Jump to content

1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது -முதலாளிமார் சம்மேளனம் திட்டவட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(எஸ்.வினோத்)

பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

_DSC0105.JPG

தேட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டத்தில் முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் என்ற வகையில் தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் முதலாளி மார் சம்மேளனம் தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தையில் ஈடுப்படாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைருவரும் இலங்கைய தொழில் வழங்குனர் சம்மேளனத்தின் தலைவருமான ரொஷான் ராஜதுறை தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற முதலாளிமார் சம்மேளனத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். 

_DSC0102.JPG

தோட்டத்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப்போராட்டம் நியாயமற்றது கூட்டு ஒப்பந்தத்தின் பிராகரம் பேச்சு வார்த்தை நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் வேலைநிறுத்தத்தில் ஈப்படுவது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். 

அத்துடன் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/46191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார்... அந்த முதலாளிமார்?
ஆறுமுகன் தொண்டைமான் போன்றவர்களே... அந்த முதலாளியும், அரசியல் வாதிகளும்.
பிள்ளையையும்... கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும்... அரசியல் இனி எடு படாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

யார்... அந்த முதலாளிமார்?
ஆறுமுகன் தொண்டைமான் போன்றவர்களே... அந்த முதலாளியும், அரசியல் வாதிகளும்.
பிள்ளையையும்... கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும்... அரசியல் இனி எடு படாது.

முதலாளிமார் தொழிலாளிக்கு கொடுக்க மாட்டார்கள்.
ஆனால் தொண்டமான் மாதிரியான அரசியல்வாதிகளுக்கு அள்ளி இறைப்பார்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, பிழம்பு said:

பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ள முதலாளிமார் சம்மேளனம்

அவர்களின் 8 மணிநேரத்துக்கு மேற்பட்ட தினசரி உழைப்புக்கு தினக் கூலி ரூ1000/- என்பது கூட போதுமானது இல்லை.

தொழிலாளர்கள் 3 மாதங்கள் தொடர்ந்து வேலைக்கு போகாது விட்டால் தான் முதலாளிமார்களுக்கு நிலைமை விளங்குமோ தெரியவில்லை.    

மலையக அரசியல்வாதிகளாக ஆறுமுகம் தொண்டமான் போன்ற அயோக்கியர்கள் இருக்கும்வரையில் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளமும் கிடைக்காது, நடைமுறையிலுள்ள இலங்கையின் தொழிலாளர் நலச் சட்டங்களும் மலையக தொழிலாளர்களுக்கு பயன் தராது.

இந்தப் பின்னணியில் தான் சம்மந்தன்-மாவை-சுமந்திரன் கும்பல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற அலைகிறார்களாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பேசாமல் வளைகுடா நாடுகளுக்கு வேலைவாய்ப்பை பெற்று செல்வதை ஊக்குவிக்கனும் அப்ப தெரியும். 

அந்த மக்கள் காடாக இருந்த அந்த மலையகத்தை பணம் கொழிக்கும் பூமியாக்கியவர்கள் சந்தர்ப்பம் கிடைத்தால் தம் ஏழ்மையை மாற்றிவிடும் வல்லமை இருக்கும் இந்த 1000 குடுக்காவிட்டால் அவர்கள் மாற்று வழிகளை நாடுவார்கள் எல்லாம் நன்மைக்கே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுமுகம்,  திகாம்பரம் போன்ற ஆளுமயற்ற / துப்புகெட்ட தலைவர்கள், இறுக்கும்வரை இப்படியே இவர்கள் இருப்பார்கள். ராங்கா எனும் அரசியல்‍வியாதியும் இவர்களை ஒரு ride எடுத்து சென்றான். அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் இப்பயே வறுமையில் வாழ்கின்றார்கள் ஏன்?

இவர்களது வாழ்க்கை முறையும் மாறவேண்டும். நாள் முழுவது அட்டைகடியுடன் சகதியில் இருந்து வேலை செய்தல் மாலையானல் நன்றாக குடித்தல், கல்வியை இடை நடுவில் கைவிடல், மாற்று வாழ்வாதர முயற்சியை தேடமை. இவர்களும் தாங்களாக நினைத்து இந்த சக்கரத்தில் இருந்து மீள வேண்டும். இந்த உலகம் எவ்வளவு பெரியது தேடிங்கள் கண்டடைவீர்கள்?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.