Jump to content

சிறிசேனவை நீக்குதல் பொருத்தமானதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறிசேனவை நீக்குதல் பொருத்தமானதா?

Gopikrishna Kanagalingam / 2018 டிசெம்பர் 13 வியாழக்கிழமை, மு.ப. 01:17Comments - 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெருங்குற்றப் பிரேரணை அல்லது impeachment தொடர்பாக, பரவலாகக் கலந்துரையாடப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இப்படியான உரையாடல்கள், ஆச்சரியமளிப்பனவாக இல்லை. ஜனாதிபதி சிறிசேனவுக்கு, சந்தேகத்தின் பலனை வழங்கியவர்களைக் கூட, எதிரானவர்களாக மாற்றுமளவுக்கு, ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.  

ஆனால், ஜனாதிபதியை அவ்வாறு பதவி நீக்குவது, பொருத்தமானதா, சரியானதா என்ற கேள்விகளும் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஜனாதிபதி சிறிசேன மீதான விமர்சனங்களில் அத்தனை நியாயப்பாடுகள் இருந்தாலும், அவரைப் பதவி நீக்குவது, நாட்டைப் பொறுத்தவரையில் பொருத்தமாக அமையுமா என்ற கேள்வி, சிறிது ஆழமாக ஆராயப்பட வேண்டிய ஒரு கேள்வியாகும்.  

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, இனிமேல் தான் வரவிருக்கின்ற நிலைமையில், அரசமைப்பை ஜனாதிபதி மீறினாரா, இல்லையா என்பது, நீதிமன்றத்தின் தீர்ப்பை அடிப்படையாக வைத்துக் கூறமுடியாத ஒன்றாகத் தான் இருக்கிறது. ஆனால், சட்டத்தை ஆராய்ந்த நிபுணர்கள் அனைவரினதும் கருத்துப்படி, அரசமைப்பை, ஜனாதிபதி மீறியிருக்கிறார். ஒரு தடவையல்ல, ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அவர் மீறியிருக்கிறார்.  
பெருங்குற்றப் பிரேரணையொன்றைச் சமர்ப்பிப்பது தொடர்பில், அரசமைப்பின் உறுப்புரை 38 (2)இல், விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில் முதலாவது காரணமே, “அரசமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம்” என்பது தான். அதேபோல், அதில் 4ஆவது விடமாக, “தனது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்தமையை உள்ளடக்கிய துர்நடத்தைக்கான அல்லது ஊழலுக்கான குற்றம்” என்பது காணப்படுகிறது. எனவே, ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான விடயங்கள் பலமாக இருக்கின்றன.   

இவற்றுக்கு மேலதிகமாக, மனப் பலவீனம் என்பதுவும், ஒரு காரணமாக இருக்கிறது. அதைப் பற்றி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகளும் கருத்துகளும், அவரின் திடத்தன்மை தொடர்பாக, உண்மையாகவே கேள்விகளை எழுப்புகின்ற போதிலும், “ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கான மனப் பலத்தை மைத்திரிபால சிறிசேன கொண்டிருக்கவில்லை” என்ற முடிவு, எந்த உளவியலாளராலோ அல்லது வைத்தியராலோ வழங்கப்படுமென எதிர்பார்ப்பது கடினம். அத்தோடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், மனப் பலத்தைக் காரணங்காட்டித் தப்பிக்க வழியேற்படுத்தவும் தேவையில்லை. எனவே, முன்னைய காரணங்களைப் பற்றி ஆராய்வதே அவசியமானது.  

அப்படியானால், எதற்காகத் தாமதிக்க வேண்டுமென்ற கேள்வி எழுகிறதா?  
ஜனாதிபதியைப் பதவியிலிருந்து விலக்க வேண்டுமாக இருந்தால், அது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் வழங்குகின்ற கடிதத்தில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட வேண்டும். இல்லாவிட்டால், ஆகக்குறைந்தது சாதாரண பெரும்பான்மையுடைய எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு, அந்தக் குற்றச்சாட்டில் நியாயமிருக்கிறது என, சபாநாயகர் கருத வேண்டும்.  

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள நிலைமையில், மூன்றிலிரண்டு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராகத் திரும்புவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், சாதாரண பெரும்பான்மைக்கு வாய்ப்பிருக்கிறது. சபாநாயகர் கரு ஜயசூரியவும், அதற்கு ஆதரவளிக்க வைக்கப்படலாம். ஆனால், அதன் பின்னர், ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டு, 150 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு, அதற்குத் தேவைப்படும். மீண்டும், சாத்தியமே இல்லை என்ற நிலைமைக்கு, இந்தப் பிரேரணை வந்துவிட்டது.  

அதிசயமாக, அந்தப் பிரேரணைக்கு 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தாலும், அதன் பின்னர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று, உயர்நீதிமன்றத்தால் அறிக்கையளிக்கப்படும். அந்த அறிக்கைக்கு, மீண்டும் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். எனவே, கடினமானது தான்.  

எனவே, இப்படியான சூழ்நிலையில், பெருங்குற்றப் பிரேரணையைக் கொண்டுவருதல் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.  

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒத்த செயற்பாடுகளை, ஜனாதிபதி சிறிசேன வெளிப்படுத்துகிறார் என, இப்பத்தியாளரால், சில வாரங்களுக்கு முன்னர் குறிப்பிடப்பட்டது. இதில், வெறும் தற்செயலாகவோ இல்லாவிட்டால் இருவரின் நடவடிக்கைகளின் விளைவாகவோ என்னவோ, ஜனாதிபதி ட்ரம்ப்பும், பெருங்குற்றப் பிரேரணையை எதிர்கொள்ளும் ஆபத்தைக் கொண்டிருக்கிறார். அந்த நாட்டின் பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியுள்ள ஜனநாயகக் கட்சியினரும், பெருங்குற்றப் பிரேரணையைக் கொண்டுவந்து, ஜனாதிபதி ட்ரம்ப்பைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமா என்று ஆராய்ந்து வருகிறார்கள்.  

அங்கும், குறிப்பிட்ட ஒரு பிரிவினர், நீக்கியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்க, இன்னும் சிலரோ, “இல்லையில்லை, அவசரப்படக்கூடாது” என்று, பொறுமைக்கான கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். எனவே, இரண்டு நாடுகளும், வெவ்வேறு மட்டத்திலான பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன. ஆனால், ஐ.அமெரிக்காவின் பிரச்சினை, எங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது (பதவி விலக்க வேண்டுமென்ற கோரிக்கைகள், எங்களுக்கு முன்னரேயே எழுந்தன) என்ற அடிப்படையில், ஐ.அமெரிக்காவிடமிருந்து பாடத்தைப் பெறுவது அவசியமானது.  

இதில் முதலாவது பிரச்சினையாக, நடைமுறையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதி சிறிசேனவை நீக்குவதற்கான வாய்ப்புக் காணப்படவில்லை. போதுமான நாடாளுமன்ற ஆதரவு, அவ்வாறான முயற்சிக்குக் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனவே, எதற்காக அம்முயற்சியை எடுக்க வேண்டுமென்பது, முதலாவதும் முக்கியமானதுமான கேள்வி.  

அடுத்ததாக, பதவி நீக்குதலுக்கான பெருங்குற்றப் பிரேரணையென்பது, நீண்டகாலத்துக்கு இழுபட்டுச் செல்லக்கூடிய ஒன்று. பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கு ஆதரவு பெற்று, அதற்கான விவாதங்கள் இடம்பெற்று, உயர்நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற வேண்டும். அதன் பின்னர், அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு இடம்பெற வேண்டும். இவை அனைத்தும், ஒரே நாளிலேயோ அல்லது ஒரே வாரத்திலேயோ நடந்து முடிந்துவிடப் போகின்ற விடயங்கள் கிடையாது. நாட்டின் அரசியல் நிலைமை, ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் போது, இவ்வாறான முயற்சி தேவையானதா என்பது, அடுத்த கேள்வி. நாட்டின் பொருளாதாரம், ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களைப் பற்றிக் கவலைப்படுவதற்கு யாருமில்லை என்ற நிலைமை தான் இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில், மீண்டும் மாதக் கணக்காக, அரசியல் குழப்பமொன்றை ஏற்படுத்துவது தேவையானது தானா?  

அதற்கடுத்து, ஜனாதிபதிக்கெதிரான இவ்வாறான பிரேரணை வெற்றியடையாவிட்டாலும் கூட, ஜனாதிபதிக்கான எதிர்ப்பை வெளிப்படுத்த இவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்ற வாதமும் இருக்கிறது. ஒரு வகையில், நியாயமான கருத்துத் தான். என்றாலும், அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதுவும் முக்கியமானதல்லவா? இலங்கையின் அரசியல் சூழல், “தேசப்பற்றாளர்”, “ஜனநாயகப் பற்றாளர்” என, தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் இரு பிரிவுகளாக, ஏற்கெனவே மாறியிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளும், தங்களுக்குள் மீண்டும் மோதிக் கொள்வதற்கான சூழலைத் தான், இது ஏற்படுத்தப் போகிறது.  

யதார்த்தங்களை மீறி, ஜனாதிபதியைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, அதன் பின்னர், பதவி நீக்கியவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதுவும் முக்கியமான கேள்வி. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் பிரச்சினையை, “உள்நாடு எதிர் வெளிநாடு”, “கிராமம் எதிர் மேட்டுக்குடி” என்ற வகையில் காட்டுவதில், ஜனாதிபதி சிறிசேன, ஓரளவுக்கு வெற்றிபெற்று விட்டார். எனவே, ஜனாதிபதி சிறிசேனவை நீக்கினாலும் கூட, “வெளிநாட்டின் ஆதரவுடன், கொழும்பிலுள்ள மேட்டுக்குடிகள், பொலன்னறுவையைச் சேர்ந்த கிராமத்தவரைப் பழிவாங்கிவிட்டார்கள்” என்ற பிரசாரம் தான் வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. இது, மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன போன்ற, சிங்கள - பௌத்த கடும்போக்குக் கொள்கையைப் பரப்ப முயலும் தரப்புகளுக்குத் தான் வாய்ப்பாக அமையும். அதேபோல், உண்மையான ஜனநாயக விருப்புடன் போராடிய தரப்புகள், பழிவாங்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.  

எனவே தான், இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகபட்சமாக 12 மாதங்கள் கூட இல்லாத சூழ்நிலையில், ஜனாதிபதி சிறிசேனவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியென்பது, நன்மைகளை விட, தீமைகளையே கொண்டுவந்து சேர்க்குமென்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, பதவி நீக்குவதில் கவனத்தைச் செலுத்துவதை விடுத்து, மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கவும், அந்த மாற்றுத் தலைமையை, மக்களிடத்தே கொண்டு சேர்க்கவும், ஜனநாயகத்தை விரும்பும் தரப்புகள் முயல்வது, பொருத்தமாக அமையும். அது தான், இலங்கைக்கும் பயன்தரக்கூடிய ஒரு விடயமாக இருக்கும்.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிறிசேனவை-நீக்குதல்-பொருத்தமானதா/91-226521

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.