Jump to content

உருவாகிறது புதிய சூறாவளி; இலங்கை இந்திய வானிலை மையங்கள் எச்சரிக்கை!


Recommended Posts

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக மாற்றமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மற்றும் இந்திய வானிலை அவதான மையங்கள் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் தரிகையில்,

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய தாழமுக்கம் 2018 டிசம்பர் 13ஆம் திகதி காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன்

தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடுவதுடன் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இதேவேளை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தருகையில்,

“தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது சென்னைக்கு தென் கிழக்கே 1170 கி.மீ.தொலைவில் நிலைகொண்டுள்ளது.

மேலும் இது இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை இது புயலாக வலுப்பெற்று தற்போதைய நிலைப்படி வட தமிழக கடற்கரைப்பகுதி, தெற்கு ஆந்திரா நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக டிச. 15, 16 தேதிகளில் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும். ஓரிரு இடங்களில் சில நேரம் கனமழையும் பெய்யக்கூடும். மீனவர்கள் டிச. 15, 16 ஆகிய தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தற்போது உள்ள நிலையில் ஓரிரு இடங்களில் கனமழையை எதிர்பார்க்கிறோம். இது 1120 கி.மீ. தொலைவில் ஆழ்கடலில் உள்ளது. நகர்ந்து வரும் நிலையில் மாற்றங்கள் உள்ளதால் தெளிவாக எங்கு கரையைக் கடக்கும் என்று கூறமுடியாது.”

எவ்வாறாயினும் ஏற்கனவே வங்கக் கடலில் உருவான கஜ சூறாவளியின் அழிவுத் தாக்கம் தமிழகத்தில் இன்னும் சீராகாத நிலையில் இந்த புதிய புயல் உருவாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/110738?ref=rightsidebar

Link to comment
Share on other sites

திசைமாறியது புயல்; ஆந்திராவுக்கு செல்கிறது: தமிழகத்துக்கு மழை இருக்காது- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு

 

rainPNG

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து டிசம்பர் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆந்திர மாநிலம் நரசபூர் அருகே கரை கடக்க வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார். புயல் ஆந்திரா நோக்கிச் செல்வதால் சென்னை உட்பட தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழை கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தெற்கு மத்திய வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி பின்னர் நாளை புயலாக மாறும். இந்த புயலுக்கு ‘பேய்ட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது.

selva-2jpgjpg

செல்வகுமார்

 

 

 

 

 

 

இந்த புயல் வட தமிழகம் அல்லது தெற்கு ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு நடந்தால் வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் அந்த புயல் திசைமாறி வடக்கு நோக்கி நகர்கிறது.

இமயமலை பகுதியில் பெய்யும் பனி காரணமாகவும், மியான்மரில் இருந்து இழுக்கும் குளிர்ந்த காற்று காரணமாகவும் புயலின் போக்கு மாற வாய்ப்புள்ளது. மசூலிபட்டினம் - காக்கிநாடா இடையே நர்சபூர் அருகே டிசம்பர் 16-ம் தேதி கரையை கடக்கும்.

கிழக்கு மற்றும் மேற்கு  கோதாவரி மாவட்டங்கள் வழியாக வலுவிழந்த நிலையில்  கரையை கடக்கும். எனவே  இதனால் பாதிப்பு இருக்காது. புயல் கரையை கடக்கும் முன்பாக கடலை சீற்றமாக வைத்திருக்கும்.

தமிழக கடல்பகுதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்துக்கு மழை இருக்காது. அதேசமயம் பயனளிக்கும் மழையும் இல்லாமல் போகும். சென்னை சுற்று வட்டார பகுதிகளில் லேசான மழை இருக்கலாம். கனமழை இருக்காது. திருவள்ளூர், சென்னை மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.  

https://tamil.thehindu.com/tamilnadu/article25734105.ece?utm_source=articlePage&utm_medium=artRel

Link to comment
Share on other sites

பயங்கரமாக உருவெடுத்தது ’பெய்ட்டி’ சூறாவளி; யாழ்ப்பாணத்துக்கு ஆபத்து??

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் வலுவான தாழமுக்க மண்டலமாக மாறி தற்பொழுது பாரிய சூறாவளியாக உருவெடுத்துள்ளது.

இதற்கு தாய்லாந்து நாடு பரிந்துரைந்த பேத்தை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இலங்கையின் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக 465கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இந்த வலுத்த சுறாவளி நாட்டிலிருந்து விலகக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் வடமேற்கு திசைகளில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக ஆழ்கடல் மீன்பிடித்தலில் ஈடுபடும் மீனவர்கள் இன்றையதினம் மட்டகளப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையிலான கடற்கரைகளை அண்டிய கடலுக்குள் செல்லவேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன் நாடுமுழுவதும் குளிரான கால நிலை நிலவக்கூடும்.

காற்றின் வேகம் வடக்கு மாகாணத்தில் 60 கிலோமீட்டர்களுக்கு மேலாகக்கூடும் என்பதுடன் ஏனைய பகுதிகளில் 50 கிலோமீட்டர்கள் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/srilanka/80/110893

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.