Jump to content

தேர்தல் முடிவுகள்: சித்தாந்த ரீதியாக பா.ஜ.க வென்றுள்ளதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்
  •  
நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமை Getty Images

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

 

மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் கோசாலைகளுக்கு முன்னுரிமை அளித்தது, தேர்தல் பிரசாரங்களில் அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம்" என்றது, ராகுல் தன் கோத்திரம் குறித்து விவரித்தது இந்த கேள்விக்கு வலுசேர்கின்றன.

 
வானதி ஸ்ரீனிவாசன்படத்தின் காப்புரிமை Facebook

பாரதிய ஜனதா கட்சியின் வானதி ஸ்ரீனிவாசன், "இதுவரை இந்துத்துவ சித்தாந்தத்தை எதிர் முனையில் நிறுத்திய காங்கிரஸ், இம்முறை அதன் கொள்கைகளை பேசி இருக்கிறது. அது மட்டுமல்ல, தேர்தல் பிரசாரங்களின் போது, ராகுல் காந்தி கோயில் கோயிலாக சென்றது மக்களிடம் இந்துத்துவ கொள்கைகளை பேசினால்தான் வாக்கு பெற முடியும் என்பதை அவர்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஆனால், அதேவேளை மக்கள் யார் தேர்தலுக்காக பேசுகிறார்கள், யார் உண்மையாக பேசுகிறாகள் என்பதை அறிந்தே இருக்கிறார்கள்" என்கிறார்.

இந்துத்துவ கொள்கை வெற்றியா?

இது குறித்து செயற்பாட்டாளர் அ.மார்க்ஸூடம் பேசிய போது, "நிச்சயம் அவ்வாறெல்லாம் இல்லை" என்றார்.

மார்க்ஸ்

அவர், "மக்கள் உண்மையில் இந்துத்துவ கொள்கைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றால், அவர்கள் ஏன் காங்கிரஸூக்கு வாக்களிக்க போகிறார்கள், அந்த கொள்கையில் வேரூன்றி இருக்கும் பா.ஜ.கவுக்கே வாக்களித்து இருப்பார்களே" என்கிறார்.

"இந்த தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி முறை தோல்வியை காட்டுகின்றன. 2014ஆம் ஆண்டு பா.ஜ.க அட்சி பொறுப்பேற்றவுடன் மக்கள் அவர்களிடம் நிறைய எதிர்பார்த்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய பிம்பம் அப்படி. ஆனால், பணமதிப்பிழப்பு, கார்ப்பரேட் ஆதரவு என தொடர்ந்து மக்கள் விரோதமாகவே செயல்பட்டு வந்தார்கள். தங்கள் வாய்ப்புக்காக காத்திருந்த மக்கள் இந்த தேர்தலில் தங்கள் மொழியில் பதில் அளித்து இருக்கிறார்கள்." என்கிறார் அவர்.

'அடித்தள ஜனநாயகம்'

இதே பார்வையை முன் வைக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி. மகேந்திரன்.

"மக்களிடம் சில வேற்றுமைகள் உள்ளன. ஆனால், பலமான அடித்தள ஜனநாயகம் இந்திய சமூகத்தில் நிலவுகிறது. அதற்கு ஊறு ஏற்படுவதை பெரும்பான்மை மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதைதான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன." என்கிறார்.

காங்கிரஸ் பயணிக்க வேண்டியது பா.ஜ.கவின் பாதையில் அல்ல; அதற்கு எதிர் திசையில், மக்கள் அதனைதான் விரும்புகிறார்கள் என்பதன் சாட்சியம்தான் இந்த தேர்தல் முடிவுகள் என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சி.மகேந்திரன்.

'மாநில மனநிலையை பிரதிபலித்தோம்'

திருநாவுக்கரசர்

பா.ஜ.கவின் கொள்கையை காங்கிரஸ் சுவீகரித்துக் கொண்டது என்றெல்லாம் இல்லை. அந்தந்த மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்து மாநில வளர்ச்சிக்கேற்ப தேர்தல் அறிக்கையை தயாரித்தோம். மக்களின் மனநிலையை பிரதிபலித்தோம் என்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

மேலும் அவர், "வி.எஹ்.பி உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஆழமாக வேறூன்றி இருக்கும் காங்கிரஸ் வென்று இருப்பது நிச்சயம் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்" என்கிறார் அவர்.

https://www.bbc.com/tamil/india-46521686

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.