Jump to content

ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்.

ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தேதி அறிவித்தபொழுது உங்கள் மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டபொழுது நான் முதன் முதலாக மனதார பகிர்ந்துகொண்டவர்கள் எனது அன்பு பெற்றோரும், தந்தை ஸ்தானத்தில் இருக்கும் எனது குரு நவரட்ணம் ரகுராம் ஆசிரியரும் என்கிறார் ஹரிஷ்ணா பெருமையோடு.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

உயர்தர தேர்வில் ஒவ்வொரு பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரதமரினால் கௌரவிக்கப்படுவது மரபு. அதற்கமைய இவர்களிற்கான பாராட்டு விழா புதன்கிழமை (12/12/18) அன்று UNSW பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. சான்றிதழ்களை பிரதமரின் சார்பில் கல்வியமைச்சர் வழங்கி கௌரவித்திருந்தார்.

வீட்டிலும், வெளியிலும் தமிழ் நண்பர்களுடன் இயன்றளவு தமிழில் பேசுங்கள் என இளையோர்களிற்கு அறிவுரை கூறும் இவர், தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்திய பெற்றோர்களிற்கும் நன்றிகளை கூறத் தவறவில்லை. தனது நண்பர்களும், ரகுராம் ஆசிரியரும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளதாகவும் இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் இந்த நிலையில் நிற்பதாக பெருந்தன்மையோடு கூறுகின்றார். மாநிலத்தில் தேர்வு எழுதிய 32மாணவர்களில் 20பேர் அதியுயர் சித்தி பெற்றது பெருமையானா விஷயம். பாடசாலைக்கு அப்பால் பிரத்தியேகமாக இலவச தமிழ் வகுப்புக்களை உயர்தர மாணவர்களிற்கு நடாத்திய ஆசிரியர் நவரட்ணம் ரகுராமால், ஒன்பது மாணவர்களில் இருவர் முதலாம், இரண்டாம் இடங்களில் வந்திருப்பதுடன் மேலும் ஐந்து மாணவர்கள் அதியுயர் சித்தி பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஹரிஷ்ணா வழங்கிய பேட்டியை பாருங்கள்.

கேள்வி: பரீட்சை திணைக்களம் (NESA) உங்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த பொழுது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது.

பதில்: அடக்க முடியாத ஆனந்தம். அந்தச் செய்தியை கேட்டபோது என்னால் நம்பவே முடியவில்லை. இது கனவா? நனவா? என்று என்னையே பல தடவைகள் கேட்டேன். அந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

கேள்வி: இந்த தேர்வு பெறுபேறை எதிர்பார்த்தீர்களா?

பதில்: எனது திறமைகள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், மற்றைய மாணவர்களின் திறமையை நான் அறியவில்லை. அத்தோடு, இந்த வருடம் வழமையையும் விட மிகக் கடினமாக படித்ததால் இந்த வருடமும் வேறு பள்ளி மாணவர்கள்தான் அதியுயர் சித்தி பெறுவார்கள் என்று நினைத்தேன். அதனால், இந்த செய்தி எதிர்பார்க்காததுதான்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: இந்த மகிழ்ச்சியை யாருடன் பகிர்ந்து கொண்டீர்கள்?

பதில்: இந்த செய்தி கேட்டவுடன் எனது நண்பர்கள் (அருகில் இருந்த) பலரிடம் சொல்லி விட்டார்கள். ஆனால், நான் முதன் முதலாக மனதார பகிர்ந்து கொண்டவர்கள். எனது அன்பு பெற்றோர்களும் தந்தை ஸ்தானத்தில் இருக்கின்ற எனது குரு நவரட்ணம் ரகுராம் மாமா தான்.

கேள்வி: உங்களின் வெற்றிக்கு காரணமானவர்கள் யார்?

பதில்: எனது வெற்றிக்கு காரணமானவர்கள் எனது பெற்றோர், ஆசியர்கள் மற்றும் நண்பர்கள்தான். ஊக்கமளித்த பெற்றோரும் கல்வி புகட்டிய நண்பர்களும் ஆசிரியர்களும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தார்கள். இவர்களிலும் முக்கிய பங்கை வகிக்கும் ஒருவர் ரகுராம் மாமா.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: பெற்றோரின் ஊக்கம் எந்தளவில் உங்களை உந்தியது?

பதில்: எனக்கு என்மீது நம்பிக்கை இல்லாத போது எனது பெற்றோர் தான் உந்துதல் கொடுத்தார்ககள். என்னை தமிழ்ப் பாடசாலையில் சேர்த்து, தமிழ் மீது ஒரு விருப்பத்தை வரவழைத்தவர்களே அவர்கள்தான். மற்றும், தமிழ்ப் பள்ளியை விட்டு ஆசிரியர் ரகுராம் மாமா விலகிச் சென்ற போது எனது பெற்றோர்கள்தான் மீண்டும் அவரது பிரத்தியேக வகுப்புக்களில் சேர்த்துவிட்டார்கள்.

கேள்வி: நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

பதில்: தமிழோடு ரசாயனத்தையும் ஒரு பாடமாக இந்த வருடம் எடுத்தேன். அதனால் மற்றவர்களைப் போல் முழுக் கவனத்தை தமிழில் மட்டும் செலுத்தாமல், பாதி கவனத்தை இரசாயனவியலிலும் செலுத்த வேண்டியதாக இருந்தது. அத்தோடு, பரீட்சையின் இறுதி நாட்களில் அதிகளவு நேரம் தமிழ்ப் பாடசாலையில் செலவிடப்பட்டது. அதனால் சுயமாக தமிழ்ப் பரீட்சைக்கு என்னை தயார் செய்ய கடினமாக இருந்தது. அதனால், இதுதான் மிகப்பெரிய சவால் என நினைக்கிறேன்.

கேள்வி: ஆஸ்திரேலியாவில் உயர்தர பரீட்சையில் தமிழை ஒரு பாடமாக எடுப்பதால் என்ன நன்மை?

பதில்: எனது இயல்பான திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக அமைந்தது. அத்தோடு. எனது பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் சமூகம் மத்தியில் பெருமை தேடிக் கொடுப்பதே மிகப் பெரிய நன்மையென கூறலாம். இது எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கோ, வேலைக்கோ விண்ணப்பிக்கும் பொழுது தமிழ் நிச்சயமாக உதவும் என நம்புகிறேன்.

Two Tamil students achieved 1st and 2nd places in the New South Wales state

கேள்வி: எதிர்காலத்தில் தமிழை ஒரு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: தமிழை விரும்பிப் பயிலுங்கள். தமிழ் மீது பற்று இல்லாவிட்டால் தமிழை கற்பது வீண். ஆனால், இளமையில் தமிழை கற்றிருக்கலாமே என்ற எண்ணம் எதிர்காலத்தில் வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு, வீட்டிலும் வெளியே தமிழ் நண்பர்களுடனும் இயன்றளவுக்கு தமிழில் பேசுங்கள். தமிழ் உச்சரிப்பும் பிழைக்காமல் இருந்தால் உங்களுடைய சொற்களஞ்சியமும் பெருகும். தமிழை எழுதுவதும் சுலபமாக இருக்கும்.

கேள்வி: நீங்கள் வாய்மொழி பரீட்சைக்கு எடுத்த தலைப்பு 'நட்பு'. ஆகவே, நண்பர்கள் எவ்வாறு உங்கள் வெற்றிக்கு உதவினார்கள்?

பதில்: வஞ்சகமின்றி எனக்காக பலதை அர்ப்பணித்த நண்பர்களும் எனது வெற்றிக்கு காரணமானவர்கள். அவர்களுடன் ஒவ்வொரு முறை அளவளாவும் போதும் புதிய புதிய விடயங்களை கற்றுக் கொண்டேன். எனக்காக அவர்களும், நான் அவர்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளோம். அத்தோடு, நானும் அவர்களுடைய குடும்பத்தில் உள்ள ஒருவன் போல் என்னை அரவணைத்தார்கள். ஆகவே, எனது நண்பர்களும், ரகுராம் மாமா வும் ஒரு தனிப்பட்ட குடும்பத்தை உருவாக்கியுள்ளோம். இந்த குடும்பம் தந்த உதவியினாலும், உந்துதலினாலும் தான் நான் இந்த நிலையில் நிற்கின்றேன்.

கேள்வி: இறுதியாக தமிழ் சார்ந்த உங்கள் எதிர்கால லட்சியமென்ன?

பதில்: தமிழை வளர்ப்பது எந்தளவு முக்கியமோ தமிழை பரப்புவதும் அந்தளவு முக்கியம்தான். எனது நீண்ட கால ஆசை என்னவென்றால், எனது நண்பர்களுடன் ஒன்றிணைந்து சமூக ஊடகங்கள் மூலமாக தமிழின் புகழைப் பரப்புவதுதான். உதாரணமாக, வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக புதிய தலைமுறைக்கு தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டலாம். அத்தோடு, படவரி, முகநூல் போன்ற வலைத்தளங்களினூடாகவும் தமிழைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கலாம் என நம்புகின்றேன். அத்தோடு, பிற இனத்தை சேர்ந்தவர்களிடம் நாட்டம் இருந்தால், தமிழை கற்றுக் கொடுக்க முயற்சி செய்வேன். ஆதலால், தமிழை நான் பரீட்சை முடிந்தவுடன் கைவிடப் போவதில்லை. தமிழை வளர்க்கவும் பரப்பவும் என்னால் இயன்றளவுக்கு முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

Read more at: https://tamil.oneindia.com/news/sydney/two-tamil-students-achieved-1st-2nd-places-the-new-south-wal-336463.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் என்கிற முறையில் இம்மாணவர்களின் பெறுபேறுகள் பற்றி பெருமகிழ்ச்சி அடைவதோடு, இதுதொடர்பான எனது கருத்தினையும் இங்கே பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுப்பதென்பது வெறும் இரண்டு வருடங்களில் தமிழினைக் கற்று அல்லது கற்பித்து நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவர்கள் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிறிது சிறிதாக தாம் பெற்றுக்கொண்ட தமிழறிவினூடாகத்தான் உயர்தரத்தில் சிறப்பாகச் செயற்பட முடியுமேயன்றி, வானிலிருந்து குதித்து வந்து வெறும் ஒன்று அல்லது இரு வருடங்களில் தமிழினை அடிப்படையிலிருந்து கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுவிடமுடியாது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சிறுபராயத்திலிருந்து நான் அறிவேன். நான் பாடசாலையில் உதவுவதற்காக இணைந்தபோது இவர்கள் 3 ஆம் அல்லது 4 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் சேர்த்து இன்னும் குறைந்தது 40 அல்லது 50 மாணவர்கள் இவர்களின் தரத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமாக இம்மாணவர்கள் தரமேற்றப்படும்பொழுது, ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் முயற்சியாலும், இடைவிடாத ஊக்குவிப்பினாலும், தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பிய மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற, மற்றையவர்கள் தமிழினை வாழ்க்கைக்கு உபயோகிக்க முடிந்தால் போதும், பரீட்சைக்காக வேண்டாம் என்பதுடன் தமது கற்றலினை நிறுத்திக்கொள்வார்கள்.

ஆக, பலவருடங்களாக வெவ்வேறு ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும், தன்னலமற்றை கற்பித்தலினாலும் தமிழறிவூட்டப்பட்ட இம்மாணவர்கள் உயர்தரத்தினை அடையும்பொழுது தமிழ்பற்றிய ஒரு பூரண அறிவைப் பெற்றிருந்ததுடன், உயர்தரத்தில் மாணவர்களுக்கு தமிழ்ப் பரீட்சையினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சிறப்புக் கற்பித்தல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிபெற்ற தமிழ் மொழியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற ஆசிரியர்களினால் மெருகூட்டப்பட்டு வந்தனர்.

உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது பொன்னான நேரத்தை மாணவச் செல்வங்களுக்குத் தமிழறிவூட்டப் பயன்படுத்தவேண்டும் என்கிற அவாவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை எடுத்து பல மீட்டல்ப் பயிற்சிகளைச் செய்ததன் மூலமும் மட்டுமே இப்பெறுபேறு சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.

நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதுபோல, நான்கு பிரிவுகளான, எழுத்துப் பரீட்சை, கேட்டலும் பதிலளித்தலும், வாசித்தலும்  பதிலளித்தலும் மற்றும் வாய்மொழித்தொடர்பாற்றல் ஆகியவற்றினைக் கற்பிக்க 4 அல்லது 5 ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். ஆக, இவற்றுள் ஒரு பாடத்தில் மாணவர்கள் திறம்படச் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் மொத்தப் பெறுபேறு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை.

எழுதுதலுக்கு 20 புள்ளிகள், வாசித்தலுக்கும் எழுதுதலுக்கும் 25 புள்ளிகள், கேட்டலுக்கும் எழுதுதலுக்கும் 30 புள்ளிகள் மற்றும் வாய்மொழித்தொடர்பாடலுக்கு 25 புள்ளிகள் என்று 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும்போது மட்டுமே ஒரு மாணவர் அதியுயர் சித்தியைப் பெற முடியும்.

ஆகவே, இந்த 4 பாடங்களையும் கற்பித்தவர்களில் எவரும் ஒருவர் தன்னால் மாத்திரமே மாணவர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன என்று உரிமை கோருவதோ அல்லது பெருமைகொள்வதோ நகைப்பிற்கிடமானது மட்டுமன்றி, இம்மாணவர்களின் 12 வருடகால தமிழ்க் கற்றலில் தம்மாலான அனைத்து வகைகளிலும் தன்னலமற்ற சேவையாற்றிய ஏனைய பல ஆசிரியர்களின் சேவையையும் தியாகங்களையும் தட்டிப்பறிப்பதுடன் அவர்களைக் கேவலப்படுத்துவதுமாக ஆகிவிடுகிறது.

ஆகவே, ஊடகங்களில் வெளிவரும் இது தொடர்பான செய்திகள் இம்மாணவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களினதும் தமிழ்ப்பணியை முன்னுக்குக் கொண்டுவருவதோடு, தனிமனித வழிப்பாட்டுக்கான முயற்சிகளை அறவே களைந்துவிடவேண்டும் என்பதும் எனது அவா.

இறுதியாக, இம்மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மிகவும் பெருமைக்குரியவை. இவர்களின் இந்த சிறப்பில் பங்குகொண்ட சிறுவயது ஆசிரியர்கள் முதல், இறுதியாகக் கற்பித்த அனைத்து உயர்தர ஆசிரியர்கள் வரை போற்றுதற்குரியவர்கள். 

இவர்களை சிறுபராயம் முதல் தமிழில் வளர்த்தெடுத்து இன்று இவ்வாறான உயர்நிலைக்கு உயர்த்த உதவிய அனைத்து வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

குறிப்பு : இம்மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வென்ற்வேத்வில்த் தமிழ்ப் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவு கீழே,

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, ragunathan said:

இப்பாடசாலையின் முன்னால் அதிபர் என்கிற முறையில் இம்மாணவர்களின் பெறுபேறுகள் பற்றி பெருமகிழ்ச்சி அடைவதோடு, இதுதொடர்பான எனது கருத்தினையும் இங்கே பதிவிடலாம் என்று நினைக்கிறேன்.

தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுப்பதென்பது வெறும் இரண்டு வருடங்களில் தமிழினைக் கற்று அல்லது கற்பித்து நடக்கக்கூடிய ஒரு விடயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த விடயம். மாணவர்கள் ஆரம்பப் பள்ளியிலிருந்து சிறிது சிறிதாக தாம் பெற்றுக்கொண்ட தமிழறிவினூடாகத்தான் உயர்தரத்தில் சிறப்பாகச் செயற்பட முடியுமேயன்றி, வானிலிருந்து குதித்து வந்து வெறும் ஒன்று அல்லது இரு வருடங்களில் தமிழினை அடிப்படையிலிருந்து கற்று சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுவிடமுடியாது.

இம்மாணவர்களில் பெரும்பாலானவர்களை அவர்களின் சிறுபராயத்திலிருந்து நான் அறிவேன். நான் பாடசாலையில் உதவுவதற்காக இணைந்தபோது இவர்கள் 3 ஆம் அல்லது 4 ஆம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். இவர்களுடன் சேர்த்து இன்னும் குறைந்தது 40 அல்லது 50 மாணவர்கள் இவர்களின் தரத்தில் படித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வருடமாக இம்மாணவர்கள் தரமேற்றப்படும்பொழுது, ஆசிரியர்களினதும், பெற்றோரினதும் முயற்சியாலும், இடைவிடாத ஊக்குவிப்பினாலும், தமிழினை உயர்தரத்தில் ஒரு பாடமாக எடுக்கவிரும்பிய மாணவர்கள் தொடர்ந்தும் முன்னேற, மற்றையவர்கள் தமிழினை வாழ்க்கைக்கு உபயோகிக்க முடிந்தால் போதும், பரீட்சைக்காக வேண்டாம் என்பதுடன் தமது கற்றலினை நிறுத்திக்கொள்வார்கள்.

ஆக, பலவருடங்களாக வெவ்வேறு ஆசிரியர்களின் ஊக்குவிப்பினாலும், தன்னலமற்றை கற்பித்தலினாலும் தமிழறிவூட்டப்பட்ட இம்மாணவர்கள் உயர்தரத்தினை அடையும்பொழுது தமிழ்பற்றிய ஒரு பூரண அறிவைப் பெற்றிருந்ததுடன், உயர்தரத்தில் மாணவர்களுக்கு தமிழ்ப் பரீட்சையினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான சிறப்புக் கற்பித்தல் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு சிற்ப்புப் பயிற்சிபெற்ற தமிழ் மொழியில் இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டம்பெற்ற ஆசிரியர்களினால் மெருகூட்டப்பட்டு வந்தனர்.

உயர்தரத்தில் கற்பித்த ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவையும், வேலை அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமது பொன்னான நேரத்தை மாணவச் செல்வங்களுக்குத் தமிழறிவூட்டப் பயன்படுத்தவேண்டும் என்கிற அவாவும், விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை எடுத்து பல மீட்டல்ப் பயிற்சிகளைச் செய்ததன் மூலம் மட்டுமே இப்பெறுபேறு சாத்தியமாயிற்று என்றால் மிகையாகாது.

நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டதுபோல, நான்கு பிரிவுகளான, எழுத்துப் பரீட்சை, கேட்டலும் பதிலளித்தலும், வாசித்தலும்  பதிலளித்தலும் மற்றும் வாய்மொழித்தொடர்பாற்றல் ஆகியவற்றினைக் கற்பிக்க 4 அல்லது 5 ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கிறார்கள். ஆக, இவற்றுள் ஒரு பாடத்தில் மாணவர்கள் திறம்படச் செய்யாவிட்டாலும்கூட, அவர்களின் மொத்தப் பெறுபேறு சிறப்பாக அமைய வாய்ப்பில்லை.

எழுதுதலுக்கு 20 புள்ளிகள், வாசித்தலுக்கும் எழுதுதலுக்கும் 25 புள்ளிகள், கேட்டலுக்கும் எழுதுதலுக்கும் 30 புள்ளிகள் மற்றும் வாய்மொழித்தொடர்பாடலுக்கு 25 புள்ளிகள் எறு 100 புள்ளிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே இந்த நான்கு பாடங்களிலும் சிறப்பாகச் செய்யும்போது மட்டுமே ஒரு மாணவர் அதியுயர் சித்தியைப் பெற முடியும்.

ஆகவே, இந்த 4 பாடங்களையும் கற்பித்தவர்களில் எவரும் ஒருவர் தன்னால் மாத்திரமே மாணவர்களுக்கு இந்தப் பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன என்று உரிமை கோருவதோ அல்லது பெருமைகொள்வதோ நகைப்பிற்கிடமானது மட்டுமன்றி, இம்மாணவர்களின் 12 வருடகால தமிழ்க் கற்றலில் தம்மாலான அனைத்து வகைகளிலும் தன்னலமற்ற சேவையாற்றிய ஏனைய பல ஆசிரியர்களின் சேவையையும் தியாகங்களையும் தட்டிப்பறிப்பதுடன் அவர்களைக் கேவலப்படுத்துவதுமாக ஆகிவிடுகிறது.

ஆகவே, ஊடகங்களில் வெளிவரும் இது தொடர்பான செய்திகள் இம்மாணவர்களின் வளர்ச்சியில் பங்குபற்றிய அனைத்து ஆசிரியர்களினதும் தமிழ்ப்பணியை முன்னுக்குக் கொண்டுவருவதோடு, தனிமனித வழிப்பாட்டுக்கான முயற்சிகளை அறவே களைந்துவிடவேண்டும் என்பது எனது அவா.

இறுதியாக, இம்மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் மிகவும் பெருமைக்குரியவை. இவர்களின் இந்த சிறப்பில் பங்குகொண்ட சிறுவயது ஆசிரியர்கள் முதல், இறுதியாகக் கற்பித்த அனைத்து உயர்தர ஆசிரியர்கள் வரை போற்றுதற்குரியவர்கள். 

இவர்களை சிறுபராயம் முதல் தமிழில் வளர்த்தெடுத்து இன்று இவ்வாறான உயர்நிலைக்கு உயர்த்த உதவிய அனைத்து வென்ற்வேத்வில் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், பாடசாலைக்கும் எனது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

குறிப்பு : இம்மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பாக வென்ற்வேத்வில்த் தமிழ்ப் பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவு கீழே,

 

 

மேலதிகமாக தகவல்களை தந்தமைக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி ரகு. ஒரு காலத்தில் நீங்களும் அதிபராக இருந்ததை அறிந்து நல்ல சன்தோசம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.