Jump to content

"ஆம்புலன்ஸில்"  வந்து லீவு கேட்டு,  அதிர வைத்த ஊழியர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

à®à®®à¯à®ªà¯à®²à®©à¯à®¸à¯

"ஆம்புலன்ஸில்"  வந்து லீவு கேட்டு,  அதிர வைத்த ஊழியர்!

உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் காஸ்பாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மலர்கொடி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். பாபு அரசு போக்குவரத்து கழகத்தில் 5 வருடமாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

லà¯à®µà¯ à®à¯à®à¯à®à®¾à®°à¯

இந்த நிலையில், பாபுவுக்கு நேற்று முன்தினம் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால் அவரை குடும்பத்தார், முள்ளாம்பரப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

à®à¯à®¯à¯à®à¯ லà¯à®µà¯ லà®à¯à®à®°à¯

அங்கு அவருக்கு ஒரு பக்கம் சிகிச்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில், மலர்கொடி சென்னிமலை போக்குவரத்து கழகத்தின் மண்டல ஆபீசில் உள்ள கிளை மேலாளருக்கு போன் செய்து தகவலை சொன்னார். ஆஸ்பத்திரியில் கணவனை சேர்த்துள்ளதால், அவருக்கு லீவு வேண்டும் என்று கேட்டார்.

ஆனால் அதற்கு கிளை மேலாளர் ஒத்து கொள்ளவே இல்லை. கணவரின் நிலைமையை எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேட்காததால், என்ன செய்வதென்று மலர்கொடி விழித்தார். பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த பாபுவை, ஆஸ்பத்திரி ஆம்புலன்சில் ஏற்றினார்.

à®à®¤à®¿à®°à¯à®¨à¯à®¤à®©à®°à¯

பாபு ஆம்புலன்சில் படுத்து கிடக்க, அவர் பக்கத்தில் மலர்கொடி மகனுடன் ஏறி உட்கார்ந்துகொண்டார். ஆம்புலன்ஸை போக்குவரத்து அலுவலகத்து செல்லுமாறு சொன்னார். டிரான்ஸ்போர்ட் ஆபீசுக்குள் ஆம்புலன்ஸ் வருவதை கண்ட எல்லோரும் அதிர்ந்தார்கள்.

பின்னர் ஆம்புலன்சில் பாபு வருவதை பார்த்து மேலும் ஷாக் ஆனார்கள். அப்போது பாபு மலர்கொடியை துணைக்கு அழைத்து சென்று கிளை மேலாளர் அறைக்கு சென்றார். கையோடு தான் கொண்டு வந்த விடுமுறை கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பவும் ஆம்புலன்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

பரபரபà¯à®ªà¯

அதிகாரிகள் கெடுபிடி காரணமாக, லீவு கிடைக்காததால், குடும்பத்துடன் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் கொடுத்துவிட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/erode/bus-driver-came-ambulance-give-leave-letter-near-erode-336460.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உடம்பு சரியில்லைன்னு எத்தனையோ முறை சொல்லியும் கேட்காததால், ஊழியர் ஒருவர் ஆம்புலன்சில் வந்து லீவு லட்டர் தந்த அவலம் நடந்துள்ளது.

சிறி இந்த நுட்பத்தை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிற்காலத்தில் உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இந்த நுட்பத்தை மனதில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
பிற்காலத்தில் உதவலாம்.

Ãhnliches Foto

ஈழப்பிரியன்... இங்கே உள்ள அம்புலன்ஸ், கம்பெனிக்கு எல்லாம் வரமாட்டாங்க.
ஆளை ஏத்தினால்,  கூவிக்  கொண்டு... நேரே ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டர் வாசலிலை தான் கொண்டு போய் விடுவாங்கள்.   :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

ஈழப்பிரியன்... இங்கே உள்ள அம்புலன்ஸ், கம்பெனிக்கு எல்லாம் வரமாட்டாங்க.
ஆளை ஏத்தினால்,  கூவிக்  கொண்டு... நேரே ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டர் வாசலிலை தான் கொண்டு போய் விடுவாங்கள்.   :grin:

தனியார் ஆம்புலன்ஸை முயற்சி செய்து பார்க்கிறது.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

தனியார் ஆம்புலன்ஸை முயற்சி செய்து பார்க்கிறது.....!  😁

சுவி,  அடுத்த முறை... சாரத்தை கட்டிக்  கொண்டு,  தனியார்  ஆம்புலன்சில்  ஏறி படுக்கத்தான் இருக்கு.
பிறகு வருத்தம் முடிந்து.. வேலைக்குப் போக... நீ, கட்டிய சாரம் மாதிரி தங்களுக்கும் வேணும் என்று வேலையாட்கள் அடம்  பிடிப்பாங்களே... :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.