Jump to content

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதியோப்பியர்கள்...   சிரித்த முகத்துடன், எமக்கு மிக மரியாதை தந்து உபசரிப்பார்கள் 
அவர்களுடன்... பழகுவது... ஒரு இனிமையான அனுபவம். ❤️
அவர்களின்... சமையல் குறிப்பிற்கு, நன்றி நாதமுனி.  👆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க நல்லாத் தான் இருக்கு.
ஆனால் நிறைய நேரமும் பொருளும் அநியாயமாகுது.
இணைப்புக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறிImage result for ethiopian doro wat recipe

  • 1kg கோழியினை துண்டாக வெட்டி தேசிக்காய் புளி சாறில் ஊற வைக்கவும். (Marinate)
  • 500g வெங்காயம், வெள்ளைப்பூடு, இஞ்சி, துண்டுகளாக வெட்டி பிளெண்டரில் போட்டு பசையாக அரைத்துக் கொள்ளவும். 
  • அரைத்த பசையினை ஒரு பாத்திரத்தில் போட்டு மெதுவான வெப்பத்தில், ஒரு மணி நேரம் ஒரு , இறுகிய (இனிப்பான) பசையாக வரும் வரை அவிய விடுங்கள். 
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊத்தி, (கறியின் சுவை, மணத்தினை  மாத்தக்  கூடிய ஒலிவ் ஆயில் பாவிக்காதீர்கள்), இந்த பசையினை இட்டு, எமது கறித்தூளை, உங்களது உறைப்புக்கு அமைய போட்டு, மேலும் கொஞ்சம் வெள்ளைப்பூடு, இஞ்சி துண்டுகள் சேர்த்து வதக்கவும். பட்டர் ஒரு கரண்டி போடுங்கள் 
  • இந்த நேரத்தில் வெட்டிய, புளியில் ஊறும் கோழி துண்டுகளை சேர்த்து, மசாலா தூள் சேர்த்து,  40 நிமிசத்துக்கு அதே மெதுவான வெப்பத்தில் சமைக்கவும். 
  • சிறிது நேரத்தில் (20வது  நிமிடம் அளவில் ) அவித்த  முட்டைகளை கறியில் சேர்க்கவும்.
  • அடிபிடியாமல் இருக்க, தேவைப்படின் தண்ணீர் சிறிதளவு சேர்த்து, அவ்வப்போது பிரட்டவும். 
  • உங்களுக்கு பிடிக்குமாயின், பச்சை மிளகாய் வெட்டி கறிக்குள்  எறிந்து விடுங்கோ.
  • கொத்தமல்லி தளை  தூவவும்.
  • ரொட்டி, சப்பாத்தி, சோறுடன் சாப்பிடக் கூடிய அருமையான கறி தயார். 

Image result for ethiopian doro wat recipe

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

எதியோப்பியர்கள்...   சிரித்த முகத்துடன், எமக்கு மிக மரியாதை தந்து உபசரிப்பார்கள் 
அவர்களுடன்... பழகுவது... ஒரு இனிமையான அனுபவம். ❤️
அவர்களின்... சமையல் குறிப்பிற்கு, நன்றி நாதமுனி.  👆

 

54 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்க்க நல்லாத் தான் இருக்கு.
ஆனால் நிறைய நேரமும் பொருளும் அநியாயமாகுது.
இணைப்புக்கு நன்றி நாதம்.

ரெஸிபி போட்டிருக்கு....

நான் செய்து பார்த்தது..... அருமையாக ...இருந்தது... சொல்லி வேலை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

 

வாவ்!!!!

செய்து பாக்கத்தானிருக்கு. எங்கடை ஊர் சமையல்களை மாதிரியே இருக்கு...தூள் அந்தமாதிரி அள்ளிப்போடீனம்....என்ன தூளெண்டு தெரியேல்லை? 
சாப்பாடு பரிமாறேக்கை ஒரு சட்டியிலை தண்ணி கொண்டு வந்து கை அலம்ப குடுக்கினம் பாருங்கோ...... அந்த பண்பாடு கலாச்சாரம் நெஞ்சை தொட்டுட்டுது.

அதோடை சாப்பாட்டை கையாலை சாப்பிடுற மாதிரி ஒரு சந்தோசம் முள்ளுக்கரண்டியாலை சாப்பிடேக்கை வராது பாருங்கோ.

அங்காலை ஒருத்தர் நேரம் கூடிப்போச்சுதெண்டு கடுப்பாகிறார்.:grin:

எங்கடை சாப்பாடுகள் என்ன கம்பேக்கர் ரேஞ்சிலை டக்கண்டு வந்து...டக்கெண்டு சாப்பிட்டு....டக்கண்டு வருத்தம் வந்து......டக்கெண்டு மேலை போற மாதிரியான சாப்பாடுகளோ எண்டு  தெரியாமல் கேக்கிறன்? ஆசிய ஆபிரிக்கன் அரேபியர்ரை சாப்பாடுகள் எல்லாம் சமைக்க நேரம் செல்லும். ஆனால் உடம்புக்கு விக்கனமே இருக்காது. அது எண்ணைச்சாப்பாடாக இருந்தாலும் சரி.....
இவங்கடை திடீர் சாப்பாடுகள் எல்லாத்தின்ரை பின் விளைவுகளும் திடீரெண்டுதான் இருக்கும் கண்டியளோ.:)

நாதமுனி! தாங்ஸ்பா..:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வாவ்!!!!

செய்து பாக்கத்தானிருக்கு. எங்கடை ஊர் சமையல்களை மாதிரியே இருக்கு...தூள் அந்தமாதிரி அள்ளிப்போடீனம்....என்ன தூளெண்டு தெரியேல்லை? 
சாப்பாடு பரிமாறேக்கை ஒரு சட்டியிலை தண்ணி கொண்டு வந்து கை அலம்ப குடுக்கினம் பாருங்கோ...... அந்த பண்பாடு கலாச்சாரம் நெஞ்சை தொட்டுட்டுது.

அதோடை சாப்பாட்டை கையாலை சாப்பிடுற மாதிரி ஒரு சந்தோசம் முள்ளுக்கரண்டியாலை சாப்பிடேக்கை வராது பாருங்கோ.

அங்காலை ஒருத்தர் நேரம் கூடிப்போச்சுதெண்டு கடுப்பாகிறார்.:grin:

எங்கடை சாப்பாடுகள் என்ன கம்பேக்கர் ரேஞ்சிலை டக்கண்டு வந்து...டக்கெண்டு சாப்பிட்டு....டக்கண்டு வருத்தம் வந்து......டக்கெண்டு மேலை போற மாதிரியான சாப்பாடுகளோ எண்டு  தெரியாமல் கேக்கிறன்? ஆசிய ஆபிரிக்கன் அரேபியர்ரை சாப்பாடுகள் எல்லாம் சமைக்க நேரம் செல்லும். ஆனால் உடம்புக்கு விக்கனமே இருக்காது. அது எண்ணைச்சாப்பாடாக இருந்தாலும் சரி.....
இவங்கடை திடீர் சாப்பாடுகள் எல்லாத்தின்ரை பின் விளைவுகளும் திடீரெண்டுதான் இருக்கும் கண்டியளோ.:)

நாதமுனி! தாங்ஸ்பா..:cool:

எங்கண்ட மிளகாத் தூள் தான்...

காரணம்: எங்களுக்கு மிளகாய், மிளகாய்த்தூளை   அறிமுகப்படுத்திய அதே போர்த்துக்கேயர் தான் அங்கேயும் மிளகாய்த்தூளை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நான் செய்து பார்த்தது..... அருமையாக ...இருந்தது... சொல்லி வேலை இல்லை.

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

Link to comment
Share on other sites

இணைப்புக்கும் ரெசிப்பிக்கும் நன்றி நாதம். 12 நாட்கள் கொண்ட விடுமுறை வருகுது அப்ப செய்து பார்க்கத்தான் இருக்கு

1 hour ago, ஈழப்பிரியன் said:

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

ஆனால்

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

இணைப்புக்கும் ரெசிப்பிக்கும் நன்றி நாதம். 12 நாட்கள் கொண்ட விடுமுறை வருகுது அப்ப செய்து பார்க்கத்தான் இருக்கு

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

 

4 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

அதுதான் தெரியுதே..... உங்க ஒருத்தர்... எத்தியோப்பியன்ஸ் அந்த மாதிரி.. சிரிப்பும்.... மரியாதையும்.... எண்டு சொல்லுறார்.

கறியை கொடுத்துட்டாங்கள்..போல தெரியுது....நல்லா ஆளை கொண்டெழுப்பி..... மனேஜரிடமும் இழுபறிப்பட்டு, டாக்குத்தர் கடதாசி அனுப்பி லீவு போடவேண்டியதா போட்டுது.

நிழலி மாதிரி லீவுக்க செய்து பார்கிறது தான் புத்தி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க வேர்த்து விறுவிறுக்குது , சொல்லி வேல இல்ல.வீட்டுக்கு விருந்தினர்கள் வரும்போது செய்து பரிமாறத்தான் இருக்கு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அதுசரி நாதம் இவ்வளவு வெண்காயமும் போடுகிறார்களே?
ஆளைக் கொண்டெழுப்பாதோ?

8 hours ago, நிழலி said:

இவ்வளவு வெங்காயம் போட்டால் ஆளை கொண்டெழுப்பாது...ஆனால்...

8 hours ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ் மெதுவா சொல்லுங்க.

4 hours ago, Nathamuni said:

 

அதுதான் தெரியுதே..... உங்க ஒருத்தர்... எத்தியோப்பியன்ஸ் அந்த மாதிரி.. சிரிப்பும்.... மரியாதையும்.... எண்டு சொல்லுறார்.

கறியை கொடுத்துட்டாங்கள்..போல தெரியுது....நல்லா ஆளை கொண்டெழுப்பி..... மனேஜரிடமும் இழுபறிப்பட்டு, டாக்குத்தர் கடதாசி அனுப்பி லீவு போடவேண்டியதா போட்டுது.

நிழலி மாதிரி லீவுக்க செய்து பார்கிறது தான் புத்தி...

 

அருமையான  கோழிக்கறி  அடன்ஸ் ஒன்லியாய் மாறப்போகுது....👙

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

எத்தியோப்பியாவின் doro wat எனும் ஒரு அருமையான சிக்கன் கறி.

வெங்காயத்தினை அரைத்து, பின் பொரித்து, அவித்த  முட்டையுடன் ஒரு கறி.  

ரெசிபி கீழே...

Mark Wiens, சமையல் செயல் முறை மற்றும் உணவுகளை, அந்தந்த கலாசாரத்தின் தனித்துவத்தோடும் இரசனையுடனும் பகிர்வது, ஓர் சிறு அளவிலேனும் ஏனையோரின் கலாசாரத்தை பற்றி சகிப்பு தன்மையை வளர்க்க உதவுகிறது.  

DORO WAT சமையலுக்கு hard chicken (அதிலும் சேவல்) மிகவும் உகந்தது.  நேரமெடுத்து, ஊறி வேகவேண்டும் என்பதால்.

முழுவதுமாக இருப்பது இன்னும் கறியை சுவையூட்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆட்டிறைச்சியின், வலித்த பகுதிகளை, அதாவது shank மற்றும் பாயவை(trotters) சமைப்பதற்கும் இது உகந்த குறிப்பாகவே தென்படுகிறது.  

வெண்ணிற bowl இல் இருப்பது doro wat  ஆட்டிறைச்சி காறியா?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அருமையான  கோழிக்கறி  அடன்ஸ் ஒன்லியாய் மாறப்போகுது....

 

நான் உள்ளுக்கை வரலாமோ அப்படி என்னதான் இருக்கு இந்த கோழிகறியில ஆ ஆ தெரியாமத்தான் கேட்கிறன் 

பெரிய வெங்காயம் தானே போட்டார்கள் இவர் ஏன் துள்ளிக்குதிக்கிறார்:):unsure::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

வெண்ணிற bowl இல் இருப்பது doro wat  ஆட்டிறைச்சி காறியா?

சிறிய துண்டுகளாக.... கோழி தான்.

இந்த முறையில் ஆட்டிறைச்சி கூட செய்து பார்க்கலாம்.

வித்தியாசமானது என்னவென்றால்.... வெங்காயத்துக்கு நடக்கும் அலுவல் தான்.... அதுதான் கறியை அந்த மாதிரி தூக்குது. மேலும் முட்டை  வேற சேருவது அருமை தான்.

எத்தியோப்பியா, ரோமர், கிரேக்க (யவனர்கள்), அரேபியர்  காலத்தைய spice கடல்வழிப் பாதையின் வழியில் இருந்ததால்.... நிச்சயமாக தமிழர் கறி  பாரம்பரியம் பரவி இருக்கும் என்பது என் கருத்து. 

https://www.google.co.uk/maps/place/Ethiopia/@12.4337526,51.5352282,5.49z/data=!4m5!3m4!1s0x1635d0cedd6cfd2b:0x7bf6a67f5348c55a!8m2!3d9.145!4d40.489673?hl=en

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நான் உள்ளுக்கை வரலாமோ அப்படி என்னதான் இருக்கு இந்த கோழிகறியில ஆ ஆ தெரியாமத்தான் கேட்கிறன் 

பெரிய வெங்காயம் தானே போட்டார்கள் இவர் ஏன் துள்ளிக்குதிக்கிறார்:):unsure::)

இதுக்கு தான் சொல்லுறது, காலா காலத்திலே  கலியாணத்தைக் கட்டிர வேண்டும் எண்டு..... சின்ன புள்ளையாவே இருக்கீங்களே முனிவர். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Nathamuni said:

சிறிய துண்டுகளாக.... கோழி தான்.

இந்த முறையில் ஆட்டிறைச்சி கூட செய்து பார்க்கலாம்.

வித்தியாசமானது என்னவென்றால்.... வெங்காயத்துக்கு நடக்கும் அலுவல் தான்.... அதுதான் கறியை அந்த மாதிரி தூக்குது. மேலும் முட்டை  வேற சேருவது அருமை தான்.

எத்தியோப்பியா, ரோமர், கிரேக்க (யவனர்கள்), அரேபியர்  காலத்தைய spice கடல்வழிப் பாதையின் வழியில் இருந்ததால்.... நிச்சயமாக தமிழர் கறி  பாரம்பரியம் பரவி இருக்கும் என்பது என் கருத்து. 

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

 

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

 

நல்ல ஐடியா... நானும் மகனும் ஆட்டுக் குடல் கறி என்றால் அந்த மாதிரி வெட்டுவம். சமைக்க தான் நேரம் எடுக்கும், அதுவும் அதை கழுவி எடுக்க கனக்க நேரம் போகும். மாட்டுக் குடல் என்றால், கழுவி சுத்தப்படுத்தி பக்கற்றுக்குள் வைத்து இங்கு சில இடங்களில் விற்கின்றார்கள்.

என் நண்பன் ஒருவன் இங்கு Chef ஆக இருக்கின்றான். அவன் சொன்னது வெங்காயத்தை கொஞ்சம் இப்படி நல்லா அவித்து விட்டு அதையும் தயிரையும் போட்டு  slow cooking இல் சமைத்து எடுத்தாலும் நல்ல சுவையாக வருமாம். கடஞ்சா சொல்வது போன்று இவற்றுக்கு hard chicken தான் சரிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தியோப்பியர்கள், தோலையும் சேர்த்து போடுவதால், சிக்கினுல் காத்தடிப்பது, கழுவ அதிக நேரம் எடுப்பதுடன், ஈஸ்ட் உட்பட பல பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.

தோல் நாம் சேர்பதில்லையாதலால்..... மினக்கெட தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இதுக்கு தான் சொல்லுறது, காலா காலத்திலே  கலியாணத்தைக் கட்டிர வேண்டும் எண்டு..... சின்ன புள்ளையாவே இருக்கீங்களே முனிவர். :grin: 

ஹாஹா  அடுத்த வருசம் பார்க்கலாம் இந்த சங்கதிகளை 

 

5 hours ago, Kadancha said:

இதே முறையில், ஆட்டுக் குடலலை சமைத்து பார்க்க தோன்றுகிறது, அதுவும் ஆட்டின் kidneys, liver மற்றும் neck உடன் சேர்த்து.

யாழில், சிலருக்கு ஆட்டுக் குடல் என்னும் போது ஓர் விதமான முகம் சுளிப்பு இருக்கலாம்.

ஆட்டுக் குடலை ஓர் வித நெடியுமின்றி சமைக்கலாம். ஆனால், பொறுமையாக, பற்தூரிகை அல்லது பாத்திரத்தை விளக்கும்  தூரிகை பாவித்து சுத்தம் செய்யவேண்டும், வாங்கும் போது எப்படி சுத்தமாக இருப் பின்னும்.

(தூரிகை  Ikea வில் கிடைக்கும்:https://www.ikea.com/gb/en/search/?k=ANTAGEN dish-washing brush).

 

நாங்கள் மீன் குடல் கூட சமைத்து இருக்கிறோம் தற்போது அது அதிக விலைகள் கொடுத்து பெரிய ஹோட்டல்கள் வாங்கி செல்கின்றன தளப்பத்து மீன் குடல் அதனால் கிடைப்பது அரிதாக உள்ளது கடஞ்சா

 

3 hours ago, நிழலி said:

நல்ல ஐடியா... நானும் மகனும் ஆட்டுக் குடல் கறி என்றால் அந்த மாதிரி வெட்டுவம். சமைக்க தான் நேரம் எடுக்கும், அதுவும் அதை கழுவி எடுக்க கனக்க நேரம் போகும்

அண்மையில் ஆடு ஒன்றை வாங்கி வெட்டி மட்டக்களப்பில் உன்னிச்சை குளத்தில் குளியலை போட்டு குடலை வெளியாக்கி ஓடையில் இறங்கினோம் நாங்கள் வெளியாக்கிய குடலை மீன் கொண்டு போனது தெரியாமல் .

அவ்வளவு நேரம் எடுத்தது நிழலி அண்ணேய்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நாங்கள் மீன் குடல் கூட சமைத்து இருக்கிறோம் தற்போது அது அதிக விலைகள் கொடுத்து பெரிய ஹோட்டல்கள் வாங்கி செல்கின்றன தளப்பத்து மீன் குடல் அதனால் கிடைப்பது அரிதாக உள்ளது கடஞ்சா

இதை நான் அறிந்துளேன். ஆனால், ஒரு போதும் சுவைப்பதத்திற்கு வாயுப்புக்கள் கிடைக்கவில்லை.

பொதுவாக, பெரிய மீன்களின்  குடல், தனிப்பட்ட முறையில் சமைப்பதத்திற்கு உகந்தது.

ஆனாலும் , சிறிய மீன்களின் குடல் கூட சமைக்கலாம், ஆனால் சுவை தெரியாது.

ஹோட்டல்கள் எந்த விதத்தில் இந்த பெரிய மீன்களின் குடலை பாவிக்கிறார்கள்?

 

 

அல்லது, அவர்கள் பெரிய மீன்களை வாங்குவதால், அந்த குடல்கள் அரிதாக உள்ளதா?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

இதை நான் அறிந்துளேன். ஆனால், ஒரு போதும் சுவைப்பதத்திற்கு வாயுப்புக்கள் கிடைக்கவில்லை.

பொதுவாக, பெரிய மீன்களின்  குடல், தனிப்பட்ட முறையில் சமைப்பதத்திற்கு உகந்தது.

ஆனாலும் , சிறிய மீன்களின் குடல் கூட சமைக்கலாம், ஆனால் சுவை தெரியாது.

ஹோட்டல்கள் எந்த விதத்தில் இந்த பெரிய மீன்களின் குடலை பாவிக்கிறார்கள்?

அல்லது, அவர்கள் பெரிய மீன்களை வாங்குவதால், அந்த குடல்கள் அரிதாக உள்ளதா?

சுவை வந்து கணவாய் பிரட்டல் , ஏன் இறைச்சி பிரட்டல் போலவே இருக்கும் சில பகுதிகள் வலுவாகவும் சில பகுதிகள் மென்மையாகவும் இருக்கும்  பெரிய மீனின் குடல்களையே பாவிக்கிறார்கள். சிங்களவர்கள் அதிகம் தற்போது மீன்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி வருவதால் அதிக கிராக்கியும் விலையும் அதிகம் அதனால் அந்த விலைக்காக வியாபாரிகள் அவர்களிடமே கொடுத்து காசாக்கிறார்கள் அந்த மீன்களையும் அதன்குடலையும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சுவை வந்து கணவாய் பிரட்டல் , ஏன் இறைச்சி பிரட்டல் போலவே இருக்கும் சில பகுதிகள் வலுவாகவும் சில பகுதிகள் மென்மையாகவும் இருக்கும்  பெரிய மீனின் குடல்களையே பாவிக்கிறார்கள். சிங்களவர்கள் அதிகம் தற்போது மீன்கள் கிடைக்கும் இடங்களை நோக்கி வருவதால் அதிக கிராக்கியும் விலையும் அதிகம் அதனால் அந்த விலைக்காக வியாபாரிகள் அவர்களிடமே கொடுத்து காசாக்கிறார்கள் அந்த மீன்களையும் அதன்குடலையும் .

இதைப்பற்றி எம்மவர்களின் எத்தனை பேருக்கு தெரியுமோ?

எம்மவர்களின் பலருக்கு கடல் வளத்தாய் பற்றி தெரியாது.

புலிகள், மீனவர்களை பற்றி கடுமையாக வலியுறுத்திய போதெல்லாம், அதில் பின்னுள்ள உண்மையான நோக்கத்தை புரியவும் இல்லை, அக்கறை இருந்ததும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kadancha said:

இதைப்பற்றி எம்மவர்களின் எத்தனை பேருக்கு தெரியுமோ?

கன பேருக்கு தெரியாது என நான் நினைக்கிறன் கடஞ்சா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.