Jump to content

UNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. செ.கஜேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

UNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. செ.கஜேந்திரன்

December 11, 2018

unp-tna-nn.jpg?resize=800%2C410

ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுத்தராது என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.  சமகால அரசியில் நிலைமைகள் தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணிலை ஆதரிக்கும் முடிவை எடுக்கின்ற போது அக்கட்சியின் 14 பேருமாகவே முதல் இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றார்கள்.  இதில் மூன்றாவது தடவையாக சத்தியக் கடதாசியும் வழங்கியிருக்கின்றார்கள். ஆனால் அந்த சத்தியக் கடதாசி வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எதிரப்பு தெரிவித்தாதகவும் பின்னர் சம்மந்தரின் முகத்திற்காகவும் அவரும் அதனை ஆதரித்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆயினும் அதில் என்னைப் பொறுத்தரைவயில் சிறிதரனுடைய நிலைப்பாடும் சம்மந்தனின் நிலைப்பாடும் ஒன்று தான்.  ஆனால் அந்த நிலைப்பாடுகளுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்புகள் வருகின்ற பொழுது தாங்கள் அதனைச் சமாளிக்க முடியாமலேயே அவ்வாறான ஒரு கருத்தையும் மக்கள் மத்தியில் பரப்பியிருக்கின்றனர்.

ஆகவே யாருமே மக்கள் நலனைக் கருத்திற் கொள்ளவில்லை என்பது மட்டும் தெட்டத் தெளிவாகப் புலப்படுகின்றது. ஆகையினால் இவர்கள் அனைவரும் ஒன்று தான். குறிப்பாக தமிழர்களின் தயாகம், தேசியம், சுயநிர்ணயத்தைக் கைவிட்டு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு தற்போது இவர்கள் பயணிக்கின்றார்.

அதிலும் ரணில் விக்கிரமசிங்க கூட புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி என்று தான் சொன்ன போதும் அதனையும் ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவை வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் ஏற்றக் கொள்ளாதவற்றை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரால் செய்து வருகின்ற கூட்டமைப்பினர் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றனர்.

அதிலும் இவை எல்லாவற்றுக்கும் சம்மந்தரோடு இணைந்து ஆதரவை வழங்கி ஆதாித்துச் செயற்பட்டு வருகின்ற சிறீதரன் இப்போது புலம்புவது என்பது மக்களை ஏமாற்றும் நாடகம் தான்.

இந்தியா மேற்கு நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்க வேண்டுமென்று சொன்னதன் அடிப்படையில் தான் கூட்டமைப்பினர் ரணிலுக்கு ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.

ஆனால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் சர்வதேசத்தை தமிழ் மக்களின் நலன்களக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகளை நடாத்தி அழுத்தங்களைக் கொடுத்திருக்க வேண்டும்.

ஆனால் வெறுமனே ரணிலுக்கு ஆதரவு என்ற அடிப்படையில் அவை எதனையும் செய்வதற்கு கூட்டமைப்பு தவறியிருக்கின்றது. ஆனால் சிங்களக் கட்சிகளில் கட்சிகளைப் பொறுத்தவரையில்

அது சுதந்திரக் கட்சியாக, ஐக்கிய தேசியக் கட்சியாக ,பொதுஐன பெரமுனவாக, ஜே.வி.பியாக இருக்கலாம் அது யாராக இருந்தாலும் தமிழர்களுக்க எதுவுமே செய்யமாட்டார்கள் எதனையுமே கொடுக்க மாட்டார்கள்.

அவ்வாறு எதனையும் செய்வதற்கு கொடுப்பதற்கும் அவர்கள் இன்று வரையில் தயாராக இல்லை. குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க உட்பட அவர்களுடன் இருக்கின்ற எவருமே தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதற்குத் தயாராக இல்லை.

இது தான் உண்மை அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நாங்கள் ரணிலிடம் வாக்குறுதி பெற்று வைத்திருக்கின்றோம் என்று சொல்வதெல்லாம் எங்களுடைய மக்களை ஏமாற்றுவதற்கான நடாகமே தவிர வேறேதும் இல்லை.

அதேவேளை அவர்கள் ஒருபோதும் தாமாகவும் விரும்பி எதனையும் தரப்போவதுமில்லை. மேலும் ஓழித்து மறைத்து ரணில் தானாக எதனையும் தரப்போவதுமில்லை. இது தான் வரலாறு என்றார்.

 

http://globaltamilnews.net/2018/106324/

 

Link to comment
Share on other sites

Just now, கிருபன் said:

UNPக்கான TNAயின் நிபந்தனை அற்ற ஆதரவு தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்காது.. செ.கஜேந்திரன்

யார் சொன்னது நிபந்தனையற்ற ஆதரவு என்று?

பின்கதவால் அன்பளிப்புகளையும், உறவினர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் தரவேண்டும் என்ற நிபந்தனை  சம்மந்தனின் நீண்டகால சுயலாப நிபந்தனைகளில் ஒன்று என்பதுவும் அதற்காக அவர் தமிழர் உரிமைகளை அடகுவைப்பார் என்பதுவும் சிங்கள கட்சிகளுக்கு நன்றாக தெரிந்தவிடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிபந்தனை இல்லாத ஆதரவு இல்லை.

இந்திய, மேலை நாடுகள் வேண்டுதலில் வழங்கப் படும் ஆதரவு. மைத்திரி அடுத்த ஜனவரியில் வீடு போக, சிறுபான்மை ஆதரவில், மகிந்த போட்டி இடா நிலையில், ரணில் வெல்லுவார்  என்னும் கணிப்பு.

நீதிமன்ற விசாரணைகளில், நேரே போய்  அமர்ந்து, ராஜதந்திரிகள் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்க தூதர் அஸ்கிரிய, மல்வத்தை ஹெட் மொட்டைகளை சந்தித்து, இலங்கை ஜனநாயக வழிமுறைகளில் இருந்து விலகி நின்றால், மிக கடுமையான சர்வதேச நிலைப்பாட்டினை எதிர்கொள்ள நேரிடும் என்று சொல்லி எச்சரித்து உள்ளார். 

இவைகளை மீறி மகிந்த  வந்தாலும், ரணில், (வழக்கம் போல) தீர்வு விடயத்தில் ஏமாத்தினாலும், பொறுப்பு சொல்ல வேண்டியது கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை வலியுறுத்திய மேலை நாடுகளும், இந்தியாவும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நிபந்தனை அற்ற ஆதரவு

லஞ்சம் கிஞ்சம் குஞ்சம் வாங்கிற மனிசர்தான்  எதுக்கும் ஓமெண்டுவினம். எனக்கு தாறதை தந்திட்டு நீ என்னெண்டாலும் செய்  நான் கண்டு கொள்ளமாட்டன் எண்டதுதான் அதின்ரை அர்த்தம். அதை நாகரீகமாய் சொல்லோணுமெண்டால் "நிபந்தனையற்ற ஆதரவு" எண்டு பொருள் படும் tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

லஞ்சம் கிஞ்சம் குஞ்சம் வாங்கிற மனிசர்தான்  எதுக்கும் ஓமெண்டுவினம். எனக்கு தாறதை தந்திட்டு நீ என்னெண்டாலும் செய்  நான் கண்டு கொள்ளமாட்டன் எண்டதுதான் அதின்ரை அர்த்தம். அதை நாகரீகமாய் சொல்லோணுமெண்டால் "நிபந்தனையற்ற ஆதரவு" எண்டு பொருள் படும் tw_glasses:

இதைவிட இந்த கரடியே காறித்துப்பின கூட்டத்தை விளங்கபடுத்த முடியாது நன்றி குசா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
    • என்ன‌ பெரிய‌ப்பா 10பேர் இன்னும் வ‌ர‌ வில்லை என்று ஆத‌ங்க‌ ப‌ட்டினங்க‌ள் இப்ப‌ மொத்த‌ம் 17பேர் க‌ல‌ந்து இருக்கின‌ம்......................உற‌வுக‌ள் நீங்க‌ள் கொடுத்த‌ தேதிக்கு ச‌ரியா க‌ல‌ந்து கொண்டு விட்டின‌ம்.................இன்னொரு உற‌வு தானும் தானும் க‌ல‌ந்து கொள்ளுகிறேன் போட்டியில் என்று சொன்னார் ஆனால் அவ‌ரை சிறு நாட்கள் யாழில் காண‌ வில்லை இந்த‌ முறை நான் தான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்பேன் ஒரு க‌தைக்கு ந‌ம்ம‌ட‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை முத‌ல் இட‌த்துக்கு வ‌ந்தால் என்னை தூக்கி போட்டு மிதிச்சு போடுவார் ஹா ஹா😂😁🤣....................................
    • வருமான அதிகரிப்பு பொறிமுறை; வடக்கு ஆளுநர் தெரிவிப்பு! சுற்றுலாவிகளுக்கு வீடுகளில் தங்குமிட வசதிகளை வழங்குவோருக்கான வருமான அதிகரிப்புக்குரிய பொறிமுறையை தயார் செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு!  (மாதவன்) சுற்றுலாவிகளுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போர், உள்ளுராட்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தங்களை பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில், ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (18) சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதன்போது வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாவிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாவிகள் தங்குவதற்காக சில பகுதிகளில் மக்கள் தமது வீடுகளிலேயே அறைகளை வழங்குவதோடு, முழுமையான வீட்டையும் நாள், கிழமை மற்றும் மாத அடிப்படையில் வாடகைக்கு வழங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், குறித்த நபர்கள் எந்தவொரு பணிமனையிலும் பதிவுகளை மேற்கொள்வதில்லை எனவும், தங்குமிடங்களின் வசதிகள் தொடர்பில் கரிசனை கொள்வதில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். அவ்வாறான நபர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கி, அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் இதன்போது கூறினார். பதிவு செய்யாது தங்குமிட வசதிகளை வழங்குவோர் தொடர்பில் தகவல்களை திரட்டி, அவர்களின் சேவைகளை ஒழுங்குப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் கூறினார். அத்துடன் சட்ட பொறிமுறைக்குள் அவ்வாறானவர்கள் உள்வாங்கப்படும் போது, அவர்களின் தங்குமிட வசதிகள் தொடர்பில் இணையத்தளங்களில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க தேவையான பொறிமுறையை வடிவமைக்குமாறும் அறிவுறுத்தினார். (ஏ)   https://newuthayan.com/article/வருமான_அதிகரிப்பு_பொறிமுறை;_வடக்கு_ஆளுநர்_தெரிவிப்பு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.