு யார் பொறுப்பு? ஏற்கனவே இருபது ஆண்டுகளாக நம்பி விட்டார்கள். இனியும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்க வேண்டாம். நாமும் அவர்களுக்காக கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் வேண்டிக் கொள்வோம், ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதற்காக.

கண்டிப்பாக அவர் வரவேண்டும். ஆம் சினிமா வழியாகவே தான். அப்போதுதான் அவருக்காக தனது சொந்தப் பணத்தை நிறைய செலவழித்து கட்அவுட்கள் வைத்து அதில் பாலைப் பீய்ச்சி அடிக்க முடியும். அதன் வழியாகத்தான் நாடு பெரும் வளர்ச்சியை நோக்கி நகர முடியும்.

அந்த வளர்ச்சி எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்வோமா?

உலக அளவில் பட்டினியாக இருப்பவர்களின் அட்டவணையில் இடம் பெற்றுள்ள 119 நாடுகளில், 103 வது இடத்தில் இருக்கிறது இந்தியா. மிக வேகமாக வளரும் பொருளாதரத்தைக் கொண்ட நம் நாட்டில் பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை, நிலப்பரப்பு ஆகியற்றின் அடிப்படையில் நம் நாட்டுப் பட்டினியை ‘தீவிரம்’ என்று வகைப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் தலைநகரமான டெல்லியில் சாப்பிட உணவே கிடைக்காமல் பசியாலேயே மூன்று சிறுமிகள் கடந்த ஜுலை மாதம் இறந்திருக்கின்றனர். நாட்டிலேயே நபர் வாரியாக வருவாய் அதிகமுள்ள நகரம் டெல்லி என்கிறார்கள். அங்கு நிலைமை இப்படி என்றால் மற்ற நகரங்களின் நிலை என்னவாக இருக்கும்?

ஊட்டச்சத்துக் குறைவால் ரத்தசோகை, உடல் வளர்ச்சிக் குறைவு, வயதுகேற்ற எடை, உயரம் இல்லாமை என்று இந்தியச் சிறார்கள் இருப்பது உலகிலேயே இந்தியாவில்தான் இப்போது அதிகம் என்று தேசிய குடும்ப சுகாதர ஆய்வு -2016 தரும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளன.

ஒருபக்கம் நாட்டில் பல இடங்களில் சிறார்கள் பட்டினியால் உயிர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் நாடு முழுவதும் ரஜினி நடித்த 2.0 திரைப்படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கான டிக்கட் விலைகூட ஆயிரங்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தலைவர் படம் என்றால் சும்மாவா?

வடமாநிலங்களில் படிப்பறிவு இல்லாத ரசிகர்கள் கூட கட்அவுட்களில் பாலைப் பீய்ச்சி அடிப்பது கிடையாது. ஆனால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள்தான் இவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து இதுபோன்ற செயல்களை கைவிடுமாறு வழிநடத்த வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

போனால் போகட்டும். அவர் தெரியாமல் சொல்லிவிட்டார். தமிழகத்தில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கு நிறைய விழிப்புணர்வு இருப்பதினால்தானே புயலால் பாதிக்கப்பட்டு, ஒருவேளை பால்கூட கிடைக்காத சிறு குழந்தைகளுக்குக்கூட, அந்தப் பாலைக் கொடுக்காமல் கட்அவுட்களில் பீய்ச்சி அடித்துக் கொண்டாடுகிறார்கள். இதை அறிவுள்ள ரஜினி ரசிகர்களைத் தவிர வேறு யாரும் செய்துவிட முடியுமா?

ரஜினி ரசிகர்கள் கட்அவுட்களில் பீய்ச்சி அடிக்கும் பாலில் பொங்கி வழிவது எது தெரியுமா?

கஜா புயல் பாதிப்பில் சிக்கித் தவிக்கும் மக்களின் அவலங்களும்… ஒருவேளை உணவுகூட இல்லாமல் செத்து மடியும் சிறார்களின் பட்டினி ஒழிப்பும்… இதற்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கும் ஆன்மீக அரசியலும்…!

http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36259-2018-12-12-09-18-15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி ரசிகர்கள்.. வாசித்து, திருந்த வேண்டிய... நல்லதொரு கட்டுரை.
ஆனால்... இவற்றை வாசிக்கும் அளவுக்கு... அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை என்று தான் நான் கூறுவேன்.
ஏனென்றால்... உலகில் எந்த இடத்திலும், உணவுப் பொருட்களை வீணாக்கும் பழக்கம்  இல்லை.

ஒரு பொருளை ஒருவன் காசு கொடுத்து வாங்கி விட்டாலும், அது அவனுக்கு முழுமையாக சொந்தமாகி விடாது.
அதற்குப் பின் பலரது கடின உழைப்பும்,  அக்கறையும் கலந்து உள்ளதை கவனிக்க வேண்டும்.
அப்படி அவன் அதனை சொந்தம் கொண்டாட விரும்பினால் ... தனது,  காசை மட்டும்.... கட் அவுட்டுக்கு தூக்கி எறியட்டும். 
யாருக்காவது... அந்தப் பணம் பிரயோசனப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

ரஜனி ரசிகர்கள்.. வாசித்து, திருந்த வேண்டிய... நல்லதொரு கட்டுரை.
ஆனால்... இவற்றை வாசிக்கும் அளவுக்கு... அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை என்று தான் நான் கூறுவேன்.
ஏனென்றால்... உலகில் எந்த இடத்திலும், உணவுப் பொருட்களை வீணாக்கும் பழக்கம்  இல்லை.

ஒரு பொருளை ஒருவன் காசு கொடுத்து வாங்கி விட்டாலும், அது அவனுக்கு முழுமையாக சொந்தமாகி விடாது.
அதற்குப் பின் பலரது கடின உழைப்பும்,  அக்கறையும் கலந்து உள்ளதை கவனிக்க வேண்டும்.
அப்படி அவன் அதனை சொந்தம் கொண்டாட விரும்பினால் ... தனது,  காசை மட்டும்.... கட் அவுட்டுக்கு தூக்கி எறியட்டும். 
யாருக்காவது... அந்தப் பணம் பிரயோசனப்படும்.

எமது மாணவ பருவக் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகின்றது!

எம்.ஜி.ஆர் ஒரு முறை படப்பிடிப்புக்குப் போயிருந்த ஒரு கோலிச் சோடாப் போத்தலிலிருந்து கொஞ்சத்தைக் குடித்து விட்டு...மிச்சத்தை வைத்து விட்டுப் போய்விட்டார்!

இது அவரது ரசிகர்களின் கண்களில் பட்டுவிட்டது!

இருந்ததோ கால் போத்தல் சோடா!

ரசிகர்களோ...நூறுக்கும் மேல் கூடி விட்டார்கள்!

திடீரென ஒரு ஐடியா!

ஒரு அண்டா வரவழைக்கப் பட்டு...எது நிறைய நீர் நிரப்பப் பட்டது! பின்னர் கால் போத்தல் சோடா முழுவதும் ஊற்றப்பட்டு..நன்றாகக் கலக்கப் பட்ட பின்னர்...எல்லோரும் வரிசையில் வரவழைக்கப் பட்டு....எல்லோருக்கும் வழங்கப் பட்டது!

 

இவ்வளவு வருடங்கள் கடந்தும் .... இவர்கள்...மாறாதது எதைக் காட்டுகின்றது என்றால்....இவர்களை என்றும் மாற்ற முடியாது!

 

தமிழ் சிறி...அவர்களுக்குக் கல்வியறிவு இல்லை என்று கூறிவிட முடியாது!

ஏனெனில்...எல்லோரும் விலையுயர்ந்த கை மணிக்கூடுகள்...கட்டியிருக்கிறார்கள்!

நிச்சயம் அவர்களுக்கு....ஐந்தாம் வாய்பாடு....தெரிந்திருக்குமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

எமது மாணவ பருவக் காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகின்றது!

எம்.ஜி.ஆர் ஒரு முறை படப்பிடிப்புக்குப் போயிருந்த ஒரு கோலிச் சோடாப் போத்தலிலிருந்து கொஞ்சத்தைக் குடித்து விட்டு...மிச்சத்தை வைத்து விட்டுப் போய்விட்டார்!

இது அவரது ரசிகர்களின் கண்களில் பட்டுவிட்டது!

இருந்ததோ கால் போத்தல் சோடா!

ரசிகர்களோ...நூறுக்கும் மேல் கூடி விட்டார்கள்!

திடீரென ஒரு ஐடியா!

ஒரு அண்டா வரவழைக்கப் பட்டு...எது நிறைய நீர் நிரப்பப் பட்டது! பின்னர் கால் போத்தல் சோடா முழுவதும் ஊற்றப்பட்டு..நன்றாகக் கலக்கப் பட்ட பின்னர்...எல்லோரும் வரிசையில் வரவழைக்கப் பட்டு....எல்லோருக்கும் வழங்கப் பட்டது!

 

இவ்வளவு வருடங்கள் கடந்தும் .... இவர்கள்...மாறாதது எதைக் காட்டுகின்றது என்றால்....இவர்களை என்றும் மாற்ற முடியாது!

 

தமிழ் சிறி...அவர்களுக்குக் கல்வியறிவு இல்லை என்று கூறிவிட முடியாது!

ஏனெனில்...எல்லோரும் விலையுயர்ந்த கை மணிக்கூடுகள்...கட்டியிருக்கிறார்கள்!

நிச்சயம் அவர்களுக்கு....ஐந்தாம் வாய்பாடு....தெரிந்திருக்குமே?

புங்கை,  சோடா விஷயம் போல... தமிழ் நாட்டில்.. முன்பொருமுறை...
குஷ்பூ  கடித்த... கொய்யாப் பழம் எட்டாயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் ஒருவர் வாங்கினாராம். 

அவர்களின் ...  தொழில் தர்மத்தின் படி... ஐந்தாம் வாய்ப்பாடு கட்டாயம்  தெரிந்திருக்க வேண்டும்.
ரசிக மன்றத்தில் கொடுக்கப்படும் சினிமா ரிக்கற்றுகளை...
கள்ள விலைக்கு விற்று, கணக்கு  பார்க்க...  வாய்ப்பாடு முக்கியம் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.