Jump to content

முல்லைத்தீவில் அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் அரசியல் குழப்ப நிலையை சாதகமாக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பாரிய புத்தர்சிலை திறக்க ஏற்பாடு

December 13, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG_9908.jpg?resize=800%2C533

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக இருந்த பிள்ளையார் ஆலய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்படுகிறது

இந்த விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்

IMG_9909.jpg?resize=778%2C519

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்

இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் பின்னர் மீள்குடியேரியபோது குறித்த ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்பட்டமையால் குறித்த பகுதிக்கு மக்கள் செல்ல அச்சம் காரணமாக ஆலயத்துக்கு செல்லமுடியாது இருந்தனர்

இந் நிலையில் 2013 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மருதானையை சேர்ந்த கொலம்ப மேதாலங்க தேரர் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆலயத்துக்கு அருகில் இருந்த இராணுவத்தினரது உதவியோடு ஆக்கிரமித்து குறித்த ஆலய வளாகத்தில் சிறிய கூடாரம் ஒன்றை நிர்மாணித்து அங்கு குடிகொண்டார்

அதன்பின்னர் குறித்த பகுதியை தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் குறித்த பகுதியை சரியான பெயர்கூட இல்லாது செட்டிமலை என்ற பெயருடன் வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு குறித்த பகுதியே செட்டிமலை என வாதிட்டு அந்த இடத்தில் விகாரைகளை நிர்மாணித்து வந்துள்ளார்

மக்களது எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்தை அபிவிருத்தி செய்தவர் 2015 ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாரிய அளவில் எந்த ஒரு கட்டுமானப்பணிக்கும் இடமளிக்காது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மக்கள் மேற்கொண்டுவந்த நிலையில் அண்மையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக அறிவிக்கப்பட்டவுடன் குறித்த பகுதியில் பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு தற்போது அதனுடைய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது

இதனைவிடவும் ஆலயத்தின் அடையாளங்களை அளிக்கும் முகமாக நீராவியடி பிள்ளையார் ஆலயம் பழைய செம்மலை என தமிழ் மொழியில் எழுதப்படிருந்த பெயர்ப்பலகையை அளித்து புதிதாக சிங்கள மொழியில் பெயர்ப்பலகையையும் நிறுவியுள்ளார்

குறிப்பாக இந்த செயற்ப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிப்பலைகளை ஏற்ப்படுத்தினாலும் மக்களது கருத்துக்களை மதிப்பளிக்காது இன முறுகலை ஏற்ப்படுத்தும் வகையிலான இந்த செயற்ப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் தொடருமிடத்தில் இனமுறுகலே ஏற்;படும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்

  IMG_9911.jpg?resize=778%2C519IMG_9925.jpg?resize=778%2C519IMG_9927.jpg?resize=800%2C533

 

http://globaltamilnews.net/2018/106425/

 

Link to comment
Share on other sites

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் பல நெடுங்காலமாக அமைந்துள்ள பிள்ளையார் ஆலய வளாகத்தில் தற்போது பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு திறப்பதற்கான அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பௌத்தர்களே வாழாத நீராவியடி பகுதியில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் கைவிடப்பட்டிருந்த இந்த புத்தர் சிலை அமைக்கும் பணிகள் தற்போது கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில் அவசர அசவரமாக திறந்துவைக்க ஏற்பாடுகள் இடம்பெற்ற வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை பிரதேசத்தில் நீராவியடி ஏற்றத்தில் தங்கள் மூதாதையர் வாழ்ந்த காலம் முதல் இறுதி யுத்தகாலத்தில் இடம்பெயர்ந்து செல்லும் வரை பல நெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் தங்களால் வழிபடப்பட்டு வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களின் பின்னர் மீள்குடியேறியபோது குறித்த ஆலய சூழலில் பாரிய இராணுவ முகாம் காணப்பட்டமையால் குறித்த பகுதிக்கு மக்கள் அச்சம் காரணமாக ஆலயத்துக்கு செல்லமுடியாது இருந்தனர்.

இந்த நிலையில் 2013 ம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மருதானையை சேர்ந்த கொலம்ப மேதாலங்க தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆலயத்துக்கு அருகில் இருந்த இராணுவத்தினரது உதவியோடு ஆக்கிரமித்து ஆலய வளாகத்தில் சிறிய கூடாரம் ஒன்றை நிர்மாணித்து அங்கு குடிகொண்டார்.

அதன்பின்னர் நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதியை தொல்பொருள் பிரதேசமாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு சரியான பெயர்கூட இல்லாது செட்டிமலை என்ற பெயருடன் வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இந்தப் பகுதியே செட்டிமலை என வாதிட்டு அந்த இடத்தில் விகாரையொன்றையும் நிர்மாணித்து வந்தார்.

பிரதேச மக்களது எதிர்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி இந்த இடத்தை அபிவிருத்தி செய்த பௌத்த பிக்குவிற்கு 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னர் பாரிய அளவில் எந்த ஒரு கட்டுமானப்பணிக்கும் இடமளிக்காது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு தடுத்திருந்தனர்.

இந்த நிலையில் ஒக்டோபர் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து நீராவியடி பிள்ளயைால் ஆலய வளாகத்தில் பாரிய புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டு தற்போது அதனுடைய அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று அதனை திறப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனைவிடவும் ஆலயத்தின் அடையாளங்களை அளிக்கும் முகமாக நீராவியடி பிள்ளையார் ஆலயம் பழைய செம்மலை என தமிழ் மொழியில் எழுதப்படிருந்த பெயர்ப்பலகையை அளித்து புதிதாக சிங்கள மொழியில் பெயர்ப்பலகையையும் நிறுவியுள்ளார் பௌத்த பிக்கு.

குறிப்பாக இந்த செயற்ப்பாடு தமிழ் மக்கள் மத்தியில் பாரிய எதிப்பலைகளை ஏற்ப்படுத்தினாலும் மக்களது கருத்துக்களை மதிப்பளிக்காது இன முறுகலை ஏற்ப்படுத்தும் வகையிலான இந்த செயற்ப்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் இந்த செயற்பாடுகள் தொடருமிடத்தில் இனமுறுகலே ஏற்படும் எனவும் பிரதேச மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

https://www.ibctamil.com/srilanka/80/110767

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.